சென்னை ஐஐடியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி
சென்னை ஐஐடியில் உள்ள கேந்தி்ர வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கடந்த மாதம் 24-ந் தேதி கோர்பெவாக்ஸ் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது தவணை தடுப்பூசி இன்று செலுத்தப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டல அதிகாரிகள் உதவியுடன் இது நடைபெற்றது. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள 150 மாணவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இத்தகவலை பள்ளி முதல்வர் திரு மாணிக்கசாமி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்