முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உக்கடம் சின்மயா வித்தியாலயா பள்ளி மாணவி ஆசிரியர் பாலியல் கொடுமையால் தற்கொலை

பாலியல் கொடுமையால் கோயமுத்தூர் மாணவி தற்கொலை மனது கனக்கச்செய்கிற செயல் குற்றவாளி ஆசிரியர். குற்றத்திற்கு துணைபோன பள்ளி நிர்வாகம்.  எவ்வளவு கொடுமை!


ஒரு மாணவி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார் செய்த பின் எப்படி அந்தப் பள்ளி நிர்வாகம் அதைக் கடந்துபோனதோ? கோயமுத்தூர் மாவட்டம், உக்கடம் பகுதியில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவி, சென்ற வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலையான சம்பவத்தில் பள்ளி இயற்பியல் ஆசிரியரான மிதுன் சக்கரவர்த்தி நேற்றுத்தான் கைது செய்யப்பட்டுள்ளார்.

 மாணவியின் பெற்றோர் புகார் மீது விசாரணை செய்த உக்கடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சம்பந்தப்பட்ட குற்றவாளியான இயற்பியலாசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்ற நபர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், போக்சோ சட்டத்தின் இரு பிரிவுகள் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில்  விசாரணை முடிவில் இரவு  கைதானவரை கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்குப் பின் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி உடுமலைப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட. நிலையில்  உரிய நடவடிக்கை எடுக்கு வேண்டி நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளுடன் பெற்றோரும் உறவினர்கள் மாணவியின் வீட்டின் முன்புறம் போராட்டத்தில் ஈடுபட்டு பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காதவரை மாணவியின் பிரேதப் பரிசோதனை செய்த உடலை வாங்க மறுத்து  'ஜஸ்டிஸ் ஃபார் பொன் தாரணி' என்ற கோசத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இவ் வழக்கில் இன்னும் பலரைக் கைது செய்யப்பட வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


பள்ளி மாணவியின் தற்கொலை சம்பவத்தில் சின்மயா பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவானவரைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் கர்நாடக மாநிலத்தின் பெங்களுர் நகரில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து பெங்களூருவிலிருந்து கோயமுததூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு  கொண்டு வரப்படுகிறார்

இந்த பாலியல் கொடுமையானது ஏதோ ஒரு பள்ளியில்,ஒரு மாணவிக்கு நேர்ந்த சாதரணக் குற்றமல்ல மிகவும் கொடூரமான செயல்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பான விளக்கப் படங்கள் ஒவ்வொரு பாடக்குறிப்பேட்டின் அட்டைகளிலும் அச்சிடப்பட்டுள்ளது. அதன் விளக்கத்தை ஒவ்வொரு ஆசிரியரும் குழந்தைகளிடம் கூறுகிறார்கள்.


இதற்கென தனி பாடவேளை எடுத்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி. எல்லா பள்ளிகளிலும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு  கற்பிக்க. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்று குழந்தைகள் கற்றுக்கொள்ள ஏதுவாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அரசால் வழங்கப்படும் நிலையில்

எத்தகைய சூழல்களில் குழந்தைகள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை கூறி, அவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் தைரியமாக கூறலாம் என்றும் அறிவுறுத்தப்படவும் இம்மாதிரியான நிகழ்வுகளில் குழந்தைகள் மீது எந்த தவறும் இல்லை , அவர்கள் எதற்காகவும், யாருக்காகவும் பயப்படத் தேவையில்லை என்பதை தெளிவாக விளக்கம் தந்து பல பள்ளிகளில் நடந்த போதும் 


 இதையெல்லாம் தாண்டி குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான பாலியல் வன்கொடுமைகள் நடப்பதுதான் வேதனை. எதிர்வரும் காலங்களில் மாநில அரசுகளுடன்; மத்தியில் உள்ள அரசு  கலந்தாய்வு செய்து; இன்னும்கடுமையான சட்டங்கள் இயற்ற முன்வர வேண்டும். இது தொடர்பான விசாரணைகளைளை துரிதப்படுத்தி குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்வதிலும் வேகம் காட்டி நீதிமன்றம் மூலம் தக்க தண்டனை பெற்றுத் தருவது காலத்தின்  மிகவும் அவசியமாகும்.  உலகெங்கும் சிறார்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான அநீதியை முற்றாய் வென்றெடுக்க இப்போதும் போராடிக் கொண்டிருப்பதை விட வேறு அவமானம் இல்லை என்பதே உண்மை 

சம்பந்தப்பட்ட பள்ளியின் நிர்வாகம் "பேருந்தில் யாரோ ஒருவர் இடித்துவிட்டது போல் நினைத்துக்கொள்" என்று கடந்த போது எப்படி துடித்துப் போயிருக்கும்?இனி இந்த வாழ்வே வேண்டாம் என்று ஒரு இளம்பெண் முடிவுக்கு வரும்போது மரணம் அந்த பெண்ணுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும், அரசு அமைப்புகளுக்கும் கூட நிகழ்கிறது. 

நாம் இத்தனை பேர் இன்று ஆதங்கம் தெரிவித்திருந்தும் அந்தப் பெண் குழந்தை தனக்கு இழைக்கபப்ட்ட பாலியல் கொடுமைகளுக்கெதிராக தனியே போராடி தோல்வியால் இறுதியாக மரணத்தை தேர்ந்தெடுத்தது.எவ்வளவு பெரிய கொடுமை,வலி,வேதனை! 

இன்னும் எவ்வளவு காலம் கல்விக்கூடங்களை இப்படி பாதுகாப்பற்ற இடங்களாக வைத்துக்கொண்டிருக்க இயலும். பத்மா சேஷாத்ரி, மற்றும் சின்மயா வித்தியாலயா  

இப்படி  பள்ளியில் நடக்கும் பாலியல் கொடுமைகளை வெளியில்,வீட்டில் சொல்லமுடியவில்லை? ஏன் பாலியல் குற்றவாளிகள் அச்சமற்று திரியும் வீதிகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளைப் போல் நடத்தப்படுகின்றனர்? ஏன் அவர்களுக்கு யாருமில்லை? சட்டம்,நீதி அவர்கள் வாழும்போது ஏன் வரவில்லை? 

இப்படி எத்தனையோ தீராத கேள்விகள் உள்ளன. வெறும் சட்டமும்,தண்டனையும் மட்டும் இந்த கொடுமையான குற்றங்களை தடுத்துவிடாது. அவற்றோடு வலுவான உளவியல் ஆதரவும், ஆழமான பாலியல் கல்வியும் தேவை. என் பலரும் குரல் கொடுக்க  

கல்விக்கூடங்களில் இம்மாதிரியான பாலியல் குற்றங்கள்,பாலின ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் சுதந்திரமான, கனிவுமிகுந்த, அதிகாரம் மிக்க அமைப்புகளை ஜனநாயக சக்திகளான நாம் தான் உருவாக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட மாணவ,மாணவியர் அச்சமற்று அந்த அமைப்புகளை அணுகும் சூழல் உருவாக்கப்படவேண்டும். 

உளவியல்,சட்ட உதவிகள் வழங்கப்படவேண்டும். இப்படிப்பட்ட சுதந்திரமான அமைப்புகள் இல்லாத கல்வி நிறுவனங்களுக்கு அரசும் அனுமதி வழங்கக்கூடாது. அவை தொடர்ந்து இயங்குவதையும் உறுதிசெய்ய வேண்டும். உண்மையான கல்விக்கு அடிப்படையான தேவை கண்ணியமும், பாதுகாப்புமான சூழலுமே என்பதை நமது மக்கள் சார்ந்த அரசு அந்த மோசடியான பள்ளிகளின் நிர்வாகம் குறித்துப் புரிந்துகொள்ள

வேண்டும் என்பதே தற்போது உள்ள நிலை.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...