முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் தாக்கல் செய்த 2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சாராம்சம்


தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை மாநில நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று று தாக்கல் செய்தார்.


தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2021 ஆம் ஆண்டு முந்தைய எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக ஆட்சி முதல் பகுதி நிதிநிலை அறிக்கை தாக்கலைத் தொடர்ந்து பிந்தைய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ததையடுத்து தற்போது முதல்வர் மு.க. ஸடாலின் தலைமையிலான திமுக அரசு முழுமையான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது.

அதையொட்டி சட்ட மன்றப் பேரவை வெள்ளிக்கிழமை  சபாநாயகர் அப்பாவு தலைமையில்  கூடியது பேச வாய்ப்பளிக்குமாறு எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி  கே.பழனிசாமி கோரினார்.ஆனால், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு அது குறித்து பரிசீலிப்பதாக சட்டமன்றப் பேரவையில் சபாநாயகர் கூறியதையடுத்து அவையிலிருந்த அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக கூச்சலிட்ட.


அமளிக்கு மத்தியில் நிதிநிலை அறிக்கை அம்சங்களை விளக்கி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசத் தொடங்கினார். காகிதமில்லா  நிதிநிலை அறிக்கை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.


தமிழர் மரபு, பண்பாட்டைக் கருத்தில் கொண்டு, முன்னோர்களை, திராவிடத் தலைவர்களை வணங்கித்  தொடங்குவதாக நிதி அமைச்சர் பேசத் தொடங்கினார்.தமிழக  2022 - 2023 நிதிநிலை அறிக்கை முக்கிய அம்சங்கள்

2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில்:-


மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிடுவது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை உள்ளிட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. விவசாயத்துக்கான நிதிநிலை அறிக்கை தனியாக தாக்கல் செய்யப்பட உள்ளது.


திருக்குறளை மேற்கோள் காட்டி உரையைத் தொடங்கிய நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தின் எதிர்கால சந்ததியின் நலனைக் கருத்தில் கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினார் முதல்வர் மு.க. ஸ்டாலின் என்று பேசினார் அப்போது 


நிதிநிலை அறிக்கை உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், வெளிநடப்புச் செய்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

8 ஆண்டுகளுக்கு பிறகு அரசின் நிதி வருவாய் பற்றாக்குறை குறைகிறது - 


முதல்வரின் தனிப்பட்ட முகவரி குறைதீர் திட்டத்தின் கீழ் 10,01,883 மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது - 

தமிழ்நாடு அரசின் நிதிநிலை வருவாய் பற்றாக்குறை 7 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.


அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியே தமிழக அரசின் இலக்கு.

 ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையால் இந்த ஆண்டில் 20 ஆயிரம் கோடி இழப்பை எதிர்கொள்ள நேரிடும்

தமிழ் மொழியின் தொன்மை, செம்மையை நிலைநாட்டிட நடவடிக்கை

 அகர முதலி உருவாக்கும் திட்டத்திற்கு ரூபாய் .2 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழர்களின் தொன்மையை பறைசாற்ற கீழடி, சிவகலை, கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வு 

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது

தந்தை பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் அச்சிடப்படும்.

 பெரியார் ஈ.வே.ரா எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்து செல்ல பெரியாரின் சிந்தனை அடங்கிய தொகுப்பு 21 இந்திய உலக மொழிகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் வழியில் வெளியிடப்படும். இதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு நிலங்களில் நில அளவைப் பணிகளை எளிதாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க மற்றும்

 நவீன முறையில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரங்கள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதீ துறைக்கு ரூபாய் .7,400 கோடி ஒதுக்கீடு

  பேரிடரை முன்கூட்டியே அறிந்து சொல்ல புதிய தொழில்நுட்பங்களுக்கு ரூபாய் .10 கோடி ஒதுக்கீடு

 சென்னையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூபாய். 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  நீர் வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்க ரூபாய் .3384 கோடி மதிப்பீட்டில் பாசன அமைப்பு

  அணைகளை புனரமைக்கும் திட்டத்திற்கு ரூபாய் .300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  64 பெரிய அணைகளை புனரமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்.

  கால்நடைப் பராமரிப்பு துறைக்கு ரூபாய்.1,315 கோடி நிதி ஒதுக்கீடு

  சென்னைக்கு அருகே தாவரவியல் பூங்கா அமைக்க ரூபாய் .300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..

 இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூபாய்.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களைச் சீரமைக்க ரூபாய்.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  வட்டியில்லா பயிர்கடன் திட்டத்திற்கு ரூபாய்.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 சுற்று சூழல் துறைக்கு ரூபாய்.849 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 பள்ளி கல்வித்துறைக்கு ரூபாய்.36,785 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 உயர்கல்வித் துறைக்கு ரூபாய் .5,568 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 நான் முதல்வன் திட்டம் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் மாணவர்களின் திறன் மேம்படுத்தப்படும்.

 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படும்.

 புதிதாக உருவான 6 மாவட்டங்களில் புதிய மாவட்ட நூலகங்கள் அமைக்கப்படும்.

 அரசு பள்ளிகளை தரம் உயர்த்த பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டம்.

 செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத அரசு ஆதரவு அளிக்கும். 150 நாடுகளைச் சேர்ந்த 2,000 முன்னணி செஸ் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

 19 மாவட்டங்களில் ரூபாய்.1,019 கோடி மதிப்பில் தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.

 பேராசிரியர் க.அன்பழகன் மேம்பாட்டு திட்டம் 7,000 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் - 

 உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்வியைத் தொடர நடவடிக்கை, அந்த மாணவர்களின் கனவை நனவாக்க அரசு உதவும்.

 தமிழக மருத்துவத் துறைக்கு ரூபாய்.17,901 கோடி நிதி ஒதுக்கீடு

 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டத்திற்கு ரூபாய்.2,542 கோடி ஒதுக்கீடு

 அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய்.1000 உதவித்தொகை

 பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்

 தொன்மையான வழிபாட்டு தலங்களை புனரமைக்க ரூபாய்.12 கோடி நிதி ஒதுக்கீடு

 சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களை புனரமைக்க ரூபாய் .12 கோடி நிதி ஒதுக்கீடு

 மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூபாய்.738 கோடி நிதி ஒதுக்கீடு

 எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு ரூபாய்.1,949 கோடி ஒதுக்கீடு

 பராமரிப்பில்லாத சமத்துவபுரங்கள் ரூபாய்.190 கோடி செலவில் சீரமைக்கப்படும்       கள்ளச் சந்தை விற்பனை மூலம் சுமார் 50 சதவீதம் வரையிலான வருமான இழப்பு தமிழக அரசு சந்தித்துள்ளதைப் பார்க்கும் போது அரசியல்வாதிகள், காவல்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையரகம், டாஸ்மாக் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்குக் கட்டாயம் தெரியாமல் இருக்காது என்பது தெளிவாகத் தெரிகிறது.   இந்தக் கள்ள சந்தை விற்பனையில் சட்டவிரோத இயங்கும் மதுபான ஆலைகள் மற்றும் டிஸ்டில்லரிகளால் தயாரிக்கப்படும் மதுபானம், கொள்ளையர்களால் தயாரிக்கப்படும் சாராயம், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கடத்தப்படும் மதுபானம் ஆகியவையும் அடங்கும் எனத் தெரிகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 5402 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது, இதில் ஒவ்வொரு கடைகளிலும் தினமும் 110 முதல் 120 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. 2017-18ஆம் நிதியாண்டில் மதுபான விற்பனை மூலம் 26,797.96 கோடி ரூபாயாகப் பெற்ற வரி வருமானம் 2022-21ல் 33,811.14 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.        ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2021 ஆம் ஆண்டு வரை பிற மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்ட 2.95 லட்சம் லிட்டர் சாராயம், 75,720 லிட்டர் ரெக்டிஃபைட் ஸ்பிரிட் மற்றும் 17.53 லட்சம் ஐஎம்எஃப்எல் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாகச் சுமார் 1.65 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்தப் பிரச்சனையைச் சரி செய்வதன் வாயிலாக எவ்விதமான கட்டண உயர்வோ அல்லது டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை அதிகரிக்காமல் சுமார் 30000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி வருமானத்தைப் பெற்ற முடியும் எனக் கணிக்கப்படுகிறது. இந்தத் தொகையை மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்குப் பெரிய அளவில் பயன்படும். என்பது சாராம்சம்.அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகுமா என அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்கவும் ஓய்வூதியப் பலன்களை வழங்கவும்  சுமார் 19000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரை முன்பு வாசிக்கத் துவங்கிய போது                                                       "காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,

மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;

நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,

வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, 

கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,

பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,

யானை புக்க புலம் போல, 

தானும் உண்ணான், உலகமும் கெடுமே.” என்ற பாடலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவையில் வாசித்தார். அதற்கு அவர் தெரிவித்த கூற்றின்படி தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை வாசித்த போது பதில் கூற அதன் தொடர்ச்சியாக தனது உரை மூலம் தனது தமிழ் புலமை காட்டிய மாநில நிதியமைச்சர் பி. டி .ஆர். பழனிவேல் தியாகராசன்                "வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பிற்

றூங்குங் களிறோ துயருறா - ஆங்கதுகொண்

டூரு மெறும்பிங் கொருகோடி யுய்யுமால்

ஆருங் கிளையோ டயின்று" .

அதாவது யானைக்கு ஒரு வாய் கவளம் சிதறுவது என்பது சாதாரண விஷயம்..ஆனால் அதுவே ஒரு கோடி எறும்புகளுக்கு உணவாகும்..

இதன் மெய்ப்பொருள் அறிந்த பிறகு மீண்டும் நிதிநிலை அறிக்கை வாசிக்க நமது  வாசகர்களுக்கு  விபரம் புரியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...