முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டிஜிட்டல் பல்கலைக்கழகம்: உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி குறித்து கருத்தரங்கு

 ‘டிஜிட்டல் பல்கலைக்கழகம்: உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு கல்வி அமைச்சகம் ஏற்பாடு


அணுகலை விரிவுபடுத்துதல், தரமான கல்வியை மேம்படுத்துதல், திறனை உருவாக்குதல் மற்றும் டிஜிட்டல் கல்வி சூழலை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கல்வி மற்றும் திறன் வளர்த்தல் துறைக்காக மத்திய பட்ஜெட் 2022-ல் செய்யப்பட்ட அறிவிப்புகள் கவனம் செலுத்துகின்றன.


 மத்திய பட்ஜெட் 2022-ல் அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி சிந்திக்கவும் விவாதிக்கவும், டிஜிட்டல் கல்வி மற்றும் ஆற்றல்மிக்க திறன் என்ற அமிர்த மந்திரத்தின் வாயிலாக தற்சார்பு பற்றிய வலையரங்கிற்கு கல்வி அமைச்சகம் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மற்ற அமைச்சகங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்தன. .


வலையரங்கின் கீழ், ‘டிஜிட்டல் பல்கலைக்கழகம்: உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுதல்’ என்ற தலைப்பிலான அமர்வு பிப்ரவரி 21, 2022 அன்று நடைபெற்றது.



 பிரதம மந்திரி திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட வலையரங்கில் கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கலந்து கொண்டனர். ‘டிஜிட்டல் பல்கலைக்கழகம்: உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வுக்கு திரு கே சஞ்சய் மூர்த்தி, உயர்கல்வி செயலாளர்; மற்றும் திரு கே ராஜாராமன், செயலாளர், தொலைத்தொடர்பு துறை தலைமை வகித்தனர்.

 பிரமல் குழுமத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஸ்வாதி பிரமல், ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் பேராசிரியர் எம் ஜெகதேஷ் குமார் ஆகியோர் அமர்வின் உறுப்பினர்களாக இருந்தனர். அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ரபுத்தே இந்த அமர்வை நெறிப்படுத்தினார்.

 அரசு தனியார் கூட்டு முறையில் விரிவான கல்வித் தொழில்நுட்ப சூழலியலை உருவாக்குதல், டிஜிட்டல் தளம், உள்ளடக்க உருவாக்கம், பயனுள்ள டிஜிட்டல் கற்பித்தல், ஒரே நேரத்தில் மற்றும் வலுவான ஆசிரியப் பயிற்சி, மெய்நிகர் ஆய்வகங்கள் மற்றும் டிஜிட்டல் கற்பித்தல்-கற்றல் மதிப்பீடு உள்ளிட்ட டிஜிட்டல் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான பரந்த அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

 பன்மொழிகளுடன் கூடிய எளிதில் கிடைக்கக்கூடிய கற்றல் மேலாண்மை அமைப்பு, ஈர்க்கக்கூடிய ஆழ்ந்த கற்றல் அனுபவங்களை உருவாக்குதல், வலுவான கற்றல் சமூகங்களை உருவாக்க சக மாணவர்களை இணைத்தல் மற்றும் ஆன்லைன் கல்வியை நேரடி முறையுடன் (ஃபி-ஜிடல்) கலந்து செயல்படுதல் குறித்து உறுப்பினர்கள் வலியுறுத்தினர்தொலைதூரங்களுக்கு தரமான டிஜிட்டல் கல்வியை கொண்டு சேர்க்க ஒரு வகுப்பு- ஒரு சேனல் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்த இணையவழி கருத்தரங்கு

கல்வித்துறையில் மத்திய பட்ஜெட் 2022 அறிவிப்புகளை அமல்படுத்துவது குறித்த இணையவழி கருத்தரங்கிற்கு கல்வி அமைச்சகம் பிப்ரவரி 21-ந் தேதி ஏற்பாடு செய்திருந்தது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

தொலைதூரங்களுக்கு தரமான டிஜிட்டல் கல்வியை கொண்டு சேர்க்க ஒரு வகுப்பு- ஒரு சேனல் திட்டத்தை விரிவுபடுத்துவதே இதன் நோக்கமாகும்.

இது குறித்த அமர்வு, புதுதில்லி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நாகேஸ்வரராவ் தலைமையில் நடைபெற்றது.  தாய்மொழியில்  மின்னணு அம்சங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். 2020-ம் ஆண்டு பிரதமரின் இ-வித்யா திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்தார். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு வகுப்பு, ஒரு சேனல் முன்முயற்சி அனைத்து 12 வகுப்புகளுக்கும் 2020 செப்டம்பர் 1-ந் தேதி தொடங்கப்பட்டது.

  பல்வேறு நிபுணர்கள் கலந்து கொண்ட இந்த அமர்வில் அரசு மற்றும் அரசு அல்லாத அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். கருத்தரங்கின் கடைசி அமர்வுக்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார் தலைமை வகித்தார். திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...