முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய இந்தியாவின் உருவாக்கத்தில் இளைஞர்கள் பங்கு என்ற தலைப்பிலான தேசிய இளைஞர் திருவிழாக் கருத்தரங்கு

 சமுதாயத்துக்கு சேவை ஆற்ற மாணவர்கள் முன்வர வேண்டும் -துணைவேந்தர் மோகன் வேண்டுகோள்


மாணவர்கள் படிப்பு, வேலை, குடும்பம் என்று தம் வாழ்க்கையைக் குறுகிய வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளக்கூடாது. ஏழைகளுக்கு உதவ வேண்டும்.  அதைவிட சமுதாயத்துக்கு சேவை புரிய முன்வர வேண்டும். ஆழ்ந்த அறிவு, கூர்மையான சிந்தனை, ஆக்கப்பூர்வமான பயன்பாடு என்ற மூன்று அம்சங்களையும் பொறியியல் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும். சமுதாயத்துக்குப் பயன்படக்கூடிய புத்தாக்கக் கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.   நாம் இயற்கையைத் தெரிந்துகொண்டதும் அதில் இருந்து கற்றுக் கொண்டதும் மிகவும் குறைவுதான். இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள இன்னமும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. உயிர்களை ஒத்த ஆக்கங்கள் என்று சொல்லப்படும் உயிரனையாக்கத்தில் (BIOMIMETICS) மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.  உள்ளூர் தொழில்நுட்பத்துக்கும் அறிவுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்று புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைகழகத் துணைவேந்தர் பேராசிரியர் ச.மோகன் மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைகழக நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து இன்று(13-01-2022) முற்பகல் காணொலி வழி நடத்திய புதிய இந்தியாவின் உருவாக்கத்தில் இளைஞர்கள் பங்கு என்ற தலைப்பிலான தேசிய இளைஞர் திருவிழாக் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியபோது துணைவேந்தர் மோகன் இவ்வாறு குறிப்பிட்டார்.

சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குனர் திரு.ஜெ.காமராஜ் தலைமையுரை ஆற்றினார். சிந்தனைகள்தான் ஒரு மனிதரை உருவாக்குகின்றன. நாளைக்கு நாம் எப்படி இருப்போம் என்பதை இன்றைய சிந்தனைகளே முடிவு செய்கின்றன. என்வே சிந்தனை நற்சிந்தனையாக, தனக்கும் சமுதாயத்துக்கும் ஒருசேர பலன் அளிக்கும் சிந்தனையாக இருக்க வேண்டும்.  சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களையும் தத்துவத்தையும் மாணவர்கள் படித்தால் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொள்ளலாம் என காமராஜ் தெரிவித்தார்.

கவிஞரும் புதுச்சேரி அகில இந்திய வானொலியின் அறிவிப்பாளருமான திருமிகு உமா மோகன் தனது சிறப்புரையில் இந்திய விடுதலைப் போராட்டம் என்பது சமூகச் சீர்திருத்தம் சார்ந்ததாகவே இருந்தது. பெண்கள் பங்கேற்பு மிகவும் குறிப்பிடத்தக்க அள்வில் இருந்தது. சுயநலம் பார்க்காத தலைவர்களின் தியாகம்தான் நமக்கு சுதந்திர இந்தியாவைப் பெற்றுத் தந்தது.  அதேபோல இன்றைய இளைஞர்கள் சுய நலம் பார்க்காமல் நாட்டு முன்னேற்றத்துக்குப் பாடுபட வேண்டும் என்று உமாமோகன் கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைகழகப் பேராசிரியர் டாக்டர் க. நாகராஜன் தனது சிறப்புரையில் சுவாமி விவேகானந்தரிடம் இருந்து மாணவர்கள் நவீனத்துவச் சிந்தனையையும் மகாகவி பாரதியாரிடம் இருந்து இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்ற இலக்கை நோக்கிய விடாமுயற்சியையும் கற்றுக் கொள்ள வேண்டும். அரவிந்தரிடம் இருந்து அறிவாற்றலையும் ஞானத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  இவற்றோடு பொது நலன் சார்ந்து வாழ்ந்தால் அந்த வாழ்க்கை அர்த்தம் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவித்தார்.புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் தனது வரவேற்புரையில் இந்தியா இளமையான நாடாக இருக்கின்றது. இந்திய மக்கள் தொகையில் 65 சவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இன்றைய இளைஞர்கள் சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047-ஐ இலக்காகக் கொண்டு உழைத்தால் இந்தியா உலகில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்று குறிப்பிட்டார்.


புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.ராஜேந்திரன் தொகுப்புரை வழங்கினார். நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் என்.பி.சுப்ரமணியம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். நிறைவில் கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த