முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கான்பூரில் உள்ள பாரவுங்க் கிராமத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

கான்பூரில் உள்ள பாரவுங்க் கிராமத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

குடியரசு தலைவரின் மூதாதையர் கிராமத்திற்கு அவருடன் சென்றார்

"ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதற்கு சிறந்த உதாரணம் பாரவுங்க்"

"அரசியல் சாசனம் மரபு இரண்டையும் உள்ளடக்கியவர் குடியரசு தலைவர் "

"இந்தியாவில், ஒரு கிராமத்தில் பிறந்த ஏழைகள் கூட குடியரசு தலைவர்-பிரதமர்-ஆளுநர்-முதலமைச்சர் பதவிகளை அடைய முடியும்"

"இந்தியாவின் கிராமங்களை மேம்படுத்துவது நமது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும்"

"ஏழைகளின் நலனுக்காக நாடு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உழைத்துள்ளது"

“குடும்ப அரசியலின் பிடியில் சிக்கியிருக்கும் கட்சிகள் இந்த நோயிலிருந்து தங்களை விடுவித்து, தங்களைக் குணப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போதுதான் இந்திய ஜனநாயகம் வலுப்பெறும், நாட்டின் இளைஞர்கள் அரசியலில் சேர அதிகபட்ச வாய்ப்பு கிடைக்கும்’’


பிரதமர் திரு நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்துடன் கான்பூரில் உள்ள பாரவுங்க் கிராமத்தில் உள்ள பத்ரி மாதா மந்திருக்குச் சென்றார். பின்னர் அவர்கள் டாக்டர். பி ஆர் அம்பேத்கர் பவன், அதைத் தொடர்ந்து மிலன் கேந்திராவிற்கு சென்றனர். கேந்திரா என்பது குடியரசு தலைவரின்  மூதாதையர் இல்லமாகும். இது பொது பயன்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கப்பட்டு, சமூக மையமாக (மிலன் கேந்திரா) மாற்றப்பட்டது. பாரவுங்க் கிராமத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் இரு தலைவர்களும்  கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நாட்டின் முதல் பெண்மணி திருமதி சவிதா கோவிந்த், உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், குடியரசுத் தலைவரின் குழந்தைப் பருவத்தைக் கண்ட கிராமத்திற்குச் சென்று அவர் நாட்டின் உயரிய பதவிக்கு வந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். இந்த விஜயத்தின் போது குடியரசு தலைவர் தம்முடன் பகிர்ந்து கொண்டதை அவர் நினைவு கூர்ந்தார். குடியரசு தலைவரின் வாழ்க்கைப் பயணத்தின் வலிமையை அவர் பாராட்டினார்.

இந்தியாவின் சிறந்த கிராமங்களின் வலிமையை உணர்ந்ததாக பிரதமர் கூறினார். ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் சிறந்த உதாரணம் இந்த கிராமம் என்றார் அவர். பத்ரி மாதா மந்திர் தேவ பக்தி மற்றும் தேச பக்தி இரண்டையும் குறிக்கிறது. குடியரசுத் தலைவரின் தந்தையின் சிந்தனைச் செயல்பாட்டிற்கும் கற்பனைக்கும் அவர் தலைவணங்கினார்.

பாரவுங்க் கிராமத்தின் மண்ணில் இருந்து குடியரசு தலைவர் பெற்ற மரபுகளை  இன்று உலகம் கண்டு வருவதாக பிரதமர் கூறினார். அரசியல் சாசனம் மரபு இரண்டையும் உள்ளடக்கியவர் குடியரசு தலைவர் இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்துதாக கூறிய அவர், நெறிமுறைகளை மீறி பிரதமரை ஹெலிபேடில் வரவேற்று ஆச்சரியப்படுத்தினார். விருந்தினரை வரவேற்பதில் தாம் மூதாதையரைப் பின்பற்றுவதாக குடியரசு தலைவர் கூறியதை பிரதமர் நினைவு கூர்ந்தார். குடியரசுத் தலைவரின் சிறந்த  செயலுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி தமது மூதாதையர் இல்லத்தை 'மிலன் கேந்திரா'வாக மேம்படுத்துவதற்கு வழங்கியதாக திரு மோடி குறிப்பிட்டார். இன்று ஆலோசனை மற்றும் பயிற்சி மையமாக பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கு புதிய பலத்தை அது அளித்து வருகிறது. இதேபோல், டாக்டர். பி ஆர் அம்பேத்கர் பவன் பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளை ஊக்குவித்து வருகிறது. கிராம மக்களின் கூட்டு முயற்சியால் பாரவுங்க் தொடர்ந்து வளர்ச்சியடையும் என்றும், ஒரு சரியான கிராமத்தின் முன்மாதிரியை நாட்டிற்கு முன்வைக்கும் என்றும் பிரதமர் கூறினார். ஒருவருடைய கிராமம் ஒருவரை அவர் எங்கு சென்றாலும் விட்டுச் செல்வதில்லை என்று பிரதமர் கூறினார். மகாத்மா காந்தி இந்தியாவின் சுதந்திரத்தை இந்தியாவின் கிராமத்துடன் இணைத்து பார்த்தார் என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் கிராமம் என்றால், ஆன்மீகம் இருக்கும் இடத்தில், இலட்சியங்களும் இருக்க வேண்டும், இந்தியாவின் கிராமம் என்றால், பாரம்பரியங்கள் இருக்கும் இடத்தில், முன்னேற்றமும் இருக்கிறது. இந்தியாவின் கிராமம் என்றால், எங்கெல்லாம் கலாச்சாரம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். அன்பு இருக்கும் இடத்தில் சமத்துவம் இருக்கும். அமிர்த காலத்தின் இந்த காலகட்டத்தில், இதுபோன்ற கிராமங்களை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. கிராமங்கள், விவசாயிகள், ஏழைகள் மற்றும் பஞ்சாயத்து ஜனநாயகத்திற்காக உழைக்கும் நபர்களின் இந்த உறுதிமொழியுடன் நாடு முன்னேறி வருகிறது என்று அவர் கூறினார். “எங்கள் கிராமங்களில் அதிக ஆற்றல் மற்றும் உழைப்பு சக்தி மற்றும் அதிக அர்ப்பணிப்பு உள்ளது. அதனால்தான் இந்தியாவின் கிராமங்களுக்கு அதிகாரமளிப்பது எங்கள் அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும்”, என்றார் அவர்.

ஜன்தன் யோஜ்னா, பிரதமர் வீட்டு வசதி திட்டம், உஜ்வாலா மற்றும் வீடு தோறும் குழாய் மூலம் குடிநீர்  போன்ற திட்டங்களால் கோடிக்கணக்கான கிராமப்புற மக்கள் பயனடைந்துள்ளனர் என்று பிரதமர் கூறினார். "ஏழைகளின் நலனுக்காக நாடு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உழைத்துள்ளது" என்று அவர் கூறினார். இப்போது நாடு அனைத்து திட்டங்களின் 100 சதவீத பலனை 100 சதவீத மக்களுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறது. திட்டங்களின் நிறைவுக்கு இப்போது அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கும் என்றார் அவர்.

இந்திய ஜனநாயகத்தின் வலிமையைக் குறிப்பிட்ட பிரதமர், மேடையில் இருந்த குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆகிய நான்கு முக்கியப் பிரமுகர்களும் கிராமங்கள் அல்லது சிறு நகரங்களில் இருந்து தோன்றியவர்கள் என்று சுட்டிக்காட்டினார். நமது போராட்டங்களும், வறுமை மற்றும் கிராம வாழ்க்கையுடனான நேரடித் தொடர்பும் நமது சன்மார்க்கத்தை வலுப்படுத்தியுள்ளது, இதுவே நமது ஜனநாயகத்தின் பலம், "இந்தியாவில், கிராமத்தில் பிறந்த ஏழை எளியவனும் குடியரசுத் தலைவர்-பிரதமர் பதவியை அடைய முடியும் என்று அவர் கூறினார்.

ஜனநாயக வலிமையின் பின்னணியில், குடும்ப அரசியலுக்கு எதிராக பிரதமர் எச்சரிக்கை விடுத்தார். அரசியலில் மட்டுமின்றி, எல்லாத் துறைகளிலும் திறமைசாலிகளை அடக்கி, புதிய திறமைசாலிகள் வளரவிடாமல் தடுப்பது குடும்ப அரசியல்தான் என்றார். “எனக்கு எந்த ஒரு அரசியல் கட்சி மீதும், எந்த நபர் மீதும் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இருக்க வேண்டும், ஜனநாயகத்திற்காக அர்ப்பணிப்புள்ள அரசியல் கட்சிகள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்", என்று கூறிய அவர் மேலும் தொடர்ந்து, "வம்சத்தின் பிடியில் சிக்கியுள்ள கட்சிகள் இந்த நோயிலிருந்து தங்களை விடுவித்து தங்களைக் குணப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்திய ஜனநாயகம் வலுவடையும், நாட்டின் இளைஞர்கள் அரசியலில் சேர அதிகபட்ச வாய்ப்பு கிடைக்கும்’’ என்று அவர் குறிப்பிட்டார்.

கிராமத்தில் அமிர்த நீர்நிலை கட்டுவதற்கு உதவுமாறு கிராம மக்களைக் கேட்டுக் கொண்ட பிரதமர், இயற்கை விவசாயத்தை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார். தற்சார்பு இந்தியாவை அடைவதற்கான வழியை அனைவரும் முயற்சிக்கவேண்டும் என்றும், தற்சார்பு இந்தியாவின்  திறவுகோல் தன்னிறைவு  கிராமம் என்றும் அவர் உரையை நிறைவு செய்தார்.

குடியரசுத் தலைவரும்  கூட்டத்தில் உரையாற்றினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த