மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு தர தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள்
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு தர தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள்
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு தர தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆந்திர பிரதேசம் நெல்லூரில், மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு மற்றும் மறுவாழ்வுக்கான மையத்தின் (சிஆர்சி) ஊழியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் இன்று கலந்துரையாடிய குடியரசுத் துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தினால், அவர்களால் எந்த துறையிலும் சிறந்து விளங்க முடியும். டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில், நமது மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்திய உறுதி மற்றும் கடின உழைப்பு கோடிக்கணக்கான ஊழியர்களை ஊக்குவித்தது. மன உறுதி மூலம், எந்தவித குறைபாட்டையும் மிஞ்ச முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளின் தடையற்ற பயணத்துக்கு, அவர்களுக்கு உகந்த பொது கட்டமைப்பை உருவாக்க வேண்டும். திறன்மேம்பாட்டு பயிற்சி மூலம் மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் சிஆர்சி-யின் பணி பாராட்டத்தக்கது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தனியார் துறை முன்வர வேண்டும்.
இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிளுக்கு உதவி பொருட்களையும் குடியரசுத் துணைத் தலைவர் வழங்கினார்.மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு, மறுவாழ்வு மற்றும் அதிகாரமளித்தலுக்கான ஒருங்கிணைந்த பிராந்திய மையத்தை குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு பார்வையிட்டார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூரில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு, மறுவாழ்வு மற்றும் அதிகாரமளித்தலுக்கான ஒருங்கிணைந்த பிராந்திய மையத்தை குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு பார்வையிட்டார்.
திறன் மேம்பாட்டுப் பிரிவு, ஆரம்பகால நடவடிக்கை மையம் மற்றும் கூட்டுப் பிராந்திய மையத்தின் செயல்பாடுகளையும் குடியரசு துணைத் தலைவர் ஆய்வு செய்தார். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் ஆந்திர மாநில அரசால் அமைக்கப்பட்ட தகவல் மையங்களையும் அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து 100 பயனாளிகளுக்கு உதவிகள் மற்றும் உபகரணங்களை அவர் விநியோகித்தார். மொத்தம் ரூ.32.40 லட்சம் மதிப்பிலான கடன் சான்றிதழ்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
கூட்டத்தினரிடையே உரையாடிய அவர், தற்காலிக வளாகத்தில் செயல்பட்டு வந்த காலத்தில் இருந்தே கூட்டுப் பிராந்திய நிலையத்துடன் தாம் செயலாற்றி வந்ததாகவும், அதன் அடிக்கல் நாட்டு மற்றும் திறப்பு விழாக்களிலும் பங்கேற்றதாகவும் தெரிவித்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் சேவைகள் குறித்து அவர் மிகுந்த திருப்தி தெரிவித்தார்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளிக்கும் துறை ஆகியவற்றின் சேவைகளை அவர் பாராட்டினார். சம வாய்ப்புகளை உருவாக்கி, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்து, சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு அனைவரும் உழைக்க வேண்டும் என்றார் அவர்.
மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் மூலம் சுதந்திரமாக வாழ உதவும் சூழலை உருவாக்க அனைத்து வங்கியாளர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பிற சேவை வழங்குநர்கள் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ளுமாறு திரு நாயுடு கேட்டுக்கொண்டார்.
கருத்துகள்