நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் 24 மணி நேரம் கெடு வக்கீல் சட்ட அறிக்கையும், பாரதிராஜாவுக்கு பத்து பதில்களும்
நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் 24 மணி நேரம் கெடு வக்கீல் சட்ட அறிக்கை பரபரப்பு
ஞானவேல் இயக்கத்தில் ஜெய்பீம் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது
முதல் நாளே சர்ச்சைக்கு உள்ளானதில் போலீஸ் கேரக்டரில் இருந்த ஒருவரின் வீட்டில் வன்னியர் குறியீடான அக்னி கலசம் பொருத்தப்பட் காலண்டர் மாட்டப்பட்டிருந்தது. மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டரின் பெயர் குரு எனவும் அழைக்கப்பட்டது. உண்மைக்கதை என்று சொல்லப்பட்ட நிலையில் பல கருத்துக்களும், காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக வன்னியர்களை குறிவைத்து அதிகமான காட்சிகளும் இடம்பிடித்திருந்தது. இது வன்னியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் பல இடங்களில் நடிகர் சூர்யாவின் புகைப்படங்களை எரித்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில்
வக்கீல் சட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் 'படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும். 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும். வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும். 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும்' என்று மனுதாரர் தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலை ஒரு பக்கம் ஜெய்பீம்.
படத்திற்கு வட்டாரமொழி வசனம் எழுதி பங்காற்றிய கண்மணி குணசேகரனின் பதிவால் இந்த விவகாரம் வெளி வந்தது.நடுநாட்டு சொல்லகராதி உருவாக்கியவரை அழைத்து பயன்படுத்த
குடிசை கொளுத்து என்பவருக்கு க. குணசேகரன் என்று பெயர் வைப்பது எல்லாம் எத்தகைய வன்மங்கள்.
இதோ உங்களுக்கு உங்கள் மொழியில் பதில் தந்து உள்ளார்.
காலண்டர் பிரச்சனை பேசப்பட்ட பிறகு டைரக்டர் தரப்பில் உறுதியளித்தபடி உடனே மாற்றப்பட்டது.
படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் அந்த பாத்திரத்தின் பெயர் க. குணசேகரன்.
படத்திற்கு உதவியவரையே எப்படி வில்லன் பாத்திரத்தில் சித்தரிக்க நேரிட்டது என்ற கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை.
குறவர் இனம் இருளர் இனமாக மாறியிருப்பது
படத்தின் இயக்குனர் ஞானவேல் அளித்த பேட்டியில் செங்கேணி பாத்திரத்தின் நிஜ வடிவமான ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதியைச் சந்திக்கவே இல்லை என்று சொன்னார்.
ஒருவேளை நிஜப் பெயரை வைத்தால் பட லாபத்தில் பங்கு கொடுக்க வேண்டுமென்று போய்விடுமோ என்ற யோசனையாகக்கூட இருக்கலாம்
பார்வதி என்ற நிஜ பிம்பத்தை வைத்து படத்தை உருவாக்கியர்கள் அவரை மருந்துக்குக் கூட பார்க்கவில்லை என்று சொல்லும்போதே இது என்ன தொழில் தர்மம் என்று புரியவில்லை.
மேலும் அவர் அளித்த பதில்
"1993 காலக்கட்டத்தில் நடந்ததை ஏன் 1995 மாற்றினீர்கள்?"
"படைப்பு சுதந்திரம்தான் காரணம். போராட்டம் என்பதை நான் முன்வைக்கிறேன். தனியார் தொலைக்காட்சி போன்ற விஷயங்கள் 1993 ஆம் ஆண்டில் ஆரம்பித்தாலும், 1995 ஆம் ஆண்டில் தான் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதற்கு முன்பு இருந்த அரசு தொலைக்காட்சி சேனல்களில் எல்லாம் இதுபோன்ற விஷயங்களை எல்லாம் நம்மால் யோசிக்கவே முடியாது. வானிலை அறிக்கை, அரசு சார்ந்த செய்திகள், பத்திரிக்கை அறிக்கைகள் என நிறையவே கட்டுப்பாடுகள்.
அதை உடைத்தது தனியார் தொலைக்காட்சி சேனல்களின் வரவுதான். அதனால், இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் புகுத்த அந்த காலக்கட்டம் தேவைப்பட்டது. மேலும், தமிழ்நாட்டுச் சூழலில் 1995, 96 காலக்கட்டத்தில்தான் அதிக லாக்கப் மரணங்கள் நடந்தன. இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது 1995 வது காலக்கட்டம் எனக்கு மிக வசதியாக இருந்தது"
அதாவது படைப்பாளி ஒரு நிஜ சம்பவத்தில் தன் தேவைக்கு ஏற்ப காலகட்டத்தையும் மாற்றிக் கொள்கிறார்.
இவ்வளவு சர்ச்சைகள் எழுந்த பிறகும், உலகமே கொண்டாடக்கூடிய ஒரு படத்தை கொடுத்துவிட்டு பொதுவெளியில் விளக்கம் சொல்ல முன்வராமல் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் ஏன் தவிர்க்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இதுவரை இருந்தது.
இதற்குப் பிறகும் இந்தப்படம் உருவாக்கம் பற்றி பேசுவதெல்லாம் பைத்தியகாரத்தனம்
இப்போது பேச ஆரம்பித்திருக்கும் படத்தின் இயக்குனர் ஞானவேல் தனக்குத் தெரியாமல் பல தவறுகள் நடந்து விட்டதாக சொல்கிறார்.
நிஜ சம்பவத்தையும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தையும் மையப்படுத்தி எடுக்குற படத்திற்கு காட்சிப்படுத்த எவ்வளவு மெனக்கெடல்கள் தேவை என்பது திரைத்துறையில் உள்ளவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
பாமக இந்த விவகாரத்தை முரட்டுத்தனமாக அணுகியபின் எல்லாமே பதற்றத்தின் பக்கங்களாக மாறிவிட்டன.
எந்த பழைய படம் போட்டாலும் பெரும்பாலும் இப்போது தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதில்லை இந்த லட்சணத்தில் குறிப்பிட்ட நடிகரின் படத்தை ஓட விடமாட்டோம் என்று வீம்பு.
இன்னும் ஒருபடி மேலே போய் நடிகரை தாக்கினால் ஒரு லட்ச ரூபாய் பரிசு என்று வன்முறைக்கு தூபம் வேறு.
சூர்யா தரப்பும் நீங்கள் எதுவரை போகிறதோ போங்கள் என்று வேடிக்கை பார்த்ததே தவிர, உடனடி தீர்வு...ஒரே தீர்வு.. என்ற வகையில் இறங்கி வரவில்லை. அதன் காரணமாக
பாமக வுக்காக சில தரப்பும் சூர்யாவுக்காக சில தரப்பு என பிரிந்து இப்போது மோதிக் கொண்டிருக்கின்றன..
ஜெய்பீம் படத்தை அனைவரும் போற்றுகின்றனர். ஒரு தமிழ் படம் உலக அளவில் பேசப்படுவது சந்தோஷமான விஷயம்.
இந்த வரவேற்பாளர்கள் தரப்பு இரண்டு விஷயத்தை முக்கியமாக மறந்து விட்டது. ஒன்று, படத்திற்கு எதிரான கேள்விகளையும் ஏன் படக்குழுவினர் நேரடியாக பதில் சொல்லாமல் தவிர்த்தார்கள் என்பதைப் பற்றி யாருமே விமர்சனம் செய்யவில்லை.
இரண்டாவது ஜெய் பீம் படத்தின் முக்கிய நாடி, காவல்துறையின் மோசமான அடக்குமுறை. அதைப் பற்றி பேசாமல் எல்லோருமே வசதியாக மறந்து கடந்து போய் விட்டார்கள்.
சமூக நலனுக்கான படம், ஆதிக்க சக்திகளுக்கு எதிரான படம் என்றெல்லாம் ஒரு உருட்டு உருட்டு கிறார்களே தவிர, எல்லா காலத்திலும் எல்லா சமூக மக்களும் பாதிப்புக்கு உள்ளாகிற அரச பயங்கரவாதத்தை பற்றி மட்டும் பேசியதாகத் தெரியவில்லை.
அப்படிப்பட்ட பிரபலமான ஒரு நல்ல உள்ளத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில். மீண்டும் சார்பில் பாமக தலைமைநிலையச் செய்தி.
இளைஞரணிச் தலைவர்
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் திரைப்பட
இயக்குனர் பாரதிராஜாவுக்கு பதில் கடிதம் எழுதினார் அதில்
"அன்புள்ள தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு
வணக்கம்!
ஜெய்பீம் சர்ச்சை தொடர்பாக தாங்கள் எனக்கு கடிதம் எழுதியிருந்தீர்கள். களப்போராளியாகவும், யாருமே துணியாத காலத்தில் சமூகநீதியை திரைப்படத்தில் பதிவு செய்தவர் என்ற முறையிலும், படைப்பாளியாகவும் எனக்கு கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள், மகிழ்ச்சி.
ஒடுக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய உரிமைகளுக்காக போராட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. இன்று தமிழ்நாட்டில் அதிகமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி அவர்களுக்கு சமூக நீதியை பெற்றுத் தந்ததில் மருத்துவர் அய்யாவுக்கு நிகராக இங்கு வேறு யாரும் இல்லை.
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை ((Jai Bhim Controversy) சாதி பிரச்சனை அல்ல, அரசியல் பிரச்சனையும் அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் பெருங்குடி சமுதாயமான வன்னியர் சமூகம் திட்டமிட்டு தொடர்ந்து இழிவுபடுத்தப்படுவது தொடர்பான சமூகப் பிரச்சனை. இந்த பிரச்சனையில் உங்களுக்கும் திரைத்துறையினருக்கும் மிகப் பெரிய புரிதல் இல்லை என்பது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.
ஜெய்பீம் திரைப்படத்தில் சாதி வெறி பிடித்த கொடுமைக்கார சைக்கோ காவல் உதவி ஆய்வாளர் (வில்லன்) இல்லத்தில் மாட்டியிருக்கும் காலண்டரில் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டம் இல்லாமல் நீங்கள் போற்றி வணங்கும் தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று முழக்கமிட்ட தேவர் திருமகனாரின் படம் இருந்தால் நீங்களும், தேவர் சமுதாயமும் சும்மா இருப்பீர்களா? அல்லது கொங்கு மக்களால் கடவுளுக்கு இணையாக வழங்கப்படும் வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலை அவர்களின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாட்காட்டி இருந்திருந்தால் அவர்கள் கொதித்து எழுந்து இருக்க மாட்டார்களா? அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? படைப்புச் சுதந்திரம் என்று சும்மா இருந்து இருப்பீர்களா?
ஆனால் ஒன்றை மட்டும் சொல்கிறேன், மேற்கண்டவற்றில் எந்தக் காட்சி அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தாலும் அதை கண்டித்தும் முதல் குரல் என்னிடமிருந்து தான் வந்திருக்கும்
வானளாவிய படைப்புச் சுதந்திரம் நடிகர் சூர்யாவுக்கு மட்டும்தானா? இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முனைந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அந்தப் படைப்பு சுதந்திரம் மறுக்கப்பட்டது ஏன்? கடுமையான கண்டனக் கடிதத்தை தாங்கள்தான் எழுதியிருந்தீர்கள், நினைவு இருக்கிறதா? சமீபத்தில் வெளியான Family Man- II தொடர் முழுவதும் தடை (Ban) செய்ய வேண்டுமென்று கடுமையான எச்சரிக்கை விடுத்தீர்கள். அப்பொழுது எங்கே போயிற்று உங்கள் படைப்பு சுதந்திரம்? அண்மையில் வெளியான கர்ணன் படத்தில் 1997-ஆம் ஆண்டு என்று இருந்ததை மாற்றி ’1990-களின் இறுதியில்” என்று போட வைத்தபோது, என்னவாயிற்று உங்கள் படைப்பு சுதந்திரம்.
படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இழிவு படுத்தும் வகையில் வன்னியர்களுக்கு புனிதமான அக்னி குண்டத்தை வைத்து சத்ரியர் என்ற அடிக்குறிப்பு போட்டு கொலையாளிகளாகக் காண்பித்தால் அதற்கு நீங்களும், திரைத்துறையினரும் ஆதரவு அளிக்கிறீர்களா?
எலி வேட்டை என்ற பெயரில் படத்தை தொடங்கி, தயாரித்து முடிக்கும் தருவாயில் பரபரப்புக்காக ஜெய்பீம் ஆக்கி பெயர் அரசியல் செய்து வியாபாரமாக்கியது நாங்கள் அல்ல. எதற்கும் துணிந்தவர்கள், அந்தோணிசாமி என்று பெயர் வைப்பதற்கு பயந்து குருமூர்த்தி என்று பெயர் அரசியல் செய்து குறவர் சமுதாயத்தை இருளர் சமுதாயமாக மாற்றி, வட தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய சமுதாயத்திற்கும் சாதிக் கலவரத்தை தூண்டி பெயர் அரசியல் செய்தது திரையுலகம் தானே தவிர, அந்த இரண்டு சமுதாயங்கள் அல்ல.
தென் மாவட்டத்தைச் சேர்ந்த தாங்கள் சாதிக்கலவரம் குறித்தும், அதனால் ஏற்படும் சமூக பாதிப்புகள் குறித்தும் நன்றாக அறிந்திருப்பீர்கள். ஆனால், வட தமிழ்நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக அத்தகைய கலவரங்கள் எதுவும் ஏற்படாமல் மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ வகை செய்திருப்பவர் மருத்துவர் அய்யா அவர்கள். வட தமிழகத்தில் இருந்து வந்த வன்னிய குலத்தில் பிறந்த மருத்துவர் அய்யாவின் சமூக நீதி சாதனைகள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம், உங்களுடன் நிற்கும் திரைத்துறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. பட்டியலிடுகிறேன் தெரிந்துகொள்ளுங்கள்.
1) குடிதாங்கி என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்டவரின் பிணத்தை தன் தோளில் சுமந்து சென்று, ஊர் மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அடக்கம் செய்து சமூக புரட்சி செய்த ரியல் ஹீரோ எங்கள் மருத்துவர் அய்யா தான்.
2) எங்களுக்கு மத்திய அரசில் கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை தலித் எழில்மலை என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவருக்கு நாங்கள் கொடுத்தோம். இரண்டாவது முறையும் பொன்னுசாமி என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவரை மத்திய அமைச்சராக்கினோம்.
3) இந்தியாவில் தொடக்கம் முதலே மறுக்கப்பட்டு வந்,த யாருமே கொடுக்க முன்வராத All India Quota UG and PG மருத்துவ படிப்பு மற்றும் மேற்படிப்பில் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி SC/ST இட ஒதுக்கீட்டை இந்திய அளவில் 2008-ல்மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தவன் நான். எனக்கு அதற்காக அன்றே தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் (National Commission for SCs and STs)தலைவர் திரு.பூட்டா சிங் தலைமையில் 32 ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் தலைவர்கள் சேர்ந்து சென்னையில் பாராட்டு விழா நடத்தி, பாராட்டு பத்திரமும், விருதும், பட்டமும் வழங்கி கௌரவப்படுத்தினார்கள்.
4) இந்தியாவின் தலைசிறந்த மருத்துவ நிறுவனமான டெல்லி எய்ம்ஸ் (AIIMS) தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு, முன்னேறிய வகுப்பினரால் நடத்தப்பட்ட மோசமான அடக்குமுறைகளை தோரட் கமிட்டி (Thorat Committee) அமைத்து முடிவுகட்டி, சுமூகமாக தீர்வு கண்டவன் நான்.
5) தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பண்டிதர் அயோத்திதாசரின் பெயரை தாம்பரத்தில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு சூட்டி, அவரின் திருவுருவச் சிலையும் அங்கே நிறுவியுள்ளேன்.
6) எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி அன்றிலிருந்து இன்று வரை பட்டியலின தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
7) அரியலூர் மாவட்டம், பாப்பாகுடி கிராமத்தில் இருளர் சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாமல் இருந்த நிலையில் 20 வருடங்களுக்கு முன் மருத்துவர் அய்யாவின் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.குரு அவர்களின் தொடர் முயற்சிக்கு பின்னர் 62 இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வாங்கிக் கொடுத்த நன்றி கடனுக்காக அந்த இடத்திற்கு டாக்டர் அய்யா நகர் என்று நன்றி மறவாமல் பெயர் வைத்துள்ளனர் அன்புள்ளம் கொண்ட இருளர் சமுதாய மக்கள். சந்தேகம் இருந்தால் நேரடியாக களத்திற்குச் சென்று ஆய்வு செய்து கொள்ளவும்.
8.) சி.பி.எஸ்.இ பாடத்திட்ட நூலில் நாடார் சமுதாயம் இழிவு படுத்தப்பட்ட போது அதற்காக முதன்முதலில் குரல் கொடுத்ததும் மத்திய அரசிடமும், உயர்நீதி மன்றத்திடமும் வாதாடி சம்பந்தப்பட்ட பகுதிகளை நீக்கியது எங்கள் கட்சி தான்.
9) கோவை தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து கோட்டைமேடு பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் இஸ்லாமிய சகோதரிகள் இழிவுக்கும், இன்னலுக்கு ஆளான போது அதற்கு எதிராக சம்பவ இடத்தில் போராடி அவர்களின் துயரைப் போக்கியவர் மருத்துவர் அய்யா தான்.
10) தாமிரபரணி ஆற்றில் தேவேந்திர குல சமுதாய மக்களின் மீது காவல்துறையால் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது, முதன்முதலில் ஓடோடி அவர்களுக்காக குரல் கொடுத்து, பல போராட்டங்களை அவர்களுக்காக நடத்தியவர் மருத்துவர் அய்யா தான்.
சமூகநீதிக்காகவும், மக்களின் பிரச்சினைகளுக்காகவும் மருத்துவர் அய்யா அவர்கள் இன்னும் ஏராளமான போராட்டங்களை நடத்தி, நீதியும், தீர்வும் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவை தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றில் வலிமையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இவைபோன்ற எத்தனையோ சமூக புரட்சிகளை நிஜவாழ்க்கையில் மருத்துவர் அய்யாவும், எங்கள் இயக்கமும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இத்தனை செய்தும், அதைப்பற்றிய புரிதல் சற்றும் இல்லாமல், நீங்களும், தாங்கள் சார்ந்த திரைத்துறையினரும் எங்கள் மனதை மிகவும் புண்படுத்தி விட்டீர்கள்.
கொலை செய்யப்பட்டவரும் வன்னியர் அல்ல, கொலை செய்தவரும் வன்னியர் அல்ல, கொலை செய்யப்பட்டவருக்காக வழக்காடியவரும் வன்னியர் அல்ல, உதவி செய்தவர்கள் மட்டுமே வன்னியர்கள் என்று உண்மை நிலவரம் இருக்கும் போது, எதற்கு வன்னியரின் சின்னமான அக்னி குண்டத்தை கொலையாளியின் வீட்டில் நட்ட நடுவில் மாட்டி வைத்தீர்கள்? என்ற நியாயமான கேள்வி கூடவா உங்கள் மனங்களில் எழவில்லை.
வன்னியப் பெருங்குடி மக்களின் மனதை காயப்படுத்தி விட்டீர்கள் என்ற உண்மையை ஒத்துக் கொள்ள மனம் இல்லை என்பதைத்தான் திரைத் துறையினரின் கடிதங்களும், ஊடகங்களின் விவாதங்களும் காட்டுகிறது.
இது வெறும் காலண்டர் தானே, என்று நீங்கள் சாதாரணமாக நினைக்கலாம். சுட்டிக்காட்டிய உடன் அந்த காட்சி நீக்கப்பட்டு விட்டது என்று சப்பை கட்டு கட்டலாம். ஆனால் ஏன் அந்த அக்னி குண்டத்தை அங்கு வைத்தீர்கள்? என்ற கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை. கோடிக்கணக்கான வன்னியப் பெருங்குடி மக்களின் மனதை ஆழமாக புண்படுத்தி விட்டீர்கள் என்று ஏன் உங்களாலும் எங்களை விமர்சனம் செய்கின்ற அவர்களாலும் புரிந்துகொள்ள முடியவில்லை?
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அதனால் அவர்களின் மனங்கள் காயப்பட்டிருக்கின்றன. இதை சுட்டிக்காட்டி நான் கடிதம் எழுதிய போது, உண்மையை ஒப்புக்கொண்டு வன்னிய மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக படக்குழுவினர் வருத்தம் தெரிவித்திருந்தால், இந்த விவகாரம் அன்றே முடிவுக்கு வந்திருக்கும்.
உங்களுக்கு வீடு கட்டித்தரும் தொழிலாளியாகவும் நீங்கள் பயணிக்கின்ற சாலைகளை போடும் பாட்டாளிகளாகவும், உங்களுக்காக சேற்றில் இறங்கி கடுமையாக உழைத்து உங்களுக்கு சோறு போடும் விவசாயிகளான வன்னிய மக்களை கொலையாளிகளாக சித்தரித்து இருக்கிறீர்கள் அல்லவா? அதனால் தான் எங்கள் மனம் வலிக்கிறது.
இதற்குப் பிறகும் நாங்கள் மௌனமாக இருந்தால் இந்த குற்றச்சாட்டை ஒத்துக் கொள்வதாக ஆகிவிடாதா? திருடியதாக ஒத்துக்கொண்டால் காலத்துக்கும் அந்த திருட்டு பட்டம் தங்கிவிடும் என்று ஜெய்பீம் திரைப்படத்தில் வசனம் வருகிறது. அது அவர்களுக்கு மட்டும் தானா? கொலையாளிகள் வன்முறையாளர்கள் என்ற அவப்பெயர் வன்னியப் பெருங்குடி சமுதாயத்திற்கு காலத்திற்கும் தங்கி விடாதா?
இவை எனது கேள்விகள் மட்டுமல்ல...
கோடிக்கணக்கான வன்னிய மக்களின் மனங்களில் தீயாய் எரிந்து கொண்டிருப்பவை தான் இந்த வினாக்கள். வன்னியர்களின் மனக்காயங்களுக்கு மருந்து போடாமல் அவர்களின் மனத் தீயை அணைக்க முடியாது என்பதை மட்டும் தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எங்கள் கைகளில் இல்லை. இவற்றை தெரிவிப்பதற்காகவே இந்தக் கடிதம்.
மிக்க நன்றி! " என் முடிகிறது கடிதம் .. இதோடு பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு அனுப்பி வைத்த சட்ட அறிவிக்கை மற்றும் சேலம் மேற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் இரா.அருள் எழுதிய திரையரங்குகளின் உரிமையாளர்களுக்கு எழுதிய கடிதம் என எதிர்ப்பும் நாளுக்கு நாள் வலுவான நிலையில் உருவாகவே விருது பெறுவது தடையாகும் நிலை வரும் போலத் தான் தெரிகிறது எது எப்படியோ அந்த மலையாள நடிகை விருது பெறத் தகுதியான நபர். இப்போது ஜாதி அரசியல் காரணங்களுக்காக படம் விளம்பரங்கள் தேவையில்லா நிலையில் வருவாய் ஈட்டும் நிலையில் உள்ளது.
கருத்துகள்