முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சட்டவிரோதக் கடன் செயலி முகம் தெரியாத கும்பலின் மோசடி கலந்த அடாவடிகள்

சட்டவிரோத கடன் செயலி முகம் தெரியாத கும்பலின் மோசடி கலந்த அடாவடிகள். ரூ.2,500 கடன் கொடுத்து பின்னர் ரூ.35,000 கேட்டு மிரட்டல்

சட்டவிரோத கடன் செயலி மூலமாக பெற்ற ரூ.2,500 கடனுக்கு, ரூ.35,000 கேட்டு ஆன்லைன் கடன் மோசடி கும்பல் மிரட்டியுள்ளது. பணத்தைக் கட்டாததால் பணம் பெற்றவரின் குடும்பத்தினரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டியுள்ளது அந்தக் கும்பல்.


சட்டவிரோத கடன் செயலி மூலம் கடன் கொடுத்த கும்பல், பணத்தை திருப்பி செலுத்தாததால் பணம் பெற்றவரின் மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவரது நம்பர்களுக்கும் அனுப்பி மிரட்டியுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியருக்கு அவசரமாக ரூ.2,500 பணம் தேவைப்பட்டுள்ளது. அப்போது நொடியில் பணம் கிடைக்குமென சமூகவலைத்தளங்களில் வந்த விளம்பர லிங்கினைப் பார்த்து சட்டவிரோத கடன் செயலியான ' kreditBee' என்ற கடன் செயலியைத் தரவிறக்கம் செய்யும் பொது செல்போனில் உள்ள தகவல்களை எடுப்பதற்கான பல்வேறு அனுமதிகளைக் கோரியுள்ளது. அந்த அனுமதியைக் கொடுக்காவிட்டால் செயலியைத் தரவிறக்கம் செய்ய முடியாததால் அனைத்திற்கும் அவர் அனுமதி அளித்துள்ளார். அதன் பிறகு ரூ.2,500 கடன் கேட்டு அந்த செயலியில் விண்ணப்பித்துள்ளார்.


விண்ணப்பித்த உடனே பணம் வரும் என கூறப்பட்ட நிலையில் பணம் வராததால் அவர் ஏமாற்றமடைந்துள்ளார். இந்தநிலையில் ஒரு வாரத்துக்கு பின்னர் மாநகராட்சி ஊழியருக்கு வாட்ஸ்அப் மூலமாக வடமாநில கும்பல் ஒன்று போன் செய்துள்ளது. 'தாங்கள் பெற்ற ரூ.2,500 கடன் பணத்தை குறித்த காலத்துக்குள் திருப்பி செலுத்ததால் ரூ.1000 வட்டியுடன் சேர்ந்து உடனடியாகச் செலுத்துமாறு தெரிவித்துள்ளது.

ஆனால், தனக்கு பணம் வரவில்லை என மாநகராட்சி ஊழியர் கூறியுள்ளார். தங்கள் பணத்தை அனுப்பிவிட்டதாக கூறிவிட்டு என்னும் 10 நிமிடங்களில் பணத்தை நாங்கள் அனுப்பும் லிங்க் மூலமாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மாநகராட்சி ஊழியர் வாங்கிக்கு சென்று விசாரித்தபோது கடனுக்கு விண்ணப்பித்த 3 நாட்கள் கழித்து ரூ.2,500 அவரது வங்கிக்கணக்கில் வரவு வைத்தது தெரியவந்துள்ளது.

உடனே அவர் வட்டியுடன் சேர்த்து அவர்கள் அனுப்பிய லிங்க் மூலமாக ரூ.3,500 செலுத்த முயன்ற போது அந்த லிங்க் கலவாதியானதால் அவரால் பணத்தைச் செலுத்த முடியவில்லை. அதையடுத்து மீண்டும் அவரைத் தொடர்பு கொண்ட வடமாநிலக் கும்பல் குறித்த காலத்தில் வட்டியுடன் பணத்தை செலுத்தாததால் அபாரதத்துடன் சேர்ந்து ரூ.35,000 செலுத்த வேண்டுமெனக் கூறியுள்ளது.


அதனால் அதிர்ச்சியடைந்த மாநகராட்சி ஊழியர் ரூ.3,500 பணத்தை செலுத்துவதாகக் கூறியுள்ளார். அனால் அதனை ஒப்புக்கொள்ளாத அந்தக் கும்பல் ரூ.35,000 ஐச் செலுத்துமாறு வலிறுத்தவே. அவ்வளவு பணம் தன்னிடத்திலில்லை எனக் கூறி பணத்தைச் செலுத்தாமல் இருந்திருக்கிறார் அவர்.

அதையடுத்து அவரது செல்போனிலிருந்த குடும்ப புகைப்படைத்த எடுத்து, அவரது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த நம்பர்களுக்கு ஆபாசமாகச் சித்தரித்து அந்தப் புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். அவரது நண்பர்கள் தொடர்பு கொண்டு கேட்டதால் அதிர்ச்சியடைந்த மாநகராட்சி ஊழியர், மனஉளைச்சலுக்கு ஆளாகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த புகார் குறித்து விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர். சைலேந்திர பாபு இ.கா.ப. வெளியிட்டுள்ள காணொளியில், "ஆன்லைன் Fraud-ஐப் பத்தி தொடர்ந்து நாம பேசிட்டிருக்கிறோம். இப்ப சமீப காலத்தில் சில நாட்களுக்கு முன்னதாக, ஒரு பயங்கரமான ஆன்லைன் மோசடி நடந்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன்ல உங்களுக்கு லோன் வாங்குறத்துக்காக, லோன் ஆப் நிறைவ வந்திருக்கு. அந்த லோன் ஆப் நீங்க டவுன்லோடு பண்ணிட்டு, லோன் அப்லே பண்ண சொல்லுவாங்க. அப்ளே பண்ண சொல்லும் போது அதே மாதிரி உங்களுடைய கான்டெக்ட்ஸ் லிஸ்ட்ல நாலஞ்சு பேரச் சொல்லுங்க, அவங்களுடைய ஈமெயில் ஐடி கொடுங்க, கான்டெக்ட் டீடெய்ல்ஸ் கொடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு, லோன் அப்லே பண்ணுவீங்க. ரூபாய் 3,000, ரூபாய் 4,000, ரூபாய் 5,000 என்று லோனும் உங்களுக்கு கொடுத்துடுவாங்க. இப்போ நீங்க அனுப்பன போட்டோவ, அதை ஆபாசமாக சித்தரித்து உங்களுக்கு அனுப்பி, இந்த மாதிரி நீங்க 10,000 ரூபாய் கொடுத்துடுங்க. இல்ல, இந்த போட்டோவ உங்க கான்டெக்ட்ல இருக்கற அனைவருக்கும் அனுப்பிடுவோம். அப்படி, உங்களைப் பயமுறுத்தி ரூபாய் 10,000 வாங்குவாங்க. ரூபாய் 50,000 வாங்குவாங்க, ரூபாய் 1,00,000 வாங்குவாங்க. அப்படி நடந்தால் உங்களுக்கு நிம்மதி போயிடும். இந்த போட்டோவ மத்தவங்க பாத்தாங்கனா என்ன நினைப்பாங்க அப்படிங்கற மாதிரி உங்களுக்கு பயம் வந்திடும். அது உண்மையில்லை என்றாலும் மத்தவங்க நம்பமாட்டாங்க. இப்படி ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையில் உங்களைச் சிக்க வைச்சி, பிளாக் மெயில் பண்ணி நிறைய பணம் வாங்கற நிகழ்ச்சி தற்போது நடந்திருக்கிறது. 

காவல்துறையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துட்டு இருக்கிறார்கள். இந்த ஆப்ஸ் எல்லாம் முடக்கறத்துக்கும் முயற்சிப் பண்ணிட்டிருக்கோம். ஆனால், தொடர்ந்து பல்வேறு விதமான ஆப் எல்லாம் தொடர்ந்து வந்துட்டுத் தானிருக்கும். நீங்கள் இன்றிலிருந்து ஏமாறக் கூடாது என்பதற்காக இந்த செய்தியைச் சொல்றோம்" என்றும் அத்துடன் மோசடி ஆப்களின் பெயர்களைப் பட்டியலிட்ட காவல்துறை இயக்குனர் Euvalt, Masen Rupee, Lory loan, Wingo Loan, cici Loan, City loan போன்ற இந்த ஆப்கள் மோசடியான ஆப்கள். இந்த ஆப்களை எல்லாம் டவுன்லோடு பண்ணிடாதீங்க. ஒருவேளை பண்ணிடீங்கன்னா கூட, அத உடனே டெலிட் பண்ணிடுங்க. பாதுகாப்பாக இருங்க; இது தமிழக காவல்துறையினரின் வேண்டுகோள் எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...