முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாசிசத்திற்கும், கம்யூனிஸத்திற்கும் இடையில் நடக்கும் நவீன யுத்தத்தில் புரியாமல் சிக்கிய நடிகர் சூரியா.

பாசிசத்திற்கும், கம்யூனிஸத்திற்கும் இடையில் நடக்கும் நவீன யுத்தத்தில் புரியாமல் சிக்கிய நடிகர் சூரியா.


காரணம் நாம் முன்பே கூறியது போல ஒரு உண்மைச் சம்பவம் சார்ந்த கருத்து திரைக்கதையாக மாற்றம் பெறுவதற்கு முன்னர் கதையின் களம் அதன் கரு சம்பந்தப்பட்ட நபரான வழக்காடிய பார்வதியிடம் ஒப்புதல் பெறவேண்டும் அதை விடுத்து ஆதரவாக வாதாடிய பலரில் ஒருவரான ஓய்வு நீதிபதி மட்டுமே முன்னிறுத்தி அதன் காரணமாக மற்றவர்கள் மறைக்கப்பட்ட நிகழ்வுகள் இதனை கதை இலாகாவில்  அவர்கள் மட்டுமே செய்ய வில்லை , இதில் நடிகராக மட்டுமே சூரியாவின் பங்களிப்பும் இல்லை தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் வருகிறார், உண்மைச் சம்பவங்களின் பின்னணி எனக் கதைக் களம் நகரும் போது . நமது இதழ் முன்பே கூறியது போல உண்மையான அந்தோணிச் சாமியின் பாத்திரம் குருமூர்த்தி ஆனது கதைக்கான பார்வையா ? அல்லது அரசியலுக்கான பார்வையா ?  பாசிசம் கொண்ட  குருமூர்த்தி பாத்திரம் உண்மையான பாமக  குருவை அல்லது பாஜக கூறும் குருமூர்த்தி என்பதாவிலேயே துவங்கிய வினா விடை தெரியாத இருவரின் ஆதரவாளர்கள் களத்தில் வரக் காரணம். பெரியார் மடியில் தற்போது அமர்ந்து பயணிக்கும் நடிகர் சூர்யா தான். அது தவறில்லை

தற்போது கலைப் படைப்புகள் ஜாதி, மதம் கடந்து பாருங்கள் என் இயக்குனர் பாரதிராஜா கூறலாம் காரணம். இப்படி அக்காலத்தில் அலைகள் ஓய்வதில்லை , வேதம் புதிது, முதல் மரியாதை, என சமூகத்தில் புரட்சி செய்த இயக்குனர். அவர் பார்வையில் சரி இப்படி இப்போது ஒரு படம் வரமுடியாது. காரணம். இதன் துவக்கப்புள்ளி.  சண்டியர் என்று பின்னர் விருமாண்டியாக மாற்றம் பெற்றது ஜாதி அரசியல் தான் அப்போது நடிகர் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு வந்த போது விட்டு விட்டு விலகி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த சினிமா துறை சார்ந்த சங்கங்கள் தற்போது ஜெய்பீம் வரும்போது களம் காணும் நிலைக்கு முழுக்க காரணமாக நாம் பார்ப்பது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு நடந்த நிகழ்வுகளும் , பல மாற்றங்களுமே. அதுவே கம்யூனிஸத்திற்கும் பாசிசத்திற்கும் நடக்கும் மக்கள் அறியாத மறைமுக யுத்தம்.

இதில் நடிகர் சூரியா செய்த ஒரே தவறு நாம் முன்பே கூறிய குறவர் சமூக பார்வதி என்பவரின் இராயல்டி.பங்கு மட்டுமே.. இப்போது சமீபத்திய திரைப்படம் மண்டேலா என்பதும் ஜாதிவாரி சம்பந்தப்பட்ட கதைக் களம் கொண்ட படம் தானே ஏன் மக்கள் போராட்டம் செய்யவில்லை? அது கதை ஆனால் ஜெய் பீம் காதை என்பதாலா இல்லை ஜாதி வாரி மக்களின் தொகை குறைவாக இருந்தாலா என்பதே வினா. நடிகர் சூர்யாவிற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் அதிகரித்து வரும் சூழலில் கிறிஸ்தவ வன்னியர் மக்களிடம் இருந்தும்  எதிர்ப்புக் குரல் கிளம்பி இருப்பது,

அமைதியாக வாழும் தமிழர்கள் மத்தியில் உண்மைக் கதை என்று பொய் கதைகளை திணிப்பவர்கள் மீதான மக்களின் விழிப்புணர்வாகத்தான் இது பார்க்கப்படுகிறது. தற்போது 10.5 விழுக்காடு வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு அரசாணை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பை

 எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளது பாமக. அவர்கள் ஜாதி சார்ந்த மக்களிடம் ஒரு எழுச்சி கொண்டு வரும் முயற்சியில் இருக்கும் போது நடிகர் சூர்யா வந்து சிக்கிய நிலையில் பல ஆதரவுடன் பல எதிர்ப்புக் குரல் வருவது இயல்பு.

தமிழ்நாட்டில்

ஒரு பக்கம் நடிகர் தயாரிப்பாளர் சூர்யாவிற்கு ஆதரவாக பாமகவிற்கு எதிராக அதிகம் பொங்குகிறவங்க எல்லாம் யாருன்னு பாருங்க 

இட ஒதுக்கீடு குறித்த திமுக அரசு அரசாணை வெளியிட்டப்பட்ட போது அதிமுக தேர்தல் அறிவிப்புக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இட ஒதுக்கீடு மசோதா குறித்த அறிவிப்பை வெளியிட்ட போது அமைதியாக இருந்தவங்க தான். மற்ற இனங்கள் சார்ந்த மக்கள்.


இதில் வேடிக்கை என்னவென்றால் நரிக்குறவர்கள் அரை நாடோடிகள் (பார்வதி ராசாகண்ணு) இவர்கள் வேறு வகை சார்ந்த குறவர் இந்த நபர் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்கள் தான். இப்போது அவர்கள் வளர்ச்சிக்கு அரசாணை வருகிறது.

சமீபத்தில் மராட்டியத்தை  பூர்வமாகக் கொண்ட நாடோடி நரிக்குறவர் அசுவினியின் கோரிக்கையும் எங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்து அட்வணைப் பழங்குடியினராக அறிவியுங்கள் என்பது தான்.  திரைப்பட நடிகர் சூர்யாவுக்கு ஒன்பது கேள்விகள் கேட்டு  பாமக இளைஞரணித் தலைவர் முன்னால் அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு நடிகர் சூர்யாவும் பதில்  எழுதியிருந்தார். இந்தச் சூழ்நிலையில் நடிகர் சூர்யாவை முதலில் எட்டி உதைப்பவருக்கு ரூபாய். ஒரு இலட்சம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக சர்ச்சையான அறிவிப்பை வெளியிட்ட நிலையில் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோர் 24 மணி நேரத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் வன்னியர் சங்கம் சார்பில் நடிகர் சூர்யாவுக்கு சட்ட அறிவிப்பு அதன் தலைவர் பு.தா.அருள்மொழி சார்பில் வழக்கறிஞர் கே.பாலுவால் அனுப்பப்பட்டது. நடிகர் சூர்யாவுக்கு எதிரான இந்த விஷயத்தில் திரையுலகம் அமைதியாக இருப்பதாக பலர் விமர்சித்த நிலையில்


தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபைத்  தலைவர் கட்ரகாட்டா பிரசாத், பாமக இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸுக்கு அனுப்பி வைத்த கடிதத்தில், “நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களால் காண்பிக்கப்பட்ட தங்கள் ஜாதி முத்திரையை நீங்கள் அடையாளப்படுத்தி அதை நீக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தீர்கள். எங்களுடைய தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபையில் உறுப்பினர் நடிகர் சூர்யா, உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்தக் காட்சியை உடனடியாக நீக்கிவிட்டார்.அந்த முத்திரையைப் படத்தில் பயன்படுத்தியதில் தயாரிப்பு நிறுவனத்துக்கோ படத்தின் கதாநாயகன் சூர்யாவுக்கோ எள்ளளவும் தொடர்பு இல்லாத நிலையில் உங்கள் கட்சியினர் நடிகர் சூர்யாவைத் தொடர்ந்து விமர்சித்து வருவது, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. அரசியல், ஜாதி, மத, இன, சார்பின்றி சமூக அக்கறையோடு ஈகைக் குணத்துடன் விளிம்பு நிலை மாணவர்கள் மீது விருட்சமான பார்வை கொண்டு கல்விப் பணியில் கலங்கரை விளக்காய் செயலாற்றி வரும் சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்கும்படி வருத்தத்துடன் வேண்டிக்கொள்கிறோம்” என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்த சமுதாய மக்களில் நடுநிலை மனதுள்ள சிலர் நம்மிடம் பேசுகையில்

"ஆனா,  அற்புதமான படம் தான் வேணும்னே வன்னியர் இனத்தை கொச்சைப்படுத்துற மாதிரி இயக்குநர் த.செ.ஞானவேல் காட்சி வச்சிருக்கிறது கண்டிக்கத்தக்கது. ( அதை மாற்றி விடுவதற்கு முன்னால்)



ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த குடும்பம் காவல்துறையால் பாதிக்கப்பட்ட நிஜமா  நடந்த சம்பவத்தைத்தானே படமா எடுத்திருக்காங்க.. அதில கொடூர காவல் அதிகாரி வீட்டில, வன்னியர் சங்க அக்கினிச்சட்டி இருக்கிற நாள்காட்டி இருக்கு. ஆனா நிஜத்துல அந்தக் காவல் அதிகாரி, வன்னியரே இல்லே.



படத்துக்கு வட்டார மொழி சொல்லிக்கொடுத்த எழுத்தாளர் குணசேகரன், ‘…இயக்குநர் த.செ.ஞானவேல் மனசாட்சியை முற்றும் அடகு வைத்துவிட்டு அப்படி ஒரு காட்சியை வைத்திருக்கிறார்" என்கிறார். அது சரிதான்.

சாதி வெறியுடன் நடந்த சம்பவத்தை அப்படியே படம்பிடிப்பதில் தவறில்லை. ஆனால் தொடர்பில்லாத விசயத்தில் எல்லாம் சாதி, வெறி என திணிப்பது மிகத்தவறு.  சாதி வெறி மாதிரி இது வியாபார வெறி.  சிறப்பான படத்தில் இப்படி தேவையற்ற முறையில் சாதியை புகுத்தியதால் ஒரு கருத்து இந்த வழக்கில் இருளர் இன குடும்பத்துக்கு நீதி கிடைக்கப் போராடிய  காம்ரேடு கோவிந்தராஜ் வன்னியர், அதே போல வழக்கறிஞர் கே.சந்துரு ஐயங்கார்.  இவர்கள் சாதி துறந்த மனிதர்கள். ஆனாலும் இதை எல்லாம் நம்மைச் சொல்ல வைத்துவிட்டார் இயக்குநர் த.செ.ஞானவேல். இந்நிலையில், பாஜக  தலைவர் ஹெச்.ராஜா ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறுகையில்,"ஜெய்பீம் படத்தில் உண்மை சம்பவம் என்று கூறுகிறார்கள் அந்தோணிசாமி என்ற பெயர் மட்டும் குரு மூர்த்தியாக மாற்றியிருக்கிறார்கள்.

அந்த இடத்தில் எந்த காலண்டரும் இருக்கக் கூடாது. காலண்டர் வைத்ததாக வேண்டுமென்றால் இயேசுநாதர் காலண்டரை வைக்கவேண்டும்.

மகாலட்சுமி காலண்டரை ஏன் வைத்தார்கள் இந்து மதம் என்றால் நக்கலாகப் போய்விட்டதா, அந்த மகாலட்சுமி காலண்டரை அப்புறப்படுத்த வேண்டும் இல்லை என்றால் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று எங்களுக்குத் தெரியும் எனக் கூறினார்.அரசியல்வாதிகள் நடிகர்களாக  மாறினால்.

நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறுவதற்கு அவர்களே பாதை அமைத்துக் கொடுப்பதாகவே அர்த்தம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...