முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள உரிமை ரசீதுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள உத்தரவாதம் தொடர்பான சந்தேகங்களும், பதில்களும்

நிதி அமைச்சகம் நிலுவையில் உள்ள கடன்களைப் பெறுவதற்காக தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள உரிமை ரசீதுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள உத்தரவாதம் தொடர்பான சந்தேகங்களும், பதில்களும்


தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் (NARCL) என்பது என்ன? இதனை ஏற்படுத்தியது யார்?

நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டதுதான் தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம். சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் என்ற பெயரில் உரிமம் பெறுவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பிக்கப்பட்டது. தங்களது தொடர் நடவடிக்கைகளுக்காக வாராக்கடன்  சொத்துக்களை ஒருங்கிணைக்கவும், தொகுக்கவும் வங்கிகளால் உருவாக்கப்பட்டதுதான் தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம். இதில், 51 சதவீத உரிமையை பொதுத்துறை வங்கிகள் வைத்துள்ளன.

இந்திய கடன் தீர்வு நிறுவனம் என்பது என்ன (IDRCL)? இதனை ஏற்படுத்தியது யார்?


இந்திய கடன் தீர்வு நிறுவனம் என்பது சேவை நிறுவனம்/ செயல்பாட்டு நிறுவனம். இது சொத்துக்களை கையாளும். சந்தை வல்லுநர்கள் மற்றும் வழிகாட்டி நிபுணர்களை பணியில் ஈடுபடுத்தும். அதிகபட்சமாக 49 சதவீத பங்குகளை பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிதி நிறுவனங்கள் வைத்திருக்கும். மீதமுள்ள பங்குகளை தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனங்கள் வைத்திருக்கும்.

ஏற்கனவே சொத்து மறுகட்டமைப்புக்காக 28 நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம், இந்திய கடன் தீர்வு நிறுவனம் போன்ற கட்டமைப்பு தேவைப்படுவது ஏன்?

ஏற்கனவே உள்ள சொத்து மறுகட்டமைப்பு நிறுவனங்கள், நெருக்கடிக்கு உள்ளான சொத்துக்களை, குறிப்பாக சிறிய அளவிலான கடன்களுக்கு தீர்வுகாணவே உதவுகின்றன. நொடிப்பு நிலை மற்றும் திவாலாதல் விதிகள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் பயனளிக்கும் வகையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், மிகப்பெரும் அளவில் வாராக்கடன்கள் இருக்கும்போது, அதனை சரிசெய்ய கூடுதல் வழிமுறைகள்/மாற்று முறைகள் தேவைப்படுகிறது. இதன் அடிப்படையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் - இந்திய கடன் தீர்வு நிறுவன அமைப்பு அறிவிக்கப்பட்டது.

அரசின் உத்தரவாதம் தேவைப்படுவது ஏன்?

வாராக்கடன் நிலுவையை எதிர்கொள்ளும் வகையிலான தீர்வு வழிமுறைகளுக்கு அரசின் ஆதரவு தேவைப்படுகிறது. இது நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதுடன், நெருக்கடியை குறைக்கச் செய்கிறது. தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் வெளியிடும் ரூ.30,600 கோடி மதிப்பிலான உரிமை ரசீதுகளுக்கு இந்திய அரசு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த உத்தரவாதம், 5 ஆண்டுகளுக்கு பொருந்தும். உத்தரவாதம் அளிப்பதற்கான நிபந்தனையாக, கடனுக்கு தீர்வுகாண வேண்டும் அல்லது கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். உரிமை ரசீதின் முகமதிப்புக்கும், உண்மையில் பெறப்படும் தொகைக்கும் இடையேயான பற்றாக்குறையை சரிசெய்யும் வகையில் உத்தரவாதம் இருக்கும். உரிமை ரசீதுகளை பணமாக்கும் நடவடிக்கையை இந்திய அரசின் உத்தரவாதம் அதிகரிக்கும். ஏனெனில், இதுபோன்ற உத்தரவாத ரசீதுகள் வர்த்தகம் செய்யக் கூடியவை.

தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம், இந்திய கடன் தீர்வு நிறுவனம் ஆகியவை எவ்வாறு செயல்படும்?

முன்னணி வங்கிக்கு தனது திட்டத்தை தெரிவித்து, சொத்துக்களை தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் கையகப்படுத்தும். தேசிய சொத்து மறுகட்டமைப்பின் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதனை கையாள்வது மற்றும் கூடுதல் மதிப்பளிப்பது ஆகிய பணிகளில் இந்திய கடன் தீர்வு நிறுவனம் ஈடுபடும்.

இந்த புதிய கட்டமைப்பு மூலம் வங்கிகளுக்கு கிடைக்கும் பலன் என்ன?

அதிக அளவில் தொகையை கிடைக்கச் செய்து, நெருக்கடியான சொத்துக்கள் விவகாரத்தில் விரைந்து தீர்வுகாண வழிவகை செய்கிறது. வங்கியில் உள்ள பணியாளர்கள், தங்களது வர்த்தகத்தை அதிகரிப்பதிலும், வரவை அதிகரிக்கச் செய்வதிலும் கவனம் செலுத்த இந்த வழிமுறை உதவுகிறது. நெருக்கடிக்கு உள்ளான சொத்துக்களின் உரிமையாளர்கள், உரிமை ரசீதுகள், வங்கிகள் ஆகியவற்றுக்கு பலன் கிடைக்கும். மேலும், வங்கி மதிப்பீட்டை அதிகரிப்பதுடன், சந்தையில் மூலதனத்தைப் பெறுவதற்கான திறனை அதிகரிக்கச் செய்யும்.

தற்போது இவை அமைக்கப்படுவது ஏன்?

நொடிப்பு நிலை மற்றும் திவாலாதல் விதிகள் (IBC), நிதி சொத்துக்கள் மறுகட்டமைப்பு மற்றும் உத்தரவாதத்தை வலுப்படுத்துவது மற்றும் பங்குகளின் நலனை அமலாக்குதல் (SARFAESI Act) , கடன் மீட்பு தீர்ப்பாயங்கள் ஆகியவற்றுடன் அதிக மதிப்புகொண்ட வாராக்கடன் கணக்குகளுக்காக வங்கிகளில் அமைக்கப்படும் நெருக்கடிக்குள்ளான சொத்து மேலாண்மை கட்டமைப்பு ஆகியவை மீட்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்துகின்றன. இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வங்கிகளின் வரவு-செலவு கணக்குகளில் குறிப்பிட்ட அளவுக்கு வாராக்கடன்கள் தொடர்ந்து வருகின்றன. ஏனெனில், சொத்து தர ஆய்வின் தகவல்களின்படி, வாராக்கடன்களின் அளவு அதிகமாக இருப்பது மட்டுமன்றி, பல்வேறு வங்கிகளிலும் நிலுவையில் உள்ளன. வாராக்கடன்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு உயர்மட்ட வாய்ப்புகளை வழங்கும்போது, வேகமாக தீர்வுகாண்பதற்கு தனிப்பட்ட வாய்ப்பை அளிக்கும்.

உத்தரவாதத்தை பயன்படுத்திக் கொள்ள முடியுமா?

குறிப்பிட்ட சொத்திலிருந்து பெறப்படும் தொகைக்கும், குறிப்பிட்ட சொத்து மீதான உரிமை ரசீதின் முகமதிப்புக்கும் இடையே உள்ள தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக அரசு உத்தரவாதத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். எனினும், 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்த அளவு ரூ.30,600 கோடிக்கும் மேலாக இருக்கக் கூடாது. சொத்துக்கள் அதிக அளவில் இருக்கும் நிலையில், அதிலிருந்து கையகப்படுத்தும் செலவைவிட அதிக அளவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேகமாகவும், உரிய நேரத்திலும் தீர்வுகாண்பதை அரசு எவ்வாறு உறுதிப்படுத்தும்?

இந்திய அரசின் உத்தரவாதம், 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது. தீர்வுகாண வேண்டும் அல்லது சொத்துக்களை பணமாக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே உத்தரவாதத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. தீர்வுகாண்பதில் தாமதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், காலத்தை அதிகரிக்கும் சமயத்தில், உத்தரவாதக் கட்டணத்தை  தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனத்தின் மூலதன கட்டமைப்பு எவ்வாறு இருக்கும் மற்றும் அரசின் பங்களிப்பு எவ்வளவு இருக்கும்?

வங்கிகள் மற்றும் வங்கிசாராத நிதி நிறுவனங்களிடமிருந்து பங்குகளைப் பெறுவதன் மூலம், தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனத்துக்கு மூலதனம் திரட்டப்படுகிறது. தேவைப்படும் அளவுக்கு கடனும் பெறப்படுகிறது. மூலதன தேவைகளை இந்திய அரசின் உத்தரவாதம் குறைக்கிறது.

நெருக்கடிக்கு உள்ளாகும் சொத்துக்களுக்கு தீர்வுகாண தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனத்தின் உத்தி என்ன?

ரூ.500 கோடிக்கும் மேலாக உள்ள ஒவ்வொரு நெருக்கடியான சொத்துக்கள் வீதம்,ஒட்டுமொத்தமாக ரூ.2 லட்சம் கோடி வரை                      சொத்துக்களுக்கு தீர்வுகாண தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டத்தில், ரூ.90,000 கோடி மதிப்பிலான முற்றிலும் கையகப்படுத்தப்பட்ட சொத்துக்கள், தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனத்துக்கு மாற்றப்படும். குறைந்த மதிப்பில் உள்ள மற்ற சொத்துக்கள் அனைத்தும் இரண்டாவது கட்டத்தில் பரிமாற்றம் செய்யப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த