முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள உரிமை ரசீதுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள உத்தரவாதம் தொடர்பான சந்தேகங்களும், பதில்களும்

நிதி அமைச்சகம் நிலுவையில் உள்ள கடன்களைப் பெறுவதற்காக தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள உரிமை ரசீதுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள உத்தரவாதம் தொடர்பான சந்தேகங்களும், பதில்களும்


தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் (NARCL) என்பது என்ன? இதனை ஏற்படுத்தியது யார்?

நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டதுதான் தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம். சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் என்ற பெயரில் உரிமம் பெறுவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பிக்கப்பட்டது. தங்களது தொடர் நடவடிக்கைகளுக்காக வாராக்கடன்  சொத்துக்களை ஒருங்கிணைக்கவும், தொகுக்கவும் வங்கிகளால் உருவாக்கப்பட்டதுதான் தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம். இதில், 51 சதவீத உரிமையை பொதுத்துறை வங்கிகள் வைத்துள்ளன.

இந்திய கடன் தீர்வு நிறுவனம் என்பது என்ன (IDRCL)? இதனை ஏற்படுத்தியது யார்?


இந்திய கடன் தீர்வு நிறுவனம் என்பது சேவை நிறுவனம்/ செயல்பாட்டு நிறுவனம். இது சொத்துக்களை கையாளும். சந்தை வல்லுநர்கள் மற்றும் வழிகாட்டி நிபுணர்களை பணியில் ஈடுபடுத்தும். அதிகபட்சமாக 49 சதவீத பங்குகளை பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிதி நிறுவனங்கள் வைத்திருக்கும். மீதமுள்ள பங்குகளை தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனங்கள் வைத்திருக்கும்.

ஏற்கனவே சொத்து மறுகட்டமைப்புக்காக 28 நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம், இந்திய கடன் தீர்வு நிறுவனம் போன்ற கட்டமைப்பு தேவைப்படுவது ஏன்?

ஏற்கனவே உள்ள சொத்து மறுகட்டமைப்பு நிறுவனங்கள், நெருக்கடிக்கு உள்ளான சொத்துக்களை, குறிப்பாக சிறிய அளவிலான கடன்களுக்கு தீர்வுகாணவே உதவுகின்றன. நொடிப்பு நிலை மற்றும் திவாலாதல் விதிகள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் பயனளிக்கும் வகையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், மிகப்பெரும் அளவில் வாராக்கடன்கள் இருக்கும்போது, அதனை சரிசெய்ய கூடுதல் வழிமுறைகள்/மாற்று முறைகள் தேவைப்படுகிறது. இதன் அடிப்படையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் - இந்திய கடன் தீர்வு நிறுவன அமைப்பு அறிவிக்கப்பட்டது.

அரசின் உத்தரவாதம் தேவைப்படுவது ஏன்?

வாராக்கடன் நிலுவையை எதிர்கொள்ளும் வகையிலான தீர்வு வழிமுறைகளுக்கு அரசின் ஆதரவு தேவைப்படுகிறது. இது நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதுடன், நெருக்கடியை குறைக்கச் செய்கிறது. தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் வெளியிடும் ரூ.30,600 கோடி மதிப்பிலான உரிமை ரசீதுகளுக்கு இந்திய அரசு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த உத்தரவாதம், 5 ஆண்டுகளுக்கு பொருந்தும். உத்தரவாதம் அளிப்பதற்கான நிபந்தனையாக, கடனுக்கு தீர்வுகாண வேண்டும் அல்லது கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். உரிமை ரசீதின் முகமதிப்புக்கும், உண்மையில் பெறப்படும் தொகைக்கும் இடையேயான பற்றாக்குறையை சரிசெய்யும் வகையில் உத்தரவாதம் இருக்கும். உரிமை ரசீதுகளை பணமாக்கும் நடவடிக்கையை இந்திய அரசின் உத்தரவாதம் அதிகரிக்கும். ஏனெனில், இதுபோன்ற உத்தரவாத ரசீதுகள் வர்த்தகம் செய்யக் கூடியவை.

தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம், இந்திய கடன் தீர்வு நிறுவனம் ஆகியவை எவ்வாறு செயல்படும்?

முன்னணி வங்கிக்கு தனது திட்டத்தை தெரிவித்து, சொத்துக்களை தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் கையகப்படுத்தும். தேசிய சொத்து மறுகட்டமைப்பின் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதனை கையாள்வது மற்றும் கூடுதல் மதிப்பளிப்பது ஆகிய பணிகளில் இந்திய கடன் தீர்வு நிறுவனம் ஈடுபடும்.

இந்த புதிய கட்டமைப்பு மூலம் வங்கிகளுக்கு கிடைக்கும் பலன் என்ன?

அதிக அளவில் தொகையை கிடைக்கச் செய்து, நெருக்கடியான சொத்துக்கள் விவகாரத்தில் விரைந்து தீர்வுகாண வழிவகை செய்கிறது. வங்கியில் உள்ள பணியாளர்கள், தங்களது வர்த்தகத்தை அதிகரிப்பதிலும், வரவை அதிகரிக்கச் செய்வதிலும் கவனம் செலுத்த இந்த வழிமுறை உதவுகிறது. நெருக்கடிக்கு உள்ளான சொத்துக்களின் உரிமையாளர்கள், உரிமை ரசீதுகள், வங்கிகள் ஆகியவற்றுக்கு பலன் கிடைக்கும். மேலும், வங்கி மதிப்பீட்டை அதிகரிப்பதுடன், சந்தையில் மூலதனத்தைப் பெறுவதற்கான திறனை அதிகரிக்கச் செய்யும்.

தற்போது இவை அமைக்கப்படுவது ஏன்?

நொடிப்பு நிலை மற்றும் திவாலாதல் விதிகள் (IBC), நிதி சொத்துக்கள் மறுகட்டமைப்பு மற்றும் உத்தரவாதத்தை வலுப்படுத்துவது மற்றும் பங்குகளின் நலனை அமலாக்குதல் (SARFAESI Act) , கடன் மீட்பு தீர்ப்பாயங்கள் ஆகியவற்றுடன் அதிக மதிப்புகொண்ட வாராக்கடன் கணக்குகளுக்காக வங்கிகளில் அமைக்கப்படும் நெருக்கடிக்குள்ளான சொத்து மேலாண்மை கட்டமைப்பு ஆகியவை மீட்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்துகின்றன. இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வங்கிகளின் வரவு-செலவு கணக்குகளில் குறிப்பிட்ட அளவுக்கு வாராக்கடன்கள் தொடர்ந்து வருகின்றன. ஏனெனில், சொத்து தர ஆய்வின் தகவல்களின்படி, வாராக்கடன்களின் அளவு அதிகமாக இருப்பது மட்டுமன்றி, பல்வேறு வங்கிகளிலும் நிலுவையில் உள்ளன. வாராக்கடன்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு உயர்மட்ட வாய்ப்புகளை வழங்கும்போது, வேகமாக தீர்வுகாண்பதற்கு தனிப்பட்ட வாய்ப்பை அளிக்கும்.

உத்தரவாதத்தை பயன்படுத்திக் கொள்ள முடியுமா?

குறிப்பிட்ட சொத்திலிருந்து பெறப்படும் தொகைக்கும், குறிப்பிட்ட சொத்து மீதான உரிமை ரசீதின் முகமதிப்புக்கும் இடையே உள்ள தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக அரசு உத்தரவாதத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். எனினும், 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்த அளவு ரூ.30,600 கோடிக்கும் மேலாக இருக்கக் கூடாது. சொத்துக்கள் அதிக அளவில் இருக்கும் நிலையில், அதிலிருந்து கையகப்படுத்தும் செலவைவிட அதிக அளவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேகமாகவும், உரிய நேரத்திலும் தீர்வுகாண்பதை அரசு எவ்வாறு உறுதிப்படுத்தும்?

இந்திய அரசின் உத்தரவாதம், 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது. தீர்வுகாண வேண்டும் அல்லது சொத்துக்களை பணமாக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே உத்தரவாதத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. தீர்வுகாண்பதில் தாமதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், காலத்தை அதிகரிக்கும் சமயத்தில், உத்தரவாதக் கட்டணத்தை  தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனத்தின் மூலதன கட்டமைப்பு எவ்வாறு இருக்கும் மற்றும் அரசின் பங்களிப்பு எவ்வளவு இருக்கும்?

வங்கிகள் மற்றும் வங்கிசாராத நிதி நிறுவனங்களிடமிருந்து பங்குகளைப் பெறுவதன் மூலம், தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனத்துக்கு மூலதனம் திரட்டப்படுகிறது. தேவைப்படும் அளவுக்கு கடனும் பெறப்படுகிறது. மூலதன தேவைகளை இந்திய அரசின் உத்தரவாதம் குறைக்கிறது.

நெருக்கடிக்கு உள்ளாகும் சொத்துக்களுக்கு தீர்வுகாண தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனத்தின் உத்தி என்ன?

ரூ.500 கோடிக்கும் மேலாக உள்ள ஒவ்வொரு நெருக்கடியான சொத்துக்கள் வீதம்,ஒட்டுமொத்தமாக ரூ.2 லட்சம் கோடி வரை                      சொத்துக்களுக்கு தீர்வுகாண தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டத்தில், ரூ.90,000 கோடி மதிப்பிலான முற்றிலும் கையகப்படுத்தப்பட்ட சொத்துக்கள், தேசிய சொத்து மறுகட்டமைப்பு நிறுவனத்துக்கு மாற்றப்படும். குறைந்த மதிப்பில் உள்ள மற்ற சொத்துக்கள் அனைத்தும் இரண்டாவது கட்டத்தில் பரிமாற்றம் செய்யப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...