முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கட்டுச்சோறு விற்பவனின் கையறு நிலை. புதிதாய் வந்த தமிழனின் தூக்குச்சட்டி

கட்டுச்சோறு விற்பவனின் கையறு நிலை. புதிதாய் வந்த தமிழனின் தூக்குச்சட்டி .


வழிநடை உணவு - இதனைத் தான் கட்டுச்சோறு என்போம் 1980 வரை இந்த முறை மட்டுமே 2000 ஆண்டு பிறந்த பிறகு தமிழகத்து மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் மாற்றம் சிலருக்கு நகரங்களில் வாழக் குடிபெயர்ந்த நிலையில் ஆங்கில  மற்றும் சைனர் உணவுப் பழக்கம் ஒட்டிக் கொண்டு விட்டது சொமோடோ போல வீடுதேடி உணவுகள் வந்தது அதனால் காணாமல் போனது தமிழகத்தின் தூக்குச்சட்டி அதை இன்றைய இளையோர் சமுதாயம் அசிங்கமானதென ஒதுக்கியது தான்  விந்தை !புதுமையான கட்டுச்சோறு விற்பனை செய்யும் நிறுவனங்கள் வந்த பிறகு தமிழ் மொழி உள்ளிட்ட உணவுக் கலாச்சாரமும் மாறியது. தற்போதுள்ள நிலையில் நமது மொழியை உதாசீனம் செய்யும் நிலைக்கு வந்தது. ஒரு பக்கம் தற்சார்பு சூழலியல் பன்னாட்டு நிறுவனங்களின் தொழிலாளர் நலனுக்கு எதிராக பேசியே ஆக வேண்டும்.



இன்னொரு பக்கம் சொமாட்டோ, சிவிக்கி என்று அனைத்து வெளிநாட்டுச் சேவைகளையும் யாராவது எதிர்த்து பதிவிட்டால்  அதில் போய் பெருமை பேசும் கூட்டம்.




தமிழ்நாட்டில் அனைத்து வகை கைத்தொழில் சார்ந்த உடலுழைப்பைத் தருவது வட இந்தியர்கள் தான். அவர்கள் முதலாளி வாடிக்கையாளர்கள் இந்தியில் பேசித் தான் அவர்களின் காலம் ஒடுகிறது. இது நடைமுறை.

அவர்களும் தமிழ் கற்று வேலை செய்யத் துவங்கி விட்டார்கள்.

"பாய் தோ பானிப் பூரி" ன்னு கேட்கற பயலுங்க தான் வடகத்தியானை விரட்டியடிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

நாட்டுப்பற்று, மரபு மாறாமல் வாழ்க்கை, இயற்கை மீதான அக்கறை என்பது வாழ்வியல். முகநூலில் புழங்கிப் பெருமை பேசுவதல்ல. என்பது உணராத நிலையில்



நடைமுறை எதார்த்தங்கள் என்பதையும், சமூக ஊடக தன் முனைப்பு, தன் விளம்பர பிழைப்புவாதம் என்பதும் நேர் எதிர்த் துருவங்களாகும். 

சொமாட்டோ செயலியை பதிவிறக்கம் செய்யும் போது யாருக்கும் விரல்கள் நடுங்கவில்லை என்றால் !அவர்கள் பேசும் மனிதம் என்பது என்ன வகையானது ? என்று அவர்களிடமே விட்டு விடலாம். 


மேலும் வேலை இல்லாமலிருந்த அரைகுறையாக படித்த வேலையற்ற  பலருக்கு எடுப்புச் சாப்பாடு வழங்கும் வேலை தருகிறது சொமோட்டோ எனும் வாதம் இனி என்ன ஆகும்? மொழிக்கலாச்சாரமா பிழைப்பு வாதமா ? உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோவில் (Zomato) தமிழகத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவர் உணவு ஆர்டர் செய்த பிரச்சினை ஏற்பட்டதும் வாடிக்கையாளர் சேவை முகவரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதற்கு அந்த வாடிக்கையாளர் சேவை முகவரோ, “ஹிந்தி நம் தேசிய மொழி. நம் தேசிய மொழியை கொஞ்சமாவது கற்றுக்கொள்வது நல்லது” என்று கூறியுள்ளார்.

இதை சமூக வலைதளமான ட்விட்டரில் பகிர்ந்தார் விகாஷ். தமிழகத்தில் தொழில் செய்யும் சொமாட்டோ நிறுவனம் தமிழ் தெரிந்த ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும், இந்தி நம் நாட்டின் தேசிய மொழி இல்லை எனவும் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்தன.


மேலும், சொமாட்டோ நிறுவனத்தை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி Reject Zomato என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகிற நிலையில், இந்த விவகாரம் குறித்து சொமாட்டோ நிறுவனம் விளக்கமளித்து மன்னிப்பும் கேட்டுள்ளது குறித்து சொமாட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணக்கம் தமிழ்நாடு! எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம். பணிநீக்கம் என்பது சரியான நெறிமுறையென நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கெதிராக கருத்தைப் பகிரக்கூடாது என தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம். இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள், மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை.

ஒரு நிறுவனமாக நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கெனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்துதல் முயற்சிகளை உள்ளுர்மயமாக்கியுள்ளோம். மேலும் கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழ் கால் செண்ட்டர் மற்றும் சர்வீஸ் செண்ட்டரை உருவாக்கும் பணியிலுள்ளோம். ’சோத்துக்கு ஆர்டர இந்தியில போடு, அதுதாண்டா தேசியமொழி; தமிழ் தெரியாது போடா’ ன்னு அதிகாரமாஙச் சொல்கிறான் சொமோட்டாக்காரன்…’இனிமேல் சோத்துக்கு ஆர்டர  உங்கிட்ட போடமாட்டோம்’ னு சொமோட்டோ ‘ஆப் பை, நிறைய மக்கள் அன் -இன்ஸ்ட்டால் செய்துட்டாங்க…

வருமானம் போச்சேன்னு, பதறிப்போன சொமோட்டோ’உரிமையாளர்கள்;

’அந்தப் பணியாளை நீக்கிட்டோம்' என தரையில்

படுத்தே விட்டார்கள். இனிமேல், ”எண்பது சதவிகிதம் ‘ஆஃபர்’ முறையில் சொமோட்டோ சோறு போடறோம்” னு அறிவிக்கற லெவல்ல நிலைமை போகிறது..

’ஆப்' பை, அன் -இன்ஸ்ட்டால் செய்த மக்கள்  மறுபடியும் இன்ஸ்ட்டால் பண்ணுவாங்களா ? இல்லை புதுசா முளைத்து வந்த தூக்குச்சட்டிக்கு மாறுவார்களா என்பதை காலம் முடிவு செய்யும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...