முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடம் நிரப்பியதில் முறைகேடு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடம் நிரப்பியதில் முறைகேடு


மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்புத் துறை இயக்குனர் தகவல் தேவகோட்டை தாலுகாவில் கிராம உதவியாளர் பணியி டம் நிரப்பியதில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க ஊழல் தடுப்பு இயக்குனருக்கு

தேவகோட்டை அருகில் உடையனவயல் ராமநாதன் மனைவி சாந்தா மற்றும் சாத்தமங்கலம் வனிதா ஆகிய இருவரும் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்ததில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கடந்த 3 ஆண் டுகளுக்கு முன் தேவகோட்டை வட்டத்தில் 10 கிராம உதவியாளர் தலையாரி பணியிடம் நிரப்ப அறிவிப்பு செய்ய ப்பட்டதைத் தொடர்ந்து நாங்களும் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தோம்.


ஆனால் அனைத்து தகுதிகளுமிருந்தும் எங்களை கிராம உதவி யாளராக நியமனம் செய்யவில்லை. அந்த நியமனத்தில் அரசாணை மற்றும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த வில்லை. இனச்சுழற்சி முறை யாகப் பின்பற்றப்படவில்லை. எவ் வித அடிப்படை ஆவணங்களும் இல்லாமல் வேறு தாலுகாக்களில் உள்ளவர்களையும் சேர்த்து பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதென கூறியிருந்தனர்.


அந்தப் புகார் மனு மீது தேவகோட்டை கோட்டாட்சியர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட கோட்டாட்சியர் விசாரணை செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பிய நிலையில் சாந்தா, வனிதா ஆகியோர் ஊழல் தடுப்புத் துறை இயக்குனருக்கும் புகார் அனுப்பி இருந்தனர். அந்தப் புகார் மீது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கடிதம் வந்திருப்பதாகத் தகவல் இதில் விசாரணை நடத்தி ஊழல் வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்களா அல்லது இந்த ஊழலில் அவர்களை காப்பாற்ற உதவி செய்வார்களா என்பது இனிவரும் காலங்களில் தெரியும். தலையாரி நியமனம் தொடர்பான இதற்கு முன் பல குற்றச்சாட்டுக்கள் உண்டு .பணி நியமனம் செய்யப்பட்டவர் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பத்தாம் வகுப்பு தவறிய நபரே தகுதியான நபர் ஆனால் இதில் பட்டதாரிகள் பணியில் நியமனம் செய்யப்பட்டதாக வந்த ஊழல் இலஞ்சம் இலாவண்யங்களால் மறைக்கப்பட்ட வரலாறு உண்டு. மேலும் படிக்காமல் போலி சான்றிதழ் பெற்ற நபர் நேர்முக தேர்வுக்கு பின்னர் தேர்வாக இருந்த நிலையில் தடுக்கப்பட்ட பின்னர் காவல்துறை நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த வட்டாட்சியர் கடிதப் படி நடவடிக்கை எடுக்காமல் ஊழல் காரணமாக தப்பிக்க வைக்கப்பட்டது எல்லாம் பழைய வரலாறு ஆகிய நிலையில் தற்போது இந்த இரண்டு நபர்கள் பணி கிடைக்காத விரக்தி மற்றும் இலஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவர்கள் விதி மீறல்கள் மூலம் பயனடைந்த நிலையில் பாதிப்புகள் தற்போது புகாராக வருகிறது லோக் ஆயுக்தா விசாரணை செய்தால் உண்மை வரும். தற்போது நடக்கும் விசாரணையில் உண்மை வருமா என்பது சந்தேகம் தான்.கிராம உதவியாளர்கள் (தலையாரி) நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் 2014 லேயே கண்டனம் தெரிவித்த நிலையில் தேவகோட்டை தாலுகாவில் கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் போது, உரிய சட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. அரசாணைகளை மீறி கடந்த 2014-15 ஆண்டுகளில் 2.12.2014. 19-10-2015 தேதிகளில் தேவகோட்டை வட்டாட்சியரால் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.               வயது,தகுதி, இடஒதுக்கீடு, கல்வி, விகிதாச்சாரம், முன்னுரிமை நியமனத்தில் பின்பற்ற வில்லை. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் பலருக்கு பணிகிடைக்கும் தருணத்தில் தாசில்தார் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார்.நேர்காணல் நடத்தாமல் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு குறித்து விசாரணை செய்து முறைகேடாக பணி நியமனங்களை இரத்து செய்யவேண்டும். மாவட்ட, வட்ட சங்கங்களின் தீர்மானங்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்ட காலத்தில் அப்போதய அரசு நடவடிக்கை எடுத்ததா என்பது எழு வினா ? அதுபோலவே இப்போது நடந்த ஊழல்களும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...