முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாட்டில் இருவரில் ஒருவருக்கு இரத்த சோகை உள்ளது காஞ்சிபுரம்மாவட்டஆட்சியர்டாக்டர்ஆர்த்தி தகவல்.

இரத்த சோகை நோய் நமக்கு பெரும் சவாலாக உள்ளது நாட்டில் இருவரில் ஒருவருக்கு இரத்த சோகை உள்ளது காஞ்சிபுரம்மாவட்டஆட்சியர்டாக்டர்ஆர்த்தி தகவல்.


நாட்டில் பல நோய்களை நாம் முற்றாக அழித்துள்ளோம். குறிப்பாக போலியோ என்ற இளம்பிள்ளை வாதநோயை ஒழித்துள்ளோம்.  ஆனால் நமக்கு இரத்தசோகை நோய் பெரும் சவாலாக உள்ளது. நாட்டில் 50 சதவீதம் பேருக்கு அதாவது இருவரில் ஒருவருக்கு இரத்தசோகை உள்ளது. இது ஊட்டச்சத்து தொடர்புடைய ஒரு குறைபாடாகும். இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். மாதவிடாய் பிரச்சனைகளால்தான் இந்த நிலை ஏற்படுகின்றது. எனவே வளர்இளம் பெண்களும் கர்ப்பிணிகளும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். முருங்கைக்கீரை உள்ளிட்ட அனைத்து கீரைகள், பேரிச்சம்பழம், நவதானியங்கள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக நாம் அனைவரும் இணைந்து மாற்ற வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டார்.


புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டமும் இணைந்து இன்று(2810.2021) முற்பகல் உத்திரமேரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடத்திய ஊட்டச்சத்து &இரத்தசோகை நோயைக் கட்டுப்படுத்தல், கொரோனா தடுப்பூசி இரண்டாம் தவணையின் முக்கியத்துவம், இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு அமுதப் பெருவிழா மற்றும் தேசிய ஒற்றுமை தினம் ஆகியவை குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாமில் உரையாற்றியபோது மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சிக்கு  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் திருமிகு க.சற்குணா தலைமை வகித்தார்.

உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு க.சுந்தர்  துவக்கவுரை ஆற்றினார். கொரோனா பெருந்தொற்று முடக்கத்தால் ஒன்றரை ஆண்டுகளாக மாணவ மாணவிகளைச் சந்திக்க முடியாமல் இருந்தது. இன்று இந்த நிகழ்ச்சி மூலம் மாணவிகளைச் சந்திப்பதில் மகிழ்ச்சி  அடைகின்றேன். தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தினசரி கொரோனா தொற்றை குறைத்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலமே மூன்றாம் அலையைத் தடுக்க முடியும்.  ஆனால் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களுக்கு தயக்கம் உள்ளது.  புதிதாகப் பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து 100 சதவீத மக்களும்  தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என்ற நிலையை ஏற்படுத்துவார்கள். 75 ஆண்டுகால சுதந்திரத்தில் நாட்டில் பெண்களின் நிலை வெகுவாக முன்னேறியுள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது என்று சட்டமன்ற உறுப்பினர் திரு க.சுந்தர்  தெரிவித்தார்.


காஞ்சிபுரம் மாவட்ட  சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி விளக்கவுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் செய்தி &மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கணேசன், உதவி செய்தி &மக்கள் தொடர்பு அலுவலர் திரு. ஏ.கே.பெருமாள் உடையார், வேலூர் ஸ்ரீபுற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையத்தின் வைத்தியர் ப.ராஜா, வைத்தியர் மணிகண்டன் மற்றும் சென்னை அருள் ஹெல்த்கேர் டாக்டர் எஸ்.அருளானந்த குமார், பள்ளித் தலைமையாசிரியை திருமிகு எம்.பி.இராஜீவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அங்கன்வாடிப் பணியாளர்கள் சார்பில் ஊட்டச்சத்து கண்காட்சியும்  வேலூர் ஸ்ரீபுற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையத்தின் சார்பில் மருத்துவ மூலிகைகள் கண்காட்சியும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த மையத்தின் சார்பில் சிறப்பு விருந்தினர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் மூலிகை முக கவசங்கள் வழங்கப்பட்டன. 


பள்ளி மாணவியருக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும்  பரிசுகளையும் , மூலிகை செடிகளையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தரும் இணைந்து வழங்கினர்.

நிறைவில் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குனர் திரு.ஜெ.காமராஜ் அங்கன்வாடிப் பணியாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்

முன்னதாக மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த