முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலைமறைவான முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது

முன்னால் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி இன்றிரவு சிறையிலடைக்க வாய்ப்பு?.


அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தனக்கு உதவியதாக காவல்துறையினரிடம் வாக்குமூலம்..!அதிமுகவைச் சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள் தனக்கு உதவியதாக காவல்துறையிடம் இராஜேந்திரபாலாஜி வாக்குமூலமளித்தார். ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூபாய் .3.10 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய நான்கு பேர் மீது ஐந்து பிரிவுகளில் விருதுநகர் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததையடுத்து, தலைமறைவான இராஜேந்திரபாலாஜியை, பல மாநிலங்களிலும் மாவட்டக் குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையிலான 8 தனிப்படையினர் தேடி வந்தனர். அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள், மற்றும் இராஜேந்திர பாலாஜி உறவினர்கள் அவர்கள் செல்போன் எண்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.



600 பேரின் தொலைபேசி சைபர் கிரைம் காவல்துறை சோதனை செய்து வந்ததில் தான் சமீபத்தில் உறவினர் ஒருவருக்கு இராஜேந்திர பாலாஜி போன் செய்துள்ளார். அப்போது அவரின் தொலைபேசி எண் சிக்னல் மூலம் இராஜேந்திர பாலாஜி திருப்பத்தூரிலிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அங்கு காவல்துறை செல்லும் முன் அவர் தலைமறைவானார். ஆனால் இதை சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் .அவரின் காரை சிசிடிவி மூலம் சோதனை செய்து.. அவர் எங்கே செல்கிறார் என்று கண்டுபிடித்து. கடைசியாக கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்திலிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கே ஒரு தனிப்படை சென்று அவரைக் கைது செய்தனர். கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி இன்று  காவல்துறையினரைப் பார்த்ததும் தப்ப முயன்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறையின் வாகனத்தைப் பார்த்ததும் காரில் ஏறித் தப்ப முயன்றார். ஆனால் காவல்துறை அவரை சுற்றி நின்று கொண்டனர். அவரின் கார் அப்படியே வளைக்கப்பட்டதனால் அவரால் எங்கும் செல்ல முடியவில்லை. கடைசியில் காவலர்களிடம் அவர் சரணடையும் நிலை ஏற்பட்டது. அங்கே கைது செய்யப்பட்டவர் இன்று சென்னை அழைத்து வரப்பட இருக்கிறார்.

இதற்கிடையில் இணையதளம் மற்றும் மாவட்ட எஸ்பி மனோகரிடம் புகார் அளித்த 7 பேர், முன்னாள் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், ராஜேந்திரபாலாஜி உதவியாளர் சீனிவாசன், அதிமுக மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ராஜசிம்மன் மற்றும் இருவரிடம் மதுரை சரக டிஜஜி காமினி, எஸ்பி மனோகர் மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையின்ர் விசாரணை நடத்தினர். ராஜேந்திரபாலாஜியுடன் தொடர்பில் இருந்ததாகக் கருதப்படும் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் துணைச் செயலாளர் விக்னேஷ்வரன், கோடியூர் இளம்பெண்கள் பாசறை நகர செயலாளர் ஏழுமலை, தர்மபுரி முன்னாள் அமைச்சரின் உதவியாளர் பொன்னுவேல், கார் ஓட்டுனர் ஆறுமுகம் ஆகியோரை அழைத்து வந்து விசாரித்தனர்.

இராஜேந்திரபாலாஜி ஓசூரிலிருப்பதாக தெரியவந்தது. அங்கும் சென்ற தனிப்படை விசாரித்தது. ஆனால் அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனால் அவர் கர்நாடகா மாநிலத்துக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று தெரியவந்ததனால் தனிப்படை கர்நாடகாவுக்குச் சென்றது. அந்த மாநில காவல்துறையினர் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியில் தங்கியிருந்த இராஜேந்திர பாலாஜியை  இன்று பிற்பகலில் சுற்றி வளைத்தனர். 

பின்னர் அவரைக் கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருதுநகருக்கு அழைத்து வர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் தந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த 2 முன்னாள் அமைச்சர்கள் தனக்கு உதவியதாக காவல்துறையிடம் ராஜேந்திரபாலாஜி வாக்குமூலம் அளித்தார். விருதுநகர் மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி இன்று இரவு சிறையில் அடைக்க உள்ளதாகவும் தகவல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...