முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கட்சித் தலைமை பாஜக செய்தித் தொடர்பாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு:

 சர்ச்சைக் கருத்தால் 15 வளைகுடா நாடுகள் எதிர்ப்பு எதிரொலி செய்தித் தொடர்பாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு:


பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் உத்தரவு   இஸ்லாமிய தூதர் முகமது நபி குறித்த சர்ச்சைக் கருத்தால் வளைகுடா நாடுகளின் கடும் அழுத்தத்தை அரசு சந்தித்த நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர்கள் மத விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறக் கூடாதென திடீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா, சமீப தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் இஸ்லாமிய தூதர் முகமது நபி குறித்து தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததன் காரணமாக, நுபுர் சர்மாவை இடை நீக்கம் செய்து பாஜக மேலிடம் நடவடிக்கை எடுத்தது.

ஆனாலும், சமூக விரோத நடவடிக்கைக்காக அவரைக் கைது செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருவதற்கிடையே, நுபுர் சர்மா பேச்சு சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக வளைகுடா நாடுகள் ஒட்டுமொத்தமாக  கண்டனம் தெரிவித்துள்ளன. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈராக், லிபியா, மலேசியா, பஹ்ரைன் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்களும் கூட மத விவகாரத்தில் இந்தியாவுக்கு பாடம் நடத்தும் நிலையில். மேலும், வளைகுடா நாடுகளில் இந்திய தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென்ற பிரசாரங்களும் வலுவடைந்து வருவதுடன் அங்கு ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர்களுக்கு கட்சி மேலிடம் திடீர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது இது தொடர்பாக புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் மட்டுமே தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க வேண்டும்.

தொலைக்காட்சி விவாதங்களில் மத விஷயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடாது. மத நம்பிக்கைகளை சிதைக்கும் வகையில் கருத்து கூறக் கூடாது.

ஆவேசமாகவும், வரம்பு மீறியும் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

யாருடைய தூண்டுதலின் பேரிலும் கட்சியின் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளை மீறக் கூடாது.

நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன், அதற்கான தலைப்பைப் பற்றி பல தகவல்களைத் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். விவாதத்திற்கு முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும். கட்சிக் கொள்கைகளில் இருந்து விலகக் கூடாது. கவனமாக பேச வேண்டும்.

ஏழைகளின் நலனுக்காக பாஜக அரசு செய்யும் பணிகளை எடுத்துரைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். என விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் நுபுர் சர்மா மீது தானே மாவட்டத்திலுள்ள மும்ப்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, வரும் 22ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நுபுர் சர்மாவுக்கு மும்ப்ரா காவல்துறையின் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், மும்பையிலுள்ள பைடோனி காவல்நிலையத்தில் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதால் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று நுபுர் சர்மா அளித்த புகாரின் பேரில் டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர்கள் குறிவைக்கப்படுகின்றனர் : பாஜகவுக்கு வளைகுடா ஒத்துழைப்பு சபை, தாலிபான் அரசு கண்டனமும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, சமீபத்தில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற போது, முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதை கண்டித்து கான்பூரில் நடந்த கடையடைப்பின் போது, இரு தரப்பினரிடையே மோதல் வெடித்த நிலையில், நுபுர் சர்மாவின் கருத்துக்கு நாடு முழுவதும்  கண்டனம் எழவே அவரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து பாஜக தலைமை நடவடிக்கை எடுத்தது. அதேபோல், டெல்லி பாஜ செய்தி தொடர்பாளரான நவீன் ஜிண்டால் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, அவரை கட்சியில் இருந்து பாஜக நீக்கி உள்ளது.

இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்த பாஜக நிர்வாகிகளின் விமர்சனத்தை கண்டித்த வளைகுடா நாடுகள், இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்குரல் உயர்த்தியுள்ளன. நபிகள் நாயகம் குறித்த நுபுர் சர்மாவின் அவதூறு பேச்சுக்கு வளைகுடா ஒத்துழைப்பு சபையின் பொது செயலாளர் நயீஃப் பலாஹ்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியவர், 'பாஜக செய்தித் தொடர்பாளரின் இந்த கருத்து தவறானது. அதை நிராகரிக்க வேண்டும். நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசியதை கண்டிக்கிறேன். குறிப்பிட்ட மதத்தினரின் தீர்க்கதரிசிகள், மத சின்னங்கள், வழிபாட்டுத் தளங்கள் குறிவைக்கப்படுகின்றன. மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி வெறுப்பை தூண்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.' என அவர் வலியுறுத்தி இருக்கிறார்.  மத உணர்வுகளை புண்படுத்துதல், மத வெறுப்புணர்வை தூண்டும் முயற்சிகளை கண்டிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.


அதேபோல், பாஜக செய்தித் தொடர்பாளருக்கு தாலிபான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்லாம் மதத்தையும், முஸ்லீம்கள் உணர்வையும் புண்படுத்துவதை இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று ஆப்கன் தாலிபான் அரசு தெரிவித்துள்ளது. கத்தாரை சேர்ந்த அல் ஜஸ்ஸிரா ஊடகத்தில் வெளியான செய்தியில் , அரபு நாடுகள் இந்த விவகாரம் காரணமாக கோபத்தில் இருப்பதாகவும். இந்திய பொருட்களை உலகம் முழுக்க பல நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் புறக்கணித்து வருவதாகவும். இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பு அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு இந்தியா பிரான்ஸ் மற்றும் சீனாவின் பாதையை பின்பற்றி இஸ்லாமியர்களை எதிர்க்கிறது என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் வெளியாகும் அரப் நியூஸ் கருத்தில், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளதாக பதிவு செய்துள்ளது. அது தொடர்பாக உலக நாடுகள் தெரிவித்த கருத்துக்களை இந்த ஊடகம் பட்டியலிட்டுள்ளது. துபாயில் வெளியாகும் கல்ப் நியூஸ், நுபுர் சர்மாவிற்கு எதிராக மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதியப்பட்ட எப்ஐஆர்களை பட்டியலிட்டுள்ளது. அதேபோல் கான்பூரில் நுபுர் சர்மா கருத்தால் ஏற்பட்ட கலவரம் குறித்தும் விளக்கமாக பதிவு செய்துள்ளது.அரபு அமீரகத்தில் வெளியிடப்பட்ட கலீஜ் டைம்ஸ் செய்தியில், இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு எதிராக அழுத்தமுள்ளது. இதற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் பல்வேறு நாடுகள் வைக்கப்பட்டு வருகின்றன, என்று விமர்சனம் வைத்துள்ளது. இதில் துருக்கி தான் பழைய விஷயங்களை எல்லாம் கிளறி பதிவு செய்துள்ளது. அதன்படி துருக்கியில் வெளியாகும் TRT World ஊடகத்தில், 2014 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட பல்வேறு இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் பற்றி பட்டியலிடப்பட்டுள்ளது.பாஜகவின் மூத்த தலைவரான டாக்டர் சுப்பிரமணியசாமி இதுபற்றிய கருத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் அரசை விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி அரசால் அரேபியர்களுக்கு எதிராக நிற்க முடியாது. இந்திய அரசு இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நெருக்கடியின்போது தாலிபான்களுடன் சேர்த்து வைக்க கத்தாரிடம் இந்திய அரசு கெஞ்சியது. பணமோசடிக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள துபாய் தான் பிசிசிஐயை கட்டுப்படுத்துகிறது. இன்னும் வேண்டுமா? என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த