முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இல்லாத வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட உள் ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து: சென்னை உயர்நீதிமன்ற அமர்வு

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு  இல்லாத மிகவும் பின் தங்கிய வகுப்பு


வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட உள் ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை தீர்ப்பு. முறையாக ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திய பின் தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு விசாரித்த வழக்கில் தீர்ப்பு வெளியானது.     

                                    தமிழக அரசின் முடிவான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, 2020 பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அன்று முதல்வராக இருந்த எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான தமிழக சட்டமன்றத்தில் சட்டம் அரசியல் காரணங்களுக்காக அவசரமாக நிறைவேற்றப்பட்ட நிலையில்,  திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு இது அரசாணையாகவே வெளியிடப்பட்டது இதை எதிர்த்து 76 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது           

பாமக வழக்கறிஞர் கே.பாலு இதைச் சிறப்பு வழக்காக எடுத்துக் கொள்ள முறையிட்ட நிலையில் தினந்தோறும் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு முன்னிலையில், விசாரணை நடைபெற்று வந்தது. வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று 76 மனுதாரர்கள் தினமும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வன்னியர்கள் இட ஒதுக்கீடு

செல்லுபடியாகும் என்று வாதிட்டோர் தரப்பில் பாமக  வழக்கறிஞர் கே. பாலு ஆஜரானார், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா, மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதா, என்பது போன்ற வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ள ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்வதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது வழக்கறிஞர் கே.பாலு இந்தத் தீர்ப்பை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்குமாறும் நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் நீதிபதிகள் முன்பாக கோரிக்கை வைத்தார். இட ஒதுக்கீட்டின் கீழ், மாணவ, மாணவிகள் ஒதுக்கீடுகளை பெற்று விட்டதாகவும் எனவே இப்போது இந்த தீர்ப்பு

கடைப்பிடிக்கப்பட்டால் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுமென்றும் கே‌பாலு வாதம் செய்தார்.  வாதத்தை மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.இந்த வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவின் போது 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் இட ஒதுக்கீடு, வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று தெளிவாகக் கூறியிருக்கிறோம். எனவே, இந்த தீர்ப்பை இப்போது நிறுத்தி வைப்பது மேலும் குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதை மற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் சமூக மக்கள் வரவேற்றுள்ளனர்.தற்போது தீர்ப்பு வெளியான நிலையில் பாமக நிறுவனர் சார்பில் இசுலாமியர் உள் இட ஒதுக்கீடு  அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு  தடைவிதிக்கப்படாத நிலையில் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் தடை விதித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதென -மருத்துவர்  ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார்.                        அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்  சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்.        அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் முரணான வன்னியர்களுக்கு வழங்கபட்ட 10.5 % தனி சாதிவாரி இட ஒதுக்கீட்டை ரத்து செய்து 
மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய தீர்ப்பினை அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்
உளமார வரவேற்கிறது.

முந்தைய அதிமுக அரசு  நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை மட்டும் மனதில் கொண்டு (26.2.2021) அன்று நடைபெற்ற சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்காமல் சட்டமன்றத்தில் விவாதிக்காமல்
அவசர அவசரமாக ஜாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல்
தன்னிச்சையாக சர்வாதிகார தனமாக  ஒரு சமூக மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற வேண்டும் என்பதை மனதில் வைத்து கொண்டுமிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள  20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5%, சீர்மரபினர்களுக்கு 7% இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% என்று அதிமுக அரசு அரசாணை வெளியிட்டது.

அதிமுக அரசின் மிக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உள்ஒதுக்கீடு  குறித்து அரசாணை 26/2 எதிராக தமிழகம் முழுவதும் ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடுமையான எதிர்ப்பையும் தங்களது கொந்தளிப்பையும் வெளிக்காட்டினர். தென் மாவட்டங்களில் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி கடுமையாக எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் 26/2 அரசாணை
வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.துரைசாமி, கே. முரளி சங்கர் அடங்கிய அமர்வு வழக்கின் தீவிர தன்மையை உணர்ந்து விசாரித்து வந்த நிலையில்  இன்று வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் 26/2 அரசாணை சட்டத்திற்கு முரணானது முறையான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் வழங்கியிருப்பது செல்லாது என்று கூறி சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் உளமார வாழ்த்தி வரவேற்கிறது.





சீர்மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் கருதி இன்று வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செல்லக்கூடாது என்று அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் தமிழக அரசிற்கு  கோரிக்கை வைக்கிறது.







சீர்மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக சட்டம் போராட்டம் மேற்கொண்ட வழக்கறிஞர்கள் மற்றும்


ஒருங்கிணைப்புக்குழுவிற்கும்
தொடர்ச்சியாக போராட்ட களத்தில் நின்று போராடிய மக்களுக்கும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் நிர்வாகிகளுக்கும் நன்றி      கூறப்பட்டுள்ளது.உயர்நீதிமன்றம் எழுப்பிய ஏழு வினாக்கள
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. மனு நீதி வழுவா மனுநீதிச்சோழனின் சிலை அமைந்துள்ள நீதிமன்றம்  வன்னியர் உள் இட ஒதுக்கீடு செல்லாது எனத் தீர்ப்பு 

2018-ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தில் 102-ஆவது திருத்தமும், 2021-ஆம் ஆண்டில்  105-ஆவது திருத்தமும் செய்யப்பட்டதற்கு இடைப்பட்ட காலத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றும் அதிகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உண்டா என்பது குறித்து வினா எழுப்பியது

ஓர் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யாமல் அந்தச் சட்டத்தை திருத்த முடியுமா என்பதாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் அம்சங்களை, குறிப்பாக 338-பி பிரிவை புறக்கணித்து விட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது

சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது.
 பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வேலைவாய்ப்பு விகிதம், சமூக, கல்வி நிலைமை, மக்கள்தொகை  ஆகியவை குறித்து கணக்கிடக்கூடிய அளவுக்கு புள்ளிவிவரங்கள் இல்லாத சூழலில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா?
வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகளை மீறியதா? என்றும்

எந்தவிதமான நோக்கக் காரணங்களும் இல்லாமல் மக்கள்தொகை குறித்த புள்ளிவிவரங்களின்  அடிப்படையில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மூன்று உட்பிரிவுகளாக பிரிக்க முடியுமா? என்பது

இந்த வினாக்களுக்கு இனி வரும் காலங்களில் உச்சநீதிமன்றத்தாலும், விடைகள் காணப்படும்  
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகள் சம வாய்ப்பை வலியுறுத்தும் பிரிவுகள் ஆகும். ஒரே நிலையிலான வகுப்பினருக்கு, அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறதா  என்பது முக்கியம் இந்திய அரசியல் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகளை வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் எந்த வகையில் மீறுகிறது? என்பது குறித்து  மேலும் உச்சநீதிமன்றம் வழங்கும் இறுதி உத்தரவு மட்டுமே இதற்கு இறுதியில் தீர்வாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...