முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சி கட்டமைப்பு வசதிகள்

இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம் தஞ்சாவூர் -613 005


உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறையின் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு பிரஹலாத் சிங் பட்டேல், ஐ.ஐ.எப்.பி.டி யில் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சி கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தார்

இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.எப்.பி.டி), தஞ்சாவூர்  மத்திய உணவு பதனிடுதல் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம். உணவு பதப்படுத்துதல் சார்பான ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல், விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்களுக்கு உணவு பதப்படுத்துதல் சார்ந்த தொழில் மேற்கொள்வதற்கு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருகிறது.

உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம்  மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களுடன் இணைந்து, ஆத்ம நிர்பர் பாரத் அபியான் கீழ், அகில இந்திய மைய நிதியுதவி கொண்ட பிரதம மந்திரி குறுந் தொழில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல், நிதி வழங்குவதற்காக, தற்போதுள்ள மைக்ரோ லெவல் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை ரூ. 10,000 கோடி செலவில் மேம்படுத்த தொழில்நுட்ப மற்றும் வணிக ஆலோசனை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் கடன் உதவி மானியத்துடன் 2 லட்சம் குறுந் தொழில் உணவு பதப்படுத்தும் பிரிவுகளுக்கும், மேலும் சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் குடிசைத் தொழிலுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

மாண்புமிகு உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் திரு பிரஹலாத் சிங் பட்டேல், பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறுந் தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சியை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் நிகழ்வை தொடங்கிவைத்தார்.

முன்னதாக, தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நிறுவப்பட்ட ஐ.ஐ.எப்.பி.டி யின்  “தேங்காய் நீர் பிரசாத கருவி,  ஐ.ஐ.எப்.பி.டி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட ஆராய்ச்சி கட்டமைப்புகளான மிட்டாய் மற்றும் சாக்லேட் பதப்படுத்தும் ஆலை மற்றும் உணவு பேக்கேஜிங் சோதனை ஆய்வகம் ஆகியவற்றை அமைச்சர் திறந்து வைத்தார்.

அமைச்சர் அவர்கள் தனது தொடக்க உரையில், உணவு நுண் நிறுவனங்களில் இருக்கும் பின்னடைவுகளான வரையறுக்கப்பட்ட திறன்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப பற்றாக்குறை, பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்தல் திறன்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளுடன் ஒருங்கிணைக்க இயலாமை, மூலதனக் குறைபாடு மற்றும் வங்கி கடன்  ஆகியவற்றின் காரணமாக சிரமப்படுகின்றன என குறிப்பிட்டார்.

இச்சிரமங்களை நிவர்த்தி செய்யும் விதமாக நாடு முழுவதும் ஆத்மநிர்பர் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறுந் தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் வாயிலாக சிறு உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோர், FPO-க்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள 2,00,000 நிறுவனங்களுக்கு முறையான கட்டமைப்பு வசதி, பொதுவான செயலாக்க வசதி, ஆய்வகங்கள், சேமிப்பு, பேக்கேஜிங், புதிய தொழிநுட்பம், சந்தைப்படுத்தல் மற்றும் திறன் சேவைகள், திறன் மேம்பட்டு சேவைகள் இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும்.

இத்திட்டம் 2020-21 முதல் 2024-25 வரையிலான ஐந்து வருட காலப்பகுதியில் ரூ. 10,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், 2,00,000 நுண்ணிய உணவு பதப்படுத்தும் பிரிவுகளுக்கு நேரடியாக கடன் இணைக்கப்பட்ட மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு அமைச்சர் தனது உரையில் ஐ.ஐ.எப்.பி.டி யின்  ஐம்பது ஆண்டு கால ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளை பாராட்டி நிறுவனத்தின் சமீபகால சாதனைகளான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு,  தேசிய அளவிலான பொறியியல் கல்லுரிகளுக்கான தரவரிசை பட்டியலில் 81-வது இடத்தில் இருப்பதையும், ARIIA  தரவரிசை பட்டியலில் பிராண்ட் ஏ நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டதையும் பாராட்டினார்.

முன்னதாக, ஐ.ஐ.எப்.பி.டி யின் இயக்குநர் முனைவர் சி.ஆனந்த ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க தொழில்நுட்பங்களான சிறு தானிய ஐஸ்கிரீம் தொழில்நுட்பம், வெங்காய பதப்படுத்தும் இயந்திரங்கள், 3D உணவு அச்சிடும் தொழில்நுட்பம் ஆகியவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் PMFME திட்டத்தின் வாயிலாக ஐ.ஐ.எப்.பி.டி நிறுவனம் 26 மாநிலங்களில் மற்ற தேசிய நிறுவனங்களுடன் இணைந்து திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இந்த பயிற்சிகளின் மூலம் 343 முதுநிலைப் பயிற்சியாளர்களுக்கும், 20 மாநிலங்களில் 552 மாவட்ட அளவிலான பயிற்சியாளர்களுக்கும், 7 மாநிலங்களில் 367 பயனாளிகளுக்கும் குறுந்தொழில் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஆசாதிகா அம்ருத் மகோத்சவ்- வின் கீழ், ஐ.ஐ.எப்.பி.டி ஒரு மாவட்டம் ஒரு விலை பொருள் அணுகுமுறையில் PMFME திட்டத்தின் கீழ் 7 ODOP பயிற்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. சிறு தானியம், வெங்காயம், வாழைப்பழம், தக்காளி, தேங்காய், மசாலா (மிளகாய், இஞ்சி, மஞ்சள்), பால் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் பயிற்சிகளை பயனாளிகளுக்கு நடத்தப்பட்டுள்ளது.  இந்த விழிப்புணர்வு முகாமில், மதிப்புக் கூட்டல் தொழிநுட்பங்கள் மற்றும் பேக்கேஜிங், GMP மற்றும் உணவு பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் நிதி திட்டங்கள் குறித்து சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர்களுக்கான அமர்வுகளை வழங்கியது.  டெல்டா மாவட்டங்களில் உள்ள பல்வேறு சுய உதவிக்குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிறைவில் முனைவர். V.R. சினிஜா பேராசிரியர் மற்றும் PMFME ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார்.

ஐ.ஐ.எப்.பி.டி யில் புதிதாக உருவாக்கப்பட்ட கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுடனான உடன் படுக்கை ஒப்பந்தம்

தேங்காய் நீர் பிரசாத கருவி தேங்காய் உடைக்கும் அமைப்பு, தொடர்ச்சியாக வடிகட்டுதல் மற்றும் வெப்பமற்ற UV-C பதப்படுத்தும் அமைப்பு, குளிரூட்டும் தொட்டி மற்றும் தானியங்கி கோப்பை நிரப்பும் அலகு கொண்ட ஒரு தானியங்கி சாதனமாகும். சேகரிக்கப்பட்ட இயற்கையாக தேங்காய் நீர் தேவையற்ற திடப்பொருட்கள் மற்றும் அசுத்தங்கள் இல்லாமல் இருக்கும், இந்த தேங்காய் நீரினை பத்து நாட்கள் வரை குளிரூட்டப்பட்ட நிலையில் சேமிக்கலாம்.

IIFPT இன் உணவு பதப்படுத்தும் பயிற்சி மற்றும் ஆலோசனை  மையத்தில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக தின்பண்டம் செயலாக்க பைலட் ஆலை நிறுவப்பட்டது.  பலவகையான  மிட்டாய் மற்றும் பேக்கரி பொருட்கள்; டார்க் சாக்லேட், வெள்ளை சாக்லேட், மில்க் சாக்லேட், சர்க்கரை இல்லாத சாக்லேட்டுகள், புரோட்டீன் பார், நியூட்ரி-பார், தானிய பார்கள், டயட் பார்கள் மிட்டாய்கள், டோனட்ஸ் மற்றும் வேஃபர்ஸ் தயாரிக்கலாம்.

புதிதாக உருவாக்கப்பட்ட பேக்கேஜிங் சோதனை ஆய்வகம் பல்வேறு அளவுருக்கள் பகுப்பாய்வுக்கான வசதிகளைக் கொண்டுள்ளது; வாயு ஊடுருவல், இழுவிசை வலிமை, சுருக்கப் பெட்டி, அதிர்வு சோதனை, வெற்றிடக் கசிவு சோதனை, வெடிக்கும் வலிமை,  கிழித்தல் சோதனை, ஈரப்பதம் உறிஞ்சுதல், உராய்வு குணகம், நசுக்கிய எதிர்ப்பு, BOPP வெட்டுதல் மற்றும் தலை இடைவெளி வாயு பகுப்பாய்வு, மாற்றியமைக்கப்பட்ட வளிமண்டல பேக்கேஜிங், வெற்றிட பேக்கேஜிங், ரிடார்ட் பேக்கேஜிங் மற்றும் ட்ரே மடக்குதல் போன்ற மேம்பட்ட பேக்கேஜிங் தொழில்நுட்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஆய்வகம் உணவுத் தொழிலுக்கு சோதனை, பயிற்சி மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கும்

IIFPT உணவுத் தொழில் நிறுவனங்களான M/s சுகர்கனே கிரியா (OPC) பிரைவேட் லிமிடெட், திண்டுக்கல், தமிழ்நாடு மற்றும் M/s. இட்விசு வென்ச்சர்ஸ் கொச்சின், கேரளா  ஆகிய நிறுவனங்களுக்கு பால் அல்லாத  சிறுதானிய ஐஸ்கிரீம் தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது. மூன்று தொழில் நிறுவனங்களான M/s ஆதி மந்திர உணவுகள் பிரைவேட். லிமிடெட், நாக்பூர், மகாராஷ்டிரா, M/s Nutri Flavors Private Ltd., மேட்டூர், தமிழ்நாடு மற்றும் M/s. ஆலை லிப்பிட்ஸ் பிரைவேட். லிமிடெட், கொச்சின், கேரளா ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட ஆராய்ச்சி திட்டத்தை மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த