முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காத்தப்ப பூலித்தேவருடன் கைகோர்த்த தன்னரசு நாட்டு கள்ளர்கள்.

காத்தப்ப பூலித்தேவருடன் கைகோர்த்த தன்னரசு நாட்டு கள்ளர்கள்.


பொது ஆண்டு 1757 பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிப் 

படை பூலித்தேவர் மற்றும் பாளையக்காரர்களின் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக ஆங்கில

கவர்னர் பிகாட் பிரபு திருச்சியிலிருந்து ஜான் கைலாடு என்பவனின் 

தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பினான் திருநெல்வேலி செல்வதற்காக மதுரையை நோக்கி வந்த படையை முன்னேறவிடாமல்  மேலூர்-நத்தம் கணவாய் பாதையை


தன்னரசு நாட்டுகள்ளர்கள் 

அடைத்து அப்படைகளை  தடுத்து நிறுத்தி மன்னர் பூலித்தேவரின் போராட்டத்திற்கு பலம் சேர்த்தனர். இன்று மாமன்னன் பூலித்தேவரின் ஜெயந்தி அவர் வரலாறு அறிவோம்:


பூழி நாடு பாண்டிய நாட்டில் அமைந்த உப அக நாடுகளில் ஒன்று. சங்ககாலம் தொட்டே மதுரை பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் நாடு 1378 ஆம் ஆண்டு சேர நாட்டிலிருந்த வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூலித்தேவர் என்ற தளபதிக்குத் பாண்டிய மன்னரால்  தர்மாசனமாக  வழங்கப்பட்டது. ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவராவார். துவக்க காலத்தில் தலைநகரம் ஆவுடையாபுரம். மதுரை நாயக்க மன்னர்கள் காலத்தில் (1529–64) பாண்டிய நாடு 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, பூழி நாடும் ஒன்றாகும்


அதன்  தலைநகரம் அப்போது பெயர் மாற்றமாகி நெற்கட்டாஞ்செவலானது.

மதுரை விஜயநகர நாயக்க மன்னர்களின் கடைசி அரசியான  இராணி மீனாட்சி தற்கொலை செய்த பிறகு நாயக்கர் கால வீழ்ச்சியில்  பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின.வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவராவார். பூலி நாட்டை ஆண்ட மன்னர்கள் அணைவரும்


பூலித்தேவனென்றே அழைக்கப்படும் நிலை. ஜமீன் பகுதியில் நிலத்தை அடமானம் பிடிக்கும் பண்ணையார்களுக்கோ அல்லது ஆதிக்கம் செலுத்தும் மேலிடத்திற்கோ, குடிவாரம் வழங்கிவிட்டு மேல்வாரம் தன்மையிலோ, வரி என்ற பெயரிலோ, ஒரு மணி நெல்லைக் கூட யாருக்கும் கண்ணில் காட்டமாட்டாராம், இதன் காரணமாய் ஆவுடையாபுரம் நெற்கட்டுஞ்செவ்வல் என்றாகியது. 1750 ஆம் ஆண்டில் ஆங்கிலேய வைசிராய் இராபர்ட் கிளைவ் திருச்சிராப்பள்ளிக்கு வந்து ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி கொடியை ஏற்றி விட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண சந்திக்க வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தார்.



இதனால் வெகுண்ட பூலித்தேவர் திருச்சிராப்பள்ளிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவரே வெற்றியும் பெற்றார் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது. பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது.


1755 ஆம் ஆண்டு கர்னல் கீரோன் எனும் கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான் தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட கட்டாயப்படுத்தியபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார்.

அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்ததையடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.


1756 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவைக் கொன்று ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டியதால் மனமுடைந்த பூலித்தேவர் போரை நிறுத்தித் திரும்பியதால் மாபஸ்கான் திருநெல்வேலியை கைப்பற்றி தன்வசப்படுத்தினான். 1765 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சன் பூலித்தேவரிடம் தோற்றார்.

1760 ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கிய போதும், 1766 ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766 ஆம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்ற பனையூர் மருதநாயகம் என்ற கான்சாகிப் பூலித்தேவரை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல்  பத்தாண்டுகள் போரிட்ட பின்னர் தான் பூலித்தேவர் தோல்வியடைந்தார். அதன் பின் தலைமறைவானார்.

நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் ஏற்க பூலித்தேவர் மறுத்துவிட்டார் தனது சுதேசி படை மூலமே பலம் கொண்டு போரிட்ட பபூலித்தேவரின் மறைவு பற்றி இரு கருத்துக்கள் நிலவ மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலில் உள்ள சங்கர நாராயணர் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் ஒரு  சித்தரின் பக்தராக  அவரிடம் விரும்பிய நிலையில்  கும்பினிப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும்,


அப்போது பெரிய புகை மண்டலமும் ஜோதியும்  ஏற்பட கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.                முனைவர் ந. இராசையா, வரலாற்றாய்வாளர்- தொகுத்த பூலித்தேவன் சிந்து- பல விபரங்கள் கூறும்.ஆங்கிலேய கிழக்கிந்தியர்களுக்குப் பயந்து அனைத்து குறுநில மன்னர்களும் வரி, கப்பம் செலுத்திக் கொண்டிருந்தனர். வரி, கப்பம் கொடுக்க மறுத்து முதல் சுதந்திர போராட்டத்தை நடத்தியவர்  மாமன்னர் பூலித்தேவர் ஆட்சி சிறப்பாக நிர்வாக திறமையுடன் ஆற்றியுள்ளார். பல்வேறு சமூக மக்களை ஒருங்கிணைத்து சமூக ஒற்றுமைக்கு வித்திட்டவர். ஒண்டிவீரன் பகடையையும், வென்னிக்காலடி என்ற ஆதிதிராவிட வகுப்பு தளபதியையும் தனக்கு வலமும், இடதுமும் வைத்தார்.


போர்க்களத்தில் வென்னிக்காலடி  மார்பில் ஈட்டி பாய்ந்தபோது அவரின் உயிர்காக்க மார்பில் சொருகிய வாளினை எடுத்து உடலில் இருந்து பெருகி வரும் ரத்தத்தினை நிறுத்தி உயிர்காத்தவர் பூலித்தேவர்                   அவரைக் கைதுசெய்து கொண்டு போகிறபோது தான் சங்கரன்கோவில் ஆலயத்துக்குள் நான் வழிபட்டு வருகிறேன் என்று உள்ளே போனார் பூலித்தேவர். அவர் இறைவனைப்பாடிய பாடல்கூட இருக்கிறது. இதோ :

"பூங்கமலத்தயன் மால் அறியா உமைசங்கரனே

புகலக் கேண்மின்

தீங்குபுரி மூவாலிச வினையே – சிக்கி

உழறும் அடியேன் தன்னை

ஓங்கையில் சூழ் உலகமதில் உனை அன்றி

எனைக்காக்க ஒருவருண்டோ

ஈங்கெழுந் தருள்புரியும் இன்பவாருதியே

இறைவனே போற்றி போற்றி"


பிறகு என்ன ஆனார் எனத் தெரியவில்லை. அருட்பெருஞ்சோதி மறைந்ததைப்போல சங்கரன்கோவில் ஆலயத்திற்குள் போனவர் திரும்பவில்லை. நேதாஜியின் மரணத்தைப்போல பூலித்தேவரின் மறைவும் மர்மமான நிலை.மாமன்னர் பூலித்தேவருக்கு அரசுவிழா எடுக்க வேண்டும் என்று முதன்முதலில் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தவர் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர், தேசிய துணைத் தலைவர் டாக்டர் பி.வி.கதிரவன் மேலும் அவருக்கு நினைவை போற்றும் அரண்மனை புதுப்பிக்கப்பட்டது மற்றும் விழா எடுத்தத நிகழ்வு புதிய பார்வை ஆசிரியர் காலம்சென்ற முனைவர் ம.நடராஜன்  தான் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 305 வது பிறந்த தினத்தில் நினைவைப் போற்றுவோம்        இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோமதி அம்பாள் ஆலயம். பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த