முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை முறைப்படுத்தவும், தனியாரைத் தடை செய்யவும் வாய்ப்பு

மத்திய அரசு சமர்ப்பித்துள்ள மசோதா மூலம் இந்தியா மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீட்டு உலகமே இந்தியாவின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ரகுராம் ராஜனின் கருத்து முக்கியமானதாக உள்ளது.


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை முறைப்படுத்தவும், தனியார் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யவும் திட்டமிட்டு அதற்கான மசோதாவை சமர்ப்பித்துள்ள வேளையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் மற்றும் தமிழ்நாட்டு அரசின் பொருளாதார ஆலோசனை குழுவில் முக்கியப் பங்கு வகிக்கும் ரகுராம் ராஜன் கிரிப்டோகரன்சி குறித்து முக்கியக் கருத்தை முன்வைத்தார்.சர்வதேச கிரிப்டோகரன்சி சந்தையில் தற்போது 6000 த்திற்கும் அதிகமான கிரிப்டோ கரன்சிகள் உள்ளது, இதில் ஒரு சில மட்டுமே தாக்குப்பிடிக்கும். பல கிரிப்டோகரன்சிகளைவாங்குவதற்கு ஆட்கள் உள்ளதால் மட்டுமே  விலை உயர்கிறது சிலருக்கு விபரம் தெரியாத நபர்கள் தற்போதிருக்கும் கிரிப்டோ மோகம், 17 ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்திலிருந்த டூலிப் பூக்கள் மீதான மோகத்தைப் போல. முறைப்படுத்தப்படாத அரசின் கட்டுப்பாடிலில்லாத சிட் பண்டுகள் எப்படி ஆபத்தோ அதுபோலவே முறைப்படுத்தாத கிரிப்டோ நாணயமும்  அரசு கட்டுப்பாடிலில்லாத சீட்டுக் கம்பெனிகள் எப்படி மக்களின் பணத்தைத் திருடி மாயமானார்களோ அதே தான் முறைப்படுத்தாத கிரிப்டோ கரன்சியை வைத்துள்ள முதலீட்டாளர்கள் பாதிக்கும் வாய்ப்பு உண்டு கிரிப்டோ கரன்சிக்கு மதிப்பே இல்லை

என்பதில்லை,!.நிலையான மதிப்ப்பில்லை. இதேபோல் பேமெண்ட், நிதியியல் சேவைகளில் பயன்படுத்தும் கிரிப்டோகரன்சிகள் மதிப்புப் பெற வாய்ப்புள்ளதென்றே கூறலாம். அமெரிக்க கிரிப்டோ சந்தை 2.5 டிரில்லியன் டாலர் பிரச்சனையாக உள்ளது, முழுமையான புரிதலில்லாத காரணத்தால் இதை எப்படி முறைப்படுத்துவது என்பதிலும் குழப்பம். இந்தியாவில் கிரிப்டோ சந்தையை முறைப்படுத்த அரசு கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்திலிருந்து நேரடியாகத் தகவல் பெற்று, கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் பெரியதாக இருக்கும் போது அரசு நேரடியாக ஆய்வு செய்து மக்களுக்கு இது மோசடியான தளமில்லை என்பதை உறுதி செய்யும். அப்போது மக்களின் முதலீடுகள் பாதுகாக்கப்படும். இதற்கு இந்திய அரசு பிளாக்செயின் டெக்னாலஜியை பெரிய அளவில் பயன்படுத்த வேண்டிய நிலை. பிளாக்செயின் டெக்னாலஜி மூலம் பணப் பரிமாற்றத்தை மிகவும் குறைந்த செலவில் அனுப்ப முடியும், குறிப்பாக வெளிநாடுகள் மத்தியிலான பணப் பரிமாற்றத்தை பிளாக்செயின் டெக்னாலஜி மூலம் குறைந்த செலவில் வேகமாக அனுப்ப முடியும் என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் பார்வை கிரிப்டோ சந்தை முதலீடுகள் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் பெரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில், கிரிப்டோ முதலீட்டில் அதிகம் லாபம் கிடைக்கும் நிலையிலும், இந்தியாவில் இருந்து பெருமளவிலான தொகை வெளியேறி உள்ளது கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்திருக்கலாம் என அனுமானமிருக்கிறது.ஆனால் ரிசர்வ வங்கி அளித்துள்ள தரவுகள் அடிப்படையில் கிட்டதட்ட 2 பில்லியன் டாலர் அளவிலான தொகையில் சுமார் 60 சதவீத தொகை வெளிநாட்டு பயணத்தின் வாயிலாகவும், படிப்புக்காகவும் சென்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் கூறுகிறது. இதேபோல் வைப்பு நிதி, தொத்து கொள்முதல், பங்கு மற்றும் பத்திர முதலீடுகளில் செப்டம்பர் மாதம் 765 மில்லியன் டாலர் தொகை குவிந்துள்ளது. இதில் பெரும் பகுதி கிரிப்டோ சந்தைக்குச் சென்றிருக்கலாம் என்பது தான் தற்போது அனுமானம். பிட்காயின் உள்ளிட்ட சில காயின்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 3500 க்கும் மேற்பட்ட கிரிப்டோ கரன்சிகள் இருக்கின்றன. சவுதி அரேபியா மற்றும் சீனாவில் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யப்பட்டது. அனால் கனடா, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் கரன்சி பயன்படுத்த ஒழுங்குமுறை சட்டவிதிகள் உள்ளன. இந்தியாவில் சட்ட விதிமுறைகள் இதுவரை இல்லாத நிலையில் தற்போது மத்திய அரசு கொண்டு வருகிறது. எனவே நாடாளுமன்றக் கமிட்டி கிரிப்டோகரன்சி குறித்து விவாதம் செய்த பின், மசோதா கொண்டு வர பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த் சின்கா தலைமையிலான அமர்வு ஆலோசனை செய்தது. தனியார் கிரிப்டோகரன்சியைக் கட்டுப்படுத்த மசோதா  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை பெற்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இவை நடைமுறைக்கு வந்த பிறகு தனியார் கரன்சிகளை இந்தியாவில் பணமாக மக்கள் பயன்படுத்த முடியாது. ஆனால் ஆர்பிஐ ஒரு டிஜிட்டல் கரன்சியை வெளியிட உள்ளது. அதில் முதலீடு செய்யும் வகையில் சில திட்டங்கள் வரையறுக்கப்படும். தற்போது உலக அளவில் பரவியிருக்கும் பிட்காயின் உள்ளிட்ட சில கிரிப்டோகரன்சிகளை, இந்தியாவைப் பொறுத்தவரையில் அது ஒரு வெளிநாட்டு பணம் என்ற அளவில் அனுமதிக்கப்படும். மேலும் தற்போது கொண்டு வர உள்ள மசோதா, சட்டமாக்கப்பட்ட பின் 90 நாட்களில், ஒருவர் தன்னிடமிருக்கும் கிரிப்டோகரன்சி குறித்த முழு விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இல்லை என்றால் அது, கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சி செய்யும் குற்றமாகக் கருதப்பட்டு அவருக்கு ஏழு வருடம் முதல் பத்து வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, ஆர்பிஐ   அறிமுகப்படுத்த உள்ள கிரிப்டோகரன்சிக்காக காத்திருப்பது நல்லது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். மேலும் மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்த உடனே, பிட்காயின், லித்தியம் உள்ளிட்ட கிரிப்டோகரன்சி மதிப்பு 18 % குறைந்தது. இதில் முதலீடு செய்தவர்கள் வேக வேகமாக இன்று  விற்பனை செய்தனர். எனவே சரிந்து மார்க்கெட் மதிப்பு குறைந்தது.

தனியார் கிரிப்ட்டோ காயின் வகையில்

1 Monero 2 Zcash

3 Decred 4 Horizen

5 Oasis Network 6 Secret

7 Flux 8 Verge

9 Status 10 iExec

11 Mobilecoin 12 Keep Network

13 Pirate chain 14 Dero

15 Phala Network 16 Haven Protocol

17 Dusk Network 18 Firo

19 Veruscoin 20 Bytecoin

21 Beam 22 Apollo currency

23 Pivx 24 Super zero Protocol

25 Oxen 26 Grin

27 Vertcoin 28 Epic Cash

29 Zano 30 Suterusu

31 Navcoin 32 Particl

33 Offshift 34 Bitcoin private

35 Wownero 36 Raze Network

37 Aeon 38 Turtle Coin

39 Crypton 40 Conceal

மேற்கண்ட 40 வகையான தனியார் தொடர்பான கிரிப்டோ கரன்சிகள் தடையாக வாய்ப்புகள் தென்படுவதாக ஒரு தகவல் உலா வருகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த