இளம் சிறார் குற்றங்களைத் தடுப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகள்
சட்டத்தை மீறும் சிறார்கள் மற்றும் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படுவோருக்காக, இளம் சிறார் நீதி (குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 என்ற தொடக்க சட்டம் இயற்றப்பட்டது. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மத்திய அரசு நிதியுதவி வழங்கப்படும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதனைக் கொண்டு அவர்கள் மனித வளம், திறன் உருவாக்கம், அமைப்பு ரீதியான கவனிப்பு உள்ளிட்ட சேவைகளை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இது தவிர குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள், கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் போன்றவற்றை அமைக்கவும் நிதியுதவி வழங்கப்படுவதாக
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி சுபின் இரானி மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்