தமிழ் நாட்டில் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அனைத்து மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளருக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் உள்ளதாவது: சில காவல் நிலையம் பெயர் பலகையில் தனியார் நிறுவனங்களின் பெயர்களும் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அது பொதுமக்களிடையே ஒரு தவறான புரிதலை உருவாக்கிக் காட்டும். எனவே தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால் உடனே அதனை நீக்க வேண்டும்.
பெயர் பலகையில் காவல துறையின் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும். புதிதாக பெயர் பலகை வைக்க காவல் நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட முன்பணத்தை செலவிட்டுக் கொள்ளலாம். இவ்வாறு அவரது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
கருத்துகள்