சென்னை பத்மாவதி நகர் சாலை 'சின்னக் கலைவாணர் விவேக் சாலை' எனப் பெயர் மாற்றம்
காலம்சென்ற நடிகர் விவேக் குடும்பத்தினரின் கோரிக்கை ஏற்று சின்னக் கலைவாணர் விவேக் சாலை என பத்மாவதி நகர் பிரதான சாலையின் பெயர் மாற்றம் செய்து தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது சென்னையில் நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, சின்னக் கலைவாணர் விவேக் சாலை என பெயர் மாற்றப்பட்டது.
மனதில் உறுதி வேண்டும் திரைப்படம் மூலமாக அறிமுகம் ஆன பிறகு
பிரபல நகைச்சுவை நடிகரானவர் விவேக். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள கிராமத்தில் பிறந்தவர் மக்களால் நகைச்சுவை மூலம் நேசிக்கப்பட்ட விவேக் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி கொரானா பரவிய காலத்தில் மரணமடைந்தார். அரசின் தடுப்பூசி போட்டுக் கொண்டு விளம்பர மாடலாக வந்த பிறகு அவரது மறைவு திரையுலகத்தினரையும், மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. மறைந்த முன்னாள் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் மீது பற்றுக் கொண்ட விவேக் சமூக சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் செயல்பட்டு பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி வந்த நிலையில். ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி விவேக் மனைவி அருட்செல்வி மகள் அமிர்தாநந்தினி மற்றும் விவேக் பசுமை கலாம் இயக்கத்தின் நிர்வாகிகள் முருகன், லாரன்ஸ், அசோக் ஆகியோருடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டுமென்று கோரிக்கைக் கடிதம் வழங்கினார்கள்.
அதை ஏற்று முதல்வர் அரசாணை வெளியிடுமாறு உத்தரவிட்ட. நிலையில், விவேக் நினைவாக, அவர் வசித்து வந்த பத்மாவதி நகர் பிரதான சாலை “சின்னக் கலைவாணர் விவேக் சாலை” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நடிகர் விவேக்கின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு, அவரது பெயரை வைக்க அரசாணை வெளியிட முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சின்னக் கலைவாணர் விவேக் சாலையின் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி மே 3 ஆம் தேதி நாளை நடைபெறவுள்ளதென்றார்..
கருத்துகள்