முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் பேச்சு

இந்தியாவை உலக சினிமாவின் மையமாகவும், திரைப்படங்கள் மற்றும் விழாக்களுக்கான இடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்: 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் பேச்சு


இந்தியாவை உலக சினிமாவின் மையமாகவும்,  திரைப்படங்கள் மற்றும் விழாக்களுக்கான இடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என கோவாவில் இன்று தொடங்கிய 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர்  கூறினார்.

52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் இன்று தொடங்கியது. இதன் துவக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் கலந்து கொண்டு பேசியவதாவது:


இந்திய கதை, இந்தியர்களால் எழுதப்பட்டு விவரிக்கப்படுகின்றன. கூட்டு பன்முகத்தன்மையின்   இந்திய  ‘சினிமா கலைடாஸ்கோப்’-ல்  பங்கு பெற வேண்டும் என்பதுதான்,  அனைத்து சினிமா தயாரிப்பாளர்களுக்கும் நாங்கள் விடுக்கும் தகவல். இது வளர்ந்து வரும் கோடிக்கணக்கானோரின் குரலாக, புதிய முன்னேற்றங்களை எடுக்கவுள்ளது மற்றும் இந்த தசாப்தத்திலும் அதற்குப் பிறகும் வழிநடத்த தயாராகிறது.

திரைக்கதை உருவாக்கத்தின் மையமாக இந்தியாவை மாற்ற நாங்கள் எண்ணுகிறோம். இதற்காக பிராந்திய அளவில் திரைப்பட விழாக்களை அதிகரிக்க  திட்டமிட்டுள்ளோம்.


திரைப்பட தயாரிப்புக்கு பின் மேற்கொள்ள வேண்டிய பணிகள் நடக்கும் இடமாகவும் இந்தியாவை மாற்றுவதில்  நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்தியாவில் தொழில்நுட்ப திறமைசாலிகளை அதிகரித்து, உலக சினிமாவின் மையமாக இந்தியாவை மாற்ற திட்டமிட்டுள்ளோம். திரைப்படங்கள் மற்றும் விழாக்களின் மையமாக இந்தியாவை மாற்றவும் எண்ணியள்ளோம்.


உலகம் ஒரே குடும்பம் என்ற கருத்தை உடைய தேசத்திலிருந்து நாம் வந்திருக்கிறோம். என்ன மொழி பேசுகிறீர்கள், எந்த நாட்டிலிருந்து உங்கள் கதை வருகிறது மற்றும் உங்களின் நம்பிக்கை போன்றவை எல்லாம் முக்கியம் அல்ல. திரைப்படங்கள் நம் அனைவரையும் ஒன்றாக இணைக்கிறது.


சினிமா உலகளாவிய மொழியை பேசுவதால், பிறரை ஈர்க்கும் திறனில் திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக கருதப்படுகின்றன. ஒரு நாட்டின் கலாச்சாரம், கொள்கை மற்றும் சமூக விதிமுறைகள் ஆகியவற்றின் தாக்கம் திரைப்படங்களில் இருக்கும்.


திரைப்பட கலையின் சிறப்பை வெளிப்படுத்தவும், பல நாடுகளின் திரைப்பட கலாச்சாரங்களை சிறப்பாக புரிந்து கொண்டு அங்கீகரிக்கவும், உலக முழுவதம் நட்புறவையும், ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும்  உலக சினிமாக்களுக்கான ஒருங்கிணைந்த தளத்தை அளிக்க, இந்திய சர்வதேச திரைப்பட விழா எண்ணுகிறது.


இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான நமது அரசின் தொலை நோக்கு, ஒரு நிகழ்ச்சியோடு முடிவடையவில்லை, இந்தியா 100வது சுதந்திர ஆண்டை கொண்டாடும்போது, இந்திய சர்வதேச திரைப்பட விழா எப்படியிருக்க வேண்டும் என்பதை பற்றியும் நினைக்கிறேன்


திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் நாம் டிஜிட்டல் யுகத்துக்கு சென்றுள்ளதால், இதில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.


முதல் முறையாக, 52வது இந்திய சர்வதே திரைப்பட விழாவில் ஓடிடி தளங்களும் பங்குபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

சுதந்திர இந்தியாவின் வைரவிழாவை முன்னிட்டு, இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்க, வருங்கால 75 இளம் படைப்பாளிகளுக்கான போட்டி இந்த திரைப்பட விழாவில் நடத்தப்படுகிறது. இதற்காக நடுவர் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ள 75 இளம் படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்.


இந்த திரைப்பட விழாவில் பிரிக்ஸ் நாடுகளின் திரைப்பட விழாவும் முதல் முறையாக நடத்தப்படுகிறது. இதில் 5 நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பிரபல நடிகை ஹேமா மாலினிக்கு, இந்தாண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதை, மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் வழங்கினார். பிரபல பாடலாசிரியர் பிரசூன் ஜோஷிக்கு இந்த விருது 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளில் வழங்கப்படும். 

சர்வதேச சினிமாவில் சிறந்து விளங்கிய திரு ஸ்டீவன் சபோ மற்றும் மார்ட்டின் ஸ்கார்செசே ஆகியோருக்கு சத்யஜித்ரே வாழ்நாள் சாதனை விருதையும் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் வழங்கினார்.

இந்நிகழச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, கோவா முதல்வர் திரு. பிரமோத், சாவந்த், தகவல் ஒலிபரப்புத்துறை செயலர் அபூர்வா சந்த்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹாலிவுட் இயக்குநர் திரு மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது

கோவாவில் இன்று (2021 நவம்பர் 20) நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹாலிவுட் இயக்குநர் திரு மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திரைத்துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பணிக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

காணொலி செய்தி மூலமாக ஏற்புரை நிகழ்த்திய சர்வதேச திரைப்பட ஆளுமையான திரு மார்ட்டின், “எக்காலத்திலும் சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான சத்யஜித் ரேயின் பெயரால் வழங்கப்படும் விருதைப் பெறுவதில் நான் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு முறையும் நான் அவருடைய திரைப்படங்களைப் பார்க்கும்போது, ​​அது ஒரு புதிய அனுபவமாக மாறும். பதேர் பாஞ்சாலியைப் பார்ப்பது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது, அது எனக்கு ஒரு புதிய உலகத்தைத் திறந்தது” என்றார்.

"நான் என் மகளுக்கு சிறு வயதிலேயே பதேர் பாஞ்சாலியைக் காட்டினேன். உலகத்தையும் உலகெங்கிலும் உள்ள பிற கலாச்சாரங்களையும் எப்படி அவள் உணர்கிறாள் என்பதில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது,” என்று திரு மார்ட்டின் கூறினார்.

விருதைப் பெற்றதற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், தனக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு இந்திய திரைப்படத் துறைக்கு நன்றி தெரிவித்தார்.

21-ம் நூற்றாண்டின் சிறந்த சினிமா சிந்தனையாளர்களில் ஒருவராக பலரால் கருதப்படும் திரு மார்ட்டின், ஒரு ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஆவார். குட்ஃபெல்லாஸ், டாக்ஸி டிரைவர், ரேஜிங் புல், தி டிபார்ட்டட், ஷட்டர் ஐலேண்ட் மற்றும் தி வேர்ல்ட் ஆஃப் தி வால் ஸ்ட்ரீட் போன்ற தலைசிறந்த படைப்புகளை அவர் உருவாக்கியுள்ளார்.

இன்று நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹங்கேரிய திரைப்பட இயக்குநர் இஸ்டீவன் ஸாபோவுக்கும் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நவீன சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் சத்யஜித் ரே, அவர் உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார்.52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹங்கேரிய இயக்குநர் திரு இஸ்த்வான் ஸாபோவிற்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது

சென்னையில் சத்யஜித் ரேவை சந்தித்ததை ஸாபோ நினைவு கூர்ந்தார்

கோவாவில் இன்று (2021 நவம்பர் 20) நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹங்கேரிய இயக்குநர் திரு இஸ்த்வான் ஸாபோவிற்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திரைத்துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பணிக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

காணொலி செய்தி மூலமாக ஏற்புரை நிகழ்த்திய சர்வதேச திரைப்பட ஆளுமையான திரு இஸ்த்வான், “இந்தியர்களுக்கு எனது படங்கள் குறித்து தெரிந்திருப்பதும் அவர்களில் சிலர் அவற்றை விரும்புவதும் எனக்கு பெருமகிழ்ச்சியை தருகிறது,” என்றார்.

சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டதற்காக நன்றியை வெளிப்படுத்திய திரு இஸ்த்வான் சாபோ, பழம்பெரும் இயக்குநர் சத்யஜித் ரே உடனான தனது சந்திப்பு 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்ததை நினைவு கூர்ந்தார்.

"ரே என்னையும் என் மனைவியையும் இரவு உணவிற்கு அழைத்தார், அந்த சந்திப்பு சிறப்பாக இருந்தது. அவருடைய படங்கள், திரைப்பட தயாரிப்பு மற்றும் எங்கள் தொழிலைப் பற்றி அருமையான விவாதம் நடத்தினோம். அது ஒரு ஆழமான விவாதம், என்னால் அதை மறக்கவே முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.

இன்று நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹாலிவுட் இயக்குநர் திரு மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கும் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நவீன சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் சத்யஜித் ரே, அவர் உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த