முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கம்யூனிஸ்ட் வழி வந்த இசையமைப்பாளர் தற்போது பாஜக ஆதரவுக் களமாடுவதே விமர்சனம் வரக் காரணம்

ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனத்தின் சார்பில் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகம் வெளியிட்டதில் இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதிய நிலையில் அது சமூகவலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியது. 


அவரது முன்னுரையில், "பிரதமர் மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி இருக்கிறார். முத்தலாக் சட்டம், 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டமும், பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்ததும் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும். இதுபோன்ற மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டுள்ள

இசையமைப்பாளர் இளையராஜாவின் முன்னுரை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  மோடியையும் அம்பேத்காரையும் ஒப்பிடுவது தவறானது என்று கூறி சமூக வலைதளங்களில் இளையராஜாவுக்கு பலரும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.  கருத்திற்கு ஆதரவாகவும் சிலர் பதிவிடுகின்றனர்.

சமீபத்திய  இளையராஜாவின் விவகாரத்தை நிதானமாக யோசிப்பவர்களுக்கு ஒன்று புரியும்.  இது இளையராஜாவின் இசையைப் பற்றியதல்ல., பிரதமர் நரேந்திர மோடியப் பாராட்டி ஒரு முன்னுரையில் எழுதியிருக்கிறார் என்பதே காரணம்.   இளையராஜா அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வியை யாராவது கேட்கலாம்.  அதற்கான பதில்  நம் அனைவருக்கும் தெரியும்.   இது இளையராஜாவின் அரசியல் பற்றியதல்ல என்றால், இந்த விவகாரத்தின் மையப்புள்ளி எது?

இசையமைப்பாளர் இளையராஜா, தனிநபர் எனும் எல்லையைக் கடந்து தமிழ்ப் பண்பாட்டின் ஒரு அங்கமாக மாறிக் கொண்டிருக்கிறார் .  ராஜா ‘இசைஞானி’யாகத் தெரிவது ஏன் - அவர் உருவாக்கும் ஆநின்று என்ற நீண்ட நிகழ்காலம் - இளையராஜா விளைவு - இளையாராஜா நிகழ்வு - நினைவில் மறதியுள்ள மனிதன் - தமிழர்களின் இன்பத்தை வரையறுத்த இளையராஜா இசை:   இப்படியாக இளையராஜா குறித்து  அனைத்தும், இசையின் மூலமாக திரண்டெழும் பண்பாட்டு நிகழ்வையே விளக்குகிறது.  தமிழர்களின் வாழ்வியல் நிகழ்வாக



ஜல்லிக்கட்டு எப்படி ஒரு பண்பாட்டு நிகழ்வாக உருமாறி நிற்கிறதோ, பெரியார் என்ற சொல் எவ்வாறு நிற்கிறதோ, நீத்தோர் கடன் எவ்வாறு இன்றளவும் செயல்படுகிறதோ, ‘தாய்மொழி’ எவ்வாறு தமிழ்ப்பண்பாட்டில் திரண்டு நிற்கிறதோ அதே போன்ற தொரு காலிக் குறிப்பானாக இளையராஜா உருமாறி வருவதையே நாம் அறியலாம்

காலிக்குறிப்பான், பன்முகத்தை செயல்வடிவமாகக் கொண்ட ஒற்றைப் பொதுத்தளம்.  அடையாளங்களால் பிரிந்து நிற்கும் பலரும், இந்த ஒற்றையின் கீழ் திரளவும், தத்தம் பன்மைகளைப் பேசிக் கொள்ளவும் முடிகிறதென்பதே காலிக்குறிப்பான்களின் சிறப்பு.  இதற்காக இக்காலிக்குறிப்பான் செய்கிற தியாகம் பெரிது - நினைவில் மறதியுள்ள மனிதனாக இருப்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.  

இளையராஜா பாடல்கள் எப்படித் தங்கள் ‘பூர்வீக திரைப்பட நினைவுகளை’ மறந்து விட்டு நம்மோடு உறவாடுகின்றனவோ அதே போல, இளையராஜா என்ற நபரும் தனது பூர்வீக சமூக நினைவுகளை மறந்து நிற்கும் பொழுதே, ‘இளையராஜா நிகழ்வு’ நடைபெறத்தொடங்குகிறது.  இப்படித் திரண்டு நிற்கும் நிகழ்வுகள் இல்லாத சமூகம் சிதைந்து போகிறது என்பதே வரலாறு.  அந்த வகையில், இளையராஜா நிகழ்வே நம்மை சமகாலத்தில் ஒரு சமூகமாக உணர வைக்கிறது.

‘இளையராஜா நிகழ்வு’ போன்று பண்பாட்டில் திரண்டெழும் காலிக்குறிப்பான்களின் அரசியல் என்ன என்று நீங்கள் கேட்கலாம்.  அவற்றிற்கென்று தனியே எந்த அரசியலும் இருப்பதில்லை.  அவை, தங்கள் நினைவுகளை மறந்து விட்டே உங்கள் முன் நின்று கொண்டிருப்பதால், அவற்றின் ஞாபகம் காலியாக இருக்கிறது.  அதில் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உங்கள் ஞாபகங்களை இட்டு நிரப்பிக் கொள்ள முடிகிறது.   பன்முகப்பட்ட குழுக்களை ஒற்றை பொதுமையின் கீழ் கொண்டு வருவதற்கு இப்படியான ‘நினைவில் மறதியுள்ளவர்’களைத் தவிர வேறு வழியில்லை என்பதே காலிக்குறிப்பான்களின் அரசியல். 

இப்படியொரு நிகழ்வாகத் திரண்டு நிற்கும் இளையராஜாவின் மூலம், ஒற்றைப் பொதுமைத் தளமொன்றை நிர்மாணிக்க முடியும் என்று தெரிந்த பின்பு நாம் செய்தது என்ன என்பதையே ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும் 


சமத்துவ தமிழ்ச் சமூகத்தைக் கற்பனை செய்யும் திராவிட இயக்கங்கள், கம்யுனிஸ்ட்கள், அடித்தள மக்கள் இயக்கங்கள் இப்படியொரு சாத்தியம் உருவாகி நிற்பதை இந்த நிமிடம் வரை உணரவில்லை.  திராவிட இயக்கங்களில் இவற்றை உணரக்கூடிய நபர்கள் இருப்பார்களா என்பது நமது சந்தேகம்.  இருந்தால், சித்திரை திருவிழா உள்ளிட்ட  நாட்டார் தெய்வங்களையும், சடங்குகளையும் கூட சமரசத்தோடு ஏற்றுக் கொள்ள முன்வரும் கம்யுனிஸ்டுகளால் ‘இளையராஜா நிகழ்வை’ எவ்வித மனச்சாய்வுமின்றி யோசிக்க முடிவதில்லை.  1960 ஆம் ஆண்டுகளில் அரை டிராயர் போட்டு, அவரது சகோதரர் பாவலர் வரதராஜன் உடன்  கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் பாடிய ராசையா வேறு இப்போது உள்ள இளையராஜா என்பது வேறு என்று அவர்களுக்கு யார் சொல்லித்தர முடியுமென்று தெரியவில்லை.  அடித்தள மக்கள் இயக்கங்களிடம் இந்த விஷயத்தில் ஓர் ஆதாரக் கோளாறு இருக்கிறது - அவர்கள் ‘நினைவில் மறதியுள்ள இளையராஜாவை’ பூர்வீகத்தை மறந்த துரோகியாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள்.  ஆனால், உண்மையில் இம்மூன்று இயக்கங்களும் பயன்படுத்திக் கொள்ள முடிகிற வலிமையான பண்பாட்டு நிகழ்வாகவே இளையராஜா எழுந்து நிற்கிறார்.


மத அரசியலோடு, அடிப்படைவாதப் போக்கை பின்பற்றுகிறதென கருதப்படும்  பாரதிய ஜனதா கட்சியும் சரி, அவர்களது பின்புலமான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்குகளும் சரி, அவர்களுக்கு தமிழகத்தில் தேவைப்படுவதெல்லாம் ஓர் அங்கீகாரம் மட்டுமே.  உடனடியான அரசியல் அதிகாரக் கைப்பற்றுதலை அவர்கள் நம்பவில்லை.  அதற்கு முன், தங்கள் மீதான களங்கத்தை அவர்கள் நீக்க விரும்புகிறார்கள்.  இதன் காரணமாகவே, தங்களது சப்தம் மிக அதிகமாகக் கேட்கும் படி ஊடகங்களாகட்டும்.  இதில், தொடர்ச்சியாக நிறையக் கோமாளிகளை அவர்கள் தயாரித்து அனுப்புகிறார்கள்.  அவர்களது தலைவர்களை யெல்லாம், குறைந்தபட்சம் அரசியல் கோமாளிகளாக வேணும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.  நம் சமூகம் ‘கோமாளிகளாக’ ஏற்றுக் கொள்ளவும் தொடங்கிவிட்டது.  இதுவொரு ஆபத்தான அரசியல் விளையாட்டு.  ரஜினிகாந்த், ஜாக்கி சென் போன்றோர் தன்னை ஒரு பக்கம் கோமாளியாகவும் இன்னொரு பக்கம் வீரதீரனாகவும் காட்டி வெற்றி பெற்ற வெகுஜன கதையம்சமான அரசியல்.  

இசையமைப்பாளர் இளையராஜாவின் பெயரில் ஒரு முன்னுரையை வெளியிடுவதன் மூலமும், அதில் பிரதமர் குறித்து சில பாராட்டுரைகளை பரப்புவதன் மூலமும் பாஜக இனியும் அடித்தள மக்களின் முன் விலக்கப்பட்ட அமைப்பல்ல என்பதை நிரூபிக்க விரும்புகிறார்கள்.  அதற்காக இசையமைப்பாளர்   இளையராஜாவைப் பயன்படுத்தியதன் மூலம் இது சாத்தியமாகும் வாய்ப்புகளே அதிகம்.   பக்தி இயக்க காலங்களில்  நிகழ்ந்த சாத்வீக வாதத்தைப் போல 

மாநில  இந்து சமய அறநிலையத்துறையைக் கையில் வைத்திருக்கும் அரசால் இளையராஜா நிகழ்வை விளங்கிக் கொள்ள அல்லது பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை என்றால் அதற்கான மன்மாச்சரியங்களை அவர்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலை.  தங்களது கொள்கை முழக்கங்கள் மறந்து கள்ளழகர் விழாவைக் கூட கொண்டாடத் தொடங்கி விட்ட கம்யுனிஸ்டுகளால் இசையமைப்பாளர் இளையராஜா நிகழ்வை ஏன் கைப்பற்ற முடியவில்லை என்றும் அவர்களே தான் விவாதித்துக் கொள்ள வேண்டும்.  அடித்தள மக்கள் இயக்கங்கள் இளையராஜா நிகழ்வை விளங்கிக் கொள்ளவும், பயன்படுத்திக் கொள்ளவும் தீவிரமான அயோத்திதாசரிய பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.  இதுவெல்லாம் நடந்தால், அடிப்படைவாதச் சிந்தனைகள் தமிழகத்தில் நுழைவதற்கு வாய்ப்பில்லை.  மீறினால், இளையராஜாவும் 63 நாயன்மார்களில்  நந்தனாராக இனி  பெரிய பெரிய புராணங்கள் பேசும் நிலை இசையமைப்பாளர்" இளையரசா முன்னுரை எழுதக் கூட கருத்து சுதந்திரம் தர மறுத்து அவர் மீது வெறுப்பை உமிழும் கருத்தே இல்லாத கருத்து  சுதந்திரப் போராளிகளுக்கு அர்ப்பணம். புறக்கணிக்கப்பட்ட ஜாதிகளின் வளர்ச்சி பிடிக்காதவங்க தான் இளையராசா முன்னுரையில் இப்படி எழுதி விட்டாரே என்று பொங்குகிறார்களோ?

இது இளையராசா முன்னுரைக்கு ஆதரவு பதிவல்ல. நுனிப்புல் மேயும் அவசரக்குடுக்கைகளுக்காக.ஒரு வெளி வராத புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருக்கிறார் என்ற விளம்பரத்திற்காக இசையமைப்பாளர் இளையராசா  மீது வெறுப்பை உமிழ்பவர்கள் எத்தகையவர்கள்

புத்தகம் வரட்டும். புத்தகம் என்ன பேசுகிறது என்று படிப்போம். முன்னுரையிலிருந்து சில பகுதிகளை அந்த புத்தக நிறுவனம் துண்டு துண்டாக வெளியிட்டு இருப்பதை பார்த்து ஒரு முன் கருதுகோளுக்கு வர யாரும் தயாராகவில்லை.

சமீபத்திய ஆண்டுகளாக பாசக, சங் பரிவார் குறித்த ஆய்வுகள், கட்டுரைகள் விமர்சனங்கள் தான் அதிகமாக விற்ற புத்தகங்கள். அருட்கூர்ந்து பிளிப்கார்ட் அமேசானில் சென்று வாங்க வேண்டாம், தேட முயலுங்கள்.

ஆட்சிக்கு வந்த ஓராண்டு முதல்வர்  புத்தகம் வெளியிடுகிறார். அதை காங்கிரஸ் கட்சி  ராகுல் காந்தி கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் பினராயி விசயன் என்று கொண்டாடியது போலவே இந்த நிகழ்வு

ஒப்பீட்டளவில் முத்தலாக் என்ற இசுலாமிய பெண்கள் அடைந்த விடுதலையை சமூக பாதுகாப்பை ஒப்பிட்டு இளையராசா எழுதி இருக்கிறார். இளையராஜா மீநு வெறுப்பை உமிழும் சமூகமே முத்தலாக் சட்டம் குறித்து இசுலாமிய பெண்கள் கருத்தை அறிந்து புத்தகம் வெளியிட்டீர்களா? என்பது எழுவினா 

இசுலாமிய பெண்களுக்கு இருந்த தடைகளை நீக்கிய பாரதிய ஜனதா கட்சி சபரிமலைக்குப் பெண்கள் போக கூடாது என்ற போராட்டத்தில் ஈடுபட்ட போது இரண்டையும் ஒப்பிட்டு எழுதினோமா? என்பதும்  எழு வினா.

75 ஆண்டுகளில் அட்டவணைப் பிரிவு மக்களை அரசியல் அதிகாரத்தில் முழுமையாக அமர்த்தி விடாத சக்திகள் தான் தற்போது வரை முன்னேறியவர்களை  முன்நிறுத்தி பக்கவாட்டில் நிறுத்தி இது நாள் வரை அதிகாரம்  அறியாத கிடைக்காத ஜாதிகளாகத் தேடித் தேடி பதவிகளை வழங்குகிறது என்பதையும்  சிந்தனைக்கு வைத்து. டாக்டர் அம்பேத்கர் சிலைக்கும் பிம்பத்திற்கும் பின்னால்  அவர்கள் ஒழிஞ்சு விளையாடுவது தவிர வேறு இல்லை.

சங் பரிவார்கள் வழியில் அரசியல் இயக்கமாக உள்ள பாரதிய ஜனதா கட்சி அவர்களது கருத்தியலை கையில் எடுத்து  தற்போது அரசியல் செய்கிறார்கள். இது விபரம் அறிந்த அரசியல் புரிந்த பவரை யோசிக்க வைக்கிறது. என்பதே உண்மை நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த