முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹம்பி எனும் விஜயநகரம் பேரரசின் முற்காலத் தலைநகர். குடியரசுத் துணைத் தலைவர் பார்வையிட்ட நிகழ்வு

`ஹம்பி`- இந்தத் தலைமுறை மக்களுக்குப் புரியும்டி கூறுவதானால் அது நிஜத்தில் பாகுபலி நகரம்: வீழ்ந்துபோன மாபெரும் பேரரசின் கதை களம் ஹம்பி



துங்கபத்ரா நதிக்கரையில் ஒரு கடந்த கால வரலாறு மெளனமாக உறங்கிக் கொண்டிருக்கிறதுபேரரசு. முன் காலத்தில் குதிரைகளின் காலடி  குளம்புச் சத்தம், மலைகளெங்கும் எதிரொலித்த  பேரரசு, தற்போது ஆழ்ந்த அமைதியில். விஜயநகரப் பேரரசின் முதன்மைத் தலைநகரம். கோட்டை, சத்தையும், கோயில்களென  உயிர்ப்புடன் இருந்த நகரம் தற்போது அதன் சுவடுகளை மட்டும் சுமந்து கொண்டிருக்கிறது.



பாகுபலி திரைப்படம் பார்த்து  வியந்திருப்போம் அது உண்மை இல்லை.   வரைகலை துணை கொண்டு உருவாக்கப்பட்ட மகிழ்மதி நகரம், அதன் கோட்டைகள், நீளமான மதில்கள், வணிகக் கூடங்கள், கோயில்கள் என அந்த திரைப்படம் நமக்கொரு அலாதியானது நல்ல வரலாற்று அனுபவத்தை வரலாறு படிக்க மறந்து போன அடுத்த தலைமுறை கண்டது? நம் கண் முன்னால் ஒரு மெய்நகர் உலகம் விரிந்ததுதானே? அந்த அனுபவத்தை நிஜத்தில் தருகிறது கர்நாடகா மாநிலத்தில் ஹம்பி. பறந்து விரிந்து ஆண்டபின் மதுரை வரை பறந்து விரிந்து வளர்ச்சி கண்ட பின்னர்



காலத்தால் வீழ்ச்சியடைந்த விஜயநகரப் பேரரசின் தலைநகராக இருந்த ஹம்பி 26 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்த நகரத்திற்குள் நுழைந்ததுமே நமக்குப் பண்டைய நகரத்திற்குள் நுழைந்துவிட்ட உணர்வு கிடைக்கிறது.




ஹம்பியின் பேரழகை ஒரே ஒரு காட்சியில் தரிசிக்க  விரும்பினால் அங்குள்ள மண்டகா மலைக்கு ஏறினால் முழு நிலப்பரப்பின் தரிசனம் சூரியோதயத்தில் அந்தச் சிறு மலையேறினால் மஞ்சள் பூசிய ஒளி ஒருவிதமான உணர்வை நமக்குள் கடத்தும். மலையேறுவதும் சிரமமாக இருக்காது கற்படிகள் உண்டு.




அங்கிருந்து இறங்கி சிறிது நேரம் பயணித்தால் துங்கபத்ரா நதி  இரு கரைகளைத் தொட்டு எதையோ அடைந்துவிட வேண்டுமென்ற உத்வேகத்தில் பயணிக்கும் நதியில் தான் ஹம்பியில் அமைந்துள்ள கோவில்களின் யானைகள் தினமும் நீராடுகின்றன.





 ஹம்பியில் மட்டும் விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள்.

சிவன் மற்றும் கிருஷ்ணர் கோவில் இப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது. நாடெங்கிலுமிருந்து பக்தர்களும், உலகெங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளும் தினமும்  வருகிறார்கள்.





 நகரத்திற்குள் நுழையுமிடத்தில் பழங்கால சுங்கசாவடி, அக்கால வணிக நடைமுறைகளை  உணர்த்தும்.

950 மீட்டர் நீளமுடைய சத்தையும், 30 சதுர மீட்டர் அளவுடைய ராணிகளின் அந்தப்புறக் குளியலறையும், பிரம்மாண்ட அரண்மனையில் எஞ்சிய மிச்சமாகும்.





வரலாற்றின் மீது பெருங்காதல் கொண்டவர்களின் சரியான சுற்றுலாத் தளம் `ஹம்பி'.     கர்நாடக மாநில பெல்லாரி மாவட்டத்தில் பாயும் துங்கபத்திரை ஆற்றங்கரையிலுள்ள உலகப் பாரம்பரியக் களம் கண்ட ஊர் விஜயநகரப் பேரரசின் தலைநகரான போது விஜயநகரமாகும். ஹம்பி, விசயநகரப் பேரரசின் தலைநகரமான விசயநகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ளது. விசயநகரத்துப் பேரரசு காலத்துக்கும் முந்திய காலப்பகுதியைச் சேர்ந்ததான இவ்வூர் முக்கியமான சமயச் சிறப்புப் புகழ்பெற்ற விருபாட்சர் கோயில்  உள்ளது.

தோற்றுவித்தவர் ஹரிஹரர், புக்கராயர் ஆகும்.  ஏற்றம் 467 m (1,532 ft) மக்கள்தொகை 2011 ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்தம் 2,777 ஆகும்.

இணையதளம்  www.hampi.in

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் ஹம்பியில் உள்ள நினைவுச் சின்னங்களின் தொகுதி உலகப் பாரம்பரிய பட்டியலில் உள்ளது  ஆசியா-பசிபிக் வரலாறு  பொறிப்பு சிறப்புக்கள் கொண்டது.

விசயநகரப் பேரரசின் படையில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வீரர்கள் இருந்துள்ளனர். பொது ஆண்டு 1500 ல் விசயநகரப் பேரரசில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 500,000 ஆகும். (இது 1440-1540 காலத்திய உலக மக்கட்தொகையின் படி 0.1 சதவீதமாகும்).   குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்




யுனெஸ்கோ சர்வதேச பாரம்பரிய தலமான ஹம்பியை பார்வையிட்ட குடியரசு துணைத் தலைவர், நமது வளமான கலாச்சாரம் குறித்து இளைஞர்கள் அறிந்து கொள்ள செய்ய வேண்டும் என்று வலியுறுத்தல்

நமது செழுமையான கடந்தகாலம் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியம் குறித்து இளைஞர்கள் அறிந்து கொள்ளுமாறு செய்ய வேண்டிய தேவை குறித்து குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார். இளம் தலைமுறையை ஊக்குவிப்பதற்காக கிருஷ்ணதேவராயர் போன்ற பேரரசர்களின் வரலாற்றை பாடப் புத்தகங்களில் இடம் பெற செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

விஜயநகரப் பேரரசின் முன்னாள் தலைநகரமான கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹம்பியை பார்வையிட்ட பின்னர் முகநூலில் பதிவிட்ட குடியரசு துணைத் தலைவர், நமது வளமிக்க மற்றும் துடிப்புமிக்க கடந்த காலத்தை வரலாற்று சிறப்புமிக்க அந்த இடம் நினைவுபடுத்துவதாக கூறினார்.


"நமது வளமான மற்றும் சிறப்பான பாரம்பரியம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில்

வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த இடங்களுக்கு கல்வி சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து கல்வி நிலையங்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.  

யுனெஸ்கோ சர்வதேச பாரம்பரிய தலமான ஹம்பியின் பிரமாண்டம் மற்றும் அழகு குறித்து புகழாரம் சூட்டிய திரு நாயுடு, வரலாற்று சிறப்புமிக்க இடத்திற்கு தாம் மேற்கொண்ட பயணம் நமது முன்னோர்களின் விசாலமான பார்வை மற்றும் திறமைகள் குறித்த பெருமையை தமக்கு ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

கோட்டைகள், கொத்தளங்கள், மாடங்கள், மாளிகைகள் கோவில்கள் மற்றும் சந்தைகளின் மிச்சங்கள் விஜயநகர பேரரசின் பெருமையை பறைசாற்றுவதாக திரு நாயுடு தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஹம்பியில் உள்ள ஒவ்வொரு நினைவுச் சின்னமும் பிரத்தியேகமாக உள்ளது என்றும், பார்ப்பவர்களை அது பரவசமடைய செய்வதோடு, கம்பீரமான கலாச்சார சிறப்பை பிரதிபலிப்பதாகவும் குடியரசு துணைத் தலைவர் கூறினார்.

பெல்லாரி மாவட்டத்தில் கிடைத்த பேரரசர் அசோகரின் சாசனங்களின் படி ஏசு கிருஸ்து பிறப்புக்கு முன் மூன்றாம் நூற்றாண்டில் இப்பகுதி மௌரியப் பேரரசின் பகுதியாக  அறியப்படுகிறது.  அகழ்வாய்வில் பிராமி கல்வெட்டும், இரண்டாம் நூற்றாண்டைச் (பொ-ஊ) சேர்ந்த சுடுமண் முத்திரையும் கிடைத்துள்ளது. ஹம்பியின் குடியேற்றங்கள் பொது ஆண்டு  முதலாம் ஆண்டிலிருந்து தொடங்கியது.

விசயநகரப் பேரரசின் எழுச்சிக்கு சிறிதுகாலம் முன்னர் ஹம்பியிலிருந்து கிழக்கே 19 கிமீ தொலைவிலுள்ள சிறு நகரமான கம்ப்பிளியை ஆண்டவர்களின் கைவசம் ஹம்பி இருந்திருக்கக்கூடும்.

விசயநகரப் பேரரசு தக்காண முகலாய சுல்தான்களின் படையெடுப்புக்குள்ளான போது அப் பேரரசின் தலநகரத்தின் மிகச்சிறந்த பகுதியாக ஹம்பி விளங்கியது.வற்றாத துங்கபத்திரை ஆற்றால் ஒரு புறமும், ஏனைய மூன்றுபுறங்களிலும் இயற்கை அரணாக அமைந்த மலைகளாலும் சூழப்பட்ட இது தலைநகராக அமைந்ததற்கு முக்கியக் காரணமாகும். 1420 ஆம் ஆண்டு இந்நகரைப் பார்க்க வந்த நிக்கோலா கோண்டி என்ற இத்தாலியப் பயணி இந்நகரம் 60 மைல் சுற்றளவு கொண்டது என்று கூறியுள்ளார்.

ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்காட்லாந்திய இராணுவ அதிகாரியும் இந்தியாவின் முதல் தலைமை மதிப்பீட்டாளருமான கர்னல் காலின் மெக்கன்சீயால் 1800 ஆம் ஆண்டு ஹம்பியின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. விசயநகரப் பேரரசின் காலத்தில் இங்கு பல கோவில்களிருந்தன. இங்குள்ள பம்பபதி கோவில் (விருபாட்சர் கோவில்), அசரா இராமர் கோயில், உக்கிர நரசிம்ம சுவாமி கோயில், விட்டலர் கோயில் ஆகியவற்றின் அழிபாடுகள் விசயநகரப் பேரரசின் எச்சங்களாகக் காணப்படுகின்றன.இந்தியத் தொல்லியல் துறையினரால் தொடர்ந்து அகழ்வாய்வு நடந்து வருகிறது.

மால்யவந்தா மலையின் வடக்கு சரிவுக்கும் தலரிகட்டா வாயிலுக்குமிடையே இசுலாமியக் குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. அரசவையின் உயர் அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் வசித்த இடமாக இசுலாமியக் குடியிருப்புப்பகுதி இருக்கக்கூடுமென தொல்லியலாய்வாளர்கள் கருதுகின்றனர்.

Advertisment-.  



-Advertisment

இராமாயணத்தில்  குரங்குகளின் அரசான கிஷ்கிந்தையுடன் ஹம்பியிலுள்ள பல புண்ணிய இடங்கள் அடையாளம் காணப்படுவது உண்டு. அருகிலுள்ள நிம்பபுரத்தில் வாலியின் எச்சங்கள் காணப்படுகின்றன.

ஹம்பியில் உள்ள ’அஞ்சனாத்ரி குன்று’ அனுமன் பிறந்த மலையாகக் குறிப்பிடப்படுகின்றது. இந்த மலையில் 1060 படிகள் ஏறிச்சென்றால் அனுமனுக்கும் அவரது தாயார் அஞ்சனா தேவிக்கும் கோவில்களுள்ளன. இங்கு வழிபாடும் நடத்தப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த