பிரபல கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மஹராஜ் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரபல கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மஹராஜ் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது மறைவு ஒட்டுமொத்தக் கலை உலகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
ஒரு ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"உலகம் முழுவதும் இந்திய நடனத்திற்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கிய பண்டிட் பிர்ஜு மஹராஜ் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவு ஒட்டுமொத்தக் கலை உலகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி!"
எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்