முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடம் நிரப்பியதில் முறைகேடு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடம் நிரப்பியதில் முறைகேடு


மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்புத் துறை இயக்குனர் தகவல் தேவகோட்டை தாலுகாவில் கிராம உதவியாளர் பணியி டம் நிரப்பியதில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க ஊழல் தடுப்பு இயக்குனருக்கு

தேவகோட்டை அருகில் உடையனவயல் ராமநாதன் மனைவி சாந்தா மற்றும் சாத்தமங்கலம் வனிதா ஆகிய இருவரும் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்ததில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கடந்த 3 ஆண் டுகளுக்கு முன் தேவகோட்டை வட்டத்தில் 10 கிராம உதவியாளர் தலையாரி பணியிடம் நிரப்ப அறிவிப்பு செய்ய ப்பட்டதைத் தொடர்ந்து நாங்களும் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தோம்.


ஆனால் அனைத்து தகுதிகளுமிருந்தும் எங்களை கிராம உதவி யாளராக நியமனம் செய்யவில்லை. அந்த நியமனத்தில் அரசாணை மற்றும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த வில்லை. இனச்சுழற்சி முறை யாகப் பின்பற்றப்படவில்லை. எவ் வித அடிப்படை ஆவணங்களும் இல்லாமல் வேறு தாலுகாக்களில் உள்ளவர்களையும் சேர்த்து பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதென கூறியிருந்தனர்.


அந்தப் புகார் மனு மீது தேவகோட்டை கோட்டாட்சியர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட கோட்டாட்சியர் விசாரணை செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பிய நிலையில் சாந்தா, வனிதா ஆகியோர் ஊழல் தடுப்புத் துறை இயக்குனருக்கும் புகார் அனுப்பி இருந்தனர். அந்தப் புகார் மீது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கடிதம் வந்திருப்பதாகத் தகவல் இதில் விசாரணை நடத்தி ஊழல் வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்களா அல்லது இந்த ஊழலில் அவர்களை காப்பாற்ற உதவி செய்வார்களா என்பது இனிவரும் காலங்களில் தெரியும். தலையாரி நியமனம் தொடர்பான இதற்கு முன் பல குற்றச்சாட்டுக்கள் உண்டு .பணி நியமனம் செய்யப்பட்டவர் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பத்தாம் வகுப்பு தவறிய நபரே தகுதியான நபர் ஆனால் இதில் பட்டதாரிகள் பணியில் நியமனம் செய்யப்பட்டதாக வந்த ஊழல் இலஞ்சம் இலாவண்யங்களால் மறைக்கப்பட்ட வரலாறு உண்டு. மேலும் படிக்காமல் போலி சான்றிதழ் பெற்ற நபர் நேர்முக தேர்வுக்கு பின்னர் தேர்வாக இருந்த நிலையில் தடுக்கப்பட்ட பின்னர் காவல்துறை நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த வட்டாட்சியர் கடிதப் படி நடவடிக்கை எடுக்காமல் ஊழல் காரணமாக தப்பிக்க வைக்கப்பட்டது எல்லாம் பழைய வரலாறு ஆகிய நிலையில் தற்போது இந்த இரண்டு நபர்கள் பணி கிடைக்காத விரக்தி மற்றும் இலஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவர்கள் விதி மீறல்கள் மூலம் பயனடைந்த நிலையில் பாதிப்புகள் தற்போது புகாராக வருகிறது லோக் ஆயுக்தா விசாரணை செய்தால் உண்மை வரும். தற்போது நடக்கும் விசாரணையில் உண்மை வருமா என்பது சந்தேகம் தான்.கிராம உதவியாளர்கள் (தலையாரி) நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் 2014 லேயே கண்டனம் தெரிவித்த நிலையில் தேவகோட்டை தாலுகாவில் கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் போது, உரிய சட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. அரசாணைகளை மீறி கடந்த 2014-15 ஆண்டுகளில் 2.12.2014. 19-10-2015 தேதிகளில் தேவகோட்டை வட்டாட்சியரால் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.               வயது,தகுதி, இடஒதுக்கீடு, கல்வி, விகிதாச்சாரம், முன்னுரிமை நியமனத்தில் பின்பற்ற வில்லை. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் பலருக்கு பணிகிடைக்கும் தருணத்தில் தாசில்தார் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார்.நேர்காணல் நடத்தாமல் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு குறித்து விசாரணை செய்து முறைகேடாக பணி நியமனங்களை இரத்து செய்யவேண்டும். மாவட்ட, வட்ட சங்கங்களின் தீர்மானங்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்ட காலத்தில் அப்போதய அரசு நடவடிக்கை எடுத்ததா என்பது எழு வினா ? அதுபோலவே இப்போது நடந்த ஊழல்களும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த