முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளைஞர்களிடம் சேவை உணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது: குடியரசு துணைத்தலைவர்

இளைஞர்களிடம் சேவை உணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது: குடியரசு துணைத்தலைவர்


சமூகசேவையைப் பள்ளிகள் மாணவர்களுக்குக் கட்டாயமாக்க வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் கூறியுள்ளார்

இளம் வயதிலிருந்தே இளைஞர்களிடம் சேவை உணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ள குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இயல்புநிலை திரும்பிய பின்  சமூகசேவையைப் பள்ளிகள் மாணவர்களுக்குக் கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் மன்னானம் என்ற இடத்தில் துறவி சவராவின் 150-வது பிறந்தநாளைக் குறிக்கும்வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு சமூகசேவையை மாணவர்களுக்குக் கட்டாயமாக்குவது மற்றவர்களுடன் மாணவர்களின் கலந்துரையாடலையும் பகிர்தல் மற்றும் கவனம் செலுத்தும் மனப்போக்கையும் மேம்படுத்த உதவும் என்றார். பகிர்தல் மற்றும் பேணுதலின் தத்துவம் தொன்மையான இந்திய கலாச்சாரத்தின் மையம் என்றும் இதனை விரிவாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் திரு நாயுடு வற்புறுத்தினார்.


 நாட்டில் ஒவ்வொருவரும் அவருக்கான சமய நம்பிக்கையைக் கடைப்பிடிக்கவும், அது பற்றி எடுத்துரைக்கவும் உரிமை கொண்டிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத் தலைவர், “உங்களின் சமயத்தைக் கடைப்பிடிக்கும் அதே நேரம் பேச்சிலும், எழுத்திலும் வெறுப்புணர்வை ஏற்படுத்தக் கூடாது” என்றார். மற்ற சமயங்களை கேலி பேசுவது, சமூகத்தில் வேற்றுமைகளை உருவாக்குவது என்ற முயற்சிகளை அவர் நிராகரித்தார்.

வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சும், எழுத்துக்களும் கலாச்சாரத்திற்கு, பாரம்பரியத்திற்கு, மரபுகளுக்கு, அரசியல் சட்ட உரிமைகளுக்கு, நெறிமுறைகளுக்கு எதிராக இருப்பதை எடுத்துரைத்த திரு நாயுடு, இந்தியர்கள் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் மதச்சார்பின்மை இருப்பதாகவும் இந்தியா அதன் கலாச்சாரத்திற்காகவும், பாரம்பரியத்திற்காகவும் உலகம் முழுவதும் மதிக்கப்படுவதாகக் கூறினார்.

 இந்திய கலாச்சார மாண்புகளை இளைஞர்கள் மனதில் பதித்து, பாதுகாத்து மேம்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மற்றவர்களுக்காக வாழ்வது ஒருவருக்கு  ஏராளமான திருப்தியைத் தருவது மட்டுமின்றி அவரது நல்ல செயல்களுக்காக நீண்ட காலத்திற்கு அவரை மக்கள் நினைவுகூரவும் செய்கின்றன என்று கூறினார்.

 துறவி சவராவுக்குப் புகழாரம் சூட்டிய திரு நாயுடு, கேரளாவின் இந்த ஆன்மிக சமூக அடையாளமான தலைவரை அவரின் வாழ்நாளில் மக்கள் துறவியாகக் கருதினர் என்றார்.  19-ம் நூற்றாண்டில் கேரள சமூகத்தின் ஆன்மிக, கல்வி, சமூகம், கலாச்சார துறைகளில் சீர்திருத்தவாதியாக விளங்கிய துறவி சவரா மக்களின் சமூக மறுமலர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார் என்று அவர் கூறினார்.

 தொலைநோக்குப் பார்வை கொண்ட சிந்தனையாளரும், செயற்பாட்டாளரும், சீர்திருத்தவாதியுமான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவால் உருவாக்கப்பட்ட தத்துவமாக அந்தியோதயா இருக்கும் நிலையில் வளர்ச்சியின் பயன்களை நமது சமூக-பொருளாதார ஒழுங்கில் மிகவும் பின்தங்கிய மற்றும் வறுமையுற்ற பெரும்பாலான மக்களின் கடைசி மனிதருக்கும் சென்று சேர்க்க வேண்டும் என்று திரு வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.


 வெளியுறவு இணையமைச்சர் திரு வி முரளீதரன் கேரள அரசின் கூட்டுறவு மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு வி என் வாசவன், முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு உம்மன்சாண்டி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...