மத்திய அரசு சமர்ப்பித்துள்ள மசோதா மூலம் இந்தியா மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீட்டு உலகமே இந்தியாவின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ரகுராம் ராஜனின் கருத்து முக்கியமானதாக உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை முறைப்படுத்தவும், தனியார் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யவும் திட்டமிட்டு அதற்கான மசோதாவை சமர்ப்பித்துள்ள வேளையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் மற்றும் தமிழ்நாட்டு அரசின் பொருளாதார ஆலோசனை குழுவில் முக்கியப் பங்கு வகிக்கும் ரகுராம் ராஜன் கிரிப்டோகரன்சி குறித்து முக்கியக் கருத்தை முன்வைத்தார்.சர்வதேச கிரிப்டோகரன்சி சந்தையில் தற்போது 6000 த்திற்கும் அதிகமான கிரிப்டோ கரன்சிகள் உள்ளது, இதில் ஒரு சில மட்டுமே தாக்குப்பிடிக்கும். பல கிரிப்டோகரன்சிகளைவாங்குவதற்கு ஆட்கள் உள்ளதால் மட்டுமே விலை உயர்கிறது சிலருக்கு விபரம் தெரியாத நபர்கள் தற்போதிருக்கும் கிரிப்டோ மோகம், 17 ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்திலிருந்த டூலிப் பூக்கள் மீதான மோகத்தைப் போல. முறைப்படுத்தப்படாத அரசின் கட்டுப்பாடிலில்லாத சிட் பண்டுகள் எப்படி ஆபத்தோ அதுபோலவே முறைப்படுத்தாத கிரிப்டோ நாணயமும் அரசு கட்டுப்பாடிலில்லாத சீட்டுக் கம்பெனிகள் எப்படி மக்களின் பணத்தைத் திருடி மாயமானார்களோ அதே தான் முறைப்படுத்தாத கிரிப்டோ கரன்சியை வைத்துள்ள முதலீட்டாளர்கள் பாதிக்கும் வாய்ப்பு உண்டு கிரிப்டோ கரன்சிக்கு மதிப்பே இல்லை
என்பதில்லை,!.நிலையான மதிப்ப்பில்லை. இதேபோல் பேமெண்ட், நிதியியல் சேவைகளில் பயன்படுத்தும் கிரிப்டோகரன்சிகள் மதிப்புப் பெற வாய்ப்புள்ளதென்றே கூறலாம். அமெரிக்க கிரிப்டோ சந்தை 2.5 டிரில்லியன் டாலர் பிரச்சனையாக உள்ளது, முழுமையான புரிதலில்லாத காரணத்தால் இதை எப்படி முறைப்படுத்துவது என்பதிலும் குழப்பம். இந்தியாவில் கிரிப்டோ சந்தையை முறைப்படுத்த அரசு கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்திலிருந்து நேரடியாகத் தகவல் பெற்று, கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் பெரியதாக இருக்கும் போது அரசு நேரடியாக ஆய்வு செய்து மக்களுக்கு இது மோசடியான தளமில்லை என்பதை உறுதி செய்யும். அப்போது மக்களின் முதலீடுகள் பாதுகாக்கப்படும். இதற்கு இந்திய அரசு பிளாக்செயின் டெக்னாலஜியை பெரிய அளவில் பயன்படுத்த வேண்டிய நிலை. பிளாக்செயின் டெக்னாலஜி மூலம் பணப் பரிமாற்றத்தை மிகவும் குறைந்த செலவில் அனுப்ப முடியும், குறிப்பாக வெளிநாடுகள் மத்தியிலான பணப் பரிமாற்றத்தை பிளாக்செயின் டெக்னாலஜி மூலம் குறைந்த செலவில் வேகமாக அனுப்ப முடியும் என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் பார்வை கிரிப்டோ சந்தை முதலீடுகள் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் பெரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில், கிரிப்டோ முதலீட்டில் அதிகம் லாபம் கிடைக்கும் நிலையிலும், இந்தியாவில் இருந்து பெருமளவிலான தொகை வெளியேறி உள்ளது கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்திருக்கலாம் என அனுமானமிருக்கிறது.ஆனால் ரிசர்வ வங்கி அளித்துள்ள தரவுகள் அடிப்படையில் கிட்டதட்ட 2 பில்லியன் டாலர் அளவிலான தொகையில் சுமார் 60 சதவீத தொகை வெளிநாட்டு பயணத்தின் வாயிலாகவும், படிப்புக்காகவும் சென்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் கூறுகிறது. இதேபோல் வைப்பு நிதி, தொத்து கொள்முதல், பங்கு மற்றும் பத்திர முதலீடுகளில் செப்டம்பர் மாதம் 765 மில்லியன் டாலர் தொகை குவிந்துள்ளது. இதில் பெரும் பகுதி கிரிப்டோ சந்தைக்குச் சென்றிருக்கலாம் என்பது தான் தற்போது அனுமானம். பிட்காயின் உள்ளிட்ட சில காயின்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 3500 க்கும் மேற்பட்ட கிரிப்டோ கரன்சிகள் இருக்கின்றன. சவுதி அரேபியா மற்றும் சீனாவில் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யப்பட்டது. அனால் கனடா, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் கரன்சி பயன்படுத்த ஒழுங்குமுறை சட்டவிதிகள் உள்ளன. இந்தியாவில் சட்ட விதிமுறைகள் இதுவரை இல்லாத நிலையில் தற்போது மத்திய அரசு கொண்டு வருகிறது. எனவே நாடாளுமன்றக் கமிட்டி கிரிப்டோகரன்சி குறித்து விவாதம் செய்த பின், மசோதா கொண்டு வர பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த் சின்கா தலைமையிலான அமர்வு ஆலோசனை செய்தது. தனியார் கிரிப்டோகரன்சியைக் கட்டுப்படுத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை பெற்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இவை நடைமுறைக்கு வந்த பிறகு தனியார் கரன்சிகளை இந்தியாவில் பணமாக மக்கள் பயன்படுத்த முடியாது. ஆனால் ஆர்பிஐ ஒரு டிஜிட்டல் கரன்சியை வெளியிட உள்ளது. அதில் முதலீடு செய்யும் வகையில் சில திட்டங்கள் வரையறுக்கப்படும். தற்போது உலக அளவில் பரவியிருக்கும் பிட்காயின் உள்ளிட்ட சில கிரிப்டோகரன்சிகளை, இந்தியாவைப் பொறுத்தவரையில் அது ஒரு வெளிநாட்டு பணம் என்ற அளவில் அனுமதிக்கப்படும். மேலும் தற்போது கொண்டு வர உள்ள மசோதா, சட்டமாக்கப்பட்ட பின் 90 நாட்களில், ஒருவர் தன்னிடமிருக்கும் கிரிப்டோகரன்சி குறித்த முழு விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இல்லை என்றால் அது, கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சி செய்யும் குற்றமாகக் கருதப்பட்டு அவருக்கு ஏழு வருடம் முதல் பத்து வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, ஆர்பிஐ அறிமுகப்படுத்த உள்ள கிரிப்டோகரன்சிக்காக காத்திருப்பது நல்லது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். மேலும் மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்த உடனே, பிட்காயின், லித்தியம் உள்ளிட்ட கிரிப்டோகரன்சி மதிப்பு 18 % குறைந்தது. இதில் முதலீடு செய்தவர்கள் வேக வேகமாக இன்று விற்பனை செய்தனர். எனவே சரிந்து மார்க்கெட் மதிப்பு குறைந்தது.
தனியார் கிரிப்ட்டோ காயின் வகையில்
1 Monero 2 Zcash
3 Decred 4 Horizen
5 Oasis Network 6 Secret
7 Flux 8 Verge
9 Status 10 iExec
11 Mobilecoin 12 Keep Network
13 Pirate chain 14 Dero
15 Phala Network 16 Haven Protocol
17 Dusk Network 18 Firo
19 Veruscoin 20 Bytecoin
21 Beam 22 Apollo currency
23 Pivx 24 Super zero Protocol
25 Oxen 26 Grin
27 Vertcoin 28 Epic Cash
29 Zano 30 Suterusu
31 Navcoin 32 Particl
33 Offshift 34 Bitcoin private
35 Wownero 36 Raze Network
37 Aeon 38 Turtle Coin
39 Crypton 40 Conceal
மேற்கண்ட 40 வகையான தனியார் தொடர்பான கிரிப்டோ கரன்சிகள் தடையாக வாய்ப்புகள் தென்படுவதாக ஒரு தகவல் உலா வருகின்றன.
கருத்துகள்