முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உத்திரப் பிரதேச லக்கிம்பூர் விவசாயிகள் முன்னெடுப்பு அரசியல் விரைவில் வரும் தேர்தலுக்கான நடவடிக்கையே

விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வில் கார் நசுக்கியும், வன்முறையிலும் எட்டு விவசாயிகளும், ஒரு பத்திரிகையாளரும் உயிர் இழந்த நிலையில் .ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.


 துயரம் நிகழ்ந்த பகுதிக்குச் சென்று மக்களுக்கு ஆறுதல் சொல்வதென்பது அரசியல் கட்சித் தலைவர்களின் அடிப்படைக் உரிமையாகும். ஆனால், ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட  வழிமுறைக்குக் கூட பயந்து  காவல்துறையை ஏவி அர்சியல் கட்சித் தலைவர்களை முடக்கும் கோழைத்தனத்தை உத்திரப் பிரதேச அரசு செய்திருக்கிறதென அங்கு காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கின்றனர்.


போராடத்தை நடத்திய விவசாயிகளின் மீது வாகன விபத்தென திசை திருப்பி சத்தமில்லாமல் முடிக்க திட்டமிடும் உத்திரப் பிரதேச சம்பவம் தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுமையிலும் விவசாயிகளை களம் காண வைத்துவிட்டது! தமிழகத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி போராட்டங்களை வலுவாக முன்னெடுத்தது. லக்கிம்பூரில் காங்கிரஸ் கட்சியின் ராகுல், பிரியங்கா  ஆகியோர்  அஜய் மிஸ்ரா பதவி விலகக் கோரிக்கை வைத்தனர்.



உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கார் மோதியதில் நான்கு விவசாயிகள் உள்பட எட்டு பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர்களான சரண்ஜித் சிங் சன்னி, புதன்கிழமை இரவு சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிலையில்



காவல்துறை உள்ளிட்ட பல்வேறு கெடுபிடி, 144 தடை உத்தரவு என பல்வேறுஈஒஒஒஒ மத்தியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் சிலரை ராகுல் தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேசியதற்கிடையே, லக்கிம்பூர் வன்முறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்கப் போவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் ஏழாம் தேதி தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோஹ்லி அடங்கிய அமர்வு இந்த விவகாரத்தை விசாரிக்குமென்று உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள வழக்குகள் விசாரணை பட்டியலிப்பட்டுள்ளது.


லக்கிம்பூர் வன்முறை - லட்சுமணபுரி அதாவது லக்ணௌ  விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதல்வர் தர்னா

முன்னதாக, நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, உத்தர பிரதேச மாநில துணை முதல்வர் ஆகியோரை கேரோ செய்வதற்காக விவசாயிகள் லக்கிம்பூர் கேரி பகுதியில் திரண்டு சாலையில் வழிமறித்து நின்றவர்கள் மீது பாஜக ஆதரவாளர்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் வாகனங்களை வேகமாக மோதிச் சென்றதாக கூறப்படும் காணொளி வைரலான நிலையில்.

லக்கிம்பூர் சம்பவத்தில் பலியானவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் 

சம்பவத்தில் நான்கு விவசாயிகள், நான்கு பொதுமக்கள் என எட்டு பேர் இறந்ததையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பார்க்க திங்கட்கிழமை அதிகாலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முற்பட்டபோது, அவரை லக்கிம்பூர் கேரியில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சீதாபூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி லக்கிம்பூர் செல்ல அனுமதிக்க மறுத்தனர்



மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி லக்கிம்பூரில் கலவர சூழல் நிலவுவதாகக் கூறி பிரியங்கா காந்தியை சீதாபூரிலுள்ள பிஏசி அரசு விருந்தினர் இல்லத்தில் தடுத்து காவலில் வைத்தனர். வழக்கறிஞர்களைங் கூட சந்திக்க அனுமதிக்காத நிலையில், தன்னை காவல்துறையினர் சட்டவிரோதமாகக் கைது செய்து அடைத்து வைத்துள்ள பிரியங்கா காணொளியை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததனால், உத்தர பிரதேச அரசுக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது நிலையில், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் லக்கிம்பூர் செல்ல லக்னெள விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தபோது, அவரை காவல்துறையினர் அனுமதிக்காததனால் அவர் விமான நிலையத்திலேயே அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார்.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும் லக்கிம்பூர் செல்ல முற்பட்ட போது, அவரையும் அதிகாரிகள் டெல்லியைத் தாண்டிச் செல்ல அனுமதிக்கவில்லை. ராகுல் காந்திக்கும் திங்கட்கிழமை அனுமதி மறுத்தது உத்தர பிரதேச உள்துறை. ஆனால், பிரியங்கா காந்தி காவல்துறை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு 38 மணி நேரத்துக்கும் மேலான நிலையில், லக்கிம்பூரில் கட்டுப்பாடுகள் தொடரும் ராகுல் காந்தி தலைமையில் ஐந்து பேர் கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தர பிரதேச உள்துறை தெரிவித்ததையடுத்து, டெல்லியில் புதன்கிழமை காலை லக்னெள விமான நிலையத்துக்குச் சென்ற ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் ஊடகப்பிரிவுத் தலைவர் ரந்தீப் சூர்ஜிவாலா, கே.சி. வேணுகோபால் ஆகியோர் சென்றனர். மறுபுறம் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெலும் லக்னெள விமான நிலையத்துக்கு வந்தனர்.

ஆனால், ராகுல் காந்தி காவல்துறை வாகனத்தில் மட்டுமே லக்கிம்பூருக்குச் செல்ல வேண்டும் இல்லை என்றால் அனுமதி இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்ததனால், விமான நிலைய வெளிப்புற நடைபாதையிலேயே அமர்ந்தபடி ராகுல் காந்தி தர்னாவில் ஈடுபட்டார்.

ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு ராகுல் காந்தி தம் சொந்த வாகனத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டதையடுத்து லக்னெள விமான நிலையத்திலிருந்து சீதாபூரில் தமது சகோதரியும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியை சந்திக்கப் புறப்பட்டு மாலை 5.45 மணியளவில் அவர் சீதாபூரை அடைந்தபோது அங்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. அங்கு பிரியங்காவை சந்தித்து சில நிமிடங்கள் பேசிய ராகுல், பிறகு அவருடன் சேர்ந்து லக்கிம்பூருக்குப் புறப்பட்டார். வழிநெடுகிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், இரவு 7 மணியைக் கடந்து ராகுல் தலைமையில் சென்றவர்கள்  லக்கிம்பூருக்குள் அனுமதிக்கப்பட்டனர். இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டு 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்த பகுதி முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. எல்லா வீதிகளிலும் காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தது, அங்கிருந்து பகிரப்பட்ட காணொளியொன்றின் மூலம் தெரிந்தது.


லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுள்ள பகுதிகளில் அனுமதிக்கப்படவில்லை. வெளியூரைச் சேர்ந்தவர்கள் அங்கு தங்கியிருக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்தப்பின்னணியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.


விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 10 பேர் உத்தர பிரதேச காவல்துரையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால், அவர்கள் விசாரிக்கப்படவோ கைது நடவடிக்கையோ மேற்கொள்ளப்படவில்லை.

உத்தர பிரதேச மாநிலம் லக்கம்பூரில் விவசாயிகள் உயிரிழப்புக்குக் காரணமான சம்பவத்தில் மத்தியிலும் உத்தர பிரதேசத்திலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆளும் அரசுகளைக் கண்டித்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சம்பவம் நடந்தபோது, மத்திய இணை அமைச்சரின் மகன் அங்குதான் காரிலிருந்தார் என விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், தமது மகன் அங்கு இல்லை என்பதை நிரூபிக்கும் காணொளி ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளதற்கிடையே அஜய் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்டவை குரல் கொடுக்கின்றன. அவர் ராஜிநாமா செய்ய வாய்ப்பில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியிருந்தாலும், கடந்த திங்கட்கிழமையிலிருந்து அஜய் மிஸ்ராவின் ராஜினாமாவை வலியுறுத்தும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.   லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் மோதிய புதிய வீடியோவை பா.ஜ., எம்.பி., வருண் காந்தி வெளியிட்டுள்ளார். விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடைய கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகினர். பா.ஜ., எம்.பி.,யான வருண் காந்தி தெளிவான புதிய வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பதிவிட்டதாவது: வீடியோ தெள்ளத் தெளிவாக உள்ளது. போராட்டக்காரர்களை கொலை செய்வதன் மூலம் அவர்களை அமைதியாக்க முடியாது. சிந்தப்பட்ட அப்பாவி விவசாயிகளின் ரத்தத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். வெளிப்பட்டுள்ள ஆணவம், கொடூரம் ஆகியவை விவசாயிகளின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குள் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.  எனக் குறிப்பிட்டுள்ளார்.

 லக்கிம்பூருக்கு செல்வதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட்டை மொரதாபாத் பகுதியில் காவல்துறையினர்



தடுத்துள்ளதாக  தமது ட்விட்டர் வாயிலாகந் தெரிவித்துள்ளார். உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்தை பதவி விலகச் சொல்லி பாஜக தலைமை விரைவில் ஆணையிடும் என பலர் நம்புகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி-முதவ்வர் யோகி  ஆதித்யா நாத் பனிப்போர் நவராத்திரி முதல் ஆரம்பமானதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தற்போதுள்ள நிலையில் உத்திரப் பிரதேச மாநிலத்தின் அடுத்த சட்டமன்ற தேர்தல் நோக்கி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா வை முன்நிறுத்தி துவங்கிய நிலையில் பாஜக வின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வரும் வரை உபியில் அரசியல் பரபரப்பு அடங்காத நிலையில் தான் இருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த