முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புளியந்தோப்பு மற்றும் பெரம்பலூர் குடியிருப்பு சொல்லும் பாடம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் தப்பி விடுவார்கள். அலுவலர்கள் சிக்குகிறார்கள்

புளியந்தோப்பு மற்றும் பெரம்பலூர் குடியிருப்பு சொல்லும் பாடம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் தப்பி விடுவார்கள். அலுவலர்கள் சிக்குகிறார்கள்





ஆனால் கட்டுமான நிறுவனமும், கையெழுத்துப் போட்டு அதற்கு வழி வகுக்கும் அலுவலர்களும் சிக்கலுக்குள்ளாவர்கள்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளை ஊழலுக்கு பயிற்றுவித்தது தான் தற்போது அணைத்து துறையில் ஊழல் மலிந்து விட்டது

இனியாவது அரசியல்வாதிகள் பிழைக்க தங்கள் வாழ்க்கையைப் பறி கொடுக்கணுமா என்று ஒப்பந்ததாரர்களும், கையெழுத்துப் போடும் அலுவலர்களும் முறையாகச் சிந்தியுங்கள். கமிஷன் கரப்ஷனின்றி


 

நன்றாகப் பாருங்கள் எங்குமே துறைக்கு அமைச்சர் பெயர் ஊழலில் அடிபடுகிறதா என்று. இல்லை .        சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு வளாக விவகாரத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைத்ததால்  அடுக்குமாடிக் குடியிருப்பில் சேதாரம் எதுவும் ஏற்படவில்லையென சென்னை பெருநகர மாநகராட்சி மறுப்புத் தெரிவித்துள்ளது. பி.எஸ்.டி கட்டுமான நிறுவனத்துக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

அபாய நிலையில் புளியந்தோப்பு குடியிருப்பு இருக்கும் காரணத்தால் இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்


சென்னை புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியம் கட்டிய கே.பி.பார்க் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தின் அவல நிலை இது.

கடந்து போன அதிமுக ஆட்சியில் ரூபாய்.112 கோடியே 60 லட்சம் செலவில் கட்டப்பட்ட கட்டிடத்தைத் தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்


 விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பலர் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.  குடிசை மாற்று வாரியத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த கட்டிடத்தின் தரத்தை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆராயாமல் நடவடிக்கைத் தீர்வு வழங்கிய உதவிப் பொறியாளர்கள் பாண்டியன், அன்பழகன் ஆகியோர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க எம்.எல்.ஏ பரந்தாமன் சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று தா.மோ.அன்பரசன் உறுதி அளித்தார்.

இதற்கிடையே அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு சேதம் விளைவித்து, கட்டிடம் சரியில்லை என செய்தியை கிளப்பிவிட்டால், வைப்புத் தொகையான ரூ.1,50,000 செலுத்தத் தேவையில்லை என்று சிலர் தூண்டிவிட்டதன் காரணமாகவே புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பற்றி அவதூறு பரப்புகின்றனர் என்று புளியந்தோப்பு கட்டுமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.                மேலும், சென்னை மாநகராட்சி இந்தக் குடியிருப்பை கொரோனா மையமாக பயன்படுத்தியதால்தான் கட்டிடம் சேதம் அடைந்துவிட்டதாகவும் கட்டுமான நிறுவனம் இந்த ஊழலிலிருந்து தப்பிக்க வழி தேடிக் கூறியிருந்த விளம்பரங்கள் வந்த நிலையில் பி.எஸ்.டி நிறுவனத்தின் விளக்கத்துக்கு சென்னை பெருநகர மாநகராட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.      சென்னை பெருநகர மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் இராஜேந்திரன் அளித்த விளக்கத்தில்:- கொரோனா சிகிச்சை மையம் அமைத்ததால் புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பில் சேதாரம் எதுவும் ஏற்படவில்லை. சிகிச்சை மையத்துக்கான பொருட்கள் எடுத்துச் சென்றபோதும் குடியிருப்புக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

ஏனெனில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும்போது அந்த குடியிருப்புக்கு ஒருவர் தூக்கிச் செல்லும் படுக்கைகள் உள்ளிட்ட மிக இலகுரக பொருட்களே பயன்படுத்தப்பட்டன. கடினமான தளவாடங்கள் அல்லது கடினமான பொருட்கள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை. எனவே கட்டுமான நிறுவனம் கூறிய சேதாரத்துக்கும், பாதிப்புக்கும் சென்னை மாநகராட்சி காரணமல்ல என விளக்கம் அளித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...