முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் விதி மீறுபவர்கள் மீது வழக்குப் பதிய உத்தரவு

தமிழகத்தில் இனி வழக்குரைஞராக இல்லாமல் Advocate என்றும் பத்திரிகையாளர்களாக இல்லாமல் மற்றவர்கள் PRESS என்றும் காவல்துறை பணியில் அரசு வாகனங்கள் இல்லாத தனியார் வாகனங்களில் Police என்றும். ஸ்டிக்கர் ஒட்டுவதில் விதி மீறுபவர்கள் மீது வழக்குப் பதிய உத்தரவு  போலீஸ், ராணுவம், ரெவின்யூ , ஹியூமன் ரைட்ஸ் மற்றும் யூனியன் சேர்மன், ஊராட்சி மன்றத் தலைவர்   என் எழுதப்பட்ட அரசு வாகனங்கள் அல்லாமல் பணி செய்யும் நபர்கள் சொந்தமாக வாங்கி வீடுகளில் பயன்படுத்தும் தனியார் வாகனங்கள் வக்கீல், பிரஸ் உள்ளிட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டிய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சட்டப் படியல்லாமல் அதற்குரியவர்களைத் தவிர வேறு யார் ஓட்டி வந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் 






பத்திரிக்கைத் துறையில் தூர்தர்ஷன் வானொலி நிலையம் மற்றும் அரசிதழ்கள் தவிர மற்றவை அனைத்தும் பத்திரிகை காட்சி ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மின்னணு ஊடகம் என  தனியார் நடத்தும் நிறுவனங்களாகும். மத்திய அரசின் முறையான அனுமதி பெற்ற இதழில் பல்லாயிரம் நபர்கள் பணி செய்து வந்தாலும் செய்தி சேகரிக்க மாவட்டம் தோறும் நூற்றுக்கணக்கான நபர்கள் பகுதி வாரியாக உண்டு. அதுபோலவே காவல்துறையில் அரசு பணியாளர்களாகப் பலரும், வழக்குறைஞர்களில் பலரும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் தங்களது வாகனங்களில் பிரஸ், அட்வகெட் இரண்டும் தனியார் பணி ஆனால் சிலர் அரசில் பணிசெய்தாலும் ஓய்வு பெற்ற பின்னர் எக்ஸ் ஆர்மி, வருவாய் துறை, நீதித்துறை, என தனியார் வாகனங்களில் அரசுக்குச் சொந்தமான பயன்பாடுகளுடைய வாகனங்கள் போல  ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். இந்த வாகனங்களை






சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள், என அனைவரும் ஓட்டிச் செல்வது வாடிக்கையாகிறது  மேலும் சம்பந்தப்பட்ட பணிக்குச் சம்பந்தமே இல்லாதவர்களும் தங்களது வாகனங்களில் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டு வலம் வருகின்றனர். அதில் பல வியாபாரிகள் உண்டு 

காவல்துறை வாகன சோதனையின் போது இந்த வாகனங்களை சோதனை செய்ய பல நேரங்களில் முடியவில்லை. சிலர் தங்களது வாகனத்தை விற்கும்போது, அதை வாங்கிய நபர் அந்த ஸ்டிக்கரை அகற்றாமல் ஓட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் சம்பந்தப்பட்ட துறையில் யார் வேலை செய்கிறார்கள் எனத் தெரியாமல் அந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக அனைத்துக் காவல் நிலையங்களுக்கும்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி பிரஸ், போலீஸ், வக்கீல் ஸ்டிக்கர்களுடன் நகரில் உலா வரும் வாகனங்களை சோதனையிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் அந்தத் துறையில் வேலை செய்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு யாராவது வாகனத்தை ஓட்டி வந்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. வருவாய் துறையில் பணி செய்தாலும் அரசு வாகனங்கள் அல்லாமல் தனியார் வாகனங்களில் அவ்வாறு ஒட்டுவது இனி மேல் நடக்காது என நம்பப்படுகிறது.Ex ஆர்மி, பிரஸ், போலீஸ், வழக்கறிஞர், ஹியூமன் ரைட்ஸ், நீதித்துறை, வருவாய் துறை, ஸ்டிக்கர். ஒட்டிய போலிகளின் வாகனங்களுக்கு  கிடுக்கப்பிடி துவங்கியது. சில நாட்களுக்கு முன்பு காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்த நிலையில் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களில் அரசு சார்ந்த ஸ்டிக்கர்கள் ஒட்டிய நிலையில் அதிகப்படியான இரண்டு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களும் செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

அ, அல்லது, G, என்ற எழுத்து சிவப்பு நிறத்தில் மற்றும் ஹியூமன் ரைட்ஸ் உள்ளிட்ட தனியார் சங்கங்களை நீதிமன்றங்கள் தடைசெய்த போதும் அவர்கள் பயன்படுத்துவதால் அப்படி ஸ்டிக்கர் ஒட்டிய தனியார் வாகனங்களைச் சோதனை செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பல தனியார் வாகனங்களில் அரசு வாகனங்கள் போல G, அல்லது அ, எழுத்துடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு சுற்றி வருகின்றன. சிலர் ஹியூமன் ரைட்ஸ், போலீஸ், ஆன் கவர்மெண்ட் டியூட்டி, குறிப்பாக,ப்ரஸ், வழக்கறிஞர். டாக்டர், மின்துறை அல்லது டி என் இ பி என்ற ஸ்டிக்கர் அல்லது போர்டு வைத்து சொந்த வாகனங்களை இயக்கிவருகின்றனர். ஒரு வீட்டில் ஐந்து வண்டிகள் இருந்தால் அவை அனைத்திலும்  இதுபோன்று ஸ்டிக்கர் ஒட்டியிருப்பவர்கள் பலர் வாகனச் சோதனையின் போது காவல்துறையினருக்கும் போக்குவரத்துத் துறையினருக்கும்  ஒத்துழைப்பதில்லை. எதற்கு வீண் பிரச்சனை என அவர்களும் விட்டுவிடுகின்றனர்.  ஆனால் பல தனியார் பேருந்துகள் இப்போது எக்ஸ்பிரஸ் பர்மிட் அனுமதி இல்லாமல் ஒட்டுவது கூட போக்குவரத்து விதிகளை மீறுவது தான்.அதை பல ஆர்.டி.ஓ அலுவலகங்கள் கண்டுகொள்வவில்லை

ஆனால், இப்போது இது போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டிய வாகனங்களின் மூலம் சிலர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளதைத் தொடர்ந்து இது போன்ற ஸ்டிக்கருடன் வரும் வாகனங்களை நிறுத்தி, முழுமையாக ச் சோதனை செய்ய காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 2000 ஆண்டு வரை இப்படி போலியான நபர்கள் வரவில்லை தற்போது அதிகரித்து வருவதற்கு காரணம் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் மற்றும் பல இடங்களில் தகுதி முன்னுரிமை தான் அதை இவர்கள் சட்டவிரோதமாக பலர் பயன்படுத்தி வருகின்றனர். சோதனையின் போது முறையான ஆவணங்கள் இன்றி தகுதியுள்ள அடையாளச் சான்று இல்லாமலிருந்து தகராறில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு முழுவதும் சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் காவல்துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதில், இதுபோன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வாகனங்களை சோதனை செய்து தனியாக அறிக்கை தயார் செய்ய வேண்டும். அதில் அவர்கள் வைத்துள்ள ஸ்டிக்கர் அல்லது போர்டின் விவரங்கள் இருக்கவேண்டும். மேலும், சீரியல் நம்பர், தேதி, நேரம், வாகன பதிவு எண், பயனர் பெயர், முகவரி, செல் நம்பர், அலுவலக முகவரி, பதவி, போன்றவை இருக்க வேண்டும். இந்த வாகனங்களின் விவரங்களை தினமும் காவல் உதவி ஆணையர் அல்லது டி.எஸ்.பி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்திலிருந்து ஒரு நபர் அனுப்பிய, மின் அஞ்சல்-கடிதம்: நம் நாட்டில் மருத்துவர், ஆசிரியர், போலீசார் வழக்குரைஞர், பத்திரிகையாளர் என, அனைத்துத் துறைகளிலும், போலியான நபர்கள் உள்ளனர். அவர்களை ஒழிக்கவே முடியவில்லை.

காரணம் வழக்கறிஞர் படித்ததாக பிற மாநிலங்களில் போலியாக பட்டங்களை வாங்கி, அதன் மூலம் நீதித்துறையில் நடுவர்களாக அமர்ந்த சிலரை, தமிழக பார் கவுன்சில் கண்டறிந்து, அவர்களின் வழக்கறிஞர் உரிமத்தை ரத்து செய்துள்ளது. இன்னும் மாட்டாத பல போலிகள் எத்தனையோ உண்டு.

தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் நீதிபதிகள், 'வாகனங்களில், 'வழக்கறிஞர்' எனும், 'ஸ்டிக்கர்' ஒட்டுவதற்கு, ஏன் தடை விதிக்கக் கூடாது? என் ' பார் கவுன்சிலுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்; அது நியாயமான கேள்வி தான். அதேபோல, நீதித் துறை ஊழியர்களில் பெரும்பான்மையோர், தங்களது இருசக்கர வாகனம் மற்றும் கார்களில், 'நீதித் துறை' என்றும்; காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பலர், 'போலீஸ்' என்றும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கின்றனர்.

அரசு ஊழியர்கள், தங்களது வாகனத்தில், சம்பந்தப்பட்ட துறையை குறிப்பிட்டு, ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொள்கின்றனர். இவை, அனைத்திற்கும் ஏன் தடை விதிக்க கூடாது? மேலும், அரசியல் கட்சியினர், 99 சதவீதம் பேர், தங்களது கட்சி தலைவரின் படம், கொடி, சின்னம் ஆகியவற்றை, வாகனங்களில் ஸ்டிக்கர்களாக ஒட்டிச் செல்கின்றனர். இந்த செயலுக்கும், தடை விதிக்க வேண்டும்.அனைத்து துறைகளிலும், கருப்பு ஆடுகள் எங்கும் நீக்கமறக் கலந்து விட்டது என்பது உண்மையே. ஓராண்டு காலம் ஏதோ ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பணி செய்த நபர் தற்போது வேறு பணி செய்யும் நிலையில் அவர் பத்திரிகையாளர் என்கிறார் சமீபத்தில் புதுக்கோட்டையில் மளிகைக் கடை நடத்தி வரும் நபர் ஒரு பத்திரிகை சங்கத்தின் உறுப்பினர் அவர் எழுதிய ஒரு செய்தி கூட யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

எனவே, வழக்கறிஞர் மட்டும் அல்ல, மோட்டார் வாகனங்கள் சட்டப்படி, யாரும் எந்த ஒரு குறிப்பிட்ட அடையாள ஸ்டிக்கரையும் வாகனங்களில் ஒட்ட வேண்டாம் என, உத்தரவு பிறப்பிப்பது தான், சரியான தீர்வாக இருக்கும். நீதிபதிகள், முதற்கட்டமாக தங்களது நீதித்துறையில்  பணிபுரிவோர், எந்த ஒரு அடையாள ஸ்டிக்கரையும் ஒட்டக் கூடாது என, உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பொதுவாக, ஸ்டிக்கர் ஒட்டுவது, அவர்களை சட்டத்திற்கு அப்பாற்பட்டோர் என, நினைக்க வைப்பதற்கு தானே! ஜனநாயக நாட்டில், அப்படி யாரும் இருக்கக் கூடாது. இருக்கவும். முடியாது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த