முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாடு முழுவதுமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நிலவரம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் தகவல்

நாடு முழுவதுமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நிலவரம்


நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

2014 ஏப்ரல் முதல் இன்று வரை நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் சுமார் 91,287 கிலோமீட்டரில் இருந்து சுமார் 1,40,937 கி.மீ ஆக அதிகரித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுமானத் தரம் மற்றும் பணி முன்னேற்றத்தை கண்காணிக்கவும் சரிபார்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்படுகின்றன. அமைச்சகம் மற்றும் இந்திய சாலைகள் காங்கிரஸ் விவரக்குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள தரங்களின்படி அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் கட்டப்பட்டுள்ளன.


தரம் குறைந்த பணிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அவை திருத்தப்பட்டு விவரக்குறிப்புகளின்படி மீண்டும் அமைக்கப்படுகின்றன. ஒப்பந்தம்/சலுகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தர உத்தரவாதம்/கட்டுப்பாட்டைச் செயல்படுத்துவதற்கான தினசரி மேற்பார்வைக்காக ஆணையத்தின் பொறியாளர்/சுயாதீனப் பொறியாளராக ஆலோசகர்களை நியமிப்பதன் மூலம் இது உறுதி செய்யப்படுகிறது. ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால், தொடர்புடைய நிறுவனங்கள் மீது ஒப்பந்த விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.


2014-15 முதல் 2021-22 நிதியாண்டின் நவம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில், சுமார் 82,058 கிமீ திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, சுமார் 68,068 கிமீ நீள சாலைகளுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அமைச்சகம் பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.சுங்கச் சாவடிகளில் அடிப்படை வசதிகள்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

ஏப்ரல் 1, 2016 அன்று அல்லது அதற்குப் பிறகு, அசாமில் ஒரு சுங்கச் சாவடி, சத்தீஸ்கரில் ஒரு சுங்கச் சாவடி, கர்நாடகாவில் ஒரு சுங்கச் சாவடி, கேராளாவில் நான்கு சுங்கச் சாவடிகள் மற்றும் உத்தரகாண்டில் ஒரு சுங்கச் சாவடி உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள எட்டு சுங்கச் சாவடிகளில் பொது நலன் கருதி பயனர் கட்டண வசூல் ரத்து செய்யப்பட்டது.

மேலும், தேசிய நெடுஞ்சாலைகளின் தற்போதைய கட்டண நீளத்தை மேம்படுத்த ராஜஸ்தானில் ஒரு சுங்கச் சாவடி மற்றும் மத்திய பிரதேசத்தில் ஒரு சுங்கச் சாவடி மூடப்பட்டுள்ளது. மேலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு சுங்கச் சாவடி மூடப்பட்டு, கட்டண நீளம் அருகிலுள்ள சுங்கச் சாவடிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கழிப்பறை வசதிகளை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, டிசம்பர் 13, 2021 நிலவரப்படி, சுங்கச் சாவடிகளுக்கு அருகில் 833 ஆண்கள் மற்றும் 837 பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

சுங்கச் சாவடிககளில் போக்குவரத்து நெரிசலை அகற்றவும், தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யவும், தேசிய நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்ட் டேக் மூலம் தேசிய மின்னணு கட்டண வசூல் அகில இந்தியா அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...