முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்டியாநத்தம்- புதுப்பட்டி கிராமத்தில் கண்மாயில் நீர்வற்றி அழி கண்மாயில் கிராம மக்கள் மீன் பிடித்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா கண்டியாநத்தம்- புதுப்பட்டி கிராமத்தில் கண்மாயில் நீர்வற்றி அழி கண்மாயில் கிராம மக்கள் மீன் பிடித்தல் நிகழ்வு  நடைபெற்றது


. ஒரு போகம்  விவசாயத் தேவைக்கு  கண்மாய் நீரைப் பயன்படுத்தியதாலும்  கோடைகாலம் தொடங்கியதாலும் கண்மாயில் நீர் வற்றிய நிலையில். கிராம மக்களின் ஒற்றுமையைப் பாதுகாக்கும்.  வகையில்  சுற்றியுள்ள  கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கண்மாயில்  மீன்களைப் பிடித்தனர்.

வில்லியநத்தான் கண்மாய் மற்றும் ஓவியன்கண்மாயில் விவசாயம் செழிக்க  மழை பெய்ய வேண்டி‌ பிராத்திக்கும் வகையில் அழி கண்மாயில்  மீன்பிடித்தல் நிகழ்வு  நடைபெற்றதை முன்னிட்டு கரை மேல் உள்ள மடையில் ஊர்ப்பெரியவர்கள் முன்னிலையில் தேங்காய் உடைத்து சங்கல்ப பூஜை செய்து ஊர் முக்கியஸ்தர் வெள்ளை வீசிய பின்பு சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஆலவயல், அம்மன்குறிச்சி, கேசராபட்டி, வலையப்பட்டி, அஞ்சுபுளிப்பட்டி, மைலாப்பூர், பிடாரம்பட்டி, கொப்பனாப்பட்டி, கொன்னையூர், நாத்துப்பட்டி, தூத்தூர், மனப்பட்டி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்றிணைந்து மீன்பிடிக்கக் குளத்தில் இறங்கினர்.


இதில்  மீன் பிடிக்கப் பயன்படும் ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவை பயன்படுத்தி மீன்களைப் பிடித்தனர். இதில் ஜிலேபி, அயிரை, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன் வகைகள்   கிடைத்தன. மக்கள் அணைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டு சென்றனர் கண்மாய்களில் தற்போது மீன்பிடிக்கும் நேரம் என்பதால் கிராம மக்களும், நகரவாசிகளும் கண்மாய்களை நோக்கிச் செல்கின்றனர். அதிகாலை நேரங்களில் கண்மாயில் பிடிக்கும் மீன்களுக்குப் போட்டி நிலவுகிறது. உயிருடன் கண்மாய் கரையிலேயே விற்கப்படும் மீன்களை கிலோக் கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.


கட்லா, ரோகு, கெண்டை போன்ற வகை மீன்கள் கிலோ ரூ.200 முதல் 400 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. விரால் மீன் ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.1,000 வரை விலை போகின்றன. அயிரை மீன் ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் வரை  வாங்குகின்றனர். 


      பண்டைய வரலாறுகளிலும், இன்றைய காலத்திலும் மீன் பிடிப்பு எல்லா இடங்களிலும் பரவியுள்ளது.      ஆயினும் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து தான் மீன் வகைகளின் அடிப்படையில் மீன் பிடித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.  இதன் பிறகே மீன்பிடிப்புப் பகுதியில் உள்ள மீன் வகைகள், மீன்களின் எண்ணிக்கை போன்றவை அறியப்பட்டு, மீன்களைத் தரம் பிரித்தலில் சிக்கல்கள் நீக்கப்பட்டன.    உள்நாட்டு நீர்வளங்கள் ஆறு, கால்வாய், நதி, வெள்ளச்சமவெளி, நன்செய், கண்மாய், குளம், கடற்கரைக்காயல் மற்றும் நீர்தேக்கங்களாகும். கடல் நீர்தேக்கங்கள் பிடிப்பு மீன் வளத்திற்கு மட்டும் பயன்படுகிறது. ஆனால் உள்நாட்டு நீர் தேக்கங்கள் வளர்ப்பு மற்றும் பிடிப்பு மீன் வளத்திற்குப் பயன்படுகிறது.

இந்தியா உள்நாட்டு பிடிப்பு மீன் வளத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். உள்நாட்டில் உள்ள குளம், குட்டை, ஆறுகள், முகத்துவாரங்கள், சதுப்பு நிலங்கள் ஆகிய இடங்களில் மீன்பிடித்தலை உள்நாட்டு மீன்பிடித்தல் என்கிறோம். விலாங்கு, மிர்கல், கட்லா, ரோக் போன்ற மீன்கள் இவ்வகை மீன் பிடித்தலில் கிடைக்கின்றன. கட்டுமரம், சிறிய படகுகள், டீசல் படகுகள், மிதவைகள், வலைகள் ஆகியவை இவ்வகையில் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு மொத்தம் 30 சதவீதம் மீன் உற்பத்தியாகிறது. நிறைய உள்நாட்டு மீன் தேக்கத்தினால் பொருளாதார அளவில் மீன்வளம் உயர்ந்துள்ளது.


உலகில் சுமார் 500 மில்லியன் ஹெக்டர் உள்நாட்டு நீர் நிலைகள் உள்ளன. இதிலிருந்து வருடத்திற்கு மொத்த மீன் உற்பத்தியில் 40 முதல் 70 சதவீதம் உள்நாட்டு மீன்பிடிப்பாகும். நீர்வாழ் உயிர்களுக்கும் மீன் உற்பத்திக்கும் இடையே உள்ள தொடர்பு மீன்வள உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பதாகும். வெப்பநிலை, கலங்கியநிலை, நீர் அமில-காரத் தன்மை, நீரில் கரையும் ஆக்ஸிஜன், தனித்துள்ள கரியமில வாயு, நீரின் மொத்த அமிலத்தன்மை, மண் வெப்பநிலை, மண் அமில காரத்தன்மை, மன் அங்ககக் கரி. மண் பாஸ்வரம், உப்பின் காரச் சத்து மற்றும் கடலில் பெரிய தாவரத் திறன் இவை அனைத்தும் அடங்கியது தான் நன்னீரியல் மற்றும் ஆற்று நீர் மீன்பிடிப்பு பகுதியின் வழியலகுகளாகும்.மீன்களில் பொதுவாக 60 முதல்  80 விழுக்காடு ஈரப்பதமும், 15 முதல் 24 விழுக்காடு புரதச்சத்தும், 3 முதல் 5 விழுக்காடு கொழுப்புச்சத்தும், 0.4 முதல் 2.0 விழுக்காடு தாது உப்புக்களும் உள்ளன. தாது உப்புக்களைப் பொறுத்த வரையில் சோடியம், பொட்டாஷியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, அயோடின், குளோரின் கந்தகம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரம், துத்தநாகம், கோபால்ட், ஆர்செனிக் மற்றும் ஃபுளோரின் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளன.


தாவர உணவுகளிலிருந்து கிடைக்கும் புரதம் குறைபாடு கொண்ட முட்டை மற்றும் பிற மாமிசங்களை விட மீன்கள் தரமான மாமிசப் புரதங்களை நமக்கு அளிக்கின்றன. மேலும் மீன் இறைச்சியின் கொழுப்புகளில் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் கொழுப்பு இல்லை. இதன் விலையும் ஆடு, கோழி போன்ற பிற இறைச்சியுடன் ஒப்பிடும்போது மலிவாகவே உள்ளது. இதுவும் மீன் பிடித்தல் நடைபெற ஓர் காரணமாகிறது.                             1980 வரை உள்ள காலக்கட்டத்தில் தமிழகத்தின் மக்கள் கடல் மீன்களை வாங்கி உண்பதில்லை. கூவிக்கூவி கடல் மீன்களை விற்பனை செய்யும் நிலையில் யாரும் வாங்க மாட்டார்கள். கண்மாயில் பிடிக்கும் மீன்களை பாதுகாப்பு என்பதால் வாங்கும் மக்கள். தான் அப்போது அதிகமாக இருந்த நிலை.ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது கடல் மீன்களை மட்டுமே உடனுக்குடன் வாங்க மக்கள் காத்திருக்கும் நிலை தான் கட்டுமாவடி போன்ற மீனவக் கிராமங்களில் காண்கிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த