இரண்டாவது இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டில், டென்மார்க், ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து பிரதமர்களுடன் இணைந்து கலந்துகொண்டார்.
2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாடு
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டில், டென்மார்க் பிரதமர் மெட்டெ ஃபிரடெரிக்சென், ஐஸ்லாந்து பிரதமர் ஜாக்கப்ஸ்டார்ட்டிர், நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர், சுவீடன் பிரதமர் மக்தலேனா ஆண்டர்சென் மற்றும் பின்லாந்து பிரதமர் சனா மரீன் ஆகியோருடன் இணைந்து கலந்துகொண்டார்.
ஸ்டாக்ஹோமில் 2018-ல் நடைபெற்ற முதலாவது இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டிற்கு பிறகு, இந்தியா – நார்டிக் உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய இந்த மாநாடு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, புதுமைகண்டுபிடிப்பு, டிஜிட்டல் மயமாக்கல், மற்றும் பசுமை மற்றும் தூய்மையான வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.
நீடித்த ஆழ்கடல் மேலாண்மைக்கு சிறப்புக் கவனம் செலுத்தும்விதமாக கடல்சார் ஒத்துழைப்புக் குறித்த விவாதங்களும் இடம் பெற்றது. நீல பொருளாதாரத் துறையில், குறிப்பாக, இந்தியாவின் சாகர்மாலா திட்டத்தில் முதலீடு செய்ய வருமாறு நார்டிக் தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
ஆர்டிக் பிராந்தியத்தில் உள்ள நார்டிக் பிராந்தியத்துடன் இந்தியாவின் ஒத்துழைப்புக் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் ஆர்டிக் கொள்கை, இந்தியா – நார்டிக் ஒத்துழைப்பை ஆர்டிக் பிராந்தியத்திற்கும் விரிவுபடுத்துவதற்கான சிறப்பான கட்டமைப்பை வழங்கியிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
நார்டிக் நாடுகளின் நிதி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
உச்சி மாநாட்டிற்கு பிறகு கூட்டறிக்கை ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது மேலும் பின்லாந்து பிரதமருடன், பிரதமர் சந்திப்பு
கோபன்ஹேகனில் நடைபெற்ற 2-வது இந்தியா – நார்டிக் உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, பின்லாந்து பிரதமர் திருமதி சனா மரீன்-ஐ சந்தித்துப் பேசினார். இருதலைவர்களும் நேரடியாக சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.
கடந்த மார்ச் 16, 2021-ல் காணொலி வாயிலாக நடைபெற்ற இருதரப்பு மாநாட்டின் முடிவுகளை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருதரப்பிலும் மனநிறைவு தெரிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், எதிர்கால செல்போன் தொழில்நுட்பங்கள், தூய்மை தொழில்நுட்பங்கள், மற்றும் ஸ்மார்ட் கிரிடுகள் உள்ளிட்ட புதிய மற்றும் புதிதாக உருவாகும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.
இந்திய சந்தையில் காணப்படும் ஏராளமான வாய்ப்புகளை பயன்படுத்தி, குறிப்பாக தொலைத்தொடர்பு கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் பின்லாந்து நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து கூட்டாக தொழில்தொடங்க வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
பல்வேறு மற்றும் சர்வதேச விவகாரங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளில், மேம்பட்ட ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்தும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. மேலும் ஸ்வீடன் பிரதமருடன், பிரதமர் சந்திப்பு
கோபன்ஹேகனில் நடைபெற்ற 2-வது இந்தியா – நார்டிக் உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்வீடன் பிரதமர் திருமதி மக்தலேனா ஆண்டர்சென்-ஐ சந்தித்துப் பேசினார். இருதலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்தியாவும், ஸ்வீடனும் பொதுவான பண்புகள் அடிப்படையில் நீண்டகாலமாக நெருங்கிய நட்புறவைக் கொண்டிருப்பதுடன்; வலுவான வர்த்தகம், முதலீடு மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டு இணைப்புகள்; மற்றும் உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திலும் ஒரே மாதிரியான அணுகுமுறையை மேற்கொண்டு வருகின்றன. புதுமைக் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், முதலீடு, மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டு ஒத்துழைப்புகள், இந்த நட்புறவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன. 1-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டுக்காக பிரதமர் மோடி 2018-ல் முதன்முறையாக ஸ்வீடன் சென்ற போது, இருநாடுகளும், விரிவான கூட்டு நடவடிக்கைத் திட்டம் ஒன்றை ஏற்றுக் கொண்டதுடன், கூட்டு கண்டுபிடிப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையிலும் கையெழுத்திட்டன.
இன்றைய சந்திப்பின்போது, நமது இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருதலைவர்களும் ஆய்வு செய்தனர். தொழில்துறை மாற்றத்திற்கான தலைவர்கள் குழுவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அவர்கள் மனநிறைவு தெரிவித்தனர். இந்தியா – ஸ்வீடன் கூட்டு சர்வதேச முன்முயற்சியால் தான், குறைந்த கார்பன் பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்காக, உலகின் மிகப்பெரிய பசுமை இல்ல வாயுவை வெளியேற்றும் தொழிற்சாலைகளுக்கு வழிகாட்டும் நோக்கில், 2019 செப்டம்பரில் நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்ற செயல்திட்டக் குழுவால், தொழில்துறை மாற்றத்திற்கான தலைவர்கள் குழு அமைக்கப்பட்டது. 16 நாடுகள் மற்றும் 19 நிறுவனங்களுடன் இந்தக் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 35-ஆக அதிகரித்துள்ளது.
புதுமை கண்டுபிடிப்பு, பருவநிலை தொழில்நுட்பம், பருவநிலை செயல்பாடு, பசுமை ஹைட்ரஜன், விண்வெளி, பாதுகாப்பு, விமானப்போக்குவரத்து, ஆர்டிக், துருவ ஆராய்ச்சி, நீடித்த சுரங்கப்பணிகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் வர்த்தக – பொருளாதார உறவுகள் குறித்தும் இருதலைவர்களும் விவாதித்தனர்.
பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டது. மேலும் ஐஸ்லாந்து பிரதமருடன். பிரதமர் சந்திப்பு
கோபன்ஹேகனில் நடைபெற்ற 2-வது இந்தியா – நார்டிக் உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐஸ்லாந்து பிரதமர் திருமதி காத்தரின் ஜாகோப்ஸ்டாட்டிர் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஸ்டாக்ஹோமில் ஏப்ரல் 2018-ல் நடைபெற்ற முதலாவது இந்தியா – நார்டிக் உச்சி மாநாட்டின்போது, தாங்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டதை இரு பிரதமர்களும் நினைவு கூர்ந்தனர். மேலும், இரு நாடுகளிடையே தூதரக உறவு ஏற்பட்டதன் 50-வது ஆண்டு நிறைவை இருநாடுகளும் கொண்டாடி வருவதையும் சுட்டிக்காட்டினர்.
புவி வெப்ப எரிசக்தி, நீலப் பொருளாதாரம், ஆர்டிக், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மீன்வளம், உணவு பதப்படுத்துதல், டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர். குறிப்பாக, புவி உள் வெப்ப எரிசக்தித் துறையில், ஐஸ்லாந்து, சிறப்பு நிபுணத்துவம் பெற்றுள்ளதால், இந்தத் துறையில் இருநாட்டு பல்கலைக்கழகங்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து இருநாடுகளும் வலியுறுத்தின.
பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதில், பிரதமர் ஜாகோப்ஸ்டாட்டிரின் தனிப்பட்ட முயற்சிகளை பாராட்டிய பிரதமர், இந்த விவகாரத்தில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்தியா – ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்க (EFTA) வர்த்தக பேச்சுவார்த்தைகளும் இந்த விவாதத்தில் இடம் பெற்றது. பிராந்திய மற்றும் சர்வதேச நிலவரம் குறித்தப் பேச்சுக்களும் இடம் பெற்றன மேலும்பிரதமர் மோடி, நார்வே பிரதமருடன் சந்திப்பு
இந்தியா நார்டிக் இரண்டாவது மாநாட்டுக்கு இடையே கோபன்ஹேகனில் பிரதமர் திரு நரேந்திர மோடி, நார்வே பிரதமர் திரு ஜோனாஸ் கர் ஸ்டோரை சந்தித்து பேசினார். கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நார்வே பிரதமர் திரு ஸ்டோர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதன் முறையாக இரு தலைவர்களும் சந்தித்து கொண்டனர்.
அப்போது இருதரப்பு உறவில் தற்போதைய நடவடிக்கைகள், எதிர்கால ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு பிரதமர்களும் ஆய்வு மேற்கொண்டனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சூரிய மற்றும் காற்றாலைத் திட்டம், மீன்பிடிப்பு, நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, விண்வெளி ஒத்துழைப்பு, நீண்டகால உள்கட்டமைப்பு முதலீடு, சுகாதாரம் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.
பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் ஏற்பட்ட வளர்ச்சிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். ஐநா பாதுகாப்பு குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ள இந்தியாவும், நார்வேயும், சர்வதேச விவகாரங்களில் பரஸ்பரம் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.
கருத்துகள்