முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சித்த மருத்துவம் வாழ்வியல் முறை சார்ந்தது. உணவே மருந்து என்ற கருத்தாக்கம் நெட்டப்பாக்கத்தில் நடந்தது

சித்த மருத்துவம் வாழ்வியல் முறை சார்ந்தது -நெட்டப்பாக்கம் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் அபர்ணாதேவி




சித்த மருத்துவம் வாழ்வியல் முறை சார்ந்தது. உணவே மருந்து என்ற கருத்தாக்கம் தமிழ் பாரம்பரிய வைத்திய முறையின் சிறப்பு அம்சம் ஆகும். சுற்றுச்சூழல் பாதிப்பால் நிறைய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. கொரோனாவோடு இப்போது டெங்கும் பரவி வருகின்றது. ஆங்கில மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ முறைகள் எதிரானவை அல்ல. மாறாக ஒன்றை ஒன்று நிறைவு செய்பவை.  நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார எல்லைக்குள் ஒரு மாதமாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. தற்போது தினமும் ஓரிரண்டு புதிய தொற்று ஏற்படுகின்றது. மூன்றாவது அலையை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தற்போது மாரத்தான் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. தடுப்பூசி போடாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் ஜி.அபர்ணாதேவி கேட்டுக்கொண்டார்.

மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும்  நெட்டப்பாக்கம் கருணாலயம் கிராம நலச் சங்கம் ஆகியவை இணைந்து நேற்று (03.09.2021)  நெட்டப்பாக்கத்தில் நடத்திய நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் அமுக்கரா சூரண மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய போது டாக்டர் அபர்ணாதேவி  இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டின் பெருவிழாவையொட்டி ஆயுஷ் அமைச்சகம் நாடு முழுவதும் இந்திய மருத்துவ முறைகளில் உள்ள மிக முக்கியமான நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் மருந்துகளை இலவசமாக வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் சார்பில் அமுக்கரா சூரண மாத்திரை வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கிராம மக்களுக்கு இம்மாத்திரைகளை வழங்கும் இந்த நிகழ்ச்சி  நடத்தப்பட்டது.

மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி அலுவலர் டாக்டர் இரத்தினமாலா தனது உரையில் இம்மருந்து அமுக்கரா, கிராம்பு, சிறுநாகம்பூ, சுக்கு, மிளகு, ஏலக்காய், திப்பிலி ஆகிய 7 மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட கூட்டு மருந்தாகும் எனத் தெரிவித்தார். இம்மருந்து வயிற்றுப் புண், ரத்தசோகை, நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை, முதியோரின் மறதி ஆகியவற்றுக்கு பயன்படுவதோடு பொதுவான நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது என்று குறிப்பிட்டார்.

மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி அலுவலர் டாக்டர் லாவண்யா மற்றும் நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் டாக்டர் சிவசங்கரி ஆகியோர் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகள் குறித்து உரையாற்றினர்.

கருணாலயம் கிராம நலச் சங்க செயலாளர் திரு.ப.அங்காளன் கருத்துரை ஆற்றினார். இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக மாத்திரைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். இந்த தொற்று காலத்தில் பலமுறைகளிலும் நோய் எதிர்ப்புச் சக்தியை நாம் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று அங்காளன் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குநர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.  குழந்தைகளை எந்தவிதமான தொற்று நோய்களும் பாதிக்காமல் இந்த காலகட்டத்தில் பார்த்துக் கொள்வது முக்கியமானது ஆகும். மூன்றாம் அலை வருகின்றதோ இல்லையோ குழந்தைகளை தேவையில்லாமல் வெளியில் அழைத்துச் செல்ல வேண்டாம். குழந்தைகளுக்கு அட்டவணைப்படி அனைத்து தடுப்பு மருந்துகள் போடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.

கருணாலயம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருமிகு புஷ்பவல்லி  நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கள விளம்பர உதவியாளர் திரு. மு.தியாகராஜன்  செய்திருந்தார்.

இதைத் தொடர்ந்து மாத்திரை வழங்கும் நிகழ்ச்சிகள் மடுகரை மற்றும் பண்டசோழநல்லூர் ஆகிய இடங்களிலும் நடத்தப்பட்டன. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த