முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாட்டில் இருவரில் ஒருவருக்கு இரத்த சோகை உள்ளது காஞ்சிபுரம்மாவட்டஆட்சியர்டாக்டர்ஆர்த்தி தகவல்.

இரத்த சோகை நோய் நமக்கு பெரும் சவாலாக உள்ளது நாட்டில் இருவரில் ஒருவருக்கு இரத்த சோகை உள்ளது காஞ்சிபுரம்மாவட்டஆட்சியர்டாக்டர்ஆர்த்தி தகவல்.


நாட்டில் பல நோய்களை நாம் முற்றாக அழித்துள்ளோம். குறிப்பாக போலியோ என்ற இளம்பிள்ளை வாதநோயை ஒழித்துள்ளோம்.  ஆனால் நமக்கு இரத்தசோகை நோய் பெரும் சவாலாக உள்ளது. நாட்டில் 50 சதவீதம் பேருக்கு அதாவது இருவரில் ஒருவருக்கு இரத்தசோகை உள்ளது. இது ஊட்டச்சத்து தொடர்புடைய ஒரு குறைபாடாகும். இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். மாதவிடாய் பிரச்சனைகளால்தான் இந்த நிலை ஏற்படுகின்றது. எனவே வளர்இளம் பெண்களும் கர்ப்பிணிகளும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். முருங்கைக்கீரை உள்ளிட்ட அனைத்து கீரைகள், பேரிச்சம்பழம், நவதானியங்கள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக நாம் அனைவரும் இணைந்து மாற்ற வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டார்.


புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டமும் இணைந்து இன்று(2810.2021) முற்பகல் உத்திரமேரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடத்திய ஊட்டச்சத்து &இரத்தசோகை நோயைக் கட்டுப்படுத்தல், கொரோனா தடுப்பூசி இரண்டாம் தவணையின் முக்கியத்துவம், இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு அமுதப் பெருவிழா மற்றும் தேசிய ஒற்றுமை தினம் ஆகியவை குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாமில் உரையாற்றியபோது மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சிக்கு  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் திருமிகு க.சற்குணா தலைமை வகித்தார்.

உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு க.சுந்தர்  துவக்கவுரை ஆற்றினார். கொரோனா பெருந்தொற்று முடக்கத்தால் ஒன்றரை ஆண்டுகளாக மாணவ மாணவிகளைச் சந்திக்க முடியாமல் இருந்தது. இன்று இந்த நிகழ்ச்சி மூலம் மாணவிகளைச் சந்திப்பதில் மகிழ்ச்சி  அடைகின்றேன். தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தினசரி கொரோனா தொற்றை குறைத்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலமே மூன்றாம் அலையைத் தடுக்க முடியும்.  ஆனால் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களுக்கு தயக்கம் உள்ளது.  புதிதாகப் பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து 100 சதவீத மக்களும்  தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என்ற நிலையை ஏற்படுத்துவார்கள். 75 ஆண்டுகால சுதந்திரத்தில் நாட்டில் பெண்களின் நிலை வெகுவாக முன்னேறியுள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது என்று சட்டமன்ற உறுப்பினர் திரு க.சுந்தர்  தெரிவித்தார்.


காஞ்சிபுரம் மாவட்ட  சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி விளக்கவுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் செய்தி &மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கணேசன், உதவி செய்தி &மக்கள் தொடர்பு அலுவலர் திரு. ஏ.கே.பெருமாள் உடையார், வேலூர் ஸ்ரீபுற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையத்தின் வைத்தியர் ப.ராஜா, வைத்தியர் மணிகண்டன் மற்றும் சென்னை அருள் ஹெல்த்கேர் டாக்டர் எஸ்.அருளானந்த குமார், பள்ளித் தலைமையாசிரியை திருமிகு எம்.பி.இராஜீவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அங்கன்வாடிப் பணியாளர்கள் சார்பில் ஊட்டச்சத்து கண்காட்சியும்  வேலூர் ஸ்ரீபுற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையத்தின் சார்பில் மருத்துவ மூலிகைகள் கண்காட்சியும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த மையத்தின் சார்பில் சிறப்பு விருந்தினர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் மூலிகை முக கவசங்கள் வழங்கப்பட்டன. 


பள்ளி மாணவியருக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும்  பரிசுகளையும் , மூலிகை செடிகளையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தரும் இணைந்து வழங்கினர்.

நிறைவில் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குனர் திரு.ஜெ.காமராஜ் அங்கன்வாடிப் பணியாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்

முன்னதாக மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...