புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு ஊழியர்களிடம் இலஞ்ம் கொடுக்காமல் எந்தக் காரியமும் நடக்காது என்ற நிலையில்
கடந்த சில ஆண்டுக்கு முன்னர் திரு கணேஷ் மாவட்ட ஆட்சியராகப் பணி செய்த போது நமது இதழ் ஆசிரியர் தனது நில ஆவணங்கள் கேட்ட நிலையில் அதற்கு அன்றைய நிலையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய பெண் அதிகாரி உடந்தையாக இருந்த நிலையில் ஆவணங்கள் காப்பகத்தில் பணி செய்த ஊழியர் ஒருவர் மற்றும் அவரது கை பானமாக செயல்பட்ட நத்தம் நகர நிலவரித் திட்டம் ஆவணங்கள் பிரிவு டிராப்ட்ஸ் உமென் ஒருவர் ரூ 1,20,000 லஞ்சம் கேட்டு ரூபாய் ஐந்தாயிரம் முன்பணமாக கூட்டு ஊழல் செய்து சிறை சென்ற ஊழியர் மற்றும் அந்த நேர்முக உதவியாளர் வேறு மாவட்டத்திற்கு மாற்றமான நிலையில் நடவடிக்கை இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை எடுத்தது அந்த செய்தி அப்போது ஆங்கில இதழில் வந்த இணைப்பு நமது வாசகர்கள் பார்வைக்கு
அது போலவே தற்போது மாவட்ட ஆவணங்கள் காப்பகத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆவணங்களை வழங்கிய பெண் ஊழியரை பணியிடை நீக்கம் செய்து, தற்போதய மாவட்ட ஆட்சியர் திருமதி கவிதா ராமு உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆவணக் காப்பக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஆவணவங்களின் நகலை பெறுவதற்கு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவின் மீது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விசாரணை மேற்கொண்டு, விண்ணப்பதாரருக்கு நகலை பெற உத்தரவு வழங்கப்படும் என்ற நிலையில், ஆவணக் காப்பகத்தில் பதிவறை உதவியாளராக பணிபுரியும் நாகம்மாள் என்ற பெண் ஊழியர், இலஞ்சம் வெற்றுக்கொண்டு ஆணங்களை வழங்கியதாக புகார் எழுந்தது. மேலும், அவர் லஞ்சம் வாங்குவது போன்ற காணோளிக் காட்சி நேற்று மாலை சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதனால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது. இலஞ்சப் புகாருக்கு உள்ளான பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி கவிதா ராமு உத்தரவின் பேரில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் ஆவண காப்பாக பதிவறை உதவியாளரான நாகம்மாள் இலஞ்சம் வாங்கியது உறுதியானது. இதனை அடுத்து, நாகம்மாளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டார். இருந்த போதிலும் மக்கள் இலஞ்சம் கொடுத்தாவது தங்கள் காரியம் முடிந்தால் சரி என்று நினைப்பது தான் இவர்கள் இப்படி வளரக் காரணமாக இருக்கிறது . மேலும் பலர் இப்படி இலஞ்சம் பெறும் நபர்கள் மீது ஊழல் தடுப்பு துறை மூலம் பிடித்துக் கொடுத்து விட பலர் துணிந்து செயல்பட்டால். இவர்கள் பயம் காரணமாக இலஞ்சம் பெறும் நிலை குறையும். மேலும் தற்போது நல்ல ஆட்சியர் வந்த காரணத்தால் இந்த ஊழல் செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து தடுத்துள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் பணி சிறக்க பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது ..
கருத்துகள்