முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிராமப்புறங்களில் நவீன புற்றுநோய் சிகிச்சை வசதிகளை வழங்க தனியார் துறையினர் அரசுடன் கைக்கோர்க்க வேண்டும்: குடியரசு துணைத்தலைவர்

குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்


கிராமப்புறங்களில் நவீன புற்றுநோய் சிகிச்சை வசதிகளை வழங்க தனியார் துறையினர் அரசுடன் கைக்கோர்க்க வேண்டும்: குடியரசு துணைத்தலைவர்

கிராமப்புறங்களில் நவீன புற்றுநோய் சிகிச்சை வசதிகளை வழங்குவதற்கு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட தனியார் துறைக்கு குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் எட்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு துணைத்தலைவர், இன்று காலை கவுஹாத்தி வந்தார். ஆளுநர், முதல்வர் மற்றும் இதர பிரமுகர்கள் அவரை வரவேற்றனர்.


மாநில புற்றுநோய் மையத்தில் பெட்-எம்ஆர்ஐ பிரிவை துவக்கி வைத்து பேசிய அவர், மிகவும் துல்லியமான நோயறிதலுக்கு இது பெரிதும் உதவுவதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளின் மீது கதிர்வீச்சின் வெளிப்பாட்டையும் குறைக்கும் என்று கூறினார். டைம்-ஆஃப்-ஃப்ளைட் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த இயந்திரம் இந்தியாவில் நான்காவது ஆகும்.

பகிரப்பட்ட புற்றுநோய் பராமரிப்பு மாதிரி எனப்படும் ஸ்டாப் டவுன் முறையை குறிப்பிட்ட அவர், டாடா அறக்கட்டளைகளுடன் இணைந்து அசாம் அரசு இதை செயல்படுத்த முனைகிறது என்றார். புற்றுநோய் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் பயனுள்ள சிகிச்சையை வழங்க இம்முறையை பின்பற்றுமாறு மற்ற மாநிலங்களை அவர் அறிவுறுத்தினார்.

பகிரப்பட்ட புற்றுநோய் பராமரிப்பு முறையின் கீழ், எல் 1 என்றழைக்கப்படும் ஒரு மேல்நோக்கு பரிந்துரை மையம், எல் 2 எனப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் இணைக்கப்பட்ட விரிவான புற்றுநோய் மருத்துவமனைகள் மற்றும் எல் 3 எனப்படும் மாவட்ட மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள கதிர்வீச்சு வசதியுடன் கூடிய நோயறிதல் மற்றும் சிகிச்சை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புற்று நோயாளிகளின் சிகிச்சையை கையாளும் ஒரு தலைமை மருத்துவமனைக்குப் பதிலாக, தரமான மற்றும் மலிவு விலையில் நோயாளிகளின் வீடுகளுக்கு அருகில் சிகிச்சை வழங்கும் புற்றுநோய் மையங்களை உருவாக்கும் நோக்கம் குறித்து பேசிய திரு நாயுடு, அவை உயர்தர சிகிச்சையை நோயாளிகளின் வீடுகளுக்கு அருகிலேயே வழங்கி, அவர்களின் செலவுகளைக் குறைக்கும் என்றார். 

வலி நிவாரண சிகிச்சை என்பது அரசாங்கங்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் அதிக கவனம் தேவைப்படும் ஒரு முக்கியமான பகுதி என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார். வலி நிவாரண சிகிச்சை என்பது நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயல்கிறது, என்று அவர் மேலும் கூறினார்.

நோய்களைத் தடுப்பதன் அவசியத்தை குழந்தைகளுக்கு உணர்த்துவதற்காக பள்ளி பாடத்திட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்த பாடங்களை அனைத்து மாநில அரசுகளும் சேர்க்க வேண்டும் என்று திரு நாயுடு வலியுறுத்தினார். 'வாழ்க்கை முறை நோய்கள்' குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய பிரச்சாரத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

கொவிட் -19 தொற்றுநோய் முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது, அவற்றில் முதன்மையானது நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதும் ஆகும். ஒழுக்கமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், உடபயிற்சிகளை மேற்கொள்வது, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை தவிர்ப்பது ஒரு நபரின் ஒட்டுமொத்த நல்வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். "உண்மையில், புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களைத் தடுப்பதில் அவை முக்கியமானவை" என்று குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார்.

கொவிட் காலத்தில் வழங்கிய சேவைகளுக்கு அசாம் அரசு மற்றும் மாநிலத்தின் மருத்துவ சமுதாயத்தை அவர் பாராட்டினார். மேலும், மருத்துவ சேவையை சாதாரண மக்களுக்கு அணுகக்கூடியதாகவும் மலிவு விலையில் கிடைக்கச் செய்யவும் அவர் அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்ற பிரதமரின் அறைகூவலை அவர் சுட்டிக்காட்டினார். 

பின்னர், அறிவியல், இலக்கியம், கல்வி, விளையாட்டு, இசை மற்றும் கலைத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய அசாமை சேர்ந்த 20 முக்கிய நபர்களுடன் குடியரசு துணைத்தலைவர் உரையாடினார்.

சாதனையாளர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி, கவனம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டிய குடியரசு துணைத்தலைவர், தமது துறைகளில் சிறந்து விளங்கிய உண்மையான கர்மயோகிகள் என்று அவர்களை பாராட்டினார். "மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக நீங்கள் மாறிவிட்டீர்கள், இளைஞர்கள் சிறந்ததை அடைய உங்கள் வாழ்க்கை ஊக்குவிக்கிறது" என்று அவர் அவர்களிடம் கூறினார்.

இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை என்று கூறிய திரு நாயுடு, குரு-சிஷ்ய பாரம்பரியத்தின் உண்மையான உணர்வில் தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டுமாறு சாதனையாளர்களை கேட்டுக்கொண்டார். பிரம்மாபுத்ராவில் உள்ள பாரம்பரிய மையத்தில் முன்பு தாம் கண்ட ‘பிஹு அடோரோனி’ என்ற கலாச்சார நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிடுகையில், அசாமின் அழகிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தம்மை ஈர்ப்பதாக திரு நாயுடு  கூறினார்.

அசாம் ஆளுநர் பேராசிரியர் ஜெகதீஷ் முகி, அசாம் முதல்வர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், திரு கேஷாப் மஹந்தா, அசாம் தலைமை செயலாளர் திரு ஜிஷ்ணு பருவா மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...