தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு தலைமை ஆசிரியைகளுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு. முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி, நாடு முழுதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது, அன்று மத்திய - மாநில அரசுகளின் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. மத்திய அரசின் விருதுக்கு, தமிழகத்தில் 105 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்த நிலையில், தேசிய விருதுக்கு தேர்வான 44 நபரின் பட்டியலை, மத்திய அரசு வெளியிட்டது.
தமிழகத்தின் இரண்டு தலைமை ஆசிரியைகள் விருதுக்கு தேர்வாகியுள்ளார் . திருச்சிராப்பள்ளி மணிகண்டம், பிராட்டியூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி; ஈரோடு, மொடக்குறிச்சியிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகியோர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
கருத்துகள்