முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து உத்தராகண்ட் மாநிலத்தின் நிலைமையை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் வான்வழியாக ஆய்வு செய்தார்

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து உத்தராகண்ட் மாநிலத்தின் நிலைமையை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா வான்வழியாக ஆய்வு செய்தார்


மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தேவ்பிரயாக், ராம்நகர், ராம்கர், கவுலாப்பர் மற்றும் ருத்ராபூர் உள்ளிட்ட பகுதிகளை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா வான்வழியாக இன்று ஆய்வு செய்தார்.

உத்தராகண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மீத் சிங், முதல்வர் திரு புஷ்கர் சிங் தாமி, உத்தராகண்ட் பேரிடர் மேலாண்மை அமைச்சர் திரு டி எஸ் ராவத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு அனில் பலுனி உள்ளிட்டோர் உடனிருந்தனர். வான்வழி ஆய்வுக்குப் பிறகு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் உரையாடினார்.


சரியான நேரத்தில் மத்திய அரசின் எச்சரிக்கைகள் உயிர் சேதத்தை குறைக்க உதவியது என்று திரு அமித் ஷா கூறினார். அக்டோபர் 16-ம் தேதி 24 மணி நேரத்திற்கு முன்னதாக மத்திய அரசு எச்சரிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, மாநில பேரிடர் நிவாரணப் படை, தேசிய பேரிடர் நிவாரணப் படை, இந்திய-திபெத் எல்லையோரப் படை, ராணுவம், விமானப்படைக்கு மாநில அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகம் எச்சரிக்கைகள் அனுப்பியதால் பெரும் சேதத்தைத் தடுக்க முடிந்தது என்று அவர் கூறினார். அனைத்து கைபேசி நுகர்வோருக்கும் அவர்களின் மொபைல் போன்களில் முன்கூட்டியே எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன, இதனால் தேவையற்ற இயக்கங்கள் தவிர்க்கப்பட்டு மழை துவங்கும் முன் சார் தாம் யாத்ரீகர்கள் நிறுத்தப்பட்டனர், இதன் காரணமாக சார் தாம் யாத்ரீகர்கள் யாருக்கும் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை மற்றும் யாத்திரை இப்போது தொடங்கப்பட்டுள்ளது


.

தேசிய பேரிடர் நிவாரணப் படை, ராணுவம், இந்திய-திபெத் எல்லையோரப் படை, பேரிடர் நிவாரணப் படை, மாநில குழுக்கள், தீயணைப்புப் படையினர் மழை தொடங்கும் முன் தயாராக நிறுத்தப்பட்டனர். ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் நிவாரணப் படை அணிதிரட்டல் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடியும் அனைவருக்கும் தெரிவித்ததாக திரு அமித் ஷா கூறினார். மத்திய நீர் ஆணையத்திற்கும் நீர்ப்பாசனத் துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிகவும் நன்றாக இருந்தது, இதன் காரணமாக நீர் நிலைகளை நிர்வகிப்பது எளிதாக இருந்தது. மூன்று சாலைகளைத் தவிர, பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து இயக்கம் தொடங்கிவிட்டதாகவும், தேவையான இடங்களில் நிவாரணங்களும் வரத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். நைனிடால், ஹல்ட்வானி மற்றும் அல்மோரா சாலைகளும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளன. ஒரு இடத்தில் ரயில் தண்டவாளங்கள் பலத்த சேதமடைந்துள்ளன மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் தொடங்கியுள்ளன. 60 சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது, மக்கள் சுத்தமானக் குடிநீரைப் பெறத் தொடங்கியுள்ளனர் மற்றும் சுகாதார வசதிகள் பாதிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

3,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர் மற்றும் பதினாறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் முன்னெச்சரிக்கையாக தங்கவைக்கப்பட்டனர் என்று கூறிய அமைச்சர் இதுவரை சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த உயிர் சேதமும் இல்லை என்றார்.

தேசிய பேரிடர் நிவாரணப் படையின் 17 குழுக்கள், மாநில பேரிடர் நிவாரணப் படையின் 60 குழுக்கள், பிஏசி-யின் 15 குழுக்கள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் இன்னும் முழு நடவடிக்கையிலும் மக்களுக்கு உதவுவதிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஓரிரு நாட்களில் நிலைமை இயல்பு நிலைக்கு வந்தவுடன், உள்துறை அமைச்சகத்தின் கணக்கெடுப்புக் குழுக்கள் மாநிலத்திற்கு வந்து சேதத்தை மதிப்பீடு செய்து அதற்கேற்ப உதவி வழங்கப்படும் என்று திரு அமித் ஷா கூறினார்.

மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் மத்திய பங்காக ரூ 749.60 கோடியை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும், இந்த நெருக்கடியான நேரத்தில், இந்திய அரசு உங்களுடன் முழுமையாக உள்ளது என்று உத்தராகண்ட் மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்