முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொருளாதாரத்தின் நீண்டகால மறுமலர்ச்சிக்கு மத்திய அரசும் மாநிலங்களும் இந்திய அணியாக செயல்பட வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்

குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் பொருளாதாரத்தின் நீண்டகால மறுமலர்ச்சிக்கு மத்திய அரசும் மாநிலங்களும் இந்திய அணியாக செயல்பட வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்


பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு பொதுத்துறை-தனியார்துறை கூட்டு முக்கியமானது: குடியரசு துணைத் தலைவர்

இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டுவதற்கான ஆற்றல் கொண்டது: குடியரசு துணைத் தலைவர்

இளைஞர்களை வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக மாற்றுவதற்காக பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு வகை செய்யுமாறு குடியரசு துணைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, காலனித்துவ கண்கொண்டல்லாமல் இந்தியக் கண்ணோட்டத்துடன் மாற்றி எழுதப்பட வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்

ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் பவளவிழாக் கொண்டாட்டங்களில் குடியரசு துணைத் தலைவர் உரையாற்றுகிறார்

பொருளாதாரத்தின் நீண்டகால மறுமலர்ச்சிக்கு மத்திய அரசும் மாநிலங்களும் இந்திய அணியாக செயல்பட்டு அனைத்து துறைகளிலும் இந்தியாவை மேலும் சிறந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு. எம்.வெங்கையாநாயுடு கூறியுள்ளார்.

ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் பவளவிழாக் கொண்டாட்டங்களில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், மத்திய அரசும் பல்வேறு மாநிலங்களும், வெளிநாட்டு முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வருவதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 2021 ஆம் நிதியாண்டில், மொத்த அந்நிய நேரடி முதலீடு 81.72 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது ஆண்டுக்கு 10% அதிகமாகும் என்றும் அவர் கூறினார்.

பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கு உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொதுத்துறை-தனியார் துறை கூட்டை ஊக்குவிப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோவிட் -19 மற்றும் அதன் தாக்கத்தை குறிப்பிடுகையில், இரண்டாவது அலை மறுமலர்ச்சியை மெத்தனப்படுத்தினாலும், இந்தியப் பொருளாதாரம் மீண்டுவந்து மீட்புப் பாதையில் உறுதியாக உள்ளது என்றார். அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுக்கு நன்றி;  பொருளாதார நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருகிறதுஎன்றும்திரு. நாயுடு கூறினார்.

தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அனைத்து மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்த அவர், அவ்வாறு செய்வது அவர்களது குடும்பம், சமுதாயம் மற்றும் நாட்டுக்கு ஆற்றும் ‘புனித செயல்’ என்றார். மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை தொலைதூர மற்றும் கிராம பகுதிகளில் உள்ள மக்களுக்கு கிடைக்க செய்ய அரசு எடுத்து வரும் முயற்சிகளில் இணையுமாறு தனியார் துறையினரை அவர் கேட்டுக்கொண்டார்.

பொருளாதார மாற்றத்தின் உச்சத்தில் இந்தியா நிற்கிறது என்று கூறிய அவர், அனைத்து குறியீடுகளும் வரவிருக்கும் மாதங்களில் நீண்ட கால வளர்ச்சி மற்றும் மீட்சியைச் சுட்டிக்காட்டுகின்றன. வெவ்வேறு குறியீடுகளின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி 2021-22 ஆம் ஆண்டிற்கான 9.5 சதவிகித வளர்ச்சியை மாற்றமின்றி அப்படியே வைத்துக் கொண்டுள்ளது.

வலுவான மேக்ரோ-பொருளாதார அடிப்படைகள், முன்னோக்கி பார்க்கும் சீர்திருத்தங்கள், அந்நிய நேரடி முதலீட்டைத் திறத்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் ஆகியவை காரணமாக இந்திய பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் திறன் கொண்டதாக உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் படித்த, திறமையான இளைஞர்கள் அதிகஅளவில் உள்ளனர்; அறிவியல் மனித வளமும் அதிகம் உள்ளது என்று குறிப்பிட்ட திரு. நாயுடு, ஆராய்ச்சி, வளர்ச்சிப் பணிகளில் முதலீடுகளை மேம்படுத்துவதன் மூலம் புதுமையின் வளர்ச்சிக்கு ஏற்ற சரியான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார். இந்த சூழலில், பொதுத்துறையும், தனியார் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இதுபோன்ற கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதை எளிதாக்குவதில் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (எச்.சி.சி) போன்ற அமைப்புகள் முனைப்பான பங்கு வகிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

வர்த்தக அமைப்புகளும், வியாபார சமுதாயமும் அவர்களது உறுப்பினர்களுக்கு பொதுவான நடத்தைமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் ஒட்டுமொத்த பெருநிறுவன மற்றும் வர்த்தக சமுதாயத்திற்கு கெட்ட பெயர் உண்டாக்கும் கருப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டும் என்றும் திரு நாயுடு ஆலோசனை தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தல், திறன்மேம்படுத்துதல், அவர்கள் வேலைவாய்ப்பு பெறுவது மட்டுமல்லாமல் சுயதொழில் தொடங்கக்கூடிய திறன் கொண்டவர்களாக மாறவும் உறுதிசெய்யும் வண்ணம், ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் போன்ற அமைப்புகள், ஆவன செய்யவேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார். "வேலை தேடுபவர்கள் என்பதைவிட வேலையை உருவாக்குபவர்களாக மாறுவதற்கு அவர்களுக்கு தேவையான திறன்களும் அறிவும் வழங்கப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

வரலாற்றை மாற்றி எழுத வேண்டியதன் அவசியம் குறித்து தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் சமீபத்திய அறிக்கையைப் பற்றிக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, காலனித்துவ கண்கொண்டல்லாமல் இந்தியக் கண்ணோட்டத்துடன் மாற்றி எழுதப்பட வேண்டும் என்றார்.

தமிழ்நாட்டின் திறமையான, திறன் வாய்ந்த கடின உழைப்பாளி மக்களைப் பாராட்டிய அவர், நிலையான, முதலீட்டாளருக்கு சாதகமான அரசாங்கத்துடன், நல்ல இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன், முதலீடு செய்வதற்கு கவர்ச்சிகரமான இடமாக தமிழ்நாடு உள்ளது என்றார் அவர்.

சென்னையில் இன்று நடைபெற்ற இந்துஸ்தான் வர்த்தக சபையின் பிளாட்டினம் விழாவில் மாண்புமிகு குடியரசு துணைத்தலைவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

வணக்கம்..!

இன்று மாலை உங்களிடையே இருப்பதிலும், என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், முதலில், ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பின் பவள விழா  ஆண்டில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எந்தவொரு நிறுவனத்தின் பயணத்திலும் இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். தலைவர், சத்யநாராயணன் ஆர். தவே, அலுவலகப் பொறுப்பாளர்கள், குழுவின்மன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

1945 ஆம் ஆண்டில் திரு சி.எம். கோத்தாரி மற்றும் திரு ராய் பகதூர் ஹிம்சந்த் கே ஷா ஆகியோரால் நிறுவப்பட்ட சேம்பர், இப்போது சுமார் 1000 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பரந்த அமைப்பாக வளர்ந்துள்ளது, நீங்கள் அனைவரும் இது பெருமைப்படக்கூடிய விஷயமாகும்.  குறிப்பிடத்தக்க வகையில், நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வணிக நடவடிக்கைகளின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் விதமாக, வணிகம் மற்றும் வர்த்தகத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து உறுப்பினர்கள் எடுக்கப்படுகிறார்கள். இந்தியத் தொழில் வர்த்தக சம்மேளனத்தின் (எஃப் ஐ சி சி ஐ) (FICCI) கூட்டமைப்பு, உங்கள் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

நீங்கள் அனைவரும் அறிந்தபடி, விடுதலைக் காலத்தின் போது, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை பெரும்பாலும் சோசலிசக் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டது. ஆனால் பொருளாதார, தொழில்துறை வளர்ச்சியை நோக்கி இந்தியா வெற்றிகரமாகமுன்னேறியதுடன், நாடு தாராளமயமாக்கலை ஏற்றுக்கொண்டது. பொதுத்துறையுடன் சேர்ந்து, தனியார் துறையும் நமது பொருளாதாரத்தில் ஒரு ஒருங்கிணைந்த பங்கை வகிப்பது மட்டுமல்லாமல், அதை அதிக உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. சேம்பர், பல ஆண்டுகளாக, மாற்றங்கள் கொண்ட நிறுவனமாக உருமாறி, நம் நாட்டின் பொருளாதார, செயல்திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே,

கோவிட் -19 பெருந்தொற்றுநோயையடுத்து நாம் சவாலான காலங்களைச் சந்தித்து வருகிறோம், இது உலகம் முழுவதும் முன்னெப்போதுமில்லாத வகையில் பேரழிவை ஏற்படுத்தி, வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் பாதித்துள்ளது. பெருந்தொற்றுநோய் உலக அளவில் கூர்மையான பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் -19 பொருத்த வரை இன்னும் சில காலங்களுக்கு நிச்சயமற்ற தன்மை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டு அம்சங்களுக்கு - குழந்தைகள் உட்பட அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுதல் மற்றும் அனைவரும் கண்டிப்பாக கோவிட் -19 நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றுக்கு - உயர் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.  எப்போதும் முகக்கவசம் அணிதல், பாதுகாப்பான இடைவெளியைப்பராமரித்தல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், கூட்டங்களைத் தவிர்ப்பது உட்பட தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைப்பிடித்தல் ஆகியவை மிகவும் முக்கியம்.

பொருளாதாரம் மீண்டெழவும், மக்களின் வாழ்வாதாரம் - குறிப்பாக ஒழுங்கமைக்கப்படாத துறையினர், தினக்கூலிகள்,  சிறு விற்பனையாளர்கள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியம்.

இரண்டாவது அலை மறுமலர்ச்சியைக் மந்தப்படுத்தியிருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் திரும்ப வந்துள்ளது. மீட்புக்கும் நீண்டகால புதுப்பிப்புக்குமான பாதையில் உறுதியாக உள்ளது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட கொள்கை சீர்திருத்தங்களுக்கு நன்றி. பொருளாதார நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருகிறது. நீங்கள் அனைவரும் அறிந்திருப்பதைப் போல, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 24.4% என்று சுருங்கியதற்கு மாறாக, 2022 நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் 20.1% என்ற சாதனைவேகத்தில் வளர்ந்தது. பல்வேறு அறிக்கைகள் உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகளில் வலுவான முன்னேற்றத்தைக் குறிக்கின்றன, அதே நேரத்தில் சேவைத் துறை சற்று மந்தமாக இருந்தது. பெருந்தொற்றுநோயின் இருண்ட காலங்களிலும் வேளாண் துறை தொடர்ந்து  செயலாற்றி வந்தது. கடின உழைப்பாளிகளான நமது விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் நன்றி. முதல் காலாண்டில் 4.5 % வளர்ச்சியை அடைந்ததன் மூலம், (கடந்த ஆண்டு இதே காலத்தில் 3.5 % ஆக இருந்தது), வேளாண் துறை எந்தச் சூழலிலும் செயலாற்றக் கூடிய நெகிழ்தன்மை கொண்டது என்பதைக் காட்டியது. உரங்கள், சிமெண்ட், எஃகு, நிலக்கரி மற்றும் சுத்திகரிப்பு பொருட்கள் போன்ற முக்கிய துறைகளும் நேர்மறையான வளர்ச்சியைக் காண்பித்துள்ளன.

நாம் இப்போது பொருளாதார மாற்றத்தின் உச்சத்தில் இருக்கிறோம், அனைத்து குறியீடுகளும் வரவிருக்கும் மாதங்களில் நீண்ட கால வளர்ச்சி மற்றும் மீட்சியைச் சுட்டிக்காட்டுகின்றன. வெவ்வேறு குறியீடுகளின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி 2021-22 ஆம் ஆண்டிற்கான 9.5 சதவிகித வளர்ச்சியை மாற்றமின்றி அப்படியே வைத்துக் கொண்டுள்ளது. மாநிலங்களால் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொருளாதாரத்தைக் கட்டங்கட்டமாக மீண்டும் திறப்பதன் மூலம், நுகர்வோர் நம்பிக்கை திரும்பியுள்ளது, சந்தை உணர்வும் நேர்மறையான போக்கைக் காட்டியுள்ளது.

கடந்த 17 மாதங்களில் கற்றுக்கொண்ட பாடங்களால், இப்போது பெருந்தொற்றுநோயை மேலும் திறம்பட சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோம். சிறு வணிகங்கள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை அனைவரும் தங்கள் நடவடிக்கைகள் பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்குத் திரும்புவதில் ஆர்வமாக உள்ளனர் என நான் உறுதியாக நம்புகிறேன். நாம் அனைவரும் அந்தத் திசையில் செயல்பட வேண்டும். வலுவான மேக்ரோ-பொருளாதார அடிப்படைகள், முன்னோக்கி பார்க்கும் சீர்திருத்தங்கள், ஜி எஸ் டி, அந்நிய நேரடி முதலீட்டைத் திறத்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் ஆகியவை காரணமாக இந்திய பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும்ஆற்றல் கொண்டதாக உள்ளது.

பொருளாதாரத்தின் நீண்டகால மறுமலர்ச்சிக்கு மத்திய அரசும் மாநிலங்களும் இந்திய அணியாக செயல்பட்டு அனைத்து துறைகளிலும் இந்தியாவை மேலும் சிறந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மத்திய அரசும் பல்வேறு மாநிலங்களும், வெளிநாட்டு முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வருவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். 2021 ஆம் நிதியாண்டில், மொத்த அந்நிய நேரடி முதலீடு 81.72 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது ஆண்டுக்கு 10% அதிகமாகும்.சிஐஐ மற்றும் எர்ன்ஸ்ட் & யங் அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியா, ஆண்டுக்கு 120-160 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நேரடி அந்நிய முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் அனைவரும் அறிந்திருப்பதைப் போல, உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொதுத்துறை -தனியார்துறை-கூட்டை ஊக்குவிப்பது, பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு இன்றியமையாதது.

அன்புள்ள சகோதர சகோதரிகளே,

மற்ற பல நாடுகளைப் போலல்லாமல், இந்தியாவில் படித்த, திறமையான இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர்; அறிவியல் மனிதவளமும் அதிகம் உள்ளது. தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே,

ஆராய்ச்சி, வளர்ச்சிப்பணிகளில் முதலீடுகளை மேம்படுத்துவதன் மூலம் புதுமையின் வளர்ச்சிக்கு ஏற்ற சரியான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இந்த சூழலில், பொதுத்துறையும், தனியார் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இதுபோன்ற கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதை  எளிதாக்குவதில் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (எச்.சி.சி) போன்ற அமைப்புகள் முனைப்பான பங்கு வகிக்க வேண்டும்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே,

நிலையான,முதலீட்டாளருக்கு சாதகமான அரசாங்கம்; நல்ல இணைப்பு, உள்கட்டமைப்பு வசதிகள்; திறமையான, திறன் வாய்ந்த கடின உழைப்பாளிகள் ஆகியவற்றுடன், முதலீடு செய்வதற்கு  கவர்ச்சிகரமான இடமாக, தமிழ்நாடு திகழ்கிறது.

என்ஐஆர்எஃப் தரவரிசை 2021 இல் மூன்றாவது முறையாக சிறந்த தரவரிசை கொண்ட இந்திய கல்வி நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐஐடி மெட்ராஸ் கல்வியமைப்புக்கு எனது பாராட்டுக்கள்.

தமிழ்நாடு  மிகப் பண்டைய காலத்திலிருந்து சிறந்து விளங்கும் ஒரு வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. சில அகழ்வாராய்ச்சிப் பொருட்களின் கார்பன் டேட்டிங் காலத்தை அறியும் ஆய்வு, தாமிரபரணி நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என்பதை வெளிப்படுத்தி அதன் தொன்மையின் மீது புத்தொளி பாய்ச்சியுள்ளது. 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்ட கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவிலில் தமிழ் இந்திய கலாச்சாரத்தின் தாக்கத்தை நாம் காணலாம்

இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும் என்ற முதல்வர் திரு எம் கே ஸ்டாலினின் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன். உண்மையில், இது காலனித்துவ கண் கொண்டல்லாமல் இந்தியக் கண்ணோட்டத்துடன் மாற்றி எழுதப்பட வேண்டும்

கல்லூரி மாணவர்களுக்காக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை சேம்பர் நடத்தி வருவதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இளைஞர்களிடையே திறன் மேம்பாட்டை பெரிதும் வளர்க்குமாறு நான் சேம்பரைக்கேட்டுக்கொள்கிறேன். உங்களைப் போன்ற அமைப்புகள், உங்கள் முன்னணி நடவடிக்கைகளில் ஒன்றாக இளைஞர்களின் பயிற்சியையும், திறன் மேம்படுத்துதலையும் எடுத்துக்கொள்ள வேண்டும்; இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவது மட்டுமல்லாமல் சுயதொழில் செய்யக்கூடியவர்களாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வேலை தேடுவோர் என்பதை விட வேலையை உருவாக்குபவர்களாக மாறுவதற்கு அவர்களுக்குத் தேவையான திறன்களையும் அறிவையும் வழங்க வேண்டும்.

ஆலோசனை மற்றும் ஆலோசனை செயல்முறைகள் மூலம் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து, இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்கு உகந்த ஒரு சூழலை உருவாக்கவும் , பராமரிக்கவும் சேம்பர் செயல்பட்டு வருகிறது என்பதையறிந்தும்  நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கொள்கை தொடர்பான விஷயங்கள், செயல்திறன் மற்றும் போட்டித்திறன் ஆகியவற்றை மேம்படுத்துதல்; பல்வேறு சிறப்பு சேவைகள் மற்றும் உலகளாவிய இணைப்புகள் மூலம் தொழில்துறைக்கான வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் அது அரசாங்கத்துடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது.

முதலீட்டாளர் நம்பிக்கைக்கு அவசியமான வணிகத்தின் நேர்மறையான பிம்பத்தை முன்னிறுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களைப் போன்ற, தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகள், ஒட்டுமொத்த கார்ப்பரேட் மற்றும் வணிக சமூகத்திற்கு கெட்ட பெயரைக் கொண்டு வரும் கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு களையெடுக்க வேண்டும் என நான் எப்போதும் அறிவுறுத்தி வருகிறேன்.

ஹிந்துஸ்தான் சேம்பர், வணிகத்தில் சிறந்து விளங்குவதற்காகவும், சமூகத்திற்காற்றும் பங்களிப்பிற்காகவும் சிறந்த ஆளுமைகளை “சாம்பியன் ஆஃப் ஹியூமானிடி” விருது வழங்கி கௌரவிக்கிறது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். எனவே,  அப்பல்லோ குழுமத்தின் நிறுவனர் தலைவர் பிரதாப் சி.ரெட்டி அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது மிகவும் பொருத்தமே. அவருடைய பணி தொலைநோக்குப்பார்வையுடன் கூடிய  சாதனைசேவையாகும்.

கடந்த 75 ஆண்டுகளில் வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சேம்பரின் பங்களிப்பு பற்றிய விவரங்கள் அடங்கிய பவள விழா கொண்டாட்டங்கள் தொடர்பாகக் கொண்டு வரப்பட்ட விழாமலரை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சேம்பரின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்!

ஜெய் ஹிந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த