முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் நாட்டின் 25 வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை பதவியேற்றார்

தமிழ் நாட்டின் 25 வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை பதவியேற்றார்


. அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


கொரோனா பரவல் தடுப்பு காரணமாக ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் திறந்த வெளியில் பந்தல் அமைத்து பதவியேற்பு விழா நடந்தது.


தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் மற்றும்,அமைச்சர்கள் உள்ளிட்ட சுமார் 500 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.



தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், குடியரசுத் தலைவரால் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்து உத்தரவிட்ட நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.


ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.துவக்க காலங்களில் பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். பின் ஐபிஎஸ் தேர்வு பெற்று கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார். பின் மத்திய அரசுப் பணிக்கு மாறுதலாகி உளவுத்துறையில் பணியாற்றினார். 2012 ஆம் ஆண்டில் அரசுப் பணியில்இருந்து ஓய்வு பெற்றார்.2014 ஆம் ஆண்டில் பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன், பிரதமர் அலுவலகக் கூட்டு உளவுக்குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் ஆனார்.


இந்திய அரசின் சார்பில் நாகாலாந்திலுள்ள பிரிவினைவாத அமைப்புகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலின் அழுத்தம் காரணமாக, பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தர் பொறுப்பு ஆர்.என்.ரவிக்கு வழங்கப்பட்டதையடுத்து 2015 ஆம் ஆண்டு என்.எஸ்.சி.என் (ஐ.எம்) அமைப்புடன் மத்திய அரசு சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. இதற்குக் காரணமான ரவி, அப்போது பெரிதும் பாராட்டப்பட்டார். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி நாகலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார் .


ஆளுநரானவுடன் தன் அதிகாரத்தைகா காட்ட ஆரம்பித்தார் இதனிடையே என்.எஸ்.சி.என் (ஐ.எம்) அமைப்புடன் மோதல் ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் நாகாலாந்தில் செயல்படும் ஏழு தீவிரவாத இயக்கங்களை ஒருங்கிணைத்து, `நாகா தேசிய அரசியல் குழு' என்ற ஒன்றை உருவாக்கச் செய்து, அவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். ஆனால் பெரிய குழுவான என்.எஸ்.சி.என் (ஐ.எம்)யை புறக்கணித்தாக கூறப்படுகிறது. அவர் நாகாலாந்திலிருந்து மாற்றப்பட்டால் மட்டுமே சமாதானப் பேச்சுவார்த்தை நடக்கும்' என்று அந்த அமைப்பு திட்டவட்டமாகக் கூறிவிட்டது.


நாகாலாந்து முதல்வர் நெப்யூ ரியோவுடன் மோதல் ஏற்பட்டது. இதனால் அவரும் கொதித்து போய் பா.ஜ.க தலைமைக்கு பிரச்சனையை கொண்டுசென்றார் . ஒரு கட்டத்தில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில் வேறு வழியில்லாமல் மத்திய அரசால் அவர் தமிழ் நாட்டில்  ஆளுநராக நியமிக்கப்பட்டார் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் தந்தது இல்லை என்று கூறி ஆளுநரை வழியனுப்பும் விழாவை  அங்குள்ள பத்திரிக்கைகள் புறக்கணித்தன. இது தொடர்பாக விவாதங்களும் எழுந்தன.


தற்போது தமிழக ஆளுநராக ரவி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் நாகலாந்திலிருந்து தமிழகத்திற்கு ஆளுநர் ரவி வருகை தந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் நேரில் சென்று வரவேற்ற நிலையில் தமிழகத்தின் 25 வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை பதவியேற்றார் . அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...