முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அஇஅதிமுக பொன்விழா பொதுச்செயலாளர் வி.கே.சசிக்கலா நடராஜன் கல்வெட்டு பேசுபொருளாகிறது

சென்னை தியாகராய நகரில்  அஇஅதிமுக நிறுவனர் மற்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன். நினைவில்லத்திற்கு வி.கே.சசிகலா நடராஜன் சென்று எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, அ.இ.அ.தி.மு.க., கொடி ஏற்றி வைத்தார். 'பொதுச்செயலர் வி.கே. சசிகலா' என பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் திறந்தது வைத்தார் ஆட்சியை இழந்த அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வி அடைந்து நேரத்தில்,


அ.இ.அ.தி.மு.க.,வின் 50 ஆம் ஆண்டு பொன் விழாக் கொண்டாடம். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை அ.இ.அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா சிலைகளுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் என உள்ள 0.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் என உள்ள கே.பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருவரும் அ.இ.அ.தி.மு.க., கொடியை ஏற்றி வைத்து, கூடிய நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். 'மக்கள் தொண்டில் மகத்தான 50 ஆண்டுகள்' என்றபொன் விழா சிறப்பு மலரும், அ.இ.அ.தி.மு.க., - ஐ.டி., அணி சார்பில் தயாரிக்கப்பட்ட பொன் விழா பாடலும் வெளியிடப்பட்ட. பின், சென்னை மெரினா கடற்கரையிலுள்ள முன்னால் முதல்வர்கள் அறிஞர் அண்ணாத்துரை, டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன்., டாக்டர் செல்வி.ஜெ.ஜெயலலிதா நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செய்தனர்.இதேபோல் வி.கே.சசிக்கலா நடராஜன் தியாகராயநகர்


எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், அ.தி.மு.க., கொடியை ஏற்றி, கல்வெட்டை திறந்து வைத்த பிறகு இராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., வீட்டிற்குச் சென்று எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது, பேசியதாவது:

நமக்குள் ஏற்பட்ட பிரிவுகள் தான், நம் எதிரிகளுக்கு இடம் கொடுத்து விட்டன. அ.தி.மு.க., விற்காக, தொண்டர்களுக்காக, மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, மக்களின் பேராதரவோடு அ.தி.மு.க., ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். நாம் ஒன்றாக வேண்டும்; அ.தி.மு.க., வென்றாக வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.




அவர் அளித்த பேட்டி:கல்வெட்டில் அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா என குறிப்பிடப்பட்டு உள்ளது நீதிமன்றத்தின் கண்டனத்திற்குரியது. எங்களுக்கு தான் இரட்டை இலை; நாங்கள் தான் கட்சி என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது. எல்லாரும் ஒற்றுமையாக இருக்கும் நிலையில், ஒரு கல்வெட்டில் பெயர் போட்டால் பொதுச் செயலராக முடியுமா; செஞ்சி கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜா தேசிங்காக முடியுமா; மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆக முடியுமா; சசிகலா மீது சட்ட ரீதியாக கட்சி நடவடிக்கை எடுக்கும்.


சசிகலா எந்த ஒரு தியாகமும் செய்யவில்லை. பின்னர் எப்படி அவர் தியாகத் தலைவியாக முடியும்? தற்போது தியாகத் தலைவி என்பது போய் புரட்சி தாயாம். சசிகலா தன் குடும்பத்தை வாழ வைக்கும் புரட்சியை தான் செய்தார். இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.


அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை:கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என நினைத்திருந்த நேரத்தில், எதிரணியினர் அமைத்த மெகா கூட்டணி, அள்ளி வீசிய சாத்தியமற்ற தேர்தல் வாக்குறுதிகளால், ஆட்சி நம்மை விட்டு கைநழுவி போய்விட்டது.


அ.தி.மு.க., தோன்றி, 49 ஆண்டுகள் நிறைவு பெற்று, 50-வது பொன் விழா ஆண்டு துவங்கும் பொன்னாளில், ஜெயலலிதா வகுத்து கொடுத்த பாதையில் பயணித்து, மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி மலர, ஓயாது உழைப்போம் என நாம் அனைவரும் சூளுரைப்போமெனக் கூறியுள்ளார்.



மொத்தத்தில் அஇஅதிமுக வில்  பொதுச்செயலாளர், மற்றும் ஒருங்கிணைப்பார், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது அது வெளிவரும் போது தான் இந்த பதவி பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.அதுவரை அரசியல் யாரும் வாய்க்கு வந்ததை பேசலாம். எம்.ஜி.ஆர் கட்சி துவங்கிய அமைப்புச் சட்டம் மற்றும் துணை விதிமுறைகள் படி ஒருங்கிணைப்பாளர் என்ற ஒரு பதவியோ இணை ஒருங்கிணைப்பாளர் என்பதோ இல்லை இவர்கள் நிலை தீர்ப்பு வந்த பின்னர் தான் முடிவாகும்.




மேலும் கட்சி பிளவு பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் சின்னங்கள் குறித்த முடிவுகள் மட்டுமே எடுக்க இயலும் உள் கட்சி கட்டமைப்பு விவகாரத்தில் தலையிட மாட்டாது. 

அவ்வாறு இருக்க தொண்டர் களைத் தக்க வைக்க இந்த போட்டி விழாக்கள் நடைபெறுகிற நிலையில் அரசியல் பொதுப் பார்வை ஒன்று உண்டு. தற்போதுள்ள தேர்வு பொதுச்செயலாளர் வி.கே.சசிக்கலா நடராஜன் ஒரு பருந்து போல அரசியல் விழிப்புணர்வு பெற்றவர் மற்றவர்கள் அவரோடு போட்டியில் வெல்ல ஆட்சி அதிகாரம் கொண்ட நபர்கள் ஆதரவு தேவை என்ற நிலையே உள்ளது.




காரணம் அவர்கள் செய்த வரலாற்று ஊழல்கள் மற்றும் கொள்ளைகள். ஆதலால் .*இந்த இராஜாளிப் பறவை மீண்டும் பறக்கும்* கழுகிடம் இருந்து கற்க வேண்டிய பாடம் அரசியல் சாணக்கியர் முனைவர் ம.நடராஜன் வழியில் வி.கே.சசிக்கலா நடராஜன் ஒரு ஒப்பீடு.!


பறவை இனத்திலேயே கழுகுக்கு மட்டும்தான் 70 ஆண்டு ஆயுட்காலம். 70 ஆண்டுக் காலம் வாழ வேண்டுமென்றால், அது 40 வயதில் தன்னையே உருமாற்றம் செய்ய வேண்டும்.கழுகு தன் 40 வயதை அடையும்போது, அதன் அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயனற்றதாகிவிடும். 







அதன் அலகும் வளைந்து விடும். அதன் இறக்கைகளும் தடித்து, பறப்பதற்குக் கனமாக மாறிவிடும்.


இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க நிகழ்ச்சிக்குத் தன்னையே உட்படுத்துவது இவை தான் கழுகுக்கு முன் இருக்கும் வாய்ப்புகள்.கழுகு என்ன செய்யும் தெரியுமா? இந்தக் காலத்தில், உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தன் கூட்டிலேயே தனித்திருக்கும்.


புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும். ஐந்து மாதங்களுக்குப் பின் புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும்.இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, வலியை அனுபவித்து, மறுபிறவி அடைந்த கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.


வாழ்க்கையில் இதுதான் கடைசி என்று நினைப்போம். ஆனால், அந்த வாழ்க்கையைப் புதுப்பிக்க வாய்ப்புக் கிடைக்காமல் போகாது. ஆனால், அந்த வாய்ப்பு வலியோடு வரலாம்.அதைத் தாங்குவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், அதை ஏற்றுக்கொண்டு அதைத் தாண்டி வந்தால் யாருக்கும் மறுபிறவி கிடைக்கலாம். அது அந்த இயக்கம் ஆகட்டும் அல்லது அவராகட்டும் . அதுவே சரித்திர மாற்றம் பீனிக்ஸ் தான் இந்த இராஜாளிப் பறவை முதல் குற்றவாளியாக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதாஉயிருடன்  இருந்திருந்தால் அவரும் சிறை தண்டனை பெற்றதாக சென்று வந்திருப்பார் என்பதே நிஜம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த