கர்நாடகா மாநிலத்தில் 545 காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் பணித் தேர்வில் நடந்த முறைகேடுகள்
குறித்து சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரித்து வருகின்ற வழக்கில் கலபுரகியை பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் பிரமுகர் திவ்யா காகரகி உள்பட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தேர்வு முறைகேட்டில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட திவ்யா என்ற நபர் தற்போது 18 நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் மராட்டிய மாநிலம் புனேயில் கைது செய்தனர். அவருடன் சம்பந்தப்பட்ட மேலும் நான்கு பேரும் கைது செய்யப்படட நிலையில் அவரை கைது செய்யும் முன்பு புனேயிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த திவ்யாவை காவல்துறையினர் கைது செய்ய வருவது தெரிந்ததும் அவர் உபயோகப்படுத்திய செல்போனை உடைத்துள்ளார். இருந்த போதிலும் பறிமுதல் செய்தனர். அந்த செல்போனில் சார்பு ஆய்வாளர் தேர்வு முறைகேடு பற்றிய தகவல்கள் இருந்ததால் செல்போனை, திவ்யா உடைத்ததாகத் தெரிகிறது.
மோசடி திவ்யாவுடன் கைதான நான்கு பேரின் செல்போன்களிலிருந்தும் சில முக்கியத் தகவல்கள் அழிக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இதனால் திவ்யா செல்போன், மற்ற 5 பேரின் செல்போன்களில் இருந்த தகவல்களை மீட்டெடுக்கும் முடிவு செய்துள்ளனர். மேலும் முறைகேடு நடந்த பள்ளியிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளையும், தலைமறைவான என்ஜினீயர் மஞ்சுநாத் என்பவர் உதவியுடன் அழித்தது தெரியவந்துள்ளது. அந்தக் காட்சிகளை மறுபடி எடுக்கவும் நடவடிக்கை எடுத்து உள்ள நிலையில் கலபுரகி நகர் ஆலந்தாவிலுள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ள திவ்யாவிடம் நேற்று சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்திய போது
கண்ணீர்விட்டுக் கதறி அழுததாகக் கூறப்படும் நிலையில் அவர் உணவு சாப்பிடாமலிருந்து வருவதாகவும் தகவல். சார்பு ஆய்வாளர் பணிக்கு மறுதேர்வு நடத்த எதிர்ப்புத் தெரிவித்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேற்று பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தியதில் கலந்து கொண்ட பெண்களும் கண்ணீர்விட்டு அழுதனர். ஊழல் மூலம் வேலை நியமனம் பெறலாம் என்பது சிலரது மனநிலை. அதை தடுத்து மறு தேர்வு நேர்மையாக விரைவில் நடக்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.
கருத்துகள்