தியாக சீலர்கள் மருதுபாண்டியர்களின். தூக்கிலிடப்பட்ட 220 வது நினைவு தினத்தில் அரசு மற்றும் ஆதீனம் சார்பில் மரியாதை
தமிழ்நாடு அரசு சார்பில் திருப்புத்தூர் தியாக சீலர்கள் மருதுபாண்டியர்களின்
நினைவு மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் நினைவு தினத்தை அரசு கடைபிடிக்கிறது.
இன்று தூக்கிலிடப்பட்ட 220 வது நினைவு தினத்தில் அரசு சார்பில் சிவகங்கைமாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி மணிமண்டபத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தபின் பெரிய மருது, சின்ன மருது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதற்கு முன்னதாக மருதுபாண்டியர் நினைவு மண்டபத்தில் த.ராமசாமி சேர்வை மற்றும் வாரிசுதாரர்கள், பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.விழாவை முன்னிட்டு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் சுமார் 1200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிகழ்ச்சியில் தமிழகத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கரு.பெரியகருப்பன் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.1799 ஆம் ஆண்டில் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு நாயக்கர் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாதத் தொண்டைமான் பிறந்த ஊரான திருகளம்பூர் எல்லை காவல் படை பிடித்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்களிடம் ஒப்படைக்க அவர் கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட பின்னர் அவர் தம்பி ஊமத்துரை குமாரபட்டி மக்கள் மூலம் அடைக்கலம் தேடி வந்து மருது சகோதரர்களிடம் தஞ்சமடைந்ததையடுத்து மருது சகோதரர்களுக்கும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனிகளுக்குமான யுத்தம் மூண்டது.
1801 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி சிவகங்கை சமஸ்தானத்தின்மீதான தாக்குதலை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனிப் படை துவங்கியதை எதிர்கொள்ள பிரிட்டன் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கூட்டணி உருவாக்கப்பட்டு 1801 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி நாவலந்தீவு என்ற ஜம்பு தீவு பிரகடனத்தை மருது சகோதரர்கள் வெளியிட்டனர். அதில் "இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும். ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால், மேன்மை தாங்கிய ஆற்காட்டு நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவை போலாகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள் உங்களிடையே ஒற்றுமையும் நட்புமில்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரையொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள்லிருக்கின்றனர். ஆயிரமாண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும். ஆதலால்
பாளையங்களிலுள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும். அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்... ஆதலால். மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்.
இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்.
இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது.. இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகளாவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!..
ஆங்கிலேயர்களுடனான மருது சகோதரர்களின் யுத்தம் 150 நாட்கள் வரை நீடித்தது. மருது சகோதரர்களின் சிவகங்கை படைதளபதிகளில் ஒருவரான பாகனேரி வாளுக்கு வேலி அம்பலத்தின் வீரத்தை தங்களது வரலாற்று பக்கங்களில் ஆங்கிலேயர்களும் விவரித்திருக்கின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தென்பாண்டி சிங்கம் நாவலில் வீர வீரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார்.
இறுதியாக .1801 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி திருப்புத்தூர் கோட்டையில் வாதாமரத்தின் அருகில் மருது சகோதரர்கள் மற்றும் 500 மேற்பட்ட மக்கள் தூக்கிலிடப்பட்டனர். மற்றும் ஒரு ஜாலியன் வாலாபாக் போல கொடுமை மருது சகோதரர்களுடன் அவர்களது குடும்பத்தினர், உறவினர் என 500 க்கும் மேற்பட்டோர் தூக்கில் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர். மருது சகோதரர்களின் மைனர் மகன் துரைசாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான உறவினர்கள் நாடு கடத்தப்பட்ட கொடூரமும் நிகழ்ந்தது.
1801 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி மருது சகோதரர்களை தூக்லிட்ட ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி கொடுங்கோல் நிர்வாகம் காளையார்கோவிலில் அவர்கள் இறுதி விருப்பத்தின் பேரில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி மூன்று நாட்கள் கழித்து உடல் திருப்பத்தூர் கூகுல்பார்க் சுவிடிஷ் மிஷன் மருத்துவமனையிலுள்ள இடத்திலும் தலை காளையார் கோவில் சன்னதிகளின் முன்புறமும் அடக்கம் செய்யப்பட்டது
தியாக சீலர்கள் மருது சகோதரர்களுடன் 500 க்கும் மேற்பட்ட மக்கள் அவரது உறவினர்கள் திருப்பத்தூரில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கும் வகையில் #1801 திருப்பத்தூர் படுகொலை சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகிறது.
மருது சகோதரர்களின் வீரம், பாகனேரியார் வாளுக்கு வேலி அம்பலத்தாரின் வீரம் தொடர்பான பல்வேறு பதிவுகளும் இந்த டிரெண்டிங் பதிவுகளில் இடம்பெற்றுள்ளன
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி கர்னல் ஸ்டிரே காளையார்கோவிலைக் கைப்பற்றிய நாழிகையில் . 1 டிசம்பர் 1801 அன்று மும்முனைத் தாக்குதலில் காளையார்கோவில் விழுந்தது. அதாவது ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி ராணுவ கர்னல் ஸ்டிரே கைப்பற்றியதே மருதிருவரைக் குறிவைத்துத் தான். மருதுபாண்டியர் இருவரும் சிக்கவில்லை. அடுத்தக்கட்டமாக மருது பாண்டியர்களுக்கு வேண்டியவர், உதவியாக வந்த உறவினர்கள் என தேடித்தேடிக் கொலை செய்யப்பட்டனர். காளையார் கோவிலிலிருந்து வெளியேறிய மருதிருவர்கள் தனது படை வீரர்களோடு சங்கரபதிக் கோட்டை மற்றும் சிறுவயல் காடுகளில் மறைந்து வாழ்ந்த காலத்தில். நிச்சயம் அவர்கள் இருவரையும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி கர்னல் ஸ்டிரேவின் படையும் மருது பாண்டியர்களைத் தேடும் பொருட்டே செயல்பட்டனர். மருது பாண்டியர்களை கண்டுபிடித்துக் கொடுத்தால் ஏராளமான பொற்காசுகளும், அரசாங்கத்தில் பல நல்ல பதவிகளும் பரிசாக வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்தனர். மருது பாண்டியரின் படை வீரர்களில் சிலர் பரிசுக்கும், அரசாங்கப்பதவிக்கும் ஆசைப்பட்டு மருது பாண்டியரை ஆங்கிலேயருக்குக் காட்டிக்கொடுக்க முற்பட்டது தான் சோகம்.
ஒக்கூர் அருகில் காளையார்மங்களம் கிராமத்துக் காடுகளில் மறைந்திருக்கின்றார்கள் மருதுபாண்டியர்கள் என்ற செய்தி, ஒரு ஒற்றன் மூலம் தெரியவருகிறது, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி பரங்கிப் பெரும்படைக்கும் எஞ்சி இருந்த மருது சகோதரர்கள் படைக்கும் வாழ்வா, சாவா என்ற உணர்வோடு கூடிய இறுதிப் போர் நடந்தது அது இந்திய வரலாற்றில் அன்னியருக்கு எதிரான சுதந்திரப் போர் பல நாட்கள் நல்ல தூக்கம், உணவுகள் இல்லாததால் காடு மேடு என்று ஓடியும் ஒளிந்தும் அலைந்து திரிந்ததால் மருது பாண்டியர்களின் உடல்கள் சோர்வில் களைத்துப் போயின. தொடையில் குண்டடிப்பட்ட நிலையில் பெரிய மருதுவை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி மேஜர் அகன்யூ கைது செய்தார். சின்னமருதுவை காட்டிக் கொடுத்ததும் அவரிடம் முன்பு வேலைக்காரனாக இருந்த கரடிக் கறுத்தான் என்பவன். நான்கு நாட்களுக்குப் பிறகு இருவரையும் 24.10.1801 அன்று ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி மேஜர் அகன்யூ திருப்பத்தூர் கோட்டையில் தற்பொழுது பேருந்து நிலையத்திற்கு எதிரே வாதாமரத்தின் அருகிலுள்ள இடத்தில் முச்சந்தியில் தூக்கிலிட்டனர். வியாபாரிகளாக வந்த நாடு பிடித்த நரிகளாள ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்த போது, ஆங்கிலேயர்களின் பெருமைக்குரிய வெற்றிகளில் ஒன்றாக இதைக் கருதினர் .
மொத்தமாக மருது சகோதரர்கள் வீரர்களையும் சேர்த்து 500 பேர் தூக்கிலிடப்பட்டார்கள். மூன்று நாட்கள் ஊரே போர்க்களமான வரலாறு. இறந்தவர்களின் உடலை தலை வேறு உடல் வேறாக பிரித்து உடலை திருப்பத்தூர் வீதிகளில் உலவ விட்டுள்ளார்கள். தலைகளை நகர வீதிகளில் வேல் கம்புகளில் செருகி பார்வைக்கு வைத்துள்ளார்கள். நடந்த நிகழ்வுகளால் திருப்பத்தூரில் மக்கள் வெளிவரவே பயமுற்று இருந்துள்ளனர்.
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி காப்டன் பிளாக்பர்ன் தலைமையில் சாக்கோட்டை, எழுவன் கோட்டை வழியாக கிழக்குப் பகுதியில் இராமநாதபுரத்திலிருந்து வருகை தரும் கூலிப்படையுடன் 30.9.1801 அன்று ஆறு வழிகளிலும் எழுபத்து இரண்டு மக்கள் தலைவர்களையும் நாடு கடத்த உத்திரவிட்டனர். ஈராயிரம் மைல் தொலைவில் உள்ள பெங்கோலோன் என்ற தீவில் கைதிகளாக வைத்திருக்க முடிவு செய்தனர். அதற்கு பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவு என பெயரிட்டனர்.
ஆறு வார காலக் கப்பல் பயணத்தில் 11 டிசம்பர் 1802 ஆம் தேதி தூத்துக்குடி கொண்டு போய் சேர்க்கப்பட்டன. இவர்கள் அனைவரும் எண்பது நாட்கள் கையில் விலங்கிடப்பட்டவர்களாக கப்பலுக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடந்ததால் கப்பலைவிட்டு வெளியே காலடி வைத்து இறங்கி வருவதே அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அவர்களது உடல்நிலை மோசமாகவும், தெம்பு இல்லாதவர்களாகவும் காணப்பட்டனர். அதனால் வரும் வழியிலேயே மூவர் இறந்தனர்.
மாவீரன் வேங்கை பெரிய உடையனத்தேவர் அதே கப்பலில் கொண்டு செல்லப்பட்டாலும், அங்கிருந்து சுமத்ரா தீவிலுள்ள பெங்கோலன் சிறைக்கு மாற்றப்பட்டு அங்குள்ள மால்பரோ கோட்டையில் தனிக் கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டார்.
தியாக சீலர்கள் மருது சகோதரர்களை தூக்கிலிட்டதற்கு ஆங்கிலேயர்கள் கூறும் முக்கிய காரணம், மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு நாயக்கர் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்தது தான். அதை
மருது சகோதரர்கள் மரணித்த வரலாற்றுப் பக்கங்களில் ஆங்கிலேயர்களே தனது டைரி குறிப்புகளில் தெரிவித்திருக்கின்றனர்.ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி கர்னல் ஜேம்ஸ் வேல்ஸ் தமது நினைவுகளில் ஓரிடத்தில் மருது சகோதரர்களின் வீழ்ச்சியைப் பற்றி கூறுகையில் சில மாதங்களுக்கு முன் இதே வழியாகச் சென்று வெள்ளை மருதுவின் விருந்தாளியாக இருந்துவிட்டு அதே பிரதேசத்தில் அவரது எதிரியாக மீண்டும் என்பதை நான் சிறிதளவுகூட அறியாததேயாகும் என்று தெரிவித்திருந்தார். மேலும் ஆங்கிலேயர்களை அனுசரித்து ஆட்சி செய்யாத காரணத்தினாலும் மருது பாண்டியர்கள் குறி வைக்கப்பட்டனர் என்று கூறியுள்ளார்.
அவரது தியாகத்தை நினைவு கூறும் நாளாக அமையும் அக்டோபர் மாதம் 24 மற்றும் 27 ஆம் தேதி அவர் குன்றக்குடி ஆலயத்தில் எழுப்பிய மண்டபத்தில் உள்ள மருதிருவர் சிலைகளுக்கு பூஜை செய்து மாலை அணிவித்து திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் சார்பில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல தேசிகர் பரமாச்சாரியார் சுவாமிகள் மரியாதை செய்து வழிபட்டார். நல்லு அம்பலம் என்ற வாளுக்கு வேலி அம்பலம் மருதுபாண்டியரைக் காப்பாற்ற படை திரட்டி சென்ற கலைஞர் எழுத்தில்
கருத்துகள்