முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் விதி மீறுபவர்கள் மீது வழக்குப் பதிய உத்தரவு

தமிழகத்தில் இனி வழக்குரைஞராக இல்லாமல் Advocate என்றும் பத்திரிகையாளர்களாக இல்லாமல் மற்றவர்கள் PRESS என்றும் காவல்துறை பணியில் அரசு வாகனங்கள் இல்லாத தனியார் வாகனங்களில் Police என்றும். ஸ்டிக்கர் ஒட்டுவதில் விதி மீறுபவர்கள் மீது வழக்குப் பதிய உத்தரவு  போலீஸ், ராணுவம், ரெவின்யூ , ஹியூமன் ரைட்ஸ் மற்றும் யூனியன் சேர்மன், ஊராட்சி மன்றத் தலைவர்   என் எழுதப்பட்ட அரசு வாகனங்கள் அல்லாமல் பணி செய்யும் நபர்கள் சொந்தமாக வாங்கி வீடுகளில் பயன்படுத்தும் தனியார் வாகனங்கள் வக்கீல், பிரஸ் உள்ளிட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டிய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சட்டப் படியல்லாமல் அதற்குரியவர்களைத் தவிர வேறு யார் ஓட்டி வந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் 






பத்திரிக்கைத் துறையில் தூர்தர்ஷன் வானொலி நிலையம் மற்றும் அரசிதழ்கள் தவிர மற்றவை அனைத்தும் பத்திரிகை காட்சி ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மின்னணு ஊடகம் என  தனியார் நடத்தும் நிறுவனங்களாகும். மத்திய அரசின் முறையான அனுமதி பெற்ற இதழில் பல்லாயிரம் நபர்கள் பணி செய்து வந்தாலும் செய்தி சேகரிக்க மாவட்டம் தோறும் நூற்றுக்கணக்கான நபர்கள் பகுதி வாரியாக உண்டு. அதுபோலவே காவல்துறையில் அரசு பணியாளர்களாகப் பலரும், வழக்குறைஞர்களில் பலரும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் தங்களது வாகனங்களில் பிரஸ், அட்வகெட் இரண்டும் தனியார் பணி ஆனால் சிலர் அரசில் பணிசெய்தாலும் ஓய்வு பெற்ற பின்னர் எக்ஸ் ஆர்மி, வருவாய் துறை, நீதித்துறை, என தனியார் வாகனங்களில் அரசுக்குச் சொந்தமான பயன்பாடுகளுடைய வாகனங்கள் போல  ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். இந்த வாகனங்களை






சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள், என அனைவரும் ஓட்டிச் செல்வது வாடிக்கையாகிறது  மேலும் சம்பந்தப்பட்ட பணிக்குச் சம்பந்தமே இல்லாதவர்களும் தங்களது வாகனங்களில் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டு வலம் வருகின்றனர். அதில் பல வியாபாரிகள் உண்டு 

காவல்துறை வாகன சோதனையின் போது இந்த வாகனங்களை சோதனை செய்ய பல நேரங்களில் முடியவில்லை. சிலர் தங்களது வாகனத்தை விற்கும்போது, அதை வாங்கிய நபர் அந்த ஸ்டிக்கரை அகற்றாமல் ஓட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் சம்பந்தப்பட்ட துறையில் யார் வேலை செய்கிறார்கள் எனத் தெரியாமல் அந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக அனைத்துக் காவல் நிலையங்களுக்கும்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி பிரஸ், போலீஸ், வக்கீல் ஸ்டிக்கர்களுடன் நகரில் உலா வரும் வாகனங்களை சோதனையிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் அந்தத் துறையில் வேலை செய்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு யாராவது வாகனத்தை ஓட்டி வந்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. வருவாய் துறையில் பணி செய்தாலும் அரசு வாகனங்கள் அல்லாமல் தனியார் வாகனங்களில் அவ்வாறு ஒட்டுவது இனி மேல் நடக்காது என நம்பப்படுகிறது.Ex ஆர்மி, பிரஸ், போலீஸ், வழக்கறிஞர், ஹியூமன் ரைட்ஸ், நீதித்துறை, வருவாய் துறை, ஸ்டிக்கர். ஒட்டிய போலிகளின் வாகனங்களுக்கு  கிடுக்கப்பிடி துவங்கியது. சில நாட்களுக்கு முன்பு காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்த நிலையில் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களில் அரசு சார்ந்த ஸ்டிக்கர்கள் ஒட்டிய நிலையில் அதிகப்படியான இரண்டு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களும் செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

அ, அல்லது, G, என்ற எழுத்து சிவப்பு நிறத்தில் மற்றும் ஹியூமன் ரைட்ஸ் உள்ளிட்ட தனியார் சங்கங்களை நீதிமன்றங்கள் தடைசெய்த போதும் அவர்கள் பயன்படுத்துவதால் அப்படி ஸ்டிக்கர் ஒட்டிய தனியார் வாகனங்களைச் சோதனை செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பல தனியார் வாகனங்களில் அரசு வாகனங்கள் போல G, அல்லது அ, எழுத்துடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு சுற்றி வருகின்றன. சிலர் ஹியூமன் ரைட்ஸ், போலீஸ், ஆன் கவர்மெண்ட் டியூட்டி, குறிப்பாக,ப்ரஸ், வழக்கறிஞர். டாக்டர், மின்துறை அல்லது டி என் இ பி என்ற ஸ்டிக்கர் அல்லது போர்டு வைத்து சொந்த வாகனங்களை இயக்கிவருகின்றனர். ஒரு வீட்டில் ஐந்து வண்டிகள் இருந்தால் அவை அனைத்திலும்  இதுபோன்று ஸ்டிக்கர் ஒட்டியிருப்பவர்கள் பலர் வாகனச் சோதனையின் போது காவல்துறையினருக்கும் போக்குவரத்துத் துறையினருக்கும்  ஒத்துழைப்பதில்லை. எதற்கு வீண் பிரச்சனை என அவர்களும் விட்டுவிடுகின்றனர்.  ஆனால் பல தனியார் பேருந்துகள் இப்போது எக்ஸ்பிரஸ் பர்மிட் அனுமதி இல்லாமல் ஒட்டுவது கூட போக்குவரத்து விதிகளை மீறுவது தான்.அதை பல ஆர்.டி.ஓ அலுவலகங்கள் கண்டுகொள்வவில்லை

ஆனால், இப்போது இது போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டிய வாகனங்களின் மூலம் சிலர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளதைத் தொடர்ந்து இது போன்ற ஸ்டிக்கருடன் வரும் வாகனங்களை நிறுத்தி, முழுமையாக ச் சோதனை செய்ய காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 2000 ஆண்டு வரை இப்படி போலியான நபர்கள் வரவில்லை தற்போது அதிகரித்து வருவதற்கு காரணம் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் மற்றும் பல இடங்களில் தகுதி முன்னுரிமை தான் அதை இவர்கள் சட்டவிரோதமாக பலர் பயன்படுத்தி வருகின்றனர். சோதனையின் போது முறையான ஆவணங்கள் இன்றி தகுதியுள்ள அடையாளச் சான்று இல்லாமலிருந்து தகராறில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு முழுவதும் சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் காவல்துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதில், இதுபோன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வாகனங்களை சோதனை செய்து தனியாக அறிக்கை தயார் செய்ய வேண்டும். அதில் அவர்கள் வைத்துள்ள ஸ்டிக்கர் அல்லது போர்டின் விவரங்கள் இருக்கவேண்டும். மேலும், சீரியல் நம்பர், தேதி, நேரம், வாகன பதிவு எண், பயனர் பெயர், முகவரி, செல் நம்பர், அலுவலக முகவரி, பதவி, போன்றவை இருக்க வேண்டும். இந்த வாகனங்களின் விவரங்களை தினமும் காவல் உதவி ஆணையர் அல்லது டி.எஸ்.பி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்திலிருந்து ஒரு நபர் அனுப்பிய, மின் அஞ்சல்-கடிதம்: நம் நாட்டில் மருத்துவர், ஆசிரியர், போலீசார் வழக்குரைஞர், பத்திரிகையாளர் என, அனைத்துத் துறைகளிலும், போலியான நபர்கள் உள்ளனர். அவர்களை ஒழிக்கவே முடியவில்லை.

காரணம் வழக்கறிஞர் படித்ததாக பிற மாநிலங்களில் போலியாக பட்டங்களை வாங்கி, அதன் மூலம் நீதித்துறையில் நடுவர்களாக அமர்ந்த சிலரை, தமிழக பார் கவுன்சில் கண்டறிந்து, அவர்களின் வழக்கறிஞர் உரிமத்தை ரத்து செய்துள்ளது. இன்னும் மாட்டாத பல போலிகள் எத்தனையோ உண்டு.

தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் நீதிபதிகள், 'வாகனங்களில், 'வழக்கறிஞர்' எனும், 'ஸ்டிக்கர்' ஒட்டுவதற்கு, ஏன் தடை விதிக்கக் கூடாது? என் ' பார் கவுன்சிலுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்; அது நியாயமான கேள்வி தான். அதேபோல, நீதித் துறை ஊழியர்களில் பெரும்பான்மையோர், தங்களது இருசக்கர வாகனம் மற்றும் கார்களில், 'நீதித் துறை' என்றும்; காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பலர், 'போலீஸ்' என்றும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கின்றனர்.

அரசு ஊழியர்கள், தங்களது வாகனத்தில், சம்பந்தப்பட்ட துறையை குறிப்பிட்டு, ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொள்கின்றனர். இவை, அனைத்திற்கும் ஏன் தடை விதிக்க கூடாது? மேலும், அரசியல் கட்சியினர், 99 சதவீதம் பேர், தங்களது கட்சி தலைவரின் படம், கொடி, சின்னம் ஆகியவற்றை, வாகனங்களில் ஸ்டிக்கர்களாக ஒட்டிச் செல்கின்றனர். இந்த செயலுக்கும், தடை விதிக்க வேண்டும்.அனைத்து துறைகளிலும், கருப்பு ஆடுகள் எங்கும் நீக்கமறக் கலந்து விட்டது என்பது உண்மையே. ஓராண்டு காலம் ஏதோ ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பணி செய்த நபர் தற்போது வேறு பணி செய்யும் நிலையில் அவர் பத்திரிகையாளர் என்கிறார் சமீபத்தில் புதுக்கோட்டையில் மளிகைக் கடை நடத்தி வரும் நபர் ஒரு பத்திரிகை சங்கத்தின் உறுப்பினர் அவர் எழுதிய ஒரு செய்தி கூட யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

எனவே, வழக்கறிஞர் மட்டும் அல்ல, மோட்டார் வாகனங்கள் சட்டப்படி, யாரும் எந்த ஒரு குறிப்பிட்ட அடையாள ஸ்டிக்கரையும் வாகனங்களில் ஒட்ட வேண்டாம் என, உத்தரவு பிறப்பிப்பது தான், சரியான தீர்வாக இருக்கும். நீதிபதிகள், முதற்கட்டமாக தங்களது நீதித்துறையில்  பணிபுரிவோர், எந்த ஒரு அடையாள ஸ்டிக்கரையும் ஒட்டக் கூடாது என, உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பொதுவாக, ஸ்டிக்கர் ஒட்டுவது, அவர்களை சட்டத்திற்கு அப்பாற்பட்டோர் என, நினைக்க வைப்பதற்கு தானே! ஜனநாயக நாட்டில், அப்படி யாரும் இருக்கக் கூடாது. இருக்கவும். முடியாது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...