முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேவூர் ஸ்ரீ தேவபுரீஸ்வரர் கோவில் திருப்பணிக்கு வானம் தோண்டிய போது விலைமதிப்பற்ற 17 திருமேனிகள் கண்டெடுப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகில் உள்ள தேவூர் ஸ்ரீ தேவபுரீஸ்வரர் கோவில்


திருப்பணிக்கு வானம் தோண்டிய போது விலைமதிப்பற்ற  சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. தேவூரில் தேன்மொழி அம்பாள் உடனுறை ஸ்ரீ தேவபுரீஸ்வரர் கோவில் உள்ளது. நான்காம் நூற்றாண்டில் கோட்செங்க சோழனால் கட்டப்பட்டதாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த திருப்பணிகள் நடைபெறுகிறது.



இந்த நிலையில் கோவிலின் ஒரு பகுதியில் நவக்கிரக சிலைகள் வைக்க மண்டபம் கட்டுவதற்கு வானம் தோண்டப்பட்டது. அப்போது நான்கடி ஆழத்தில் அம்மன் சிலை இருந்ததை தொழிலாளர்கள் பார்த்தனர். இதில் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், சிலை இருந்த இடத்தை உடனடியாக மூடி வைத்து விட்டனர்.  




தகவலறிந்த கீழ்வேளூர் தாசில்தார் மாரிமுத்து நேற்று அங்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அந்த இடத்தை தொழிலாளர்கள் மீண்டும் தோண்டினர். அப்போது தோண்டத் தோண்ட அரை அடி முதல்  4 அடி வரையிலான 17 ஐம்பொன் சிலைகள் கிடைத்தன. இதில் பெரும்பாலானவை அம்மன் சிலைகளாக இருந்தன. மேலும் தோண்டிய போது திருவாச்சி, சூலம், அடிபீடம், பத்திமடம், தண்ணீர் கடம் (சங்குவடிவில்) தூபம், தூபக்கால் என 40 பூஜை பொருட்களும் கிடைத்தது.



பின்னர் அந்தச் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு. அவை கோவிலில் உள்ள அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த சிலைகள்  பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஸ்ரீ தேவபுரீஸ்வரர் கோவிலில் திருப்பணிக்கு வானம் தோண்டிய போது பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது இனிமேல் தொல்லியல் ஆய்வுகள் முடிவில் அதன் காலம் முடிவாகும்.திருவாரூர் - நாகப்பட்டினம் சாலையில் கீவளூர் வந்து அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலையில் சென்றால் தேவூரை  வந்தயடையலாம்.



தேவர்கள் வழிபட்டதால் தேவூர் அல்லது திருத்தேவூர் எனப் பெயர் மாடக்கோயில், கௌதமர், வியாழபகவான், இந்திரன், குபேரன், சூரியன்  வழிபட்டதாகவும். கதலிவனம், விராடபுரம், அரசங்காடு, தேவனூர் என்பன தலத்தின் வேறு பல பெயர்கள் விருத்திரனைக் கொன்ற பழிநீங்க இந்திரன் வழிபட்ட ஸ்தலம். குபேரன் வழிபட்டு சங்க, பதுமநிதிகளைப் பெற்றான். விராடன் தன் மகள் உத்தரையுடன் இங்கு வந்து இறைவனை வழிபட்டான். என்பது வரலாறு  கோவில் ஊர் நடுவிலுள்ளது.


ஸ்ரீ தேவபுரீஸ்வரர், என்ற கதலிவனேஸ்வரர், 

ஸ்ரீ மதுரபாஷிணி, என்ற தேன்மொழியம்மை. அருள் வழங்கும் 

ஸ்தல விருட்சம் - வெள்வாழை (வாழையில் ஒருவகை)

தீர்த்தம் - தேவதீர்த்தம்.

திருஞான சம்பந்தப் பெருமான் பாடல் பெற்ற ஸ்தலம்.

கிழக்கு நோக்கிய மூன்று நிலைகளையுடைய ராஜகோபுரம். உட்புறத்தில் இடப்பால் அதிகார நந்தி தரிசனம். கவசமிட்ட கொடமரமும் நந்தி, பலிபீடம் காட்சி. கீழே உள்சுற்றில் அறுபத்துமூவர், வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர். அகல்யை வழிபட்ட லிங்கம், மகாலட்சுமி, எதிரில் கட்டுமலை மேல் கௌதமர் வழிபட்டலிங்கம், நவக்கிரகம் முதலிய சந்நிதிகள் உள்ளன. நடராஜசபை தனியே அழகாக உள்ளது. கட்டுமலையின் அடிவாரத்தில் இந்திரன், முருகன் விநாயகர் சந்நிதிகள் பக்கத்துப் பக்கத்தில் உள்ளன.

வலம்முடித்துப் படிகளேறி மேலே - கட்டுமலைமீது சென்றால் நேரே சோமாஸ்கந்தர் தரிசனம். வலப்பக்கம் திரும்பி வாயிலைக் கடந்தால் மூலவர் காட்சி. சதுரபீடம் - ஆவுடையாரின் அளவை நோக்கச்சற்று சிறிய பாணம் - அருமையான தரிசனம். சுவாமி சந்நிதிக்கும் பக்கத்தில் அம்பாள் சந்நிதி - தனிக்கோயில். நின்ற திருக்கோலம். 6.9.1999ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் திருவடிக்கீழ் முயலகனில்லை - புதுமையான அமைப்பு. நாடொறும் ஐந்துகால பூஜைகள். வைகாசியில் பெருவிழா. பாண்டியர் காலக் கல்வெட்டு இவ்வூரை "அருண்மொழித் தேவ வளநாட்டுத் தேவூர்" என்றும், இறைவனை "ஆதித்தேச்சுரமுடையார்" என்றும் குறிப்பிடுகின்றது.

"பண்ணிலாவிய மொழி உமைபங்கன் எம்பெருமான்

விண்ணில் வானவர்கோன் விமலன் விடையூர்தி

தெண்ணிலா மதிதவழ் மானிகைத் தேவூர்

அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லம் ஒன்று இலமே." (திருஞான சம்பந்தப் பெருமான்)

"தேவூர்த் தென்பால் திகழ் தருதீவில்

கோவார் கோலம் கொண்ட கொள்கையும்" (திருவாசகம்)

அம்பாள் சந்நிதியில் காணப்படும் ஒரு பாடல்

"தீமருவு செங்கையான் திருத்தே வூர்வாழ் நாதன் தேவபுரீசுரரை வளரும்

காமருவு கதியின்பால் கருத்தர்தமைக் கௌதமரும் குபேரனோ டிந்திரன் தானும்

நாமருவு குருவுடனே சூரியனும் போற்றிசெயச் சம்பந்தர் பதிகமோத

மாமதுர பாஷணி மலர்க்கழலை மறுமையடு இம்மைக்கும் மறவேன் நானே."

(மு.ஆ.அருணாசல முதலியார் இயற்றியது)

"-நீளுவகைப்

பாவூரிசையிற் பயன் சுவையிற் பாங்குடைய

தேவூர் வளர்தேவ தேவனே." (அருட்பா வாகும்


நாம் 2013 ஆம் ஆண்டு பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் துவங்கிய போது முதல் வெளியீட்டு இதழ் இந்த ஸ்தலத்தில் வைத்து வாழிபாடு செய்த நிகழ்வு இப்போது நினைவு கூறத்தக்க நிகழ்வாகும் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த