முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாணவிகள் இரத்தசோகை நோய்க்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் வலியுறுத்தல்

மாணவிகள் இரத்தசோகை நோய்க்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு வலியுறுத்தல்


வளரிளம் பெண்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இரத்த சோகை நோய் ஏற்பட்டால் அது அவர்களைப் பெரிதும் பாதிக்கும். இது தொற்று நோய் அல்ல. நமது உணவு பழக்கத்தாலும் வாழ்வியல்முறை மாற்றத்தாலும் ஏற்படும் குறைபாடுதான். இதனை தவிர்க்கவும் தடுக்கவும் முடியும். சுவைக்கு அடிமையாகாமல் ஊட்டச்சத்து நிறைந்த உணவை அதிலும் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்க முடியும். மாணவிகள் கடைகளில் விற்கும் நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்துவிட்டு சிறுதானியங்களில் செய்த பலகாரங்களைச் சாப்பிடப் பழக வேண்டும். அதேபோல் தடுப்பூசி போட்டுக் கொண்டால்தான் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். 100 % மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராமமாக இக்கிராமம் மாற வேண்டும் என்று கடலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.அதியமான் கவியரசு கேட்டுக் கொண்டார்.


புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் ஆகியன இணைந்து இன்று (13.10.2021) முற்பகல் சி.என். பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்திய “ ஊட்டச்சத்து மூலம் இரத்தசோகை நோயைத் தடுத்தல், கோவிட்-19 தடுப்பூசி, டெங்கு கட்டுப்பாடு, சிறுசேமிப்பு, தூய்மை இந்தியா இயக்கம் & இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு அமுதப் பெருவிழா ” ஆகியன குறித்த விழிப்புணர்வு முகாமில் சிறப்புரை ஆற்றியபோது திரு. அதியமான் கவியரசு இவ்வாறு தெரிவித்தார்.


மாணவர்களும் மாணவிகளும் தங்களைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு ஒவ்வொருவரின் பங்கேற்பும் முக்கியம். கொரோனா காலகட்டத்தில் பல்வேறு துறையினரின் செயல்பாடுகள் பாராட்டத் தக்கவையாக இருந்தன. அதிலும் தூய்மைப் பணியாளர்களின் பணி தொற்றுக் காலத்தில் பெரும் சேவையாக இருந்தது. அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்று திரு. அதியமான் கவியரசு மேலும் தெரிவித்தார்.


ஊராட்சி மன்றத் தலைவர் திருமிகு வே.மங்களம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் திரு.சீ.முருகன் தலைமை வகித்தார். அஞ்சல் துறை பல்வேறுவிதமான சேமிப்பு மற்றும் காப்புறுதி திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. பெண் குழந்தைகளைக் காப்போம்-பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின்கீழ் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அஞ்சல் துறை பிரபலப்படுத்தி வருகின்றது.  ஒவ்வொருவரும் தங்களது வருமானத்துக்கும் எதிர்காலத் தேவைக்கும் ஏற்ப ஏதாவது ஒரு திட்டத்தில் சேரலாம் என்று திரு. முருகன் தெரிவித்தார்.

மாவட்ட மலேரியா அலுவலர் திரு.ரா.கஜபதி சிறப்புரை ஆற்றினார். டெங்கு உட்பட கொசுவால் பரவும் நோய்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதில் பொது மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.  இந்த மழைக் காலத்தில் வீடுகளில் எந்த வகையிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  எந்த காய்ச்சல் என்றாலும் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என்று திரு.ரா.கஜபதி கேட்டுக் கொண்டார்.

திருவந்திபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் மு.அமிர்தாதேவி கர்ப்பிணிப் பெண்களும் பாலூட்டும் தாய்மார்களும் கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள் குறித்து உரையாற்றினார்.

குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமிகு ஆ.கோமதி, பள்ளித் தலைமையாசிரியை திருமிகு பெ.அமுதா, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் திரு.ஆர்.முத்துக்கிருஷ்ணன் ஆகியோரும் உரையாற்றினர். 

அஞ்சல் துறை மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் அமைத்திருந்த கண்காட்சி அரங்குகளை வருவாய் கோட்டாட்சியர் திரு.அதியமான் கவியரசு திறந்து வைத்துப் பார்வையிட்டார். ஆரோக்கியக் குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் திரு.அதியமான் கவியரசு பரிசுகள் வழங்கினார்.  பஞ்சாயத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் திரு.அதியமான் கவியரசு கைத்தறி துண்டு அளித்து கெளரவப்படுத்தினார். உலக கைகழுவும் தினத்தையொட்டி முறையாக கை கழுவுதல் எப்படி என்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது அமுதப் பெருவிழா பேக்கட் அட்டையும் அதற்கான வாசகங்கள் அச்சிட்ட துணிப் பைகளும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன்.

முன்னதாக மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.  நிறைவில் கள விளம்பர உதவியாளர் திரு மு. தியாகராஜன் நன்றி கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...