முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிராமப்புறங்களில் நவீன புற்றுநோய் சிகிச்சை வசதிகளை வழங்க தனியார் துறையினர் அரசுடன் கைக்கோர்க்க வேண்டும்: குடியரசு துணைத்தலைவர்

குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்


கிராமப்புறங்களில் நவீன புற்றுநோய் சிகிச்சை வசதிகளை வழங்க தனியார் துறையினர் அரசுடன் கைக்கோர்க்க வேண்டும்: குடியரசு துணைத்தலைவர்

கிராமப்புறங்களில் நவீன புற்றுநோய் சிகிச்சை வசதிகளை வழங்குவதற்கு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட தனியார் துறைக்கு குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் எட்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு துணைத்தலைவர், இன்று காலை கவுஹாத்தி வந்தார். ஆளுநர், முதல்வர் மற்றும் இதர பிரமுகர்கள் அவரை வரவேற்றனர்.


மாநில புற்றுநோய் மையத்தில் பெட்-எம்ஆர்ஐ பிரிவை துவக்கி வைத்து பேசிய அவர், மிகவும் துல்லியமான நோயறிதலுக்கு இது பெரிதும் உதவுவதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளின் மீது கதிர்வீச்சின் வெளிப்பாட்டையும் குறைக்கும் என்று கூறினார். டைம்-ஆஃப்-ஃப்ளைட் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த இயந்திரம் இந்தியாவில் நான்காவது ஆகும்.

பகிரப்பட்ட புற்றுநோய் பராமரிப்பு மாதிரி எனப்படும் ஸ்டாப் டவுன் முறையை குறிப்பிட்ட அவர், டாடா அறக்கட்டளைகளுடன் இணைந்து அசாம் அரசு இதை செயல்படுத்த முனைகிறது என்றார். புற்றுநோய் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் பயனுள்ள சிகிச்சையை வழங்க இம்முறையை பின்பற்றுமாறு மற்ற மாநிலங்களை அவர் அறிவுறுத்தினார்.

பகிரப்பட்ட புற்றுநோய் பராமரிப்பு முறையின் கீழ், எல் 1 என்றழைக்கப்படும் ஒரு மேல்நோக்கு பரிந்துரை மையம், எல் 2 எனப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் இணைக்கப்பட்ட விரிவான புற்றுநோய் மருத்துவமனைகள் மற்றும் எல் 3 எனப்படும் மாவட்ட மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள கதிர்வீச்சு வசதியுடன் கூடிய நோயறிதல் மற்றும் சிகிச்சை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புற்று நோயாளிகளின் சிகிச்சையை கையாளும் ஒரு தலைமை மருத்துவமனைக்குப் பதிலாக, தரமான மற்றும் மலிவு விலையில் நோயாளிகளின் வீடுகளுக்கு அருகில் சிகிச்சை வழங்கும் புற்றுநோய் மையங்களை உருவாக்கும் நோக்கம் குறித்து பேசிய திரு நாயுடு, அவை உயர்தர சிகிச்சையை நோயாளிகளின் வீடுகளுக்கு அருகிலேயே வழங்கி, அவர்களின் செலவுகளைக் குறைக்கும் என்றார். 

வலி நிவாரண சிகிச்சை என்பது அரசாங்கங்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் அதிக கவனம் தேவைப்படும் ஒரு முக்கியமான பகுதி என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார். வலி நிவாரண சிகிச்சை என்பது நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயல்கிறது, என்று அவர் மேலும் கூறினார்.

நோய்களைத் தடுப்பதன் அவசியத்தை குழந்தைகளுக்கு உணர்த்துவதற்காக பள்ளி பாடத்திட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்த பாடங்களை அனைத்து மாநில அரசுகளும் சேர்க்க வேண்டும் என்று திரு நாயுடு வலியுறுத்தினார். 'வாழ்க்கை முறை நோய்கள்' குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய பிரச்சாரத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

கொவிட் -19 தொற்றுநோய் முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது, அவற்றில் முதன்மையானது நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதும் ஆகும். ஒழுக்கமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், உடபயிற்சிகளை மேற்கொள்வது, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை தவிர்ப்பது ஒரு நபரின் ஒட்டுமொத்த நல்வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். "உண்மையில், புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களைத் தடுப்பதில் அவை முக்கியமானவை" என்று குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார்.

கொவிட் காலத்தில் வழங்கிய சேவைகளுக்கு அசாம் அரசு மற்றும் மாநிலத்தின் மருத்துவ சமுதாயத்தை அவர் பாராட்டினார். மேலும், மருத்துவ சேவையை சாதாரண மக்களுக்கு அணுகக்கூடியதாகவும் மலிவு விலையில் கிடைக்கச் செய்யவும் அவர் அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்ற பிரதமரின் அறைகூவலை அவர் சுட்டிக்காட்டினார். 

பின்னர், அறிவியல், இலக்கியம், கல்வி, விளையாட்டு, இசை மற்றும் கலைத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய அசாமை சேர்ந்த 20 முக்கிய நபர்களுடன் குடியரசு துணைத்தலைவர் உரையாடினார்.

சாதனையாளர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி, கவனம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டிய குடியரசு துணைத்தலைவர், தமது துறைகளில் சிறந்து விளங்கிய உண்மையான கர்மயோகிகள் என்று அவர்களை பாராட்டினார். "மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக நீங்கள் மாறிவிட்டீர்கள், இளைஞர்கள் சிறந்ததை அடைய உங்கள் வாழ்க்கை ஊக்குவிக்கிறது" என்று அவர் அவர்களிடம் கூறினார்.

இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை என்று கூறிய திரு நாயுடு, குரு-சிஷ்ய பாரம்பரியத்தின் உண்மையான உணர்வில் தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டுமாறு சாதனையாளர்களை கேட்டுக்கொண்டார். பிரம்மாபுத்ராவில் உள்ள பாரம்பரிய மையத்தில் முன்பு தாம் கண்ட ‘பிஹு அடோரோனி’ என்ற கலாச்சார நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிடுகையில், அசாமின் அழகிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தம்மை ஈர்ப்பதாக திரு நாயுடு  கூறினார்.

அசாம் ஆளுநர் பேராசிரியர் ஜெகதீஷ் முகி, அசாம் முதல்வர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், திரு கேஷாப் மஹந்தா, அசாம் தலைமை செயலாளர் திரு ஜிஷ்ணு பருவா மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த