முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தற்கால ஆசிரியர் மாணவர் சிக்கலுக்குறிய காரணிகள்

இறைவனருளால ஆசிரியர்களுக்கு மட்டும்  ஆயிரமாயிரம் குழந்தைகள்!

முறிந்த பிரம்புகள்  அறிந்திருக்கவில்லை தான் தழுவியது ஒரு எதிர்கால மருத்துவரை பொறியாளரை என்று அந்த ஆசிரியரைத் தவிர!..

20 வயதிற்குள் நாம் அதிக முறை  சென்ற கோவில் பள்ளி, தரிசித்த குரு தெய்வம் ஆசிரியர்கள்!…ஒரு நல்ல மாணவன்  பள்ளி மாற்றம் செய்யும்  வேளையில் வகுப்பு நண்பர்களுடன் சேர்ந்து வருந்தியது அந்த ஆசிரியரும் தான்!…கருத்த வண்ணம், பெருத்த உடல், சோடாபுட்டிஅ கண்ணாடி, சுருட்டை முடி, எல்லாவித உருவ அமைப்புகளையும் நாம் ஹீரோவாக பார்த்தது  பள்ளியில் தான்!..                                   என்ற வரிகள் கூறும் உண்மை ..                   உளி கொண்டு செதுக்குவதால்,               வலிகள் என்னவோ சிற்பிக்குத்தான்…உயிரில்லா கற்களுக்கல்ல…        அறிவெனும் ஞான உளிக்கொண்டு நம்மை சிற்பமாக்க   அதிக வலிகளை தாங்கிக்      கொள்வது சிற்பியின் கரங்கள்தானே!. .என்பது வேத வாக்கு..             

           குடும்பமும் பள்ளியும் மாணவர்களுக்குத் தக்க சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும் போதுதான் மாணவர்கள் கல்வியில் நல்ல அடைவினைப் பெறயியலும். இவையிரண்டும் மாணாக்கரது வளர்ச்சிக்கு உதவும் இன்றியமையாத காரணியாகும். ஒரு குழந்தையின் பண்பு தான் குடும்பத்தின் பண்பு. அதன் சமூகத்தின் பண்பு. சமூகம் காலம் காலமாகச் சேகரம் செய்த பண்பை குழந்தைக்கு அளிப்பது குடும்பம், குடும்பம் இல்லாவிட்டால் குழந்தைகள் நற்பண்புகளைப் பெறமுடியாது என்பர் அறிஞர் பெருமக்கள்.ஆசிரியர்கள் மாணவர்கள் உறவென்பது ஆரம்ப கால குருகுல கல்வியின் துவக்கம் இக்கால பாடசாலைக் கல்வி வரையிலும் பின்பற்றப்படும்

ஒரு புனிதமான உறவாகும். அக் கால  மாணாக்கர்கள் குருவினிடத்திற்குச் சென்று குருவிடத்தில் தங்கியிருந்து அவருடன் நெருக்கமான உறவைப் பின்பற்றி வித்தைகள், கல்வி, ஒழுக்க விழுமியங்களைப் பயின்றனர். இது குறிப்பாக மன்னர் அரசராட்சிக் காலங்களில் நடைமுறையில் கண்டது. மகாபாரத இதிகாசத்தின் படி தன் குருவிற்காக ஏகலைவன் தன் பெருவிரலை தற்சணையாக அளித்தான் இவ்வாறு அக்காலத்தில் குரு, சிஸ்யன் உறவு முறை நெருக்கமாக காணப்பட்டமையை

அறியலாம். இது கால ஓட்டத்தில் திண்ணைக் கல்வி முறையாகவும் பின்னர் பாடசாலைக் கல்வியாகவும் மாற்றப்பட்டு தற்போது மெக்காலே முறையில் பின்பற்றப்பட்டு பின்னர் மாற்றமடைந்த போதிலும் ஆசிரியர்கள் மாணவர்கள் உறவென்பது முக்கியப்படுத்தப்பட்டு பின்பற்றப்பட்டே வருகிறது.ஆசிரியர் மாணவன் உறவு நிலை உளவியல் சார்ந்ததாக இருந்தாலும், அது எதார்த்தமானதும் மரியாதை, மதிப்பு மிக்கதாகதாகும்.  ஆசிரியர் மாணவர்களுக்கிடையில் விட்டுக்கொடுப்புக்கள் ஏற்படும் போது முரண்பாடுகள் வீழ்ச்சியடையும் உறவு பலமடையும்.

அத்தோடு சிறப்பான ஆசிரியர் மாணவர் உறவு ஏற்படும் போது அது சிறப்பானதொரு உலகை கட்டியெழுப்ப வழியமைக்கும். பிளட்டோ போன்ற சிறப்பான ஆசான் இல்லை என்றால் அரிஸ்டாட்டில் எனும் சிறந்த நபரைப் பெற்றிருக்க முடியாது. எனவே இவ்வாறான சிறந்த ஆசிரிய மாணவர் உறவை மேலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மாணவர்கள் அனைவரதும் கடமையாகும். அவ்வாறு செயற்பட்டால் எக்காலத்திலும் எவ்வாறான செயற்பாடுகள் ஏற்பட்டாலும் ஆசிரிய மாணவர் உறவில் பிரிவிணையை உண்டாக்கவே முடியாது.     "தாய் பெற்று தந்தை வளர்ந்து வர வில்லை எனில் நாய்பெற்ற செல்வம்", இது பழமொழி தற்போதைய நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவணிடம் முடியை வெட்டுமாறு ஆசிரியர் கூறியதால் ஆத்திரமடைந்த  12 ஆம் வகுப்பு மாணவன் காலி மது பாட்டிலால் பள்ளி ஆசிரியரைக் குத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 

அடுத்ததாக  தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் புத்தகம் கொண்டு வராமல் பள்ளிக்கு வந்த மாணவனை ஆசிரியர் கண்டித்த போது, கத்தியைக் காட்டி மாணவன் மிரட்டிய மிகவும் கொடூரமான சம்பவத்தைத்  தொடர்ந்து  தேவாரம் அரசு மேல்நிலை பள்ளியில் புத்தகம் எடுத்து வராத மாணவனை ஆசிரியர் சற்று கோபமாக கேட்க அதற்கு ஆசிரியர் மீதான தாக்குதலுக்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில். மற்றுமொரு நிகழ்வு வேலூர் மாவட்டம்  தொரப்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் இரும்பு மேஜையை மாணவர்கள் அடித்து உடைத்தது தொடர்பாக வருவாய்க் கோட்டாட்சியர்  விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தமிழகம் முழுவதும் இதுபோன்ற மாணவர்களின் ஒழுங்கீனக் குறைபாடுகளும் அதற்கு பதில்   நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கே வருவதற்கு அச்சமாக இருப்பதாக பல ஆசிரியர்கள் வேதனை தெரிவிகின்றனர்.



இதற்கெல்லாம் காரணம் பாடப் புத்தகங்களைச் சுமக்க வேண்டிய மாணவர்களின் கைகளில் ஆயுதங்களும், செல்போன்களும் தான் பல தீங்குகளுக்குக் காரணமாக மேலும் பெற்றோர்களின் வளர்ப்பில் கண்டிப்பு இல்லை  அதிக செல்வம் கொடுத்து அதிக சுதந்திரம் தந்த காரணமாக ஒழுங்கின்மை ஏற்படுத்துகிறது என்கிற அதிர்ச்சித்  தகவல்கள் தான் சில நல்ல பெற்றோர்களையும், கல்வியாளர்களையும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.     


 மேலும் ஒரு நிகழ்வு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சி அரசு மேல்நிலைபள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.பள்ளி மாணவர்களில் பலரும் தலைமுடியை ஒழுங்காக வெட்டாமல் புள்ளிங்கோ ஸ்டைலில் நீளமாக வைத்திருப்பது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டார். ஊராட்சி தலைவர்  அப்போது ஆசிரியர், பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் பலமுறை தெரிவித்தும் மாணவர்கள் இதுபோன்று வருகின்றனர். எவ்வளவோ எடுத்து கூறியும், எந்தப் பலனும் இல்லை என்று வேதனையுடன் தெரிவிதத நிலையில்

மாணவர்களின் பெற்றோரை வரவழைத்துப் பேசிய ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமி, பள்ளியில் படிக்கும் போது ஒழுக்கத்துடன் வளர்த்தால் தான் நல்ல நிலைக்கு வரமுடியும். இதற்கு பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம் என்று எடுத்துக் கூறியதுடன்.

நீங்கள் சம்மதித்தால் பள்ளி வளாகத்திலேயே முடிதிருத்தும் தொழிலாளர்களை கொண்டு முடி வெட்ட தான் உதவி செய்வதாகவும் தெரிவித்தார். ஊராட்சி மன்ற தலைவரின் முயற்சிக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததையடுத்து, பள்ளி வளாகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டு 300 மாணவர்களின் தலை முடிகள்  வெட்டப்பட்டது. இதில் ஒரு சில மாணவர்கள் முடிவெட்ட விடாமல் அடம் பிடித்த போது, காவல்துறையினரை வரவழைத்து அவர்களை இறுக்கி பிடித்து தலை முடிகளை வெட்டினர். முடிவில், முடி திருத்தம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு குளிர்பானம் கொடுத்தனர்.

இது போல் பல்வேறு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தலைமுடி, நீளமாக வைத்து கொண்டு சுற்றி திரிவது அதிக அளவில் இருந்து வருவதாகும், அந்தந்த பள்ளிகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து சலூன் கடை உரிமையாளர்கள் எப்படி ஒரு பள்ளி மாணவர்கள் இருக்க வேண்டுமோ அப்படி முடி வெட்ட வேண்டும் என அறிவிக்கை அனுப்பவும் நடவடிக்கை தேவை. தென்காசி மாவட்டம்  மேலகரம் கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு அவர்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு சிகை அலங்காரம் செய்து கொடுக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள சலூன் கடைகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை பரவலாக தற்போது பேசப்பட்டு வருகிறது. காலத்திற்கு ஏற்றவாறு மக்கள் தங்களை அப்டேட் செய்து கொள்வது வழக்கமான ஒன்று. இதில் மாணவ, மாணவிகள் ஒன்றும் விதிவிலக்கல்ல.தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

பள்ளி வளாகங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிடத்தில் போதிய தண்ணீர் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறை அமைதியான சூழலில் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் அனைத்து நாட்களிலும் சீருடை அணிந்து தான் பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்களின் சீருடை, சிகை அலங்காரம் போன்றவை தொடர்பாக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.

பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது. ஆசிரியர்கள் கழுத்தில் செயின் அணிந்து இருந்தால் அது வெளியே தெரியாத வகையில் சட்டை பட்டன் போட்டு இருக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் புகை பிடிக்கக்கூடாது. வேறு நபர்கள் புகை பிடிக்கவும் அனுமதிக்கக்கூடாது. மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். இதற்காக உதவி தலைமை ஆசிரியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும்  மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஆலோசனை கூட்டம் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தி பல அறிவுரைகள் வழங்கப்பட்டது. முன்பு       குருகுல முறையில் மாணவர்கள் நல்ல கல்வியை ஒழுக்கம் பண்புகள் நிறைந்த நிலையில் பெற சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் இருந்தது அதனால் தான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை உ.வே.சா  உறவு போன்ற நல் மாணவர்கள் வர ந்ல் ஆசிரியர் தவம் செய்த காலம் அது பொற்காலம். .. அதுபோலவே 1990 வரை ஆசிரியர்கள் மீது மாணவர்கள் மரியாதை மிகுந்த காலம் ஒன்று உண்டு . ஆனால் தற்போது பெற்றோர்கள்  வளர்ப்பில் குறை உண்டு அது குறை என்பது தெரியாமல் வளரும் நிலை .. பல குடும்பப் பெண்கள் தொலைக்காட்சி சீரியல் பாழ்படுத்தி விட  பல ஆண்கள் சாராயம் தான் வாழ்க்கை என வாழ் அது பெற்ற பிள்ளைகள் இதுபோன்ற நீதிநெறி பயிலாத நிலை தான் தற்போது மாணவர்கள் ஆசிரியர்கள் உறவில் விரிசல் வரக் காரணம் அதோடு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மாதாந்திர கூட்டம் சரியாக நடக்கிறதா ?இல்லை என்பதே உண்மை . மேலும் ஆசிரியர்கள் பெறும் ஊதியம் அவர்களை தொழில் அதிபர்கள் போன்ற நிலையில் சொந்த பணிகளுக்கு முக்கியத்துவம் தந்து வேறு உப தொழில் நடத்தும் ஆசிரியர் களுமே இந்தக் குற்றங்களை அதிகமாக காரணமாக அமைகிறது.முற்கால ஆசிரியரின் பணியும், வகிபாகமும் வேறு வகையானது‌.

ஆசிரியர் சமய அறிவில் மிகுந்த தேர்ச்சிப் பெற்றிருந்தனர்.

ஆசிரியர்கள் பெரும்பாலும் துறவிகளாககவே இருந்தனர்.

கல்விக் கற்றலும் பாட ஏற்பாடும் முற்றாகவே சமயம் தழுவியதாக இருந்தன.

கல்வியின் நோக்கம் பெருமளவுக்கு மாணவர்களை அறவழிப்படுத்துவதற்காகவும் அவர்களை ஒழுக்கசீலர்களாக்குவதாகவும் அமைந்தது.

ஆசிரியர்கள் மாணவர்களையும் வகுப்பறையையும் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.  

சமயச் சார்பற்ற கல்வியும் மொழி, இலக்கணம், தருக்கம், மருத்துவம், சோதிடம் துறவிகளான ஆசிரியர்களின் பொறுப்பிலேயே இருந்தது. பண்டைய கல்வி முறையில் இன்று போல் பாடநூல்கள் இருக்கவில்லை. ஆதலின், ஆசிரியர்களே அறிவுப் பெட்டகமாக விளங்கினர். அவர்கள் ஏட்டுச் சுவடிகள் மூலமாகவும் செவிவழியாகவும் பெற்ற அறிவினைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பித்தனர்.

ஆசிரியர் கூறுவதைத் திரும்பக் கூறுதல், மனனம் செய்தல், மனனம் செய்வதை சரிப் பார்த்தல் என்பனவே கற்றல் முறையாகவும் விளங்கின. 

கற்பித்தல் வகுப்பறைக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப் பட்டிருக்கும்.

கற்றலை விட கற்பித்தலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்,

சொற்கள், கூற்றுக்கள் என்பனவற்றை அடிப்படையாக கொண்டே கற்றல் இடம்பெறும்.

கற்பவரின் தனியாள் வேறுபாடு கவனத்திற் கொள்ளப்பட மாட்டாது.தற்கால ஆசிரியர் வகிபாகத்தில்  காணப்படும் குறைபாடுகளையும் சவால்களையும் எதிர்கொள்ள விருத்தி செய்துக் கொள்ள வேண்டிய திறன்களாக பின்வருபவை காணப்படுகின்றது.

தாம் கற்பிக்கும் பாடம் தொடர்பில் அறிவு.

பிள்ளைத் தொடர்பான வளர்ச்சி விருத்தி.

பிள்ளைகள் கற்றுக் கொள்ளும் முறைகள்.

பிள்ளைக்கு எவ்வாறு கற்பித்தல்.

வகுப்பறை முகாமைத்துவம்;

சிறந்த தொடர்பாடல் திறன்.

தம்மை தாமே சுய மதீப்பீடு செய்தல்.

பிற ஆசிரியர்கள் சமூகத்துடனான ஊடாட்டம.

மாணவர்களின் முன்னேற்றங்களை சோதித்தல்.

பல்தரமட்ட கற்பித்தல் முறை

ஆன்லைன் கற்பித்தல் முறை

நவீன தகவல் தொழில்நுட்பமானது இன்றைய மாணவர்கள் கல்வி பெறும் வாய்ப்புகளை நன்கு விரிவுபடுத்தியுள்ளது. 

கணனி உதவியுடனான கல்வி என்னும் நவீன அம்சமானது, பாடசாலைக் கல்வியில் ஆசிரியர்களின் வகிபாகத்தை உறுதி செய்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்காலத்தில் கணனி என்பது எம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் கணனியே பாடநூலை விட முக்கியம் பெறுகின்றதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...