முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் பேச்சு

இந்தியாவை உலக சினிமாவின் மையமாகவும், திரைப்படங்கள் மற்றும் விழாக்களுக்கான இடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்: 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் பேச்சு


இந்தியாவை உலக சினிமாவின் மையமாகவும்,  திரைப்படங்கள் மற்றும் விழாக்களுக்கான இடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என கோவாவில் இன்று தொடங்கிய 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர்  கூறினார்.

52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் இன்று தொடங்கியது. இதன் துவக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் கலந்து கொண்டு பேசியவதாவது:


இந்திய கதை, இந்தியர்களால் எழுதப்பட்டு விவரிக்கப்படுகின்றன. கூட்டு பன்முகத்தன்மையின்   இந்திய  ‘சினிமா கலைடாஸ்கோப்’-ல்  பங்கு பெற வேண்டும் என்பதுதான்,  அனைத்து சினிமா தயாரிப்பாளர்களுக்கும் நாங்கள் விடுக்கும் தகவல். இது வளர்ந்து வரும் கோடிக்கணக்கானோரின் குரலாக, புதிய முன்னேற்றங்களை எடுக்கவுள்ளது மற்றும் இந்த தசாப்தத்திலும் அதற்குப் பிறகும் வழிநடத்த தயாராகிறது.

திரைக்கதை உருவாக்கத்தின் மையமாக இந்தியாவை மாற்ற நாங்கள் எண்ணுகிறோம். இதற்காக பிராந்திய அளவில் திரைப்பட விழாக்களை அதிகரிக்க  திட்டமிட்டுள்ளோம்.


திரைப்பட தயாரிப்புக்கு பின் மேற்கொள்ள வேண்டிய பணிகள் நடக்கும் இடமாகவும் இந்தியாவை மாற்றுவதில்  நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்தியாவில் தொழில்நுட்ப திறமைசாலிகளை அதிகரித்து, உலக சினிமாவின் மையமாக இந்தியாவை மாற்ற திட்டமிட்டுள்ளோம். திரைப்படங்கள் மற்றும் விழாக்களின் மையமாக இந்தியாவை மாற்றவும் எண்ணியள்ளோம்.


உலகம் ஒரே குடும்பம் என்ற கருத்தை உடைய தேசத்திலிருந்து நாம் வந்திருக்கிறோம். என்ன மொழி பேசுகிறீர்கள், எந்த நாட்டிலிருந்து உங்கள் கதை வருகிறது மற்றும் உங்களின் நம்பிக்கை போன்றவை எல்லாம் முக்கியம் அல்ல. திரைப்படங்கள் நம் அனைவரையும் ஒன்றாக இணைக்கிறது.


சினிமா உலகளாவிய மொழியை பேசுவதால், பிறரை ஈர்க்கும் திறனில் திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக கருதப்படுகின்றன. ஒரு நாட்டின் கலாச்சாரம், கொள்கை மற்றும் சமூக விதிமுறைகள் ஆகியவற்றின் தாக்கம் திரைப்படங்களில் இருக்கும்.


திரைப்பட கலையின் சிறப்பை வெளிப்படுத்தவும், பல நாடுகளின் திரைப்பட கலாச்சாரங்களை சிறப்பாக புரிந்து கொண்டு அங்கீகரிக்கவும், உலக முழுவதம் நட்புறவையும், ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும்  உலக சினிமாக்களுக்கான ஒருங்கிணைந்த தளத்தை அளிக்க, இந்திய சர்வதேச திரைப்பட விழா எண்ணுகிறது.


இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான நமது அரசின் தொலை நோக்கு, ஒரு நிகழ்ச்சியோடு முடிவடையவில்லை, இந்தியா 100வது சுதந்திர ஆண்டை கொண்டாடும்போது, இந்திய சர்வதேச திரைப்பட விழா எப்படியிருக்க வேண்டும் என்பதை பற்றியும் நினைக்கிறேன்


திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் நாம் டிஜிட்டல் யுகத்துக்கு சென்றுள்ளதால், இதில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.


முதல் முறையாக, 52வது இந்திய சர்வதே திரைப்பட விழாவில் ஓடிடி தளங்களும் பங்குபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

சுதந்திர இந்தியாவின் வைரவிழாவை முன்னிட்டு, இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்க, வருங்கால 75 இளம் படைப்பாளிகளுக்கான போட்டி இந்த திரைப்பட விழாவில் நடத்தப்படுகிறது. இதற்காக நடுவர் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ள 75 இளம் படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்.


இந்த திரைப்பட விழாவில் பிரிக்ஸ் நாடுகளின் திரைப்பட விழாவும் முதல் முறையாக நடத்தப்படுகிறது. இதில் 5 நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பிரபல நடிகை ஹேமா மாலினிக்கு, இந்தாண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதை, மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் வழங்கினார். பிரபல பாடலாசிரியர் பிரசூன் ஜோஷிக்கு இந்த விருது 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளில் வழங்கப்படும். 

சர்வதேச சினிமாவில் சிறந்து விளங்கிய திரு ஸ்டீவன் சபோ மற்றும் மார்ட்டின் ஸ்கார்செசே ஆகியோருக்கு சத்யஜித்ரே வாழ்நாள் சாதனை விருதையும் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் வழங்கினார்.

இந்நிகழச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, கோவா முதல்வர் திரு. பிரமோத், சாவந்த், தகவல் ஒலிபரப்புத்துறை செயலர் அபூர்வா சந்த்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹாலிவுட் இயக்குநர் திரு மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது

கோவாவில் இன்று (2021 நவம்பர் 20) நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹாலிவுட் இயக்குநர் திரு மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திரைத்துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பணிக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

காணொலி செய்தி மூலமாக ஏற்புரை நிகழ்த்திய சர்வதேச திரைப்பட ஆளுமையான திரு மார்ட்டின், “எக்காலத்திலும் சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான சத்யஜித் ரேயின் பெயரால் வழங்கப்படும் விருதைப் பெறுவதில் நான் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு முறையும் நான் அவருடைய திரைப்படங்களைப் பார்க்கும்போது, ​​அது ஒரு புதிய அனுபவமாக மாறும். பதேர் பாஞ்சாலியைப் பார்ப்பது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது, அது எனக்கு ஒரு புதிய உலகத்தைத் திறந்தது” என்றார்.

"நான் என் மகளுக்கு சிறு வயதிலேயே பதேர் பாஞ்சாலியைக் காட்டினேன். உலகத்தையும் உலகெங்கிலும் உள்ள பிற கலாச்சாரங்களையும் எப்படி அவள் உணர்கிறாள் என்பதில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது,” என்று திரு மார்ட்டின் கூறினார்.

விருதைப் பெற்றதற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், தனக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு இந்திய திரைப்படத் துறைக்கு நன்றி தெரிவித்தார்.

21-ம் நூற்றாண்டின் சிறந்த சினிமா சிந்தனையாளர்களில் ஒருவராக பலரால் கருதப்படும் திரு மார்ட்டின், ஒரு ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஆவார். குட்ஃபெல்லாஸ், டாக்ஸி டிரைவர், ரேஜிங் புல், தி டிபார்ட்டட், ஷட்டர் ஐலேண்ட் மற்றும் தி வேர்ல்ட் ஆஃப் தி வால் ஸ்ட்ரீட் போன்ற தலைசிறந்த படைப்புகளை அவர் உருவாக்கியுள்ளார்.

இன்று நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹங்கேரிய திரைப்பட இயக்குநர் இஸ்டீவன் ஸாபோவுக்கும் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நவீன சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் சத்யஜித் ரே, அவர் உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார்.52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹங்கேரிய இயக்குநர் திரு இஸ்த்வான் ஸாபோவிற்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது

சென்னையில் சத்யஜித் ரேவை சந்தித்ததை ஸாபோ நினைவு கூர்ந்தார்

கோவாவில் இன்று (2021 நவம்பர் 20) நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹங்கேரிய இயக்குநர் திரு இஸ்த்வான் ஸாபோவிற்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திரைத்துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பணிக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

காணொலி செய்தி மூலமாக ஏற்புரை நிகழ்த்திய சர்வதேச திரைப்பட ஆளுமையான திரு இஸ்த்வான், “இந்தியர்களுக்கு எனது படங்கள் குறித்து தெரிந்திருப்பதும் அவர்களில் சிலர் அவற்றை விரும்புவதும் எனக்கு பெருமகிழ்ச்சியை தருகிறது,” என்றார்.

சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டதற்காக நன்றியை வெளிப்படுத்திய திரு இஸ்த்வான் சாபோ, பழம்பெரும் இயக்குநர் சத்யஜித் ரே உடனான தனது சந்திப்பு 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்ததை நினைவு கூர்ந்தார்.

"ரே என்னையும் என் மனைவியையும் இரவு உணவிற்கு அழைத்தார், அந்த சந்திப்பு சிறப்பாக இருந்தது. அவருடைய படங்கள், திரைப்பட தயாரிப்பு மற்றும் எங்கள் தொழிலைப் பற்றி அருமையான விவாதம் நடத்தினோம். அது ஒரு ஆழமான விவாதம், என்னால் அதை மறக்கவே முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.

இன்று நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹாலிவுட் இயக்குநர் திரு மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கும் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நவீன சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் சத்யஜித் ரே, அவர் உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...