முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கட்டுச்சோறு விற்பவனின் கையறு நிலை. புதிதாய் வந்த தமிழனின் தூக்குச்சட்டி

கட்டுச்சோறு விற்பவனின் கையறு நிலை. புதிதாய் வந்த தமிழனின் தூக்குச்சட்டி .


வழிநடை உணவு - இதனைத் தான் கட்டுச்சோறு என்போம் 1980 வரை இந்த முறை மட்டுமே 2000 ஆண்டு பிறந்த பிறகு தமிழகத்து மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் மாற்றம் சிலருக்கு நகரங்களில் வாழக் குடிபெயர்ந்த நிலையில் ஆங்கில  மற்றும் சைனர் உணவுப் பழக்கம் ஒட்டிக் கொண்டு விட்டது சொமோடோ போல வீடுதேடி உணவுகள் வந்தது அதனால் காணாமல் போனது தமிழகத்தின் தூக்குச்சட்டி அதை இன்றைய இளையோர் சமுதாயம் அசிங்கமானதென ஒதுக்கியது தான்  விந்தை !புதுமையான கட்டுச்சோறு விற்பனை செய்யும் நிறுவனங்கள் வந்த பிறகு தமிழ் மொழி உள்ளிட்ட உணவுக் கலாச்சாரமும் மாறியது. தற்போதுள்ள நிலையில் நமது மொழியை உதாசீனம் செய்யும் நிலைக்கு வந்தது. ஒரு பக்கம் தற்சார்பு சூழலியல் பன்னாட்டு நிறுவனங்களின் தொழிலாளர் நலனுக்கு எதிராக பேசியே ஆக வேண்டும்.



இன்னொரு பக்கம் சொமாட்டோ, சிவிக்கி என்று அனைத்து வெளிநாட்டுச் சேவைகளையும் யாராவது எதிர்த்து பதிவிட்டால்  அதில் போய் பெருமை பேசும் கூட்டம்.




தமிழ்நாட்டில் அனைத்து வகை கைத்தொழில் சார்ந்த உடலுழைப்பைத் தருவது வட இந்தியர்கள் தான். அவர்கள் முதலாளி வாடிக்கையாளர்கள் இந்தியில் பேசித் தான் அவர்களின் காலம் ஒடுகிறது. இது நடைமுறை.

அவர்களும் தமிழ் கற்று வேலை செய்யத் துவங்கி விட்டார்கள்.

"பாய் தோ பானிப் பூரி" ன்னு கேட்கற பயலுங்க தான் வடகத்தியானை விரட்டியடிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

நாட்டுப்பற்று, மரபு மாறாமல் வாழ்க்கை, இயற்கை மீதான அக்கறை என்பது வாழ்வியல். முகநூலில் புழங்கிப் பெருமை பேசுவதல்ல. என்பது உணராத நிலையில்



நடைமுறை எதார்த்தங்கள் என்பதையும், சமூக ஊடக தன் முனைப்பு, தன் விளம்பர பிழைப்புவாதம் என்பதும் நேர் எதிர்த் துருவங்களாகும். 

சொமாட்டோ செயலியை பதிவிறக்கம் செய்யும் போது யாருக்கும் விரல்கள் நடுங்கவில்லை என்றால் !அவர்கள் பேசும் மனிதம் என்பது என்ன வகையானது ? என்று அவர்களிடமே விட்டு விடலாம். 


மேலும் வேலை இல்லாமலிருந்த அரைகுறையாக படித்த வேலையற்ற  பலருக்கு எடுப்புச் சாப்பாடு வழங்கும் வேலை தருகிறது சொமோட்டோ எனும் வாதம் இனி என்ன ஆகும்? மொழிக்கலாச்சாரமா பிழைப்பு வாதமா ? உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோவில் (Zomato) தமிழகத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவர் உணவு ஆர்டர் செய்த பிரச்சினை ஏற்பட்டதும் வாடிக்கையாளர் சேவை முகவரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதற்கு அந்த வாடிக்கையாளர் சேவை முகவரோ, “ஹிந்தி நம் தேசிய மொழி. நம் தேசிய மொழியை கொஞ்சமாவது கற்றுக்கொள்வது நல்லது” என்று கூறியுள்ளார்.

இதை சமூக வலைதளமான ட்விட்டரில் பகிர்ந்தார் விகாஷ். தமிழகத்தில் தொழில் செய்யும் சொமாட்டோ நிறுவனம் தமிழ் தெரிந்த ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும், இந்தி நம் நாட்டின் தேசிய மொழி இல்லை எனவும் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்தன.


மேலும், சொமாட்டோ நிறுவனத்தை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி Reject Zomato என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகிற நிலையில், இந்த விவகாரம் குறித்து சொமாட்டோ நிறுவனம் விளக்கமளித்து மன்னிப்பும் கேட்டுள்ளது குறித்து சொமாட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணக்கம் தமிழ்நாடு! எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம். பணிநீக்கம் என்பது சரியான நெறிமுறையென நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கெதிராக கருத்தைப் பகிரக்கூடாது என தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம். இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள், மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை.

ஒரு நிறுவனமாக நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கெனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்துதல் முயற்சிகளை உள்ளுர்மயமாக்கியுள்ளோம். மேலும் கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழ் கால் செண்ட்டர் மற்றும் சர்வீஸ் செண்ட்டரை உருவாக்கும் பணியிலுள்ளோம். ’சோத்துக்கு ஆர்டர இந்தியில போடு, அதுதாண்டா தேசியமொழி; தமிழ் தெரியாது போடா’ ன்னு அதிகாரமாஙச் சொல்கிறான் சொமோட்டாக்காரன்…’இனிமேல் சோத்துக்கு ஆர்டர  உங்கிட்ட போடமாட்டோம்’ னு சொமோட்டோ ‘ஆப் பை, நிறைய மக்கள் அன் -இன்ஸ்ட்டால் செய்துட்டாங்க…

வருமானம் போச்சேன்னு, பதறிப்போன சொமோட்டோ’உரிமையாளர்கள்;

’அந்தப் பணியாளை நீக்கிட்டோம்' என தரையில்

படுத்தே விட்டார்கள். இனிமேல், ”எண்பது சதவிகிதம் ‘ஆஃபர்’ முறையில் சொமோட்டோ சோறு போடறோம்” னு அறிவிக்கற லெவல்ல நிலைமை போகிறது..

’ஆப்' பை, அன் -இன்ஸ்ட்டால் செய்த மக்கள்  மறுபடியும் இன்ஸ்ட்டால் பண்ணுவாங்களா ? இல்லை புதுசா முளைத்து வந்த தூக்குச்சட்டிக்கு மாறுவார்களா என்பதை காலம் முடிவு செய்யும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த