முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்டியாநத்தம்- புதுப்பட்டி கிராமத்தில் கண்மாயில் நீர்வற்றி அழி கண்மாயில் கிராம மக்கள் மீன் பிடித்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா கண்டியாநத்தம்- புதுப்பட்டி கிராமத்தில் கண்மாயில் நீர்வற்றி அழி கண்மாயில் கிராம மக்கள் மீன் பிடித்தல் நிகழ்வு  நடைபெற்றது


. ஒரு போகம்  விவசாயத் தேவைக்கு  கண்மாய் நீரைப் பயன்படுத்தியதாலும்  கோடைகாலம் தொடங்கியதாலும் கண்மாயில் நீர் வற்றிய நிலையில். கிராம மக்களின் ஒற்றுமையைப் பாதுகாக்கும்.  வகையில்  சுற்றியுள்ள  கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கண்மாயில்  மீன்களைப் பிடித்தனர்.

வில்லியநத்தான் கண்மாய் மற்றும் ஓவியன்கண்மாயில் விவசாயம் செழிக்க  மழை பெய்ய வேண்டி‌ பிராத்திக்கும் வகையில் அழி கண்மாயில்  மீன்பிடித்தல் நிகழ்வு  நடைபெற்றதை முன்னிட்டு கரை மேல் உள்ள மடையில் ஊர்ப்பெரியவர்கள் முன்னிலையில் தேங்காய் உடைத்து சங்கல்ப பூஜை செய்து ஊர் முக்கியஸ்தர் வெள்ளை வீசிய பின்பு சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஆலவயல், அம்மன்குறிச்சி, கேசராபட்டி, வலையப்பட்டி, அஞ்சுபுளிப்பட்டி, மைலாப்பூர், பிடாரம்பட்டி, கொப்பனாப்பட்டி, கொன்னையூர், நாத்துப்பட்டி, தூத்தூர், மனப்பட்டி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்றிணைந்து மீன்பிடிக்கக் குளத்தில் இறங்கினர்.


இதில்  மீன் பிடிக்கப் பயன்படும் ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவை பயன்படுத்தி மீன்களைப் பிடித்தனர். இதில் ஜிலேபி, அயிரை, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன் வகைகள்   கிடைத்தன. மக்கள் அணைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டு சென்றனர் கண்மாய்களில் தற்போது மீன்பிடிக்கும் நேரம் என்பதால் கிராம மக்களும், நகரவாசிகளும் கண்மாய்களை நோக்கிச் செல்கின்றனர். அதிகாலை நேரங்களில் கண்மாயில் பிடிக்கும் மீன்களுக்குப் போட்டி நிலவுகிறது. உயிருடன் கண்மாய் கரையிலேயே விற்கப்படும் மீன்களை கிலோக் கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.


கட்லா, ரோகு, கெண்டை போன்ற வகை மீன்கள் கிலோ ரூ.200 முதல் 400 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. விரால் மீன் ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.1,000 வரை விலை போகின்றன. அயிரை மீன் ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் வரை  வாங்குகின்றனர். 


      பண்டைய வரலாறுகளிலும், இன்றைய காலத்திலும் மீன் பிடிப்பு எல்லா இடங்களிலும் பரவியுள்ளது.      ஆயினும் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து தான் மீன் வகைகளின் அடிப்படையில் மீன் பிடித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.  இதன் பிறகே மீன்பிடிப்புப் பகுதியில் உள்ள மீன் வகைகள், மீன்களின் எண்ணிக்கை போன்றவை அறியப்பட்டு, மீன்களைத் தரம் பிரித்தலில் சிக்கல்கள் நீக்கப்பட்டன.    உள்நாட்டு நீர்வளங்கள் ஆறு, கால்வாய், நதி, வெள்ளச்சமவெளி, நன்செய், கண்மாய், குளம், கடற்கரைக்காயல் மற்றும் நீர்தேக்கங்களாகும். கடல் நீர்தேக்கங்கள் பிடிப்பு மீன் வளத்திற்கு மட்டும் பயன்படுகிறது. ஆனால் உள்நாட்டு நீர் தேக்கங்கள் வளர்ப்பு மற்றும் பிடிப்பு மீன் வளத்திற்குப் பயன்படுகிறது.

இந்தியா உள்நாட்டு பிடிப்பு மீன் வளத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். உள்நாட்டில் உள்ள குளம், குட்டை, ஆறுகள், முகத்துவாரங்கள், சதுப்பு நிலங்கள் ஆகிய இடங்களில் மீன்பிடித்தலை உள்நாட்டு மீன்பிடித்தல் என்கிறோம். விலாங்கு, மிர்கல், கட்லா, ரோக் போன்ற மீன்கள் இவ்வகை மீன் பிடித்தலில் கிடைக்கின்றன. கட்டுமரம், சிறிய படகுகள், டீசல் படகுகள், மிதவைகள், வலைகள் ஆகியவை இவ்வகையில் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு மொத்தம் 30 சதவீதம் மீன் உற்பத்தியாகிறது. நிறைய உள்நாட்டு மீன் தேக்கத்தினால் பொருளாதார அளவில் மீன்வளம் உயர்ந்துள்ளது.


உலகில் சுமார் 500 மில்லியன் ஹெக்டர் உள்நாட்டு நீர் நிலைகள் உள்ளன. இதிலிருந்து வருடத்திற்கு மொத்த மீன் உற்பத்தியில் 40 முதல் 70 சதவீதம் உள்நாட்டு மீன்பிடிப்பாகும். நீர்வாழ் உயிர்களுக்கும் மீன் உற்பத்திக்கும் இடையே உள்ள தொடர்பு மீன்வள உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பதாகும். வெப்பநிலை, கலங்கியநிலை, நீர் அமில-காரத் தன்மை, நீரில் கரையும் ஆக்ஸிஜன், தனித்துள்ள கரியமில வாயு, நீரின் மொத்த அமிலத்தன்மை, மண் வெப்பநிலை, மண் அமில காரத்தன்மை, மன் அங்ககக் கரி. மண் பாஸ்வரம், உப்பின் காரச் சத்து மற்றும் கடலில் பெரிய தாவரத் திறன் இவை அனைத்தும் அடங்கியது தான் நன்னீரியல் மற்றும் ஆற்று நீர் மீன்பிடிப்பு பகுதியின் வழியலகுகளாகும்.மீன்களில் பொதுவாக 60 முதல்  80 விழுக்காடு ஈரப்பதமும், 15 முதல் 24 விழுக்காடு புரதச்சத்தும், 3 முதல் 5 விழுக்காடு கொழுப்புச்சத்தும், 0.4 முதல் 2.0 விழுக்காடு தாது உப்புக்களும் உள்ளன. தாது உப்புக்களைப் பொறுத்த வரையில் சோடியம், பொட்டாஷியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, அயோடின், குளோரின் கந்தகம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரம், துத்தநாகம், கோபால்ட், ஆர்செனிக் மற்றும் ஃபுளோரின் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளன.


தாவர உணவுகளிலிருந்து கிடைக்கும் புரதம் குறைபாடு கொண்ட முட்டை மற்றும் பிற மாமிசங்களை விட மீன்கள் தரமான மாமிசப் புரதங்களை நமக்கு அளிக்கின்றன. மேலும் மீன் இறைச்சியின் கொழுப்புகளில் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் கொழுப்பு இல்லை. இதன் விலையும் ஆடு, கோழி போன்ற பிற இறைச்சியுடன் ஒப்பிடும்போது மலிவாகவே உள்ளது. இதுவும் மீன் பிடித்தல் நடைபெற ஓர் காரணமாகிறது.                             1980 வரை உள்ள காலக்கட்டத்தில் தமிழகத்தின் மக்கள் கடல் மீன்களை வாங்கி உண்பதில்லை. கூவிக்கூவி கடல் மீன்களை விற்பனை செய்யும் நிலையில் யாரும் வாங்க மாட்டார்கள். கண்மாயில் பிடிக்கும் மீன்களை பாதுகாப்பு என்பதால் வாங்கும் மக்கள். தான் அப்போது அதிகமாக இருந்த நிலை.ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது கடல் மீன்களை மட்டுமே உடனுக்குடன் வாங்க மக்கள் காத்திருக்கும் நிலை தான் கட்டுமாவடி போன்ற மீனவக் கிராமங்களில் காண்கிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...