வரலாற்று நாயகர் - வ.உ.சி பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
சுதந்திரப் போராட்ட வீரர் திரு வ. உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்துள்ளார்
சுதந்திரப் போராட்ட வீரர் திரு வ. உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
அவர் விடுத்துள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“திரு வ. உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளை முன்னிட்டு, தொலைநோக்குப் பார்வை உடைய அவரை நினைவு கூர்கிறேன். நமது சுதந்திர இயக்கத்தில் அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார். தற்சார்பு இந்தியா குறித்து அவர் திட்டமிட்டதுடன், அதை நோக்கி முக்கிய நடவடிக்கைகளை, குறிப்பாக துறைமுகம் மற்றும் கப்பல் துறைகளில் மேற்கொண்டார். அவரால் நாம் மிகுந்த எழுச்சி அடைகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
“கப்பலோட்டிய தமிழன்”, “செக்கிழுத்த செம்மல்” என சிறப்புப் பட்டங்கள் கொண்ட வ.உ. சிதம்பரம் பிள்ளை பிறந்து 149 ஆண்டுகள் முடிந்து 05.09.2021 அன்று 150ஆம் ஆண்டு பிறக்கிறது! வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி 1872 ஆம் ஆண்டில் பிறந்தார் மிகச்சிறந்த வழக்கறிஞர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பிரிட்டிஷ் கப்பல்களுக்கு போட்டியாக முதல் உள்நாட்டு கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இலங்கையில் கொழும்புக்குமிடையே கடல் வழிப் போக்குவரத்து மேற்கொண்டதனால் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியரசால் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அவரின் வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது தியாக சீலர் வ.உ.சியை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகமாக மாற்றப்பட்டதுடன் தூத்துக்குடியில் அவர் பெயரில் ஒரு அரசு கல்லூரியும், கோயமுத்தூரில் வ.உ.சி பெயரில் பூங்கா அமைக்கப்பட்டது ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய கப்பலோட்டிய தமிழன்வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி 1872 ஆம் ஆண்டில் பிறந்தார் மிகச்சிறந்த வழக்கறிஞர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பிரிட்டிஷ் கப்பல்களுக்கு போட்டியாக முதல் உள்நாட்டு கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இலங்கையில் கொழும்புக்குமிடையே கடல் வழிப் போக்குவரத்து மேற்கொண்டதனால் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியரசால் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அவரின் வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது தியாக சீலர் வ.உ.சியை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகமாக மாற்றப்பட்டதுடன் தூத்துக்குடியில் அவர் பெயரில் ஒரு அரசு கல்லூரியும், கோயமுத்தூரில் வ.உ.சி பெயரில் பூங்கா அமைக்கப்பட்டது ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய கப்பலோட்டிய தமிழன் வா.உ.சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி 3 செப்டம்பர் 2021 லவ் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை துறைமுகம் பிரதான நுழைவு வாயிலில் உள்ள அவரது திருவுருவச் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் உடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை , அரசுச்செயலாளர் மகேசன்காசிராஜன் இ.ஆ.ப. , செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் இ.ஆ.ப. , சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத் துணைத் தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார் IRTS , துறைமுக பொறுப்புக் கழக செயலாளர். தாரா ஸ்வீர்தா ஆகியோர் உடனிருந்தனர் மதுரை மத்திய தொகுதியில் சிம்மக்கல் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு நிறுவப்பட்டுள்ள வெண்கல திருவுருவ சிலை திறப்புவிழாவில் அவரது பேரன் வ.உ.சி.வா.சிதம்பரம் மற்றும் தமிழகத்தின் நிதியமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று சிலையைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
பன்முக ஆளுமை கொண்ட வ.உ.சி. வழக்கறிஞர்; தமிழறிஞர்; இந்திய விடுதலைப் போராட்டத்தை வீரஞ்செறிந்த வெகு மக்களின் வீதிப் போராட்டமாக நடத்தியவர்; தமிழ்நாட்டின் முதல் தொழிற்சங்கத் தலைவர். தொழிலாளர் உரிமைகளுக்காக தூத்துக்குடி கோரல் மில் நூற்பாலையில் 1908 ஆம் ஆண்டு சூலை மாதம் 22 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி ஆங்கில ஏகாதிபத்திய வணிகக் கொள்ளையர்க்கு மாற்றாக மலிவுக் கட்டணத்தில் பயணிகள் கப்பல் நடத்தியவர்; விடுதலைப் போராட்ட உரைகளுக்காக 20 ஆண்டும், விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவிற்கு தங்குமிடமும் உணவும் வழங்கிப் பராமரித்ததற்காக 20 ஆண்டும் விதிக்கப்பட்டு இரண்டையும் தனித்தனியே அனுபவிக்க 40 ஆண்டுகள் சிறையில் இருக்கத் தண்டனை பெற்றவர்; கோயமுத்தூர் சிறையிலேயே செக்கிழுத்தவர்; இலண்டன் பிரிவி கவுன்சில் மேல் முறையீட்டில் 40 ஆண்டு காலத் தண்டனை ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்ட காலத்தில்; திருக்குறளுக்கு உரை எழுதிய தும்; மெய்யறிவு இலக்கிய நூல்களைப் படைத்தவர்; சமூகநீதிக் கொள்கையைக் கடைபிடித்தவர்; பிராமணரல்லாதார்க்கு அப்போதய காலத்தில் இடஒதுக்கீடு கேட்டவர்; சாதிவெறி, மதவெறிக்கு எதிரானவர்; பிற்காலத்தில் வறுமையில் மிகவும் வாடியவர் இறுதிக் காலத்தில் மண்ணெண்ணெய் வண்டி தள்ளி வாழும் நிலை ஆனபோதும் தேசபக்தி தெய்வ பக்தி மாறாது வாழ்ந்த தியாகி என பன்முகத் தன்மை கொண்டு - தமிழினத்தின் அறிவும், வீரமும், அறமும் கொண்டு விளங்கிய தியாகசீலர் வ.உ.சி. வாய்ச்சொல் வீரர் அல்லர் வ.உ.சி; களப் போராளி என்பதை நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை பாடினார் :
“பேசி விட்டே சுயராஜ்யம் பெறலாமென்று பெரியபலத் தீர்மானக் கோவை செய்து
காசு, பணப் பெருமையினால் தலைவராகிக் காங்கிரசை நடத்தியதைக் கண்டு நொந்து
தேசநலம் தியாகமின்றி வருமோ என்று திலகர் பெருமான் செய்த பெருங்கிளர்ச்சி சேர்ந்து
ஓசைப்படா துழைத்த பல பெரியோர் தம்முன் உண்மைமிக்க சிதம்பரமும் ஒருவனாவான்!”.
ஆயுதம் ஏந்தாத வெகுமக்கள் போராட்டத்தை வீச்சுமிக்கதாக நடத்திக் காட்டியவர் வ.உ.சி. பெருந்திரள் ஊர்வலம் - ஆர்ப்பாட்டம் முதலியவற்றை நடத்தினார். பிரிட்டிஷ் கிழக்கிந்திய அரசுக்கு எதிரான ஒத்துழையாமைச் செயல்பாடுகளை மக்களைக் கடைபிடிக்க வைத்தார். இந்திய விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்காதவர்களுக்கு, வெள்ளைக்கார விசுவாசிகளுக்குக் கடைகளில் பொருட்கள் விற்க மறுத்தனர்; துணி வெளுக்க மறுத்தனர்; முடிதிருத்த மறுத்தனர். இவ்வாறு விடுதலைப் போராட்டத்தை வெகுமக்கள் போராட்டமாக நடத்தி
மக்களிடையே வ.உ.சி. பேசிய சொற்பொழிவுகளைக் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் காவல்துறையினர் பதிவு செய்தனர். அவருக்குத் தண்டனை வழங்கப்பட்ட வழக்குக் குற்ற அறிக்கையில் 1908 ஆம் ஆண்டில் வ.உ.சி. பேச்சு பதிவாகியுள்ளது.“மக்கள் ஒன்று சேர்ந்தால் வெள்ளையரை விரட்டி விடலாம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டோம் என்று தெரிந்தாலே போதும்; வெள்ளையர்கள் தாமாகவே மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு வெளியேறி விடுவார்கள்.
“இந்தியாவில் மிஞ்சிப் போனால் 50 ஆயிரம் வெள்ளையர்கள் தான் இருப்பார்கள். அவர்களைப் பலாத்காரமாக நாம் வெளியேற்ற முடிவு செய்தால் அது மிகவும் எளிமையான காரியம்தான் ஆனாலும், நாம் பலாத்காரத்தில் ஈடுபடக்கூடாது. அதே சமயத்தில் வெள்ளையரைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை.
“இந்தியர்களாகிய நாம் ஏற்கெனவே தீர்மானித்தபடி பிரிட்டிஷ் துணி, சர்க்கரை, எனாமல் பாத்திரம் முதலிய பொருள்களை வாங்காமல் பகிஷ்கரித்தால் ஆங்கிலேயர்கள் தாமாகவே இந்தியாவிலிருந்து வெளியேறி விடுவார்கள்.
“சவரத் தொழிலாளிகள் அன்னியத் துணி அணிந்தவர்களுக்கும் அன்னிய ஆதரவாளர்களுக்கும் தாங்கள் இனிமேல் சவரம் செய்வதில்லை என்று உறுதி எடுத்து சத்தியம் செய்திருக்கிறார்கள். இந்த உணர்வு மற்ற தொழிலாளர்களுக்கும் வந்தால் பிரிட்டிஷ்காரர்களால் இந்த நாட்டில் நான்கு நாள் தாக்குப் பிடிக்க முடியுமா? வருவதெல்லாம் வரட்டும் நாம் எதற்கும் அஞ்சாமல் கடமையைச் செய்வோம்! வெற்றி நிச்சயம்!”
- (சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள், சிவலை இளமதி நூலில்).
திருநெல்வேலி, தச்சநல்லூர், தூத்துக்குடி பகுதிகளில் மக்கள் போராட்டம் வீச்சுப் பெற்றது. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் காவல்துறை அடக்குமுறையும் தீவிரப்பட்டது. தன்னைச் சந்திக்க வருமாறு திருநெல்வேலி ஆங்கிலேயக் கலெக்டர் விஞ்ச் வ.உ.சிதம்பரம் பிள்ளையை அழைத்தார். 12.03.1908 அன்று வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தனர். பிரிட்டிஷ் கலெக்டர்
விஞ்சுக்கும் வ.உ.சி.க்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டபின்னர் அதைக் கவிதையாக்கினார் பாரதியார்.
விஞ்ச்துரை : நாட்டில் எங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினாய்; கனல் மூட்டினாய்.. ஓட்டம் நாங்கள் எடுக்க வென்றே கப்பல் ஓட்டினாய்; பொருள் ஈட்டினாய்
வ.உ.சி.:பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ நாங்கள் சாகவோ? அழுது கொண்டிருப்போமோ?ஆண்பிள்ளைகள் அல்லமோ? உயிர் வெல்லமோ?
விஞ்ச் :வாட்டியுன்னைச் சிறைக்குள்ளே மாட்டுவேன்; வலி கூட்டுவேன்
வ.உ.சி. :சதையைத் துண்டு துண்டாக்கினும் உன் எண்ணம் சாயுமோ? ஜீவன் ஓயுமோ? என்பதே
வ.உ.சி.யும் சிவாவும் கைது செய்யப்பட்டனர். மாபெரும் மக்கள் போராட்டம் திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியில் வெடித்தது. நகராட்சி அலுவலக எண்ணெய்க் கிடங்கு, துணைப் பதிவாளர் அலுவலகம் எனப் பல இடங்கள் தீக்கிரையாயின. நெல்லை இந்துக் கல்லூரி மாணவர்கள் சிறையை உடைத்து வ.உ.சி.யை மீட்போம் எனப் புறப்பட்டனர்.
காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் மாண்டதுடன் பலர் படுகாயமுற்றனர். தொடர்ந்து நான்கு நாட்கள் கலவரமும் போராட்டமும் நீடித்தது. வ.உ.சி. மாபெரும் மக்கள் தலைவரானார்.
ஆறாண்டு சிறைத் தண்டனை உறுதியானது. 1912 ஆம் ஆண்டின் இறுதியில் நான்கு ஆண்டு சிறையிலிருந்தவர் தண்டனைக் கழிவு பெற்று விடுதலை ஆனார். காங்கிரசுக் கட்சியில் வ.உ.சி.க்கு உரிய இடமில்லை என்றாலும். காங்கிரசுக்காரராகவே தொடர்ந்தார். சமூகச் சிக்கல்கள், மதம், பிராமணியம், இலக்கியம் முதலிய ஆய்வுகளில் இறங்கினார். பிராமணியத்தை, மூட பக்தியை எதிர்த்தார். பெரியாருடன் சில கூட்டங்களில் கலந்து கொண்டார். சைவ சித்தாந்தத்தில் உறுதியுடனிருந்தார். கடவுள் மறுப்பாளரையும் மதிப்புடன் ஏற்றார்.
“மக்கள் பல்வேறு பெயர்களோடும் வடிவுகளோடும் காணப்படினும் அவர்களெல்லாம் மக்கள் சாதியினரேயாவது போல, மதங்கள் பலவேறு பெயர்களோடும் கொள்கைகளோடும் காணப்படினும் அவைகளெல்லாம் ஒப்புயர்வற்ற ஒரே இறைவனைப் பற்றியே பேசுகின்றன” என்றார் வ.உ.சி. (இந்திய விடுதலைப் போரில் வ.உ.சி. - என். திரவியம், விஜயா பதிப்பகம் வெளியீடு நூல்).
வ.உ.சி.யின் விடுதலைப் போராட்டங்களும் சமூகவியல் சிந்தனைகளும் வரலாற்றில் நிலைக்கும்; வளரும். வெள்ளை ஏகாதிபத்தியத்தின் பிடரியைப் பிடித்து உலுக்கிப் போராடிய வ.உ.சி.யை அனைத்திந்தியக் காங்கிரசுத் தலைமை அப்போதும் எப்போதும் கண்டுகொள்ளவில்லை.
காங்கிரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வரலாற்று நூலில் வ.உ.சி.யின் பெயரே இல்லை. வடநாட்டவர்க்கு வ.உ.சி.யைத் தெரியாது. ஆனால், தமிழ்நாட்டில் வடநாட்டுத் தலைவர்கள் மட்டுமல்ல, வடநாட்டுச் சிறுசிறு நிகழ்வுகளும், நினைவுச் சின்னங்களாக - திடல் பெயர்களாக - தெருப் பெயர்களாக எங்கும் நிறைந்திருக்கின்றன.
நம் வீரத்தமிழர், தமிழ்ச் சான்றோர் வ.உ.சி.யின் நினைவுகளைப் போற்றுவோம்! வ.உ.சி.யின் 150 ஆவது ஆண்டு விழாவை சென்னைப் பட்டணத்திலிருந்து சிற்றூர் வரை எடுப்போம் என்ற தமிழ்நாடு அரசின் செயல் வரவேற்பு பெறுகிறது. பட்டி தொட்டி எங்கும் .வ.உ.சி 150 வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை நகர் வ.உ.சி பேரவை சார்பாக வைக்கப்பட்டுள்ள படத்திற்கு சிவகங்கை நகரில் பல்வேறு கட்சிகளும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திமுக நகர் செயலாளர் சிஎம். துரை ஆனந்த் உள்ளிட்ட பிரமுகர்கள் மலர் மரியாதை செய்தனர் .அந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பல இடங்களில் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. வா.உ.சி புகழ் மனம் மாறாது.
கருத்துகள்