தொன்மையான ஹிந்து மதத்திலிருந்து விலகி உருவான பௌத்தம், தோன்றிய மூன்று நூற்றாண்டுகள் கடந்த பின்னர் அசோகரின் முயற்சியில் புத்தம் உலகெங்கும் விரிந்து பரவி வேர்விட்டது.
சாணக்கியனிடம் அறமும் நீதியும் கேட்டறிந்த மௌரியப் பேரரசின் இயந்திரங்கள், அசோகர் காலத்தில் புத்த தர்மத்தை பேணிக்காக்கவும் மதத்தைப் போற்றிப் பரப்பவும் முடுக்கிவிடப்பட்டன. கலிங்கம் வென்ற மாமன்னன், அசோகர் பௌத்தத்திற்கு மதமாற்றம் செய்யும் பணிகளில் தீவிரமாக இயங்கிய நிலைகளில் துறவுநிலை நீங்கி தீவிர மதப்பற்றுக் கொண்ட மன்னனாக வெளிப்படுகிறார்.ஒரே நேரத்தில் ஆட்சிபீடத்தையும் ஆன்மிக பீடத்தையும் அலங்கரித்த இந்திய மாமன்னர் அசோகரின் வரலாறு மட்டுமல்ல,
இந்திய சரித்திரத்தின் ஒரு பகுதியாக தற்போதய ஆப்கானித்தானின் பழைய காந்தாரம் நகரத்தில் பண்டைய கிரேக்கம் மற்றும் இந்தியாவின் பிராகிருத இரு மொழி அசோகரின் கல்வெட்டுகளில்.
கார்கி கல்வெட்டு, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள தட்சசீலம் கல்வெட்டு முதன்மையானது.
பௌத்தர்கள் என்றால் எந்த பௌத்தம் என்ற கேள்வி எழ காரணமாக ஹீனயான பௌத்தமென்பது அசல் பௌத்தம் அது புத்தரைக் கடவுளாக கருதவில்லை. ஆசைகள் துறந்து வாழும் மக்கள் அதில் உருவ வழிபாடு கிடையாது.
ஆனால் மஹாயான பௌத்தம் என்பது ஆரிய வைதீக அந்தணர்களால் புத்தரைக் கடவுளாக்கி சிலை வழிபாடு செய்யும் பௌத்த மதமாகும்.சுவிஷேசம் என்று உலகம் முழுவதும் கிறிஸ்தவத்தை பரப்பும் பாதிரியார்களுக்கு முன்னோடியாக இந்த மஹாயான பௌத்தர்கள் திகழ்ந்தார்கள்.
இந்த மஹாயான பௌத்த மதத்தின் நிறமே "காவி" வண்ணம் தான். இலங்கையில் அங்குள்ள புத்த பிக்குகள் உடை காவி நிறத்தில் தான்.
மஹாயான பௌத்த மதத்தை இலங்கையில் பரப்பவே அசோகரின் வாரிசுகள் அங்கே சென்றனர்.
மஹாயான பௌத்த மதத்தைத் தழுவிய இலங்கை தான் ஈவு இரக்கம் இன்றி லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த வரலாறாக உள்ளது. மஹாயான பௌத்த மதத்தைதான் அம்பேத்கர் இறுதியாக 1956 டிசம்பர் 16 ஆம் தேதி அன்று தழுவ நாள் குறித்திருந்தார்.
ஆனால் டிசம்பர் 6 ஆம் நாளே அம்பேத்கர் அகால மரணமடைந்தார்.
அதாவது மஹாயான பௌத்த மதத்தை தழுவுவதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே அம்பேத்கரின் மரணம் நிகழ்ந்தது.
இந்த மஹாயான பௌத்த மதத்தை தழுவுவதற்கு முன்பே
1799 ஆம் ஆண்டில் ஹிந்து மதத்தில் சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயரின் சட்டத்தால் இணைக்கப்பட்ட ஆரிய வைதீக மதத்தை நீக்க சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை எழுத வாய்ப்பு கிடைத்த அம்பேத்கர் செய்யத்தவறியது தான்
ஆனால் தன்னை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைத்து, ஒரு அந்தணப் பெண்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அம்பேத்கரால் அதை எதிர்த்துச் சட்டம் எழுத துணிவில்லாமல் போனதுதான். வாய்ப்பு தழுவியது. அரசியல் சூழ்நிலையில் தற்போது அசோகருக்கு விழா எடுக்கப்படுகிறது
மயூரி அறக்கட்டளை சார்பில் வீராட் இந்துஸ்தான் சங்கத்தின் பொறுப்பாளரான நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியால் ஏற்பாடு செய்யப்பட்ட சாம்ராட் அசோகர் ஜென்ம உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. அசோகர் மௌரிய வம்ச அரசர். கிமு 304 முதல் கிமு 232 வரை உள்ள காலமாகும். கலிங்கத்துப் போரை வென்று பின் வெறுத்து புத்த மதத்தை தழுவினார். புத்த மதத்தை ஆசியாக் கண்டத்தில் முழுவதும் பரவச் செய்ய முயற்சிகளை மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான புத்த விகார்கள் கட்டினார். இந்தியா என்ற நாடு உருவாகும் முன்பு ஆண்டவர்களில் சிறந்த பேரரசர் இவரது தந்தை பிந்துசாரரின் ஆட்சியின் போது உஜ்ஜயினியின் ஆளுநராகப் பணியாற்றினார். அசோகர் மேற்கே தற்போதய ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் மலைத் தொடரில் இருந்து கிழக்கே தற்போதய வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஆட்சி புரிந்தார்.
தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து வட இந்திய ஒன்றியப் பகுதிகளை ஆட்சி செய்த இவரின் மாகாண தலைநகரங்களாக தக்சசீலமும் உஜ்ஜைனியுமிருந்தன.அசோகர் கலிங்க நாட்டிற்கு (ஒடிசா) எதிராக அழிவுகரமான போரை தொடுத்தார்.கி. மு. 260 ஆம் ஆண்டில் வென்றார். கலிங்கப் போரில் பல உயிர்கள் பலியானதைக் கண்ட அசோகர் கி. மு. 263 ஆம் ஆண்டுல் புத்த மதத்தை தழுவினார் அப்போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறந்தனர். அசோகர் எழுப்பிய தூண்கள் மற்றும் கல்வெட்டுகள், இலங்கை மற்றும் நடு ஆசியாவிற்கு புத்த பிக்குகளை அனுப்பியதுடன் கௌதம புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களில் நினைவுச் சின்னங்களை நிறுவினார்.
அசோகரின் கல்வெட்டுகள் தவிர அவரது வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள அவரது இறப்பிற்குப் பிறகு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டவைகளே சாட்சியாகின்றன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு அசோகவதனம் (திவ்வியவதனத்தின் ஒரு பகுதியாகிய "அசோகரின் கதை") மற்றும் இலங்கை நூல்
மகாவம்சம் உள்ளிட்ட பல, அசோகரின் சிங்க ஸ்தூபி நவீன இந்தியாவின் சின்னமாகிறது. "அசோக மரத்துடன்" தனது பெயர் கொண்டிருந்த தொடர்பைப் பற்றிய இவரது நேசமும் அசோகவதனத்தில் குறிப்பிடப்பட்டது. தனது அவுட்லைன் ஆஃப் ஹிஸ்டரி என்ற நூலில் எச். ஜி. வெல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "வரலாற்றின் பத்திகளில் நிரம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான அரசர்களின் பெயர்கள், அவர்களின் கம்பீரங்கள், கருணைகள், அமைதிகள், அரச மேன்மைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் அசோகரின் பெயரானது பிரகாசிக்கிறது, பிரகாசிக்கிறது, பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது, கிட்டத்தட்ட தனியாக ஒரு நட்சத்திரத்தைப் போல. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
கருத்துகள்