முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய இந்தியாவின் உருவாக்கத்தில் இளைஞர்கள் பங்கு என்ற தலைப்பிலான தேசிய இளைஞர் திருவிழாக் கருத்தரங்கு

 சமுதாயத்துக்கு சேவை ஆற்ற மாணவர்கள் முன்வர வேண்டும் -துணைவேந்தர் மோகன் வேண்டுகோள்


மாணவர்கள் படிப்பு, வேலை, குடும்பம் என்று தம் வாழ்க்கையைக் குறுகிய வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளக்கூடாது. ஏழைகளுக்கு உதவ வேண்டும்.  அதைவிட சமுதாயத்துக்கு சேவை புரிய முன்வர வேண்டும். ஆழ்ந்த அறிவு, கூர்மையான சிந்தனை, ஆக்கப்பூர்வமான பயன்பாடு என்ற மூன்று அம்சங்களையும் பொறியியல் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும். சமுதாயத்துக்குப் பயன்படக்கூடிய புத்தாக்கக் கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.   நாம் இயற்கையைத் தெரிந்துகொண்டதும் அதில் இருந்து கற்றுக் கொண்டதும் மிகவும் குறைவுதான். இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள இன்னமும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. உயிர்களை ஒத்த ஆக்கங்கள் என்று சொல்லப்படும் உயிரனையாக்கத்தில் (BIOMIMETICS) மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.  உள்ளூர் தொழில்நுட்பத்துக்கும் அறிவுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்று புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைகழகத் துணைவேந்தர் பேராசிரியர் ச.மோகன் மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைகழக நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து இன்று(13-01-2022) முற்பகல் காணொலி வழி நடத்திய புதிய இந்தியாவின் உருவாக்கத்தில் இளைஞர்கள் பங்கு என்ற தலைப்பிலான தேசிய இளைஞர் திருவிழாக் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியபோது துணைவேந்தர் மோகன் இவ்வாறு குறிப்பிட்டார்.

சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குனர் திரு.ஜெ.காமராஜ் தலைமையுரை ஆற்றினார். சிந்தனைகள்தான் ஒரு மனிதரை உருவாக்குகின்றன. நாளைக்கு நாம் எப்படி இருப்போம் என்பதை இன்றைய சிந்தனைகளே முடிவு செய்கின்றன. என்வே சிந்தனை நற்சிந்தனையாக, தனக்கும் சமுதாயத்துக்கும் ஒருசேர பலன் அளிக்கும் சிந்தனையாக இருக்க வேண்டும்.  சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களையும் தத்துவத்தையும் மாணவர்கள் படித்தால் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொள்ளலாம் என காமராஜ் தெரிவித்தார்.

கவிஞரும் புதுச்சேரி அகில இந்திய வானொலியின் அறிவிப்பாளருமான திருமிகு உமா மோகன் தனது சிறப்புரையில் இந்திய விடுதலைப் போராட்டம் என்பது சமூகச் சீர்திருத்தம் சார்ந்ததாகவே இருந்தது. பெண்கள் பங்கேற்பு மிகவும் குறிப்பிடத்தக்க அள்வில் இருந்தது. சுயநலம் பார்க்காத தலைவர்களின் தியாகம்தான் நமக்கு சுதந்திர இந்தியாவைப் பெற்றுத் தந்தது.  அதேபோல இன்றைய இளைஞர்கள் சுய நலம் பார்க்காமல் நாட்டு முன்னேற்றத்துக்குப் பாடுபட வேண்டும் என்று உமாமோகன் கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைகழகப் பேராசிரியர் டாக்டர் க. நாகராஜன் தனது சிறப்புரையில் சுவாமி விவேகானந்தரிடம் இருந்து மாணவர்கள் நவீனத்துவச் சிந்தனையையும் மகாகவி பாரதியாரிடம் இருந்து இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்ற இலக்கை நோக்கிய விடாமுயற்சியையும் கற்றுக் கொள்ள வேண்டும். அரவிந்தரிடம் இருந்து அறிவாற்றலையும் ஞானத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  இவற்றோடு பொது நலன் சார்ந்து வாழ்ந்தால் அந்த வாழ்க்கை அர்த்தம் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவித்தார்.புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் தனது வரவேற்புரையில் இந்தியா இளமையான நாடாக இருக்கின்றது. இந்திய மக்கள் தொகையில் 65 சவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இன்றைய இளைஞர்கள் சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047-ஐ இலக்காகக் கொண்டு உழைத்தால் இந்தியா உலகில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்று குறிப்பிட்டார்.


புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.ராஜேந்திரன் தொகுப்புரை வழங்கினார். நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் என்.பி.சுப்ரமணியம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். நிறைவில் கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...