முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரண்டாவது இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டில், டென்மார்க், ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து பிரதமர்களுடன் இணைந்து கலந்துகொண்டார்.

 2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாடு

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டில், டென்மார்க் பிரதமர் மெட்டெ ஃபிரடெரிக்சென், ஐஸ்லாந்து பிரதமர் ஜாக்கப்ஸ்டார்ட்டிர், நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர், சுவீடன் பிரதமர் மக்தலேனா ஆண்டர்சென் மற்றும் பின்லாந்து பிரதமர் சனா மரீன் ஆகியோருடன் இணைந்து கலந்துகொண்டார். 

ஸ்டாக்ஹோமில் 2018-ல் நடைபெற்ற முதலாவது இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டிற்கு பிறகு, இந்தியா – நார்டிக் உறவுகளில் ஏற்பட்டுள்ள  முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய இந்த மாநாடு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, புதுமைகண்டுபிடிப்பு, டிஜிட்டல் மயமாக்கல், மற்றும் பசுமை மற்றும் தூய்மையான வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.

நீடித்த ஆழ்கடல் மேலாண்மைக்கு சிறப்புக் கவனம் செலுத்தும்விதமாக கடல்சார் ஒத்துழைப்புக் குறித்த விவாதங்களும் இடம் பெற்றது. நீல பொருளாதாரத் துறையில், குறிப்பாக, இந்தியாவின் சாகர்மாலா திட்டத்தில் முதலீடு செய்ய வருமாறு நார்டிக் தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

ஆர்டிக் பிராந்தியத்தில் உள்ள நார்டிக் பிராந்தியத்துடன் இந்தியாவின் ஒத்துழைப்புக் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் ஆர்டிக் கொள்கை, இந்தியா – நார்டிக் ஒத்துழைப்பை  ஆர்டிக் பிராந்தியத்திற்கும் விரிவுபடுத்துவதற்கான சிறப்பான கட்டமைப்பை வழங்கியிருப்பதாக பிரதமர்  தெரிவித்தார்.

நார்டிக் நாடுகளின்  நிதி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறும் பிரதமர் அழைப்பு விடுத்தார். 

பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

உச்சி மாநாட்டிற்கு பிறகு கூட்டறிக்கை ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது மேலும் பின்லாந்து பிரதமருடன், பிரதமர் சந்திப்பு

கோபன்ஹேகனில் நடைபெற்ற 2-வது இந்தியா – நார்டிக் உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, பின்லாந்து  பிரதமர் திருமதி சனா மரீன்-ஐ சந்தித்துப் பேசினார்.  இருதலைவர்களும் நேரடியாக சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.

கடந்த மார்ச் 16, 2021-ல் காணொலி வாயிலாக நடைபெற்ற இருதரப்பு மாநாட்டின் முடிவுகளை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருதரப்பிலும் மனநிறைவு தெரிவித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், எதிர்கால செல்போன் தொழில்நுட்பங்கள், தூய்மை தொழில்நுட்பங்கள், மற்றும் ஸ்மார்ட் கிரிடுகள் உள்ளிட்ட புதிய மற்றும் புதிதாக உருவாகும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை  விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.

இந்திய சந்தையில் காணப்படும் ஏராளமான வாய்ப்புகளை  பயன்படுத்தி, குறிப்பாக தொலைத்தொடர்பு கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் உள்ளிட்ட துறைகளில்  பின்லாந்து நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து கூட்டாக தொழில்தொடங்க வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

பல்வேறு மற்றும்  சர்வதேச விவகாரங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளில், மேம்பட்ட ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்தும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. மேலும் ஸ்வீடன் பிரதமருடன், பிரதமர் சந்திப்பு

கோபன்ஹேகனில் நடைபெற்ற 2-வது இந்தியா – நார்டிக் உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்வீடன்  பிரதமர் திருமதி மக்தலேனா ஆண்டர்சென்-ஐ சந்தித்துப் பேசினார்.  இருதலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இந்தியாவும், ஸ்வீடனும் பொதுவான பண்புகள் அடிப்படையில் நீண்டகாலமாக நெருங்கிய நட்புறவைக் கொண்டிருப்பதுடன்; வலுவான வர்த்தகம், முதலீடு மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டு இணைப்புகள்; மற்றும் உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திலும் ஒரே மாதிரியான அணுகுமுறையை  மேற்கொண்டு வருகின்றன. புதுமைக் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், முதலீடு, மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டு ஒத்துழைப்புகள், இந்த நட்புறவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன.  1-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டுக்காக பிரதமர் மோடி 2018-ல் முதன்முறையாக  ஸ்வீடன் சென்ற போது, இருநாடுகளும், விரிவான கூட்டு நடவடிக்கைத் திட்டம் ஒன்றை ஏற்றுக்  கொண்டதுடன், கூட்டு கண்டுபிடிப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையிலும் கையெழுத்திட்டன.

இன்றைய சந்திப்பின்போது, நமது இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருதலைவர்களும் ஆய்வு செய்தனர். தொழில்துறை மாற்றத்திற்கான தலைவர்கள் குழுவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அவர்கள் மனநிறைவு தெரிவித்தனர். இந்தியா – ஸ்வீடன் கூட்டு சர்வதேச முன்முயற்சியால் தான், குறைந்த கார்பன் பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்காக, உலகின் மிகப்பெரிய பசுமை இல்ல வாயுவை வெளியேற்றும் தொழிற்சாலைகளுக்கு வழிகாட்டும் நோக்கில், 2019 செப்டம்பரில் நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்ற செயல்திட்டக் குழுவால், தொழில்துறை மாற்றத்திற்கான தலைவர்கள் குழு அமைக்கப்பட்டது. 16 நாடுகள் மற்றும் 19 நிறுவனங்களுடன்  இந்தக் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை  தற்போது 35-ஆக அதிகரித்துள்ளது.

புதுமை கண்டுபிடிப்பு, பருவநிலை தொழில்நுட்பம், பருவநிலை செயல்பாடு, பசுமை ஹைட்ரஜன், விண்வெளி, பாதுகாப்பு, விமானப்போக்குவரத்து, ஆர்டிக், துருவ ஆராய்ச்சி, நீடித்த சுரங்கப்பணிகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் வர்த்தக – பொருளாதார உறவுகள் குறித்தும் இருதலைவர்களும் விவாதித்தனர்.

பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டது. மேலும் ஐஸ்லாந்து பிரதமருடன். பிரதமர் சந்திப்பு

கோபன்ஹேகனில் நடைபெற்ற 2-வது இந்தியா – நார்டிக் உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐஸ்லாந்து பிரதமர் திருமதி காத்தரின் ஜாகோப்ஸ்டாட்டிர் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஸ்டாக்ஹோமில் ஏப்ரல் 2018-ல் நடைபெற்ற முதலாவது இந்தியா – நார்டிக் உச்சி மாநாட்டின்போது, தாங்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டதை இரு பிரதமர்களும் நினைவு கூர்ந்தனர். மேலும், இரு நாடுகளிடையே தூதரக உறவு ஏற்பட்டதன் 50-வது ஆண்டு நிறைவை இருநாடுகளும் கொண்டாடி வருவதையும் சுட்டிக்காட்டினர்.

புவி வெப்ப எரிசக்தி, நீலப் பொருளாதாரம், ஆர்டிக், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மீன்வளம், உணவு பதப்படுத்துதல், டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.  குறிப்பாக, புவி உள் வெப்ப எரிசக்தித் துறையில், ஐஸ்லாந்து, சிறப்பு நிபுணத்துவம் பெற்றுள்ளதால், இந்தத் துறையில் இருநாட்டு பல்கலைக்கழகங்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து இருநாடுகளும் வலியுறுத்தின.

பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதில், பிரதமர்  ஜாகோப்ஸ்டாட்டிரின் தனிப்பட்ட முயற்சிகளை  பாராட்டிய பிரதமர், இந்த விவகாரத்தில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்தியா – ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்க (EFTA) வர்த்தக பேச்சுவார்த்தைகளும் இந்த விவாதத்தில் இடம் பெற்றது.  பிராந்திய மற்றும் சர்வதேச நிலவரம் குறித்தப் பேச்சுக்களும் இடம் பெற்றன மேலும்பிரதமர் மோடி, நார்வே பிரதமருடன் சந்திப்பு

இந்தியா நார்டிக் இரண்டாவது மாநாட்டுக்கு இடையே கோபன்ஹேகனில் பிரதமர் திரு நரேந்திர மோடி, நார்வே பிரதமர் திரு ஜோனாஸ் கர் ஸ்டோரை சந்தித்து பேசினார். கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நார்வே பிரதமர் திரு ஸ்டோர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதன் முறையாக இரு தலைவர்களும் சந்தித்து கொண்டனர்.


 அப்போது இருதரப்பு உறவில் தற்போதைய நடவடிக்கைகள், எதிர்கால ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு பிரதமர்களும் ஆய்வு மேற்கொண்டனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சூரிய மற்றும் காற்றாலைத் திட்டம், மீன்பிடிப்பு, நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, விண்வெளி ஒத்துழைப்பு, நீண்டகால உள்கட்டமைப்பு முதலீடு, சுகாதாரம் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.

பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் ஏற்பட்ட வளர்ச்சிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். ஐநா பாதுகாப்பு குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ள இந்தியாவும், நார்வேயும், சர்வதேச விவகாரங்களில் பரஸ்பரம் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த