முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆவணி அவிட்டம் ஆண்கள் பூனூல் விழாவும் பெண்கள் ராக்கி விழாவும் ஒருசாரார் கொண்டாட்டம் தலைவர்கள் வாழ்த்து

குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் பெண்களின் கவுரவத்தை






நிலைநிறுத்தி, அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும் - குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்


ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு, ஒவ்வொருவரும் பெண்களின் கவுரவத்தை நிலைநிறுத்த  வேண்டும் என்றும், எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

அரசுமுறைப் பயணமாக பெங்களூரு வந்த திரு வெங்கையா நாயுடு, ராஜ்பவனில் பல்வேறு பள்ளிக் குழந்தைகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார். ரக்‌ஷா பந்தன் தினத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இடையேயான ஆழமான அன்பு மற்றும் மரியாதையின் சிறப்பு கொண்டாட்டம் ரக்‌ஷா பந்தன் என கூறினார். 


அனைவரையும் தங்களது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளாக கருத வேண்டும் என மக்களை வலியுறுத்திய திரு. வெங்கையா நாயுடு,  இது மக்களிடையே சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கும் மற்றும் நமது நாட்டை வலிமையாக்கும் என கூறினார்.






பழங்கால இந்திய குடும்பமுறையை பாராட்டிய அவர், இது மூத்தோர்களை மதிக்க கற்றுக் கொடுக்கிறது  மற்றும் இளம் வயதினர் இடையே பகிர்தல் மற்றும் கவனிப்பு உணர்வை வளர்க்கிறது என கூறினார். வீட்டில் சகோதரிகள் உற்சாகத்தையும் மற்றும் மகிழ்ச்சியையும் கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்ட அவர், குடும்ப உறவுகளை கொண்டாடும் பல விழாக்கள் உள்ளன என்றும் அவை ஒன்றாக இருக்கும்  பிணைப்பை வலுப்படுத்துகின்றன என்றும் கூறினார்.

அதற்கு முன்பாக, திரு வெங்கையா நாயுடு, ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகளை கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், மராத்தி, கொங்கனி, ஒடியா, பெங்காலி, அசாமி, குஜராத்தி, பஞ்சாபி ஆகிய 13 மொழிகளில் சுட்டுரையில் வெளியிட்டார். பிரதமர் அலுவலகம்

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

ரக்ஷா பந்தன் என்னும் நன்னாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள சுட்டுரைச் செய்தியில்,

“ரக்ஷா பந்தன் என்னும் புனித நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்”, என்று கூறியுள்ளார்.  திருவிளையாடல் புராணம் கூறும் ஆவணியில் புட்டுக்கு மண் சுமந்த லீலை, நரியைப் பரியாக்கியது, கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி, தருமிக்கு பொற்கிழி, கருங்குருவிக்கு உபதேசம், வளையல் விற்ற லீலை ஆகிய திருவிளையாடல் புராணங்களை மக்கள் விழாவாகக் கொண்டாடுவார்கள். சொக்கநாதருக்கு பட்டாபிஷேகம் செய்யப்படும். மீனாட்சி அம்மன் கோவிலில் மூல உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். இதுவே தமிழகத்தில் பழங்கால விழாவாகக் கொண்டாடப்பட்டது ஆவணி மாதம் அவிட்டத்தில் பிராமணர்கள் சிவ பூஜை செய்யும் லிங்காயத்துக்கள் என்ற ஆண்டிப்பண்டாரம், குலாலர்கள், ஆச்சார்ய விஸ்வகர்மாவை பூஜிக்கும் நபர்கள் பூணூல் வைபவத்தை செய்வார்கள். புதிய பூணூல் மாற்றி உபகர்மா மேற்கொள்வார்கள். ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை பயில்பவர்களும் இந்நாளில் பூனூல் அணிகின்றனர். பௌர்ணமியுடன் கூடிய ஆவணி அவிட்டம் சிவபெருமானுக்கு உகந்த நன்னாள் ஆகும். சிவ பூஜைகளை மேற்கொள்வதும், சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடுவதும் பெறற்கரிய வரங்களை பெற்றுக் கொடுக்கும்.ஆவணி மாத பௌர்ணமியை யொட்டி வரும் அவிட்ட நட்சத்திரத்தில் ஆவணி அவிட்ட விரதமிருந்து. முறையாக காயத்ரி உபதேசம் பெற்றவர்கள் மற்றும் உபநயணம் செய்துக்கொண்ட பிராமணிய மற்றும் சைவ வைணவ நெறியைப் பின்பற்றி வாழும் நபர்கள் ஆற்றங்கரைகளிலோ குளக்கரைகளிலோ தங்களுடைய பழைய பூணூலை அகற்றி புதிய பூணூலை அணிந்துக்கொள்வர். அதுபோலவே ராக்கி கயிறு கட்டி சகோதரத்துவம் வளர்க்கும் வடமாநில ரக்ஷா பந்தன் விழா.

மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவி திரௌபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, புடவையின்  பகுதியைக் கிழித்து, அவர் மணிக்கட்டில் கட்டிய நிகழ்வு, கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தன் சகோதரியாக ஏற்றுக்கொண்டு தீயசக்திகளிடமிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பதாக  உறுதியளித்தைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று திரிதராஷ்டிராவின் விசாரணை மன்றத்தில் திரௌபதியை துகிலுரிய முயன்ற போது அவரின் மானத்தைக் கிருஷ்ணர் காப்பாற்றினார். திரௌபதி கிருஷ்ணரின் கையில் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே இன்று ரக்ஷாபந்தன் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.


ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவது தொடர்பான மற்றொரு சம்பவம் இராஜஸ்தான் மாநில சித்தூர் நாட்டை ராணி கர்ணாவதி ஆட்சி புரிந்தார். குஜராத்தை ஆண்ட சுல்தான் பகதூர் ஷா சித்தூர் நாட்டை கைப்பற்ற போர் தொடுத்தார். கேள்விப்பட்ட ராணி முகலாய பேரரசர் ஹுமாயுன் அவர்களுக்கு ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறை அனுப்பினார். பாச உணர்ச்சிக் கொண்ட ஹுமாயுன் ராணியையும் அவரது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற முற்பட்டார். ஆனால் அதற்குள் ராணியை வென்று வெற்றிக்கொடி நாட்டினார் பேரரசர் பகதூர் ஷா.

கிமு 326 ஆம் ஆண்டில் மாவீரர் அலக்சாண்டர் இந்தியாவில் படையெடுத்து வடக்குப் பகுதியனைத்தையும் கைப்பற்றிய பின்னர் போரஸ் மன்னரிடம் போரிட்டார். போரஸ் மன்னரின் வலிமையை கேள்விப்பட்ட அலக்ஸாண்டரின் மனைவி ரோக்ஷனா போரில் தன் கணவரின் உயிருக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என்று அவருக்கு ஒரு புனித நூலை அனுப்பினார். போரில் அலக்சாண்டரை நேரடியாக வீழ்த்த வாய்ப்புக் கிடைத்தும் கையில் கட்டியிருந்த புனித நூலைப் பார்த்ததும் அலக்ஸாண்டரை விட்டு விட்டார்.

இப்படி ரக்ஷா பந்தன் விழா கொண்டாட்டம் குறித்து கதையாகச் சொல்ல. தற்போது ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் அல்லது அழகாக வடிவமைக்கப்பட்ட நூல்களால் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். வடமாநில மக்களில் ஒரு பிரிவினர் மட்டுமே  கொண்டாடப்படும் இப்பண்டிகையை 2000 ஆண்டுக்குப் பின்னர் இதை இந்து மதப் பண்டிகை என பரவலாக்கிய பலர் இதனை வரலாறு அறியாமல் கொண்டாடிய நிகழ்வு உண்டு. என்பதை விட இதை சமுதாயப் பண்டிகையாக இப்போது தமிழகத்தின் பலரும் கொண்டாடிய நிகழ்வு நடக்கிறது. என்று கூறுவது சாலப் பொருந்தும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...