முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சி கட்டமைப்பு வசதிகள்

இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம் தஞ்சாவூர் -613 005


உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறையின் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு பிரஹலாத் சிங் பட்டேல், ஐ.ஐ.எப்.பி.டி யில் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சி கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தார்

இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.எப்.பி.டி), தஞ்சாவூர்  மத்திய உணவு பதனிடுதல் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம். உணவு பதப்படுத்துதல் சார்பான ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல், விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்களுக்கு உணவு பதப்படுத்துதல் சார்ந்த தொழில் மேற்கொள்வதற்கு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருகிறது.

உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம்  மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களுடன் இணைந்து, ஆத்ம நிர்பர் பாரத் அபியான் கீழ், அகில இந்திய மைய நிதியுதவி கொண்ட பிரதம மந்திரி குறுந் தொழில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல், நிதி வழங்குவதற்காக, தற்போதுள்ள மைக்ரோ லெவல் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை ரூ. 10,000 கோடி செலவில் மேம்படுத்த தொழில்நுட்ப மற்றும் வணிக ஆலோசனை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் கடன் உதவி மானியத்துடன் 2 லட்சம் குறுந் தொழில் உணவு பதப்படுத்தும் பிரிவுகளுக்கும், மேலும் சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் குடிசைத் தொழிலுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

மாண்புமிகு உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் திரு பிரஹலாத் சிங் பட்டேல், பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறுந் தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சியை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் நிகழ்வை தொடங்கிவைத்தார்.

முன்னதாக, தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நிறுவப்பட்ட ஐ.ஐ.எப்.பி.டி யின்  “தேங்காய் நீர் பிரசாத கருவி,  ஐ.ஐ.எப்.பி.டி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட ஆராய்ச்சி கட்டமைப்புகளான மிட்டாய் மற்றும் சாக்லேட் பதப்படுத்தும் ஆலை மற்றும் உணவு பேக்கேஜிங் சோதனை ஆய்வகம் ஆகியவற்றை அமைச்சர் திறந்து வைத்தார்.

அமைச்சர் அவர்கள் தனது தொடக்க உரையில், உணவு நுண் நிறுவனங்களில் இருக்கும் பின்னடைவுகளான வரையறுக்கப்பட்ட திறன்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப பற்றாக்குறை, பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்தல் திறன்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளுடன் ஒருங்கிணைக்க இயலாமை, மூலதனக் குறைபாடு மற்றும் வங்கி கடன்  ஆகியவற்றின் காரணமாக சிரமப்படுகின்றன என குறிப்பிட்டார்.

இச்சிரமங்களை நிவர்த்தி செய்யும் விதமாக நாடு முழுவதும் ஆத்மநிர்பர் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறுந் தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் வாயிலாக சிறு உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோர், FPO-க்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள 2,00,000 நிறுவனங்களுக்கு முறையான கட்டமைப்பு வசதி, பொதுவான செயலாக்க வசதி, ஆய்வகங்கள், சேமிப்பு, பேக்கேஜிங், புதிய தொழிநுட்பம், சந்தைப்படுத்தல் மற்றும் திறன் சேவைகள், திறன் மேம்பட்டு சேவைகள் இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும்.

இத்திட்டம் 2020-21 முதல் 2024-25 வரையிலான ஐந்து வருட காலப்பகுதியில் ரூ. 10,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், 2,00,000 நுண்ணிய உணவு பதப்படுத்தும் பிரிவுகளுக்கு நேரடியாக கடன் இணைக்கப்பட்ட மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு அமைச்சர் தனது உரையில் ஐ.ஐ.எப்.பி.டி யின்  ஐம்பது ஆண்டு கால ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளை பாராட்டி நிறுவனத்தின் சமீபகால சாதனைகளான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு,  தேசிய அளவிலான பொறியியல் கல்லுரிகளுக்கான தரவரிசை பட்டியலில் 81-வது இடத்தில் இருப்பதையும், ARIIA  தரவரிசை பட்டியலில் பிராண்ட் ஏ நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டதையும் பாராட்டினார்.

முன்னதாக, ஐ.ஐ.எப்.பி.டி யின் இயக்குநர் முனைவர் சி.ஆனந்த ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க தொழில்நுட்பங்களான சிறு தானிய ஐஸ்கிரீம் தொழில்நுட்பம், வெங்காய பதப்படுத்தும் இயந்திரங்கள், 3D உணவு அச்சிடும் தொழில்நுட்பம் ஆகியவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் PMFME திட்டத்தின் வாயிலாக ஐ.ஐ.எப்.பி.டி நிறுவனம் 26 மாநிலங்களில் மற்ற தேசிய நிறுவனங்களுடன் இணைந்து திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இந்த பயிற்சிகளின் மூலம் 343 முதுநிலைப் பயிற்சியாளர்களுக்கும், 20 மாநிலங்களில் 552 மாவட்ட அளவிலான பயிற்சியாளர்களுக்கும், 7 மாநிலங்களில் 367 பயனாளிகளுக்கும் குறுந்தொழில் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஆசாதிகா அம்ருத் மகோத்சவ்- வின் கீழ், ஐ.ஐ.எப்.பி.டி ஒரு மாவட்டம் ஒரு விலை பொருள் அணுகுமுறையில் PMFME திட்டத்தின் கீழ் 7 ODOP பயிற்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. சிறு தானியம், வெங்காயம், வாழைப்பழம், தக்காளி, தேங்காய், மசாலா (மிளகாய், இஞ்சி, மஞ்சள்), பால் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் பயிற்சிகளை பயனாளிகளுக்கு நடத்தப்பட்டுள்ளது.  இந்த விழிப்புணர்வு முகாமில், மதிப்புக் கூட்டல் தொழிநுட்பங்கள் மற்றும் பேக்கேஜிங், GMP மற்றும் உணவு பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் நிதி திட்டங்கள் குறித்து சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர்களுக்கான அமர்வுகளை வழங்கியது.  டெல்டா மாவட்டங்களில் உள்ள பல்வேறு சுய உதவிக்குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிறைவில் முனைவர். V.R. சினிஜா பேராசிரியர் மற்றும் PMFME ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார்.

ஐ.ஐ.எப்.பி.டி யில் புதிதாக உருவாக்கப்பட்ட கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுடனான உடன் படுக்கை ஒப்பந்தம்

தேங்காய் நீர் பிரசாத கருவி தேங்காய் உடைக்கும் அமைப்பு, தொடர்ச்சியாக வடிகட்டுதல் மற்றும் வெப்பமற்ற UV-C பதப்படுத்தும் அமைப்பு, குளிரூட்டும் தொட்டி மற்றும் தானியங்கி கோப்பை நிரப்பும் அலகு கொண்ட ஒரு தானியங்கி சாதனமாகும். சேகரிக்கப்பட்ட இயற்கையாக தேங்காய் நீர் தேவையற்ற திடப்பொருட்கள் மற்றும் அசுத்தங்கள் இல்லாமல் இருக்கும், இந்த தேங்காய் நீரினை பத்து நாட்கள் வரை குளிரூட்டப்பட்ட நிலையில் சேமிக்கலாம்.

IIFPT இன் உணவு பதப்படுத்தும் பயிற்சி மற்றும் ஆலோசனை  மையத்தில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக தின்பண்டம் செயலாக்க பைலட் ஆலை நிறுவப்பட்டது.  பலவகையான  மிட்டாய் மற்றும் பேக்கரி பொருட்கள்; டார்க் சாக்லேட், வெள்ளை சாக்லேட், மில்க் சாக்லேட், சர்க்கரை இல்லாத சாக்லேட்டுகள், புரோட்டீன் பார், நியூட்ரி-பார், தானிய பார்கள், டயட் பார்கள் மிட்டாய்கள், டோனட்ஸ் மற்றும் வேஃபர்ஸ் தயாரிக்கலாம்.

புதிதாக உருவாக்கப்பட்ட பேக்கேஜிங் சோதனை ஆய்வகம் பல்வேறு அளவுருக்கள் பகுப்பாய்வுக்கான வசதிகளைக் கொண்டுள்ளது; வாயு ஊடுருவல், இழுவிசை வலிமை, சுருக்கப் பெட்டி, அதிர்வு சோதனை, வெற்றிடக் கசிவு சோதனை, வெடிக்கும் வலிமை,  கிழித்தல் சோதனை, ஈரப்பதம் உறிஞ்சுதல், உராய்வு குணகம், நசுக்கிய எதிர்ப்பு, BOPP வெட்டுதல் மற்றும் தலை இடைவெளி வாயு பகுப்பாய்வு, மாற்றியமைக்கப்பட்ட வளிமண்டல பேக்கேஜிங், வெற்றிட பேக்கேஜிங், ரிடார்ட் பேக்கேஜிங் மற்றும் ட்ரே மடக்குதல் போன்ற மேம்பட்ட பேக்கேஜிங் தொழில்நுட்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஆய்வகம் உணவுத் தொழிலுக்கு சோதனை, பயிற்சி மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கும்

IIFPT உணவுத் தொழில் நிறுவனங்களான M/s சுகர்கனே கிரியா (OPC) பிரைவேட் லிமிடெட், திண்டுக்கல், தமிழ்நாடு மற்றும் M/s. இட்விசு வென்ச்சர்ஸ் கொச்சின், கேரளா  ஆகிய நிறுவனங்களுக்கு பால் அல்லாத  சிறுதானிய ஐஸ்கிரீம் தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது. மூன்று தொழில் நிறுவனங்களான M/s ஆதி மந்திர உணவுகள் பிரைவேட். லிமிடெட், நாக்பூர், மகாராஷ்டிரா, M/s Nutri Flavors Private Ltd., மேட்டூர், தமிழ்நாடு மற்றும் M/s. ஆலை லிப்பிட்ஸ் பிரைவேட். லிமிடெட், கொச்சின், கேரளா ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட ஆராய்ச்சி திட்டத்தை மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...